Thursday, February 4, 2010

விரதமிரு ..

விரதமிரு ....
ஆடி அம்மாவாசை என ...
ரம்ஜான், கிருஸ்துமஸ் என ...
உடம்பு கொழுப்பை குறைக்க
ஒருநாளாவது விரதமிரு ...

ஏகாதசி, சிவராத்திரி
கிருத்திகை ,சஷ்டி
என பட்டினிகிட ...
உடம்பில் பட்டினி...
கொடுக்குமே  ஆற்றல்...

மாணிக்கவாசகரின் சொல்படி
ஊனினை உருக்கி
உள் ஒளி பெருக்க
உனக்கு நல்வழி
கிடைக்க விரதம்
என்ற பெயரில்
பலகாரம் தின்று ...
பல் ஆகாரம் ஆகி ..
விரதம் ...உனக்கே
விரோதம் ஆகிவிடாமல் ...
விரதமிரு ...

 

Wednesday, February 3, 2010

மரணம் கூட ......

கம்மாயும் ....
கரையா குப்பையால் ...
மேடாகிறது ...

தார் ரோடும் ...
தளைத்த வயலை
குழியாக்கி ...
மேடாகிறது ...

தளைக்கும் பிள்ளைக்கும்
சுடுகாடாய் ....
நகரம் நரகமாய்
மாறிவருவது தெரியாமல்
மேடேருகிறான் .....
மனிதன் ...!

மரணம் கூட
மறுத்து விடும்
மனிதனுடன் வாழ ...!

மாறிவிடு ....
மாற்றிவிடு ...
மாக்கா குப்பையால்
நிறைந்து இருக்கும்
மனதை !
 
மறித்துக்கொண்டு இருக்கும்
இயற்கையை
இயற்கையாய் விட்டுவிடு !

முரண்பாடு

வாழ்வினிக்கும் ....
வசதி கூடும் ...
வறுமை நீங்கும் ...
வயது குறையும் ...
வாலிபம் திரும்பும் ...
வாயினிக்கும் உன்
வார்த்தை கேட்டாலே..
ஆம் ! மழலை சொல்
அத்தனையும் பெற்றுத்தரும்.!

 -------------------------------------------------

பிரதமர்,முதலமைச்சர்
விமான ஓட்டி,விண்வெளி வீராங்கனை
ஆட்டோ, கார், பஸ் ,லாரி 
அத்தனையும் ஓட்ட முடியும்...
போலிஸ் , போலிஸ் கமிஷனர்..
என எதையும் நிர்வகிப்பாய் ...
நித்தம் மனதில் வலுவூட்டி ...
உரம் போட்டு ..
மனதில் திமிர் சேர்த்து ....
காலை பிரார்த்தனையில்
அத்தனையும் முடியும் ...
நீ ஆளப்பிறந்த்தவள் ..
என சொல்லி சொல்லி ...
ஒவ்வரு பெண்ணாய் ...
கொடி  ஏற்றுகிறோம் 
ஏற்றிய கொடிபறக்க மறுக்கிறது ....
காம்பவுண்டுக்குள் அடை பட்டதாலோ...!!!
-----------------------------------------------------------

முரண்பாடு
-------------------------------

தலை தெறிக்க ஓடி
தாவி ஏறினேன் ..
தலையை பிடித்து தள்ளினான்
நடத்துனர் ...
இது மகளீர் மட்டும் என்று!
---------------------------------------------

 

Tuesday, February 2, 2010

பிரிவின் வலி

கதவை சாத்தினாலும்
ஜன்னல் ஓரம் ...
எட்டி பார்கிறது
உன் நினைவுகள் ...
மறக்க வழி இல்லை ...
ஆனால் வலி உண்டு!

சின்னத்திரையில் ....
எண்ணத்தை செலுத்தினாலும் ...
வண்ணமாய் வந்து மறைகிறது ..
மங்கலாய் போன நினைவுகள் ...
உரு பெருகி ....
உருண்டையாய் வந்து
தொண்டையை அடைக்கிறது !?..

மணல் மூடிய பாலைவனமாய்
மனம் இருந்தாலும்..
கானல் நீராய் வந்து வந்து ...
தூசிப்புயலாய் ....
நாசியில் ஏறி ...
மண்டையை குடைந்து ....
உயிரை குடிக்கிறாய்

பிரிவின் மீது
பரிவுக்  காட்டி....
பாசம் கூட்டி ...
நேசக்கரம் தாராயோ ...?
உனக்கும் வலிக்கவில்லையா?
என்னை  நீ நினைக்கவில்லையா?
இதுவும் நட்பின் ஒ௦ரு வகையோ ...!

பரிசு வழங்க வேண்டும்

    ஆனந்த விகடன் 03 .02 .2010 இதழில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய  "நீங்கள் அன்பளித்தது எப்போது? "  படித்தேன். அதில் சிறுகதை ஆசிரியரான கு.அழகிரிசாமியின் 'அன்பளிப்பு' கதை ,மற்றும்  ஹாலிவுட் திரைப்படம் 'ரேடியோ ' மூலம் பரிசின் முக்கியத்துவத்தை பற்றி கூறியிருந்தார். அனைவரும் படிக்கவேண்டிய அற்புதமான படைப்பு. அவரின் கருத்தை வலியுறுத்தி ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும்  என் அன்பான வேண்டுகோள்.
         நான் படிக்கும் காலத்தில் அதாவது நல்லது செய்தால் ஆசிரியர்களும் , தலைமை ஆசிரியர்களும் பரிசளித்து ஊக்குவித்த கதைகள் ஏராளம். அன்று , இன்று போல் கை நிறைய காசு வாங்கவில்லை ஆசிரியர்கள், இருந்த போதும் தன் மாணவன் சந்தோசத்தையும் , நல்ல பழக்கவழக்கத்தையும் தொடர்ந்து பெற வேண்டும் என்பதற்காக தன் வருமானத்தில் சிறுபகுதியை செலவிட்டனர். 

         இன்று கை நிறைய காசு வாங்குகிறார்கள் , ஆசிரியர் தொழில் (மன்னிக்கவும் பொதுஜனங்கள் சொல்லுவது ) மிகவும் பாதுகாப்பானது , காலை ஒன்பது மணிக்கு சென்று , மாலை நான்கு பத்துக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடலாம் . சொகுசான வாழ்க்கை இன்று ஆசிரியர் பணியை தொழிலாக மாற்றிவிட்டனர். ஆகவே தான் இன்று பரிசு என்பது பிறந்த நாள் , திருமண நாள், பண்டிகை என குறிப்பிட்டுக் கொடுக்கும் ஒரு நினைவு பொருளாகிவிட்டது.

        மாணவர்களுக்கு கனவாகி போனது பரிசும் . ஆகவே தான் அரசும் பொது மேடைகளில் புத்தகங்களை பரிசாக தரவும் என நினைவுபடுத்தியுள்ளது. கனவுகளாகிப் போன பரிசு, மாணவன் வாழ்வில் ஊக்கத்தையும், உற்சாகத்தையும்   சேர்த்து கனவாக்கி போனது.

        பிறந்த நாள் என வரும் மாணவனிடம் பேனா கொடுத்துப்பாருங்கள் அவனின் மகிழ்ச்சியும் , "சார் நான் நல்ல படிச்சு உங்ககிட்ட பரிசு வாங்குவேன் சார் ..."என்ற பதிலும் . ஆண்டு விழாவில் முதல் மதிப்பெண்  பெற்ற மாணவனின் மகிழ்ச்சியும் , இரண்டாவது பரிசு பெரும் மாணவனின் சபதமும் , பார்த்து பரவசம் அடையும் பெற்றோர்களும் ... எவ்வளவு ஆனந்தம் .  பரிசு பட்ட கஷ்டத்தை எல்லாம் பறக்கச் செய்யும் .
      
        பெற்றோர்களே  உங்கள் பையன் செய்யும் நல்ல காரியங்களுக்கு எல்லாம் சின்ன சின்ன பரிசு அளியுங்கள் . பரிசு  என்பது வெறும் பொருள் மட்டுமல்ல , அருகில் உள்ள பார்க் , நண்பர்கள் வீட்டுக்கு அழைத்து செல்லுதல்  போன்ற இட மாற்றங்களும், சிறிய விருப்பங்களும்  மிகப்பெரிய மன மாற்றத்தை மாணவனிடம் அழைத்து செல்லும் .

          ஆசிரியர் அனைவரையும் குறை கூற வில்லை.எல்லா ஆசிரியர்களும் அப்படி அல்ல. எனக்கு தெரிந்து என்னுடன் பணியாற்றும் ஆசிரியை தன் மாணவர்களுக்கு தகுந்த சமயத்தில் அவனுக்கு வேண்டியதை பரிசாக தருவதை பார்த்திருக்கிறேன். தன் வருமானத்தில் கால் வாசி மாணவர்களுக்காக செலவிடுகிறார். தன் கணவனுக்கு தெரிந்து அநாதை குழந்தைகளுக்கு படிப்பு செலவு ஏற்று , தாய் போல் கண்டிப்புடன்    
வளர்த்து வருகிறார். கண்ணுக்கு தெரியாத அறப்பணி செய்யும் ஆசிரியர்கள் எத்தனையோ?
  
     சக ஆசிரியர்களின் ஏளனம் மிகவும் கொடுமை. "அவ , உலகத்தை தலைகீழ மத்திட போற ...வந்தோமா சம்பளம் வாங்கினோமா போனோமா ...இல்லாம ..."
"நாமக்கென்ன செய்ய தெரியாத ... என்னோமோ இவ்வ செயிராலாம் ..."
"நாம செய்யலாம்... பா ... ஆனா இவ செய்யுறதா பார்த்து தான் நாம உதவுகிறோம்முநு நினைப்பு வந்திடும் ..செய்ய தெரியாமலா ..."
இவை எல்லாம் ஆசிரிய பணியை  தொழிலாக செய்பவர்களின் இயலா மொழி . ஆனால் உதவும் ஆசிரியர் எதை  பற்றியும் கவலை படாமல் தன் அற பணியினை தவறாமல் செய்து , மாணவர் முன்னேற்றம் ஒன்றே குறிகோளாக செயல் படுவார்.

           நான் கல்லூரி பயின்ற பொழுது கூட பரிசு வழங்கும் ஆசிரியர்கள் அதிகம் . பரிசு என்பது கொடுப்பதன் மூலம் பிறரின் மகிழ்ச்சியை தன் மகிழ்ச்சியாக கருதுவதாகும். மாணவர் நலன் கருதி ஆசிரியர்கள் அனைவரும் மாணவனுக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பரிசு வழங்கி மகிழ்ச்சி ஏற்படுத்தி , நல்ல பண்பை ஊக்குவிப்போம், வளர்ப்போம். மதிப்பெண் அதிகம் வாங்கினால் தான் பரிசு வழங்க வேண்டும் என்பது அல்ல. நல்ல பண்பு வளர்பதற்கும் , மனதை பக்குவபடுத்தி , அன்பை பெருக்குவதற்க்கும் ஆகும்.

   பெற்றோர்களும் , ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவ்வப்போது பரிசுகளை தந்து , அன்பை பெருக்கி , பண்பை கூட்டி , நற்பண்பை நிலை நிறுத்தி , அவர்களின் எதிர்காலத்தின் நிலைப்புத் தன்மையை உறுதிப்படுத்த உழைப்போம்.

    உங்கள் நினைவில் நின்ற ஆசிரியர்களை பற்றி கருத்திட்டு ஆசிரிய சமுகம் , இன்னும் முனைப்பாக உழைத்திட உற்ச்சாக படுத்துவோம்.கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.

Monday, February 1, 2010

மாணவர் உலகம்

கனவுகாண் ....
ஆசிரியார் சொன்னதாலோ ...
என்னவோ .....
இரவில் அவர் கை
பிரம்பு வந்து வந்து ....
தூக்கம்  கலைகிறது.

நாய் குரைக்கும் சத்தமும் ...
துணையாய் வர ....
மதிப்பெண் பட்டியல்
தானாக மனதில் தோன்ற ....
மதிப்பாய் ....
அன்னை பார்வைக்கு
புத்தகம் தூக்க...
ஒரு மணிக்குமா படிப்பு ...
தூங்குப்பா..
என அப்பா குரல் கொடுக்க ....
கூர்க்கா விசில் ஊத ....
விளையாட்டாய் போன தூக்கம்...
விளையாட்டை நினைவு படுத்த ..
புட்பால் கிரவுண்டுக்கு
காலை  செல்ல வேண்டும் ....
என்ற நினைவுடன்....
அனைவர் நினைவும் ....
கனவாய் .....!!!
கனவுகாணுங்கள் பெற்றோர்களே ....
உங்கள் பிள்ளைகளின் ஆசைகளும் ...
தெரிந்து !!!!
விதைத்திடுங்கள் கனவை ஆசிரியர்களே....
மாணவர் மனம் தெரிந்து!!!
 

"ஒருவனுக்குஒருத்தி" ....இது நம்ம கலாச்சாரமா ?

    "ஒருவனுக்குஒருத்தி" ....இது நம்ம கலாச்சாரமா ? 

மதுரை பிளாக்கர் சந்திப்பில் நடந்த சுவையான அனுபவம் . டாக்டர் ஷாலினியின் சுவையான கருத்து ....

       மாகாபாரத கதையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட கருத்து பரிமாற்றத்தின் சாரம்.

ஆதி முதல் மனிதன் பல தார மணம் முடிக்க காரணம் . மனிதன் இயற்க்கை இடர்பாடுகள் , மிருகங்களிடம் இருந்து தன்னை காப்பற்ற, மனித சந்ததியை அதிக படுத்த வேண்டியதால், பல பெண்களுடன் திருமணம் செய்துகொண்டான். பலம் பொருத்தியவனுக்கு மனைவியாவதை விரும்பினர்.  அரசன் பின்பு எதிரி நாட்டு  அரசனுடன் சண்டை போடவும் , தன்னை காப்பாற்றவும் ஆட்கள் தேவை பட்டதால் , அந்தபுரத்தை நிறைத்தான், சந்ததியை பெருக்கினான். மேலும் தன் இரத்தமாக இருந்தால் நமக்காக சண்டை போடுவான் என்பதாலும் பல பெண்களை மணந்தான்.

      குந்தி தேவி ஏன்  சூரிய பகவனிடம்     மட்டும் நான்கு குழந்தைகளையும் பெறவில்லை.?   சூரியன், எமதர்மன், இந்திரன்....என பலசாலிகளை தேர்தெடுத்தக்காரணம்  என்ன?
வீரிய விந்துக்களை பெறுவதனால் , அந்த பண்பை தன் சந்ததி பெரும் என்பதால் மட்டுமே.

இப்படி தர்மன், அர்ஜுனன் , கிருஷ்ணன் என அனைவரும் பல தார மணம் புரிந்ததன் காரணம் தன் இனத்தையும் , தன்னையும் காப்பாற்ற , தன் இரத்தம்  என்றால் தமக்காக சண்டை போடுவார்கள் என்பது மட்டுமே.
      
     இதில் இராவணன் மிகவும் சிறப்பானவன். தான் எந்த ஊருக்கு செல்லுகிறானோ அந்த ஊரில் உள்ள சிறப்பான பெண்களை தன் அந்தபுரத்தில் நிரப்பிவிடுவான்.

      இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் ஜெர்மனி மக்களை பல தார மணம் புரிய சொன்னான். என்னெனில் தன் ஜெர்மன் நாட்டுக்கு சண்டை போட தன் இரத்தமாக இருந்தால் , உலகை நாம் ஆளலாம் மேலும் போரில் நிறைய ஆள் இழப்பு ஏற்பட்டாலும் அதை ஈடு செய்ய ஆட்கள் தேவை என்பதால் பல பெண்களை மானம் புரிய கட்டளை இட்டான்.
       
        ரோமன் காத்தோலிக்க சபை வந்தபின் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பு கடை பிடிக்கப்பட்டது. நம்மவர் மதம் மாறி கொள்கைகளை பின் பற்றிய போது , நாமும் நம் கொள்கையாக கடைபிடிக்க ஆரம்பித்தோம்.


       மதம் மாற்றம் என்பது ஒருபுறம் இருந்தாலும், இன்று பெண்கள் சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், ஆடவனை நம்பி , அண்டி பிழைப்பு நடத்த வேண்டியது இல்லாமல் போனதாலும், ஆண்கள் ஒதுக்கப்பட்டதால், ஒருவனுக்கு ஒருத்தி நிலைத்து நிற்கிறது. முன்பு பெண்கள் ஆண்களையே நம்பி இருந்ததால் , உணவுக்கும்,இருப்பிடத்திற்கும் இருந்ததால் பல தார மணம் சாத்திய பட்டது.
          எது எப்படியோ இன்று பெண்கள் முன்னேறி உள்ளனர் என்பது சந்தோசமான விஷயம். மனைவியை நம்பி காலம் தள்ளும் கணவர்கள் பலர் உள்ளனர். சக்கரம் சுலன்றுவிடாமல் ......என பலர் கூறுவது  என்காதில் விழுகிறது. என்ன தருமி சார் ஒருமாதிரி என்னை பாக்குறீங்க ...நானும் உங்கள மாதிரிதான் வீட்டுக்கு அடங்கிய பிள்ளை .......

Sunday, January 31, 2010

மதுரை பிளாக்கர் சந்திப்பில் ......

இன்று கருப்பாக பிறந்ததனால் குறைபட்டுக்கொள்ளும் குழந்தைகளுக்கு டாக்டர் ஷாலினியின் பதில்கள் மனதை மாற்றும்  மருந்தாக உதவும் .
  
      மதுரை பிளாக்கர் சந்திப்பில் என்னை கவர்ந்த பதில்.

      இன்று குழந்தைகள் மிகவும் சிவப்பாக இருந்தால் மட்டுமே பள்ளிகளில் பாட்டு , நடனம், பேச்சு போன்ற நிகழ்வுகளுக்கு அணுமதிக்கப்படுகிறார்கள். பொதுவான உண்மை, ஆசிரியர்கள் உணரவேண்டிய கசப்பான மருந்து, இனி இதை படித்து திருந்துங்கள் .

        நம்மை பல ஆண்டுகளாக ஆண்டவர்கள் நிறம் வெளுப்பாக , அதாவது சிவப்பாக இருந்துவந்துள்ளது. ஆரியர்கள் முதல் பிரஞ்சு , போர்த்துகீசியர்கள் ,ஆங்கிலேயர்கள் வரை நம்மை ஆண்டவர்கள்  சிவப்ப்பு , ஆகவே அது ஆளும் வர்க்கத்தை சார்ந்த நிறமாக இருப்பதால், இந்தியர்கள் அனைவரும் சிவப்பாக குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று விரும்ப , அதே தொடர்ந்து சிவப்புதான் சிறந்த நிறம் என்று ஆகி விட்டது. அதுவும் நம் குழந்தைகளுக்கு மனதில் பட்டு தாழ்வு மனபான்மையை ஏற்படுத்திவிட்டது.


      அனால் இன்று அமெரிக்காவின் சூப்பர் பவர் ஆளுநர் ஓபாம என்ற கறுப்பர் வந்தவுடன் என்று பார்பி பொம்மை நிறம் கருப்பாக மாறிவிட்டது , ஓபாமா வின் உடை உலக பேஷன் ஆக மாறி வருகிறது. அன்று அனைவராலும் விரும்பப்பட்ட சிவப்பு நிறம் இன்று கருப்பு நிறமாக மாறியுள்ளது .
       ஆகவே மாணவ செல்வங்களே டாக்டர் கூறுவது போல நிறம் என்று  பார்த்தல் கருப்புதான் நிறமாக கொள்ளவேண்டும் .சிவப்பு என்பது நிற குறைபாடு . ஸ்டார் அந்தஸ்து நிறத்தில் இருந்து வருவது கிடையாது அது நம் செயலில் இருந்து வருவது . பரீட்சை நெருங்குவதால் படிப்பில் கவனம் செலுத்தி , நல்ல மதிப்பெண் பெற்று , தாழ்வு மனப்பான்மை போக்கி , பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் நல்ல பெயர் எடுத்து தரவும்.

மதுரையில் பிளாக்கர்

  மதுரையில் இன்று அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற பிளாக்கர் கூட்டத்தில் நடை பெற்ற நிகழ்வுகளை   உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன் .

    தருமி பிளாக்கர் என் அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் சாம் ஜார்ஜ் என்பதில் மகிழ்ச்சி . என்னை பார்த்தபின் அவருக்கு அதைவிட சந்தோசம். எனக்கு  வசை பாட ஆள் கிடைத்து விட்டதாக  கூறினார். ஐயா , நீங்கள் திட்டி , திட்டி தீட்டிய வைரம் இது, இன்னும் தீட்டுங்கள், மிக்க மகிழ்ச்சி.தாயின் அரவணைப்பை உணருகின்றேன். என் கல்லூரி ஆசிரியர் சைலஸ் அவர்களை பார்த்து பழைய நிகழ்வுகளை பகிர்ந்ததில் , வயது குறைந்த ஒரு உணர்வு.
       டாக்டர் ஷாலினி மிகவும் அருமையாக குழந்தைகளின் வளர்ப்பை எடுத்துக் கூறினார்  . செக்ஸ் சம்பந்தமான அனைத்து விசயங்களும் பேசப்பட்டன. ஆண் , பெண் சேர்ந்து இருந்ததால் என்னவோ  நிறைய அவரே பேசவேண்டியது ஆகி விட்டது. சுமார் முன்றரை மணி நேரம் உரையாற்றினார். அவருக்கு பிளாக்கர் சார்பாக மீண்டும் நன்றி.
         
         நம் குழந்தைகளுக்கு நம் உடம்பின் உறுப்புகள் கற்றுத்தரும் போது , நம் பாலியல் குறிகளையும் சேர்த்து கற்றுத்தரவும். அது மட்டுமல்லாது , இவ்வுறுப்புக்கள் பிரைவேட் ஆகும் , இதை நீ பிறருக்கு காட்டக் கூடாது. உன் தாய் மட்டுமே அதை தொட உரிமை  உண்டு.
தந்தை கூட தொடஅனுமதி இல்லை. இவ் உடல் கூறு சம்பந்தமாக சந்தேகங்கள் வந்தால் ,
அம்மாவிடம் கேட்கவேண்டும். டாக்டர் கூட தனியாக எந்த பெண்ணையும் சோதனை செய்யமுடியாது, உடன் தாயோ ,செவிலியரோ இறுக்க வேண்டும்.

                   குழந்தைகள் அதிகமாக உறுப்புகள் சம்பந்தமாக பேசினாலோ , அம்மா அந்த அங்கிள் வீட்டுக்கு போக மாட்டேன் என்று கூறினாலோ, அது செக்ஸ் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக தான் இருக்கும், ஆரம்பத்திலேயே அதை சரிசெய்து விடுங்கள் , இல்லையெனில் அது மன பிரச்னைக்கு கொண்டுசெல்லும் என நிறைய உதாரணங்களுடன் விளக்கினார்.
                    
                   ஆண் , பெண் எந்த குழந்தையாக இருக்கட்டும் செக்ஸ் விசயங்களை, தாய் மட்டும் குழந்தைகளுடன் பேசி அதை சரிசெய்து விடலாம்.  தந்தைக்கு கூட உரிமை இல்லை. பிறருடன் பழகும் போது , தொடாமல் பழகச் சொல்லித்தரவும். அவ்வாறு தொட்டுபேசினால், உடனே அவர்களை திட்டிவிடவும் , முடிந்தால் அடிக்கவும் . என்ன திமிர் பிடித்தவள் என்று கூறினாலும் பரவாயில்லை என அருமையாக விளக்கினார்.
    
                ஞாயரை பயனுள்ளதாக செலவழித்த பெருமை மதுரை பிளாக்கர் நண்பர்களுக்கு சாரும்.          

Saturday, January 30, 2010

படிப்பது ....கடினமாக தெரிவது ஏன்?

படிப்பது என்பது மிகவும் கடினமாக தெரிவது ஏன்?

   ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியை ஒரு மதிப்பெண் நோக்கில் வழங்குவதால் , மாணவர்கள் கல்வியின் மீது கொண்டுள்ள ஆர்வம் குறைவதற்கு காரணமாக அமைகிறது.

     முன்பெல்லாம் ஆசிரியர்கள் ஒரு பாடம் கற்றுத்தரும் போது நீதிக் கதைகள் , சுதந்திர போராட்ட வீரர்கள் கதைகள், தமிழ் நாடு அரசியல் தலைவர்கள் பற்றிய செய்திகளை கலந்து , சுவைபட கற்றுத்தருவார்கள்.
    
      ஆனால் இன்று மதிப்பெண் மட்டுமே குறியாக இருக்கும்போது , பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு பாடம் புரிந்ததோ இல்லையோ , மார்க்கார்டில் மதிப்பெண் மட்டுமே பார்ப்பதால் போதுமென்று , சுவையான உணவாக தரவேண்டிய கல்வியை , கசப்பான செரிக்காத உணவாக திணிக்கிறார்கள்.

      மாணவர்களும்  போட்டியான உலகில் புரிந்தும் , புரியாமலும் அவசர அவசரமாக பயின்று , தேர்வில் வாந்தி எடுத்து விடுகிறார்கள். தேர்வு முடிந்து ஏதாவது சந்தேகம் , அவனை விட இளையவர்கள் கேட்டால் , சொல்ல தெரிவது இல்லை.

       மாணவர்களுக்கு கல்வி ஆயுள் முழுவதும் பயன் தருவதாக அமைய வேண்டும் . மாணவர்களின் அனைத்து திறன்களும் வெளிபடுத்துவதாக கல்வி கற்றுத்தர வேண்டும்.
         மாணவர்கள் புத்தக அறிவு மட்டும் பெற்று இவ்வுலகிற்கு நன்மை செய்து விட முடியாது. மேலும் மாணவன் தன் முழு திறன்களை பெறுவதனால் மட்டுமே, தன் பெற்ற கல்வி அறிவை பயன் படுத்த முடியும். உடல் திறன் வளர்க்க விளையாட வேண்டும். தன் தனித்திறமை வெளிப்பட கலை, பண்பாடு , இலக்கியம் ஆகியவற்றின் மீது ஆர்வம் ஏற்படுத்தி , மாணவனை பங்கு கொள்ள செய்ய வேண்டும்.

          மாணவன் பிற துறைகள் மீது ஆர்வம் ஏற்படுத்துவதன் மூலம் சமுகாத்தின் மீது அக்கறை கொள்ளச்செய்ய முடியும். சமுக அக்கறை கொண்ட கல்விமுறையே , மாணவ நலனுக்கு நல்லதாகும்.  சமுக அக்கறை ஏற்படுத்தும் கல்வியே சிறந்ததாகும்.
   
          ஆகவே, தயவு செய்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் சமுகத்தின் மீத அக்கறை கொண்டு, மாணவனுக்கு சமுக அக்கறை ஏற்படுத்தும் கல்வியை கொடுக்க உதவ வேண்டும். கல்வி முறையில் மாற்றங்கள் உண்டாக அனைவரும் பாடுபட வேண்டும். வாந்திஎடுக்கும் கல்வி போக்கி, சமுக அவலங்களுக்கு மருந்திடும் கல்வி ஏற்பட்டுத்த வேண்டும்.

Thursday, January 28, 2010

தன்னம்பிக்கை

கீழே விழுந்த குழந்தை
மீண்டும் மீண்டும்
எழுந்து நடந்தது ...

எழுந்தது குழந்தை
மட்டுமல்ல....
நானும் தான்!
--------------------------------------------

பள்ளி சென்று திரும்பிய
குழந்தை வெட்டியது
ஆசிரியர் சொன்னதாக....

வேண்டா அழுக்குகளை
நீக்க ...
நகத்தை வெட்டியது .

சுத்தமானது என்
மன அழுக்கும் !
---------------------------------------
ஆண்டவன் நேரில் வந்து
உண்மை சொல்ல
முடியாததனால் .....

என் குழந்தை வடிவில்
வந்தான் !
.

ஒரு தினமாக மாறிவிடாமல்

      காந்தி 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று இறந்தார் என்று கூறி  தியாகிகள் தினம் அன்றுதான் என காந்தியின் இறப்பை நம் குழந்தைகளுக்கு ஒ௦ரு தினமாக கொண்டாடாமல், அதன் உண்மையை உணர்த்தும் விதமாக நம் குழந்தைகளுக்கு காந்தி அகிம்சை முறையில் நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த கதையை அற்புதமாக  கூறவேண்டும்.

       மங்கள் பாண்டே 1857 தூக்கிலிடப்பட்டு, 1857 நம் சிப்பாய்களின் மதஉணர்வை புண்படுத்தியதால், முதல் சுதந்திர போராட்டமாக , சிப்பாய் கலகம் உருவெடுத்ததில் இருந்து , காந்தியின் நுழைவு கூறி , சத்தியாகிரகம் பலன் எடுத்துரைத்து, 1947  லில் நாம்  சுதந்திரம்   பெற்றது வரை தொகுத்துக் கூறுங்கள் . நம் சுதந்திரத்தின் அருமை நம் குழந்தைகள் உணர்ந்து நம் நாட்டிற்கு நன்மை செய்வர், நல்ல பொறுப்புள்ள குடிமக்களாக உருவாவார்கள்.

         என் குழந்தையை சமீபத்தில் மதுரை காந்தி மீசியத்திற்க்கு அழைத்துச் சென்றேன். அங்கு அவள் தன் தாயிடம் பல விசயங்களை கேட்டுத் தெரிந்துகொண்டாள் அவள் தற்போது ukg படித்து வருகிறாள் . . .   ஏற்கனவே பள்ளியில் அழைத்து சென்றதால் , அப்பா இங்க இந்த ரூம்ல காந்தி தாத்தா சுட்டு சாகிறப்ப இரத்தம் பட்ட டிரஸ் இருக்கு என்று மழலையில் கூறினால். அங்கு நிறைய அயல் நாட்டினர் வந்திருந்தார்கள் , அவர்கள் காந்தி என்று கூறும்போதேல்லாம் என் குழந்தை மிகவும் மகிழ்ச்சி அடைவது எனக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

             அதை விட வீட்டிற்க்கு வந்து  இரவு (அவள் எங்களுக்கு தினம் கதை கூறி உறங்கிவிடுவாள் )கதை கூறியது இன்றும் என் நினைவில் நிற்கிறது. இதோ ...

          "நானு , அனுசியா , சௌந்தர்யா, கார்த்தி ஸ்கூல் விட்டு விளையட்டிகிட்டு இருந்தோமா ", "..... அப்போ அனுஷியா வாங்க நாம கடைக்கு போயி வாங்கி சாப்பிடுவோம்னு .... சொன்னா. கார்த்தி காசு இருக்கான்னு கேட்டான். இருக்கு இருக்கு வா போவோம்  ன்னு குத்திகிட்டு போனா... "
        "நாங்க எல்லாரும் கடைக்கு போனோம் ... லட்டு சௌந்தர்யா கேட்டா..அனுசியா எல்லாருக்கும் லட்டு எடுத்துக் கொடுத்தா.... எல்லாரும் நிறையா லட்டு சாப்பிட்டோம் .... கடைகாரர் திரும்புறதுக்குள்ள...வா எல்லாரும்   ஓடிடுவோம்ம் ன்னு சொல்லி ஓடினா .... நாங்க என்ன செஞ்சோம்னா ...."

"சொல்லு" இது என் மனைவியின் குரல் ..

"அப்புறம் கடிகார அண்ணே பிடிச்சு திருடிட்டு போறியா நீ ....எங்கள பிடிச்சு ...."

"பிடிச்சு உதச்சாரு ..." மீண்டும் என் மனைவி .

"இல்லை ,இல்லை சாமி கண்ணு குத்திடும் ...அப்படிதானே பயமுறுத்தினார் ..."
இது நான் .

" இல்லப்பா.. இது காந்தி படத்து முன்னால வச்சு செஞ்ச லட்டு , பொய் சொல்ல கூடாது... காந்தி கொட்ச்சுகிருவார்னு...சொன்னார் "

 "அப்படியா" ...இருவரும் சிரிப்பு கலந்த ஆச்சரியத்துடன் .

"அனுஷியா வீட்டில போயி காசு எடுத்து கொடுத்தா...தெரியும்மா ...அது னால நாம பொய் பேசக் கூடாது , திருடக்கூடாது   புரியுதா ... காந்திக்கு இதெல்லாம் பிடிக்காது ..."


அன்று காந்தி வரலாறு என் குழந்தையின் சிந்தனையில் பதித்த பதிவுகள் ஏற்படுத்திய மாற்றம் எல்லாருக்கும் ஏற்பட நாம் நம் தேசத்தலைவர்கள் வரலாற்றை எடுத்துக் கூறுவோம்.

   காந்தி இறப்பு ஒரு தினமாக மாறிவிடாமல் , தினம் தினம் நம் குழந்தைகள் வாழ்வில் நல்ல எண்ணத்தை  ஏற்படுத்தும் தினமாக உருவாக்குவோம்.

Wednesday, January 27, 2010

குழந்தைகள் வளர்ப்பு

       இன்று குழந்தைகள் வளர்ப்பு மிகவும் கவனமாக மேற்கொள்ளவேண்டிய கடமைகளில் ஒன்றாகும்.
   நாம் குழந்தைகளுக்கு எதிர் மறையான சிந்தனைகளை நம்மை அறியாமலே கற்றுத்தருகிறோம்.
உதாரணத்திற்கு திருடாதே, பொய் பேசாதே , தள்ளாதே ,கிள்ளாதே,டிவி பார்க்காதே....
இவ்வாறு பல எதிர்மறை சிந்தனைகளை நாம் நம் குழந்தைகளுக்கு விதைக்கிறோம்.
             
                நம் மனித மேம்பாட்டுத் துறை அமைச்சர் சமீபத்தில் கூறியதை நினைவு படுத்தக் கடமைப்பட்டுள்ளேன் . ஒரு இலட்சம் குழந்தைகள் இடைநிற்றல் நிலையில் உள்ளனர்.

             அதாவது பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்தியுள்ளனர். இதற்கான காரணக்களை நாம் நம் கல்வி முறை சரியில்லை என்று குறை கூறும் முன்னர்
61  வது குடியரசு கொண்டாடும் இவ்வேளையில் நம் அடிப்படை உரிமைகளை தெரிந்து இருப்பது போன்று , நம் அடிப்படை கடமைகளை அவசியம் பின்பற்றவேண்டும்.

           2002 ஆம் ஆண்டு ,86 வது சட்டத்திருத்தத்தின் படி 6 வயது முதல் 14 வயது வரை நம் குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்கவேண்டும். நாம் நம் வீட்டுக்கு அருகே பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எத்தனை முறை பள்ளிக்கு அனுப்ப சொல்லி எடுத்துக் கூறியுள்ளோம். இக் குடியரசு தினத்திலாவது முயற்சி செய்து பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கையை குறைப்போம் .
         
          "ஒரு பொது நல அரசு , ஏழை எளிய மக்களின் துயர் துடைக்க வகுக்கும் திட்டங்கள் அனைத்துகே வளர்ச்சித் திட்டங்கள் தான். கல்வி கூட நேரடியாகப் பார்த்தால் வளர்ச்சிப்பணியில் வராது. ஆனால் , மனிதனின் அறிவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் , அதுவும் வளர்ச்சத்திட்டமே!....இலவச டிவி த்திட்டமும் ...மக்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தும் திட்டம்.. ''தமிழக  உயர் கல்வி துறை அமைச்சர் பதில் .(27 .1.2010 ஆனந்த விகடன் )

    அதே இதழில் நம் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் "இன்று கல்வித்துறை பணம் கறக்கும் இயந்திரமாகவோ ,பணம் விழுங்கும் திமிங்கலமாகவோ மாறியிருக்கிறது."
     

        இது தான் நம் கல்வி நிலைமை ,இது இப்படி இருக்கட்டும் இக்குடியரசில் நாம் சபதம் எடுப்போம். நம் குழந்தைகளை கல்வி கற்க   முயற்சி மேற்கொள்வோம். இடை நிற்றல் தவிர்த்து அனைத்துக் குழந்தைகளும் பள்ளி செல்ல நம் குறைகளை தவிர்ப்போம்,
            நம் குழந்தைகளுக்கு நேர்மறைச் சிந்தனைகளை வளர்ப்போம். உண்மை பேசு , நம் பொருளை பத்திரப் படுத்துவோம், படித்தபின் டிவி பார்ப்போம், விளையாட்டும் போது கவனமாக இருப்போம் என்பது போன்ற நேர்மறைச் சொற்களை நம் குழந்தைகளுக்கு விதைத்து தன்னம்பிக்கையை வளர்ப்போம். இச் சிந்தனைகள் நம் குழந்தைகளை தானகேவே பள்ளிக்கு அழைத்துச் செல்லும்.
   

Saturday, January 23, 2010

காதல்

காதல் என்பது உணர்வு
மனம் உரு மாறி
உணர்வை உயிராக்கி
உறவாக்கும் உணர்ச்சி
என்றுதான் நினைத்தேன்

உன் தங்கை என் கை
தொட்டப்போதுதான் 
உணர்ந்தேன் .....
காதல்.... 
மனசு சம்பந்தப்பட்டதல்ல,
உடம்பும் சம்பந்தப்பட்டது .

உன் பார்வையின் உக்கிரம்
என் தோல்  கருக்கியபோது
வெடுக்கென என் கை தட்டி
உன் தங்கையை கூட்டிச்
சென்றபோது உணர்ந்தேன்

காதல் ...
மனசு மட்டும் அல்ல
உடம்பும் சம்பந்தப்பட்டது.

Friday, January 22, 2010

என் கல்லூரி

என் கல்லூரி

மொட்டான என்னை
மணம் வீசும்  மலராக்கியது!

தட்டுத்தடுமாறி தள்ளாடிய
எனக்கு தன்னம்பிக்கை தந்தது!

வாழ்க்கையின் வசந்தத்தை
எனக்கு தேடித்தந்தது!

என்றும் துணையாக
தோல்வியிலும்,வெற்றியிலும்
தோள்கொடுக்கும் தோழனை  தந்தது!

பெண்ணின் பெருமை உணர்த்தி
மதுரை மண்ணின் மகிமை  உணர்த்தியது    !


வாழ்வை உருவாக்கித்தந்த உனக்கு...
என் வாழ்வு என்றும் கடமைப்பட்டது.

Thursday, January 21, 2010

உயிரோட்டமுள்ள சொல்

சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
யானை பிளிரும்
நாய் குரைக்கும்
நரி ஊளையிடும்
காகம் கரையும்
குழந்தை மழலை பேசும்
என ஒலிகளை
பகுத்து பார்த்து 
உயிரோட்டமுள்ள
சொல்லை தந்த
மனிதா ....
உயிர் எடுக்கும்
சாதி,மதம்
என்ற சொல்லை
மனித குருதி சிந்தி
ஓலமிடுவான் ...
என முன்பே அறிந்து
பகுத்துப் படைத்தாயா ...?

இதுவா பகுத்தறிவு ...?
பெரியார் சொல் படி
பகுத்தறிவு பெற்று
சிறந்து வாழ் !
 

Wednesday, January 20, 2010

பகுத்தறிவு

பால் நிலவு
பசும் புல்
பால் மாடு
பச்சை குழந்தை
பசியுற்ற புலி
பாயும் சிறுத்தை
தாவும் குரங்கு
நண்பகல் நடுநிசி
நண்பன் பகைவன்
நல்லது கெட்டது
என பகுத்துப் 
பார்க்கும்  மானிடா ....
சமுகத்தில் மட்டும்
எந்த  நலனுக்கும்  இன்றி
சாதி மத வேறுபடுத்தி
பகுத்தறிவு மறந்ததேன்?
தாவும் குரங்காக
மனம் இருப்பதாலா?

இன்று புதிதாய்
சீரியலில் சீல்
பிடித்த  மனமானதாலா 
பகுத்தறிவு மறந்தாய்? 
சிக்கித் தவிக்குது
சிறுசும் பெருசும்
சிரழியும் சமுகம்
நல்ல குடும்பம்
சரிவது புரியாம?

Tuesday, January 19, 2010

யார் கேட்பா ?

எனக்கு அந்த டாக்டர ரெம்ப பிடிக்கும்
தண்ணி நிறைய குடிக்கச் சொல்லிருக்கரே
இத புரியாம திட்டுறா எம்பொண்டாட்டி
நான் எவ்வள ஸ்டடியா கடைபிடிக்கிறேன்

                    மரம்

எனக்கு பேய் பிடித்தது என
வெட்டிவிட்டார்கள் மனித பேய்கள்
சுற்றுச் சுழல் மாசுப் பேய் பிடித்து
வீழ்த்துவது புரியாமல் ....   


காட்டு மேட்டுல
கம்மாக் கரையில
காணாமே காணாம்
மழைக்கும் வெயிலுக்கும்
சின்ன வயசில
ஒதுங்குன மரத்தக்
காணாமே காணாம்

பாவி மக்க
மரத்த வெட்டி
வயல  போக்கி
மனையாக்கி ...
மண்ணா போனாங்க
மாரியாத்தா,காளியாத்தா
கோவிலுமுள்ள காணாம்போச்சு
கடவுளே இவங்கள
யார் கேட்பா ?    

Saturday, January 16, 2010

மனதை அறி!

"மனம் போன  போக்கெல்லாம் போக வேண்டாம்" -உலக நாதன்.

"உன்னையே நீ அறிவாய்"-சாக்ரடீஸ்.

"மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்"-திருமூலர்.


        மனம் மனதை அறிவதுதான் ஞானத்தின் உச்சம்.
 
        ஒவ்வொரு பொருட்களும் அணுக்களால் ஆனவை. அவை நடுவில் நியூட்ரான் ,புரோட்டான் நேர் மின் சுமைக் கொண்டு தன்னை சுற்றி எலக்ட்ரான் என்ற எதிர் மின் அணுக்களால் பிணைக்கப்பட்டுள்ளன. நேர், எதிர் சுமைத் துகள்கள் சமம் பெற்று நிலைத்தன்மை பெற்றுள்ளன .  
 
      இந்த அறிவியல் உண்மையிலிருந்து மனதை விளக்குவோம். இவ்வாறு மனம் நிலைப்புத் தன்மை  கொண்ட அணு நிலையில் இருந்தால் , கெட்டுப்போகும்.  எந்த  ஒரு பொருளும் அப்படியே இருந்தால் கெட்டுபோகும் , அதேபோலத்தான் மனதும். 
      
       நேர், எதிர் மின் சுமைகள் சமமில்லை எனில் அவை தேவையான துகளைபெற முயன்று இயக்க முயற்சி கொள்கிறது.  இந்த மனநிலை தான் நமக்குத் தேவை . மனம் இயங்க வேண்டும்.  நல்ல விசயங்களை நிலையாய் கொண்டு, எதிர் விஷயமான தீய பழக்கம் நீங்க மனம் இவ்வுலக்கில் நல்லது , கெட்டதுகளில் நீந்தி நல்ல போன்ற விசயங்களை தேடிபிடித்து நிலைப்பு அத்தன்மை பெற வேண்டும்.
                           
          நம் கல்வி முறை மாணவனுக்கு நல்லது , கெட்டது உணர்த்தும் விதமாக , வானின் சுயத்தை  உணர்ந்து செயல் படும் தன்மை உடையதாக அமைந்து, அவனின் மனதை இயங்கச் செய்து , தன்னிலை உணரச் செய்தால் , நம் நாடு வளர்ச்சி  அடைந்து , நம் சமுகம் தீவிரவாதம் தவிர்த்து , அமைதியாக திகழும். ஒவ்வொரு வீடும் சொர்க்கமாக திகழும் . 
 
 
           நம் கல்வி முறை மதிப்பெண்  அடிப்படையில் அமைந்து, இன்று நன்னெறி ,நீதி போதனை, விளையாட்டு போன்ற அடிப்படை விசயங்களை மறந்து போய் உள்ளது. அவை  மீண்டும் நடை முறை பட்டுத்தப்பட்டு, மாணவர்களை நெறிபடுத்த வேண்டும்.   கனவுகளுடன் மாணவர்களை போன்று எழுதும் என் எழுத்து, பெறோர்களை போய் சேர்ந்து நினைவாக்கதா ?   
           
        ஆசிரியர்களே மதிப்பெண் தேவை தான் ஆனாலும் தன்னை அறியா மாணவனால் அறிவு பெருகி பயன் என்ன ?
      
          வள்ளலார் போன்று கனவுகளுடன்....
"தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே- ஒரு
 தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே "  . 

கல்வி

கல்வி ஆயுசுக்கும்
துணை !
வேண்டியது கொடுத்து
வேண்டாதது நீக்கி
அள்ளித் தரும் புகழ் !

என்றும் செய்யும்
இளமையில் கல்வி
எளிமையில் புதுமை
புதுமையில் இளமை!
இளமை  முதுமையிலும்
முதுமையில் வளமை!

வாழ்வில் கல்வி
காலத்துக்கும்....
பொருள் தந்து
அறம் பெருக்கி
புகழ் சேர்த்து
பிறப்பை முழுதாக்கி
மோட்சம் தந்து
ஏழு பிறப்பிலும் தொடர்ந்து...
துன்பம் போக்கி
இன்பம் வரும்
வாழ்வு தருமே!
   

Thursday, January 14, 2010

புத்தகம்

புத்தகம் புதுமை
செய்யும்!
புரட்டுவது பக்கத்தை
அல்ல மனத்தை !

பத்திரபடுத்து புத்தகத்தை
பத்துமாதம் சுமந்து
பெற்ற உன்னை
பத்திரமாத்து தங்கமாக்கும்!

புத்தகம் திறககும்
போதெல்லாம்...
திறக்கும் உன்
மனக் கதவு!

கடலெனக் கிடக்கும்
கிடைக்கும் புத்தகத்தை
கிடக்கும் மிடமெல்லாம்
இடைவிடாது படி
பிடித்த நேரமெல்லாம்
படி உன்
நேரம் சரியாகும்!


பரப்பிக் கிடக்கும்
புத்தகம்
விரிக்கும் அறிவை!
உறங்கி கிடக்கும்
உயர்வை உசிப்பிவிடும்!

புத்தகம் ஆக்கும்
புத்தனாய் உன்னை!
ஏற்றம் கொடுக்கும்
மனச்
சீற்றம் குறைக்கும்!
மற்றம் தந்து
மனிதனாக்கும்!

மனிதனை
மாமனிதனாக்கும்!
மறுக்காமல் மறக்காமல்
தேடித் தேடி
பிடி படி !
புத்தகம் புத்துயிர்
தரும் தவறாமல்
படி !

Wednesday, January 13, 2010

மாணவர்களுக்கு தண்டனை

குழந்தைகள் தினத்தை
கொண்டாடுங்கள் !
வருடம் தோறும்
தினத்தை  அல்லவா
கொண்டாடுகிறீர்கள்!
குழந்தைகள் மனதை அல்ல!
என்ற கவிகோ அப்துல்ரஹ்மான் வரிகளின் முக்கியத்தை உணரும்  தருணம் வந்துவிட்டது!

                சமீபத்தில் கல்லூரி மாணவன் தன்தாயை கொன்ற   செய்தி கேட்டு பதறாதவர்கள் யாரும் இல்ல.  ஏன் மாணவர்கள் மனம் மாறிவருகிறது? தவறான கருத்துக்கள் முளைத்து மூளை மழுங்கி தவறான முடிவுகளுக்கு அடிமை ஆகிறார்கள்?            


         குழந்தைகள் அறிவுபூர்வகமாக சிந்திக்கக்கூடியவர்கள். நாம் சிந்திக்காதா  விஷயங்களை வெளிப்படுத்துபவர்கள். மிகவும் புத்திசாலிகள். அவர்கள் தனிமையாக இனிமையை ரசிப்பவர்கள். நாம் நம் கனவுகளை  அவர்கள் மீது திணிப்பதனால் அவர்களின் இயற்கையான புத்திசாலிதனத்தை இழந்து , தன் தனித்தன்மையை இழந்து தவிக்கிறார்கள்.

             நம்முடைய வளர்ப்பு      அவர்கள் வாழ்க்கையை எல்லா விதத்திலும் பாதிப்பதாக அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
                                                                                                                                                                        மனணம் செய்யும்   தன்மையில்லா ,சுதந்திரமான சுவையான கல்விமுறையை நாம் தரவேண்டும்.

                                                                                                                                             இயற்கையோடு இணைந்த கல்வியை நாம் தர முயற்சிக்க வேண்டும். அதே போல நாம் பள்ளிக் கூடங்களையும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். தற்போது பள்ளிகள் அரசு விரும்பும் படியான மாணவர்களைத்தான் நம் ஆசிரியர்கள் உருவாக்குகிறார்கள்.

                    இன்று மாணவர்களுக்கு தண்டனை தருவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்க பயப்படுகிறார்கள் ,கண்டிக்கப் பயப்படுகிறார்கள். அரசு மாணவர்களுக்கு தண்டனை தரக்கூடாது என்று விளம்பர படுத்திய உடன் மாணவர்கள் அச்சட்டத்தை வைத்து ,ஆசிரியர்களை மிரட்ட ஆரம்பித்துள்ளனர். பெற்றோர்களும் ஒரே குழந்தை என்பதால் அதற்கு துணை  போகிறார்கள்.  இத்தவறை அரசும் உணர்ந்து ஆசிரியர்களுக்கு மாணவர்களை பக்குவபடுத்த  தண்டிக்கலாம் என்று கூற முன்வரவேண்டும்.

         சமிபத்தில் மதுரையை சேர்ந்த பள்ளி ஆசிரியர்  தொடுக்கப்பட்ட வழக்கில் ,மாணவரின் பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கி உள்ளது.   ஆசிரியர்களுக்கும் இப் பக்குவம் வர வேண்டும். குழந்தைகளை அவர்களின் சுதந்தர உணர்வு  பாதிக்காமல் ,மாணவன் தன்னையே உணர்ந்து செயல்படும் விதமாக கல்வி கற்றுத்தர வேண்டும்.
                                                                                                                                                         புத்தகம் வாசிக்க கற்றுத்தர வேண்டும் ,பாடபுத்தகம் தவிர்த்து நிறைய வாசித்து பயன் பெறச் செய்ய வேண்டும்.  
                             இன்று   செயல்வழிக்கற்றல் முறையில் 'புத்தக பூங்கொத்து 'மூலமாக மாணவர்களுக்கு நிறைய புத்தகங்கள் வாசிக்க கொடுத்துள்ளார்கள், ஆசிரியர்கள் முறையாக அவற்றை பயன்படுத்தி மாணவர்கள் எதிகாலம் சிறக்க உதவ வேண்டும் . சமச்சீர் கல்வியில் இதை அனைத்து மாணவர்களுக்கும் உதவும் வகையில் அமுல்படுத்த வேண்டும்.

              பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும என்பதற்காக அவர்களுக்கு தனி டியுசன் , தனி அறை, என தன்னிடம் இருந்து தனிமை படுத்தி , தனித்து நிற்பதால் , அன்பு தவிர்க்கப்படுவதாக தவறாக உணர்ந்து , மன நோயாளியாகி ,முடிவில் மன நோயாளியாகி  தவறான செயலில் இறங்கி தாயையே கொல்லும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் .

                 குழந்தையின் இயல்பு பாதிக்காமல், அன்புடன் அரவணைத்து , திணிக்காத இனிக்கும் கல்வியினை தந்து , அவனின் தன் நிலை உணர்ந்து செயல் பட நாம் உதவ வேண்டும்.       

பொங்கலோ பொங்கல்!

கனவுகள் நினைவுகள்
ஆக்கி
அறிவு  பெருக்கி
ஆகட்டும் பொங்கல்!


சுவற்றில் வண்ணமிட்டு
வரும் பொங்கலே
மனித எண்ணங்களை
வண்ணமாக்கி  வா ! வா!


பழையன போக்கி
புதியன புகுத்தும்
போகியே ....
பொசுக்கி போ!
மனித அழுக்குகளை!
கொளுத்திவிட்டு போ
மதம் பிடித்த மனித
போக்கை!

மண்ணை வளப்படுத்த
விண்ணை விடியலாய்
மழையை நினைத்து
உழைப்பை உரமாக்கி
விளைந்த நெல்லை
உனக்கிட்டு மகிழும்      
மனித வாழ்வில் ....
வசதி கூ ட்டி
வதந்தி போக்கி
வன்முறை நீக்கி
மூடனமபிககை முடக்கி
முதியவர்  உறவைபேணி
முடிந்தவரை இயற்க்கை காத்து
இவர்கள் வாழ்வை காத்து
குறைகள் நீக்கி
நிறைகள் தந்து
நிறைவாய் பொங்கு
பொங்கலோ பொங்கல்!
 



 

கொடுத்த வாக்குறுதி


" தேர்தல் நேரத்தில் வாக்களர்களுக்கு  கொடுத்த வாக்குறுதியில், மரம் வளர்க்கும் திட்டம் ஒன்று .அதனை தொடர்ந்து  இவ்விழா நடைபெறுகிறது. மதுரை நகரை பசுமை மிகுந்த நகராக மாற்றவேண்டும் என்பது தான் எனது லெட்சியம்.  மதுரை நகரில் 18 இடங்களில்  இலவச நவீன கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது. இது போன்ற மக்கள் சேவைகளையே  செய்ய விரும்புகிறேன். "    இது மதுரை நகரை பசுமையாக்க வந்த நாயகர் உரை. வான் மலைக்கு உதவும் நாயகரின் வாக்கு.
        மதுரை தெப்பக்குளம் பகுதியில் மத்திய இரசாயன உர அமைச்சர் மு.க. அழகிரி அவரகள் மரக் கன்றுகள் நடும்  திட்டத்தை தொடக்கி வைத்த போது ஆற்றிய உரை. மதுரையில் சுமார் 18 இடங்களில் மரக்கன்றுகளை தன் துணைவியுடன் நட்டார். பள்ளிக்குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் தரப்பட்டன.
        "சார் , மரக்கன்று நட்டா மட்டும் போதாது , அதை தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் காதுகளில் படும்படி சொல்லுவது புரிகிறது . "
         "ஹலோ ,...நாங்க மதுரைகாரங்க ...சொன்ன சொல் தவறமாட்டோம். இன்றும் மதுரை சிட்டி கோர்ட்அருகில் உள்ள சிவாஜி சிலைக்கு அண்ணே சொன்னமாதிரி தினமும் மாலை போடுகிறார் ... தெரியும்மில்லை... மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் ... ஊத்துவோம்."
       
"மதுரைய சிங்கப்பூரா மாத்தி காட்றோம்...ன்னு சொல்லிற எம்.பி. அல்ல " அண்ணே வார்த்தை . ஆம் சொல்லுறதை செய்வோம் ... செய்றதையும் சொல்லிகட்டுவோம்"

      மதுரையில் அலங்க்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கப்போவுது வாங்க. உங்க ஊருக்கும் மரக்கன்று வாங்கிட்டு  போங்க .    

Tuesday, January 12, 2010

"பிறந்தவனல்ல .... உதித்தவன் ."

மதுரை பற்றி செய்தி சொல்லி நிறைய நாள் ஆகி விட்டது.
          " சார் மதுரை வாங்க ... பொங்கலுக்கு கூப்பிடல்ல .... வரும் ஜனவரி 30௦ வாங்க .!"                            "என்ன அண்ணே விசேசம் ..." என இழுக்காதிங்க . "எல்லாம் ' அண்ணே விசேசம் தான்' " .
          " ஜனவரி ௦ 30௦  காந்தி இறந்தநாள் , தியாகிகள் தினம் ....  கரெக்டா அண்ணே "
          " விளக்கெண்ணை ..... யோவ் ... புரியல அதன் சொன்னேன்ல்ல .... எங்க அண்ணே விசேசம்..ன்னு "
          "   ஆ..அ புரிந்தது ...".
          " யோவ் அ.. ஆ ... ன்னே சொல்லு " .
          " அவரும் தியாகம் செய்துதானே வந்தாரு "
          " 500 ரூபாய் நோட்ட ... கொடுத்து கொடுத்து ... "
         " யோவ் மரியாத ... அப்புறம் மதுரை வர மாட்ட .."
          " மதுரைக்காரரே .... அவசர படாதிக ... 500 ரூபாய் நோட்ட ... கொடுத்து கொடுத்து சில்லறை மாற்றினால் சி திரி வரிசைக்கு பேருந்துல ... புது நோட்ட .... கேட்கிறாங்க .... அத பத்தி சொல்லுறதுக்குள்ள ... அவசரப்படுறேங்களே ...இப்ப சொல்லுங்க ..."
             " நீயும் தெக்கதிபயலுக ... மாதிரி வெவரமா தான் இருக்க ... "
             " அப்ப திருவிழா தான்னு சொல்லு ... இலவச வேட்டி சேலை ... தையல் மிஷின் .. சைக்கிள் , முன்று சக்கர வண்டி , கலிபர் என ... மதுர கார பயலுக நீங்க பயன் அடைய போறிங்க ..."
              " ஆமா.... ஆமாம் ... இந்த வருடம் அண்ணன் பிறந்த நாளில் இந்த சலுகைகளுடன் ... ஐ.நா . செய்ய முடியாத ஒன்றை செய்ய போறோம் ..."
             " அப்படி என்ன புதுமை .... "
           " அண்ணன் பிறந்தநாளில் புவி சூட்டை குறைக்கும் விதமாக மதுரையில் எழு லெட்சம் மரக்கன்றுகள் கழக கண்மணிகள் நடப்போறோம் ... உங்களுக்கு தேவைன்னா ... வந்து மரக்கன்று வாங்கிகங்க ..." "சரி அண்ணே பிறந்த நாளில் புது வசன விளம்பரம் எது ?...?"
   "பிறந்தவனல்ல .... உதித்தவன் ." 
  "சரி ... அவசியம் வந்துவிடுகிறேன் "
  " மதுரை பற்றி புது தகவலுடன் அடுத்த வாரம் வருகிறேன் ."  

Monday, January 11, 2010

சந்தேகம்!

என்
தேகம் சுடுகிறது
உன்
சந்தேகப் பார்வையால் !

தேகம் இணைந்ததால் 
பிறந்ததோ ...
சந்தேகம்!

உயிரோடு உறவாடி
என் உயிரானவளே !
உணர்வுகளோடு உரசி
உயிர் எடுப்பவளே..
எப்போது பிடித்தது
இந்த தோசம்
போனது சந்தோசம்
இருவருக்கும் !



உணர்வுகளை உசுப்பி
உரிமைகளை உதறி
உயிர்களை உறிஞ்சும்
ஊதாரி பேயே
போய்விடு ! மாண்டிடு !
உன்னை கொல்ல
ஒரு சுனாமி வராதா!

எத்தனை குடும்பங்கள்
எதுவுமில்லா பிரச்னைக்கு
எத்தனை இரவுகள்
பகலாய் பாழாய்
போனச் சண்டையில் !
பால் இருந்தும்
பாழம் இருந்தும்
பட்டினியில் ...
சத்தில்லா சச்சரவுகள்
சாவுக்கு வழிவகுத்தன !
வாழ்விழந்த பிஞ்சுகள்
எத்தனை எத்தனையோ!
சந்தேகம் வலுத்ததால்
தன் தேகத்தேயே
எரித்து மாண்டவர்கள்
எத்தனை எத்தனையோ!

இக் கொடுமை
இனி வேண்டாம் !
இனிக்கட்டும் வாழ்வு !
இந்த பொங்கல்
மனச் சங்கடத்தை
மாய்த்து
அனைத்துக் குடும்பத்திலும்
சந்தோசத்தை விதைத்து
சந்தேகத்தை புதைகட்டும் !

    ( சந்தேகத்தால் தன் மனைவியை இழந்த என் நண்பனுக்காக)

Saturday, January 9, 2010

என் நேசிப்பு

உந்தன் நடை
சுண்டி இழுக்கிறது !
உன்னை பின்பற்ற
துடிக்கிறது !
எத்தனிபேர் தொடர்தாலும்
என்னை போல் உன்னை
ரசித்தவனும் மில்லை
நேசிப்பவனும் எவனுமில்லை !

கட்டிலில் உன்னை
புரட்டி புரட்டி
ரசிக்கச் செய்தாய் !
உந்தன் கவர்ச்சியில்
விடிந்தது கூட
தெரியவில்லை !

அந்த எலவ
எத்தனை தடவதான்
படிப்பீங்க !
விடிந்து போச்சு
தூக்கி போட்டு தூங்குங்க
என் மனைவி
குரல் கேட்டு
உன்னை என் நெஞ்சோடு
வைத்து உறங்கினேன்!


நீங்களும் வாசித்து
பாருங்கள் !
என் நேசிப்பு
புரியும் !
காதலியின் முத்தத்தை
காட்டிலும் இனிக்கும் !   
மனைவியின் மந்திரத்தை
மட்டுபடுத்தி
மதி மயக்கும் மாது
இந்த வாசிப்பு!
 

சமச்சீர் கல்வி

"சமச்சீர்  கல்வி தமிழ் வழிக்கல்விக்கு எதிரானது " என்று சட்டசபையில் அ .தி. மு.க வெளி நடப்பு செய்திருப்பது, சமச்சீர் கல்விக்கு எதிரானது அல்ல.அதில் இருக்கும் நியாயத்தையும் உணர்ந்து உலகத் தமிழ் மாநாட்டு நடக்கும் இவ்வேளையில் , தெளிவான கருத்துக்களுடன் சமச்சீர்க் கல்வி கொண்டுவர வேண்டும்.
            தாய் மொழியில் தான் பாடங்கள் நடத்த வேண்டும் . 2005 தேசிய கல்வி கொள்கை தாய் மொழி வழியாக சுற்றுபுறம் சார்ந்த அறிவு பெறுவது முலம் அறிவியல் அறிவை வளர்க்க முடியும் என வலியுறுத்துகிறது.
            மாணவன் தாய் மொழியில் மூலமாக கல்வி கற்பதன் வாயிலாக  தெளிவான சிந்தனை பெற்று , தன் அறிவை வளப்படுத்த முடியும்.  அதற்காக ஆங்கிலம் வேண்டாம் என்று அர்த்தமல்ல . ஆங்கிலம் ஒரு உலக தொடர்பு மொழியாக இருப்பதால் , அவசியம் தேவை. இத்தொடர்பிர்க்காக , தமிழை ஒரு மொழிப் பாடமாக மட்டுமே படிப்பது , அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆங்கில பள்ளிகளாக மாற்ற வழிவகுத்திடும்.
நாளடைவில் அரசு பள்ளிகளும் ஆங்கில மொழி வழிக் கல்வியை தொடங்கினால் தான் அரசு பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கு வேலை என்ற நிலை வந்துவிடும்.
              தயவு செய்து அரசு ஒரு தெளிவான கொள்கை கொண்டு சமச்சீர் கல்வி முறையினை அமுல்படுத்த வேண்டும் என்ற வாதத்தை நினைவில் கொண்டு செயல் பட   தமிழக மக்கள் என்றும் ஆதரவு தருவார்கள் .
             சமச்சீர் கல்வி முறை இம்மாதிரியான இடர்பாடுகளை தவிர்த்து , முழுமையாக நிறைவேற்றி , ஏழை எளியவர்களின் கனவை நினைவாக்க வேண்டும்.  

கல்வி



கல்வி  உன்
நிழல் போல்
தொடரும் கடவுள்!

கல்வி உன்
அருகிலுள்ள நண்பன்
நல்லது கெட்டது
எடுத்து சொல்லும் !

மிருகமான மனத்தை
மிருதுவாக்கி  உன்
இதயக்கதவை திறக்கும் !
கல்வி உன்னை
உன்னதமாக்கி உயர்த்தும் !

காடு மேடு அலைந்து 
ஆடு மாடு மேய்ப்பது 
மறுத்து , தடுத்து 
ஓடி வா! ஓடி வா !
கல்வி  கற்க 
பள்ளிக் கதவை 
திறந்து வா!திறந்து வா !
திறக்கும் உன் 
வாழ்க்கை கதவு!

Friday, January 8, 2010

ஜனநாயகம்

இந்த வாரம் குமுதத்தில் 'சொல்லு, லொள்ளு, ஜொள்ளு ' பகுதியில் "தேர்தல் கமிசன் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது "
என்கிறார் தலைமை தேர்தல் அதிகாரி நவீன் சாவ்லா.

"75 சதவீதம் அட்டெண்டன்ஸ் இருந்தால்  எங்களை தேர்வு எழத அனுமதிக்கிறார்கள். ஆனால் நாடாளுமன்றத்துக்கு வராமல் எம். பி.க்கள் மட்டம் போடுகின்றனர். இதை  தடுக்க என்ன வழி? " 
 
    இன்று மாணவர்கள் விழித்துக் கொண்டுள்ளனர். இன்றைய கல்வி   முறை  மாணவர்களுக்கு சிந்திக்கும் திறனை வளர்த்துள்ளன. அரசியல் தலைவர்கள் இதை உணர்ந்து செயல்படும் நேரம் வெகு தொலைவில் இல்லை.
இடை தேர்தல் போல் பணம் கொடுத்து பதவி வாங்கும் உறுப்பினர்கள் எப்படி மன்றத்திற்கு  செல்வார்கள்.
           ஜனங்கள் பணம் வாங்கியதால்,  ஜனநாயகம் செத்துவிடவில்லை. நீங்கள் அறுவடை செய்யவில்லை , விதைத்துள்ளீர்கள் ,ஜனநாயகத்தின் உண்மை, மரமாய் முளைக்கும் , வரமாய் இருந்து ,மாய்க்கும் .
            18 வயதில் ஒட்டு போட்டும் உரிமை இருந்தாலும், இன்று நான்காம்
 வகுப்பில் ஊராட்சி மன்றம் ,மாநகராட்சி போன்ற பாடங்கள் இருப்பினும் , மாணவர்கள் முன்று,நான்காம் வகுப்பில் ஓட்டு போடுவது நமது கடமை, கடமையை செய்ய யாருடனும் சேர்ந்து பணம் கொடுக்கவோ ,வாங்கவோ கூடாது என அறிவுறுத்தும் விதமாக பாடம் அமைய வேண்டும். சமச்சீர் கல்வி இதை நினைவில் நிறுத்தினால்
தேர்தல் நேரத்தில் குடும்பத்தில் பணம் கொடுத்தாலும் அது தவறு என இளம் தளிர் நமக்கு பாடம் கற்றுத்தரும். 
                கல்லூரியில்  கேட்கும் இம்மாதிரியான வினாக்கள் , வீட்டில் கேட்கப்பட்டு   ஜனநாயகம் மலர்ந்து , நல்ல ஆட்சி மலரும்.               

Thursday, January 7, 2010

பொங்கல்

பொங்கிவரும் பொங்கல்
பொருகச் செய்யும்
வாழ்க்கை வசதியை !
இனிக்கச் செய்யும் 
வாழ்வை !

வாசலில் இடும் வாழை 
வளப்படுத்தும் வாழ்வை !
பொங்கல் சட்டியில்
சுற்றி இருக்கும்  மஞ்சள்
வாழ்வில் உண்டாக்கும்
மங்களம் !

உழவன் வாழ்வில்
ஒளி உண்டாக்கும் 
ஒளி தந்த கடவுள்
சூரியனுக்கு நன்றி
கூறும் நாள்!

பொங்கல் பொசுக்கட்டும்
பெருகி வரும் சூட்டை!
உலக சூட்டை உணர்த்தி
மக்களை விழிப்புறச்
செய்யட்டும்!

வீதி எங்கும் விரிந்து 
பசுங் கூட்டு வாயுவின் 
வன்மை விளக்கி 
உண்மை உணர்த்தி 
பொங்கட்டும் பொங்கல்!

இயற்க்கை காத்து
இனிமை நிலைக்க
வாழ்வில்
இனிப்பு கூட்டி
இனிப்பாய் பொங்கட்டும் !

Wednesday, January 6, 2010

என் கவிதை

நான் நினைப்ப தெல்லாம்
கவிதை ஆவதில்லை !
நான் வடித்த கவிதை
நம்பும்படி இல்லை!
நான் நினைத்த மாதிரி
அமைவ   தில்லை!

சமுகத்தின் சல்லிவேர்களை
சாடாமல் போனாலும்
ஆணிவேர்களை ஆட்டாமல்
விட்ட   தில்லை!

என் கவிதை ஆசிட் 
பட்டு பட்டு 
பட்டுப் போன மரங்கள் 
பல பல !

சமுக அவலங்களை சாடி
கத்தி இன்றி
இரத்தமின்றி சுத்தமாய்
அறுவை சிகிச்சை செய்வன
என் கவிதைகள்!

சாகியம் போசும் சமுகத்தில் 
கால் நீக்கி
சதி செய்யும் உலகில்
கால் ஊன்றி
சாதி சாதி சாதியென  
சாதனை படைக்கும் 
சாகா வரம் பெற்றவை  
என் கவிதைகள்!

சிந்தினை தூண்டி விட்டு 
சின்ன இதயத்தில் 
மனிதநேயம் வளர்க்கும் 
மகா கவிதைகள் 
இறைமை தன்மை பெற்று 
இன்றும் இயங்கிகொண்டிருப்பவை!

Tuesday, January 5, 2010

செல்

செல் போனால்
சொல் போச்சு!
நவீன இயந்திரம்
செய்யும்  மந்திரம்!

தொலைந்தது என்னவோ
செல் தான்
சொல்லும் அல்லவா
தொலைந்தது!

மூளை சயனமாய்
சிந்திக்க முடியாமல்
சிறகு ஓடிந்துபோனதே!

செல் ஒவ்வொரு
மனிதனின்
உயிர் செல்லிலும்
பொதிந்து
உயிரோட்டம் ஆனதால்
சொல்லும் போயிற்று
செல்லோடு!

செல்லை மறப்போம்
சொல்லை நினைத்து!

செல் தேவை
செய்தி கொடுக்க!
விருந்தாக அல்ல
மருந்தாக அல்லவா!

செல் டு செல்
ஒரே ஜொள்!

கால் டு கால்
இலவசம்!
கைவசம் இருந்த
காசு போய்
கலங்கிய மூளையை
கால் ஊன்ற
என்ன செய்வாய்?        

  

Monday, January 4, 2010

பூஜ்ஜியம்

பூஜ்ஜியத்திற்கும் மதிப்புண்டு
ஆம் ! நான்
உன்னோடு சேர்ந்தபோது!

நான் உன்னையே
வட்டமிட்ட போது
தெரிந்து கொண்டேன்
பூஜ்ஜியம் முக்கியமென்று!

உன் இனிமையில்
சுற்றும்போது அறியவில்லை
தனிமையில் தந்தை 
கொடுத்த பணம் 
பூஜ்ஜியமானதும் புரிந்தது 
காந்தி சிரிப்புகருகிலுள்ள
புஜ்ஜியம் முக்கியமென்று!

கவுண் டவுன்
புஜ்ஜியமானதும் ராக்கெட்
பறந்தது !
என் காதல் 
ராக்கெட் பறந்த
பின் கவுண் டவுன் 
ஆரம்பமானது
புஜ்ஜியமானதும் தான்
என்னையே உணர்ந்தேன்!


வட்டத்துக்குள் பூஜ்ஜியமாய்
என்னை சுருக்கி
கணக்காய்  வாழ்ந்தேன்
வாழ்க்கை வலியின்றி
வசதிமிக்கதாய்
வண்ணமாகியது!
வாழ்வை  புஜ்ஜியமாக்கி
புதுமை படுத்திக்கொள்!
புஜ்ஜியத்தின் அருமை
உணர்வாய் !        

Sunday, January 3, 2010

புவிவெப்பமாதல் தடுப்போம் !

புதுசு புதுசா
பார்கிறாங்க  பஞ்சாங்கம் !

பதவி உயருமா
பணம்  வருமா
அத வாங்குவோமா
இத வாங்குவோமா
பார்கிறாங்க பஞ்சாங்கம் !

புவி வெப்பம் உயருது!
பயம் வருது !

அத வாங்கி
இத வாங்கி
வசதி பெருக்றேனு
கார்பன் , மீதேன் 
ஓசோன் வாயு
அதிகமாக்கி .....
பூமிய சூடாக்கிடாதிங்க!

இனி ஒரு விதி செய்வோம்
புவி சூட்டை கூட்டி
சதி செய்யும் சாதனத்தை
சரி செய்யுவோம்!

வசதி சுருக்கி 
வாழ்வோம் வளமுடன் !

புவி சூடானால்
பனி உருகும்
வெள்ளம் பெருகும்
கடல் மட்டம் உயரும்
காணும் மிடமெல்லாம்
கடல் கடல் !
குடிக்க தண்ணீர்
இன்றி தவிப்போம்!
கடல் வாழ்
உயிரினம் அழியும் !  

நோய் பரவும்
மனிதன் மரிவான் !
வன உயிரினம்
அழியும் !

அழியும் முன்னே 
விழித்திடு !
விடியலை விதைத்திடு!

முடிந்தவரை 
வசதி சுருக்கி 
புவி சூடாக்கும் 
வாயு நீக்கி 
வாழ்வை வளமாக்குவோம்
நம் 
சந்ததிக்கு உள்ளதாக்குவோம்! 

மதுரையிலிருந்து வேலூர் பயணம்

       மதுரையிலிருந்து வேலூர் பயணம் மிகவும் சுவையான அனுபவம்.  1857 ல் முதல் சுதந்திர போர் நடை பெற்ற அதே ஊர் தான் . ஆமாங்க , சிப்பாய் கலகம் நடை பெற்ற ஊர்தான்க!
        வாஜ்பாய்க்கு நன்றி ! தங்க நாற்கரச்  சாலை மிகவும் சொகுசான பஸ் பயணத்திற்கு உதவியது. அரசு பஸ் தான் , இருந்தாலும் ௯ட்டம் அதிகம் இல்லை. தனியார் பஸ் ௯ட்டம் அதிகம் ஏனோ!
           அருகில் இருந்த விழுப்புரம் செல்லும் நபர், "சார், தனியார் பஸ்சில் லக்கேஜ் , கொரியர் வருமானம் அதிகம், மீதி பச்சண்ஜர் லாபம் தான் . அதை வைத்து நன்றாக சர்வீஸ் செய்கிறார்கள் ". அப்படியா !
             சி. எம் . சி. மறுவாழ்வு மையம் சென்றேன் . என் தங்கை வீடுக்காரர் முதுகு தண்டுவட பிரச்சனைக்காக அனுமதிக்கப் பட்டார். அங்கு சென்று பர்ர்த்தபோது தான் தெரிந்தது அதை  விட மிகவும் மோசமானவர்கள் இருக்கிறார்கள் ! ஆம் ,அவரால் எழுந்து நடக்க முடியாது . இடுப்புக்கு கீழ் இயக்கம் கிடையாது.ஆனால் அதை விட   தலை முதல் கால் வரை இயக்ககம் இல்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள் .
              தயவு செய்து தலை பின்புறம் , முதுகு பகுதி , கழுத்தும் முதுகும் சேரும்பகுதியில்    அடிபட்டால் உடனே மருத்துவரை பார்க்கவும் . மிகவும் எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! பின்பு நடக்க முடியாமல் போய்விடும்.
              பங்காளதேஷ், பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் இருந்து இதே பிரச்சனைக்காக நிறைய போர் இருக்கிறார்கள்.   விழுப்புரம் சேர்ந்த மருத்துவ கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவன் கார் மரத்தில் மோதி , தண்டுவடம் அடிபட்டதில் இன்று, பேச முடியாமல் , நடக்க முடியாமல் , குழந்தை போல் உள்ளான் .
           வேலூரில் கால் இடறி கிழே விழுந்த ரயில்வே அதிகாரி மிகவும் நடக்க  முடியாமல் பட்டுத்த பட்டுக்கை ஆக உள்ளார். தண்டுவடத்தில் சிறுவயதில் அடிபட்டதாம்.
          பாத் ரூமில் இருந்து கீழே விழுந்த இருபத்து ஆறு வயது , இரு குழந்தைகளின் தகப்பன் , இன்று பேச  மட்டும் முடியும் ,படுத்த படுக்கை , உதவிக்கு தாயும், மாமனாரும் .
         பைக்கில் இருந்து கீழே விழுந்த தற்போதே திருமணம் ஆனா பாங்களதேஷ் நபர் , இன்று செயல் இழந்து , சாப்பிட மனைவி ஊட்டும் நிலை, பேச முடியாத நிலை, சொல்வதை உணரமுடியாத நிலை.
           தயவு செய்து வண்டியில் செல்லும் போது கவனமாக செல்லவும் , தலை கவசம் அணிந்து செல்லவும் . வேகமாக செல்வதை விட விவேகமாக செல்லவும். எத்தருணத்திலும் தலை மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியில் அடிபடாமல் பார்த்துக் கொள்ளவும் . அப்படி அடிபட்டால் உடனே மருத்துவரை நாடவும் .
           வட நாட்டவர் குழந்தைகள் தனிமையில் படுக்கையில் விட்டு செல்லும் போது , நம்மவர் அவர்களை தம் உடன் பிறப்புக்கள் போல் பாவித்து அவர்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது , இன்னும் மனிதாபிமானம் செத்து விட வில்லை என்பதை காட்டுகிறது.
           கனத்த இதயத்துடன் திரும்பு கிறேன். இனி யாருக்கும் இப்படி ஒரு நிலை வரக்௯டாது . வாழம் வாழ்க்கை நம் கையில் , அதை கவனமுடன் வாழ கற்றுக்கொள்வோம்! உடம்பை வளர்த்து , உயிரை காக்க , விரைந்து செல்வதை தவிர்ப்போம், தலை கவசமுடனே வண்டில் செல்வோம்!      
                    

Thursday, December 31, 2009

பூத்தது புத்தாண்டு!

பூத்தது புத்தாண்டு!
புரியபோகுது பல்லாண்டு
பேசும் சாதனை !
இனி நமக்கில்லை
வேதனை !


துடித்து எழு!
அடித்து போக்கு
அழுக்கு நீக்கி
ஆடை போல் உள்ளம் !

அனைத்துக் கொள்
அன்பாய் அனைத்தையும் !
இணைத்துக் கொள்
இனக்கமாய் இதமாய் !

இதயம் ஈரமாகட்டும்
பசித்தவருக்கு புசிக்க
உணவிடுவோம்!

புனிதமாகட்டும் பூமி
பூதமாகும் வெப்பம்
புரியவைக்கட்டும்
பூமியில் மனிதன்
வாழ வழி விடட்டும்!
 

மதுரை

Wednesday, December 30, 2009

௯டா நட்பு !

சிறகு முளைக்கும்
சிந்திக்க தூண்டும்
படிப்பும் சுமையாகும்
சுவையாகும் கூடா நட்பு!

சுருதிக் கூட்டும்
குருதி கொதிக்கும்
பெற்றோர் வார்த்தை
ஒலிக்கும் போது !

வாய் வசைபாடும்
வாத்தியாரைப் பார்த்து !
வானமாய் விரிந்து
வனமாய் மாறியிருக்கும்
வம்பு செய்யும்
௯டா நட்பு !
 

   





Tuesday, December 29, 2009

பூவியை குளிரச் செய் !

இயற்கை இனிக்கும்
இணைந்து பார் !

மரத்தை நடு
நம் சந்ததியரின்
மனதைத் தொடு!

மரத்துப் போன
மனதை பொசிக்கி
பூவி வெப்பமாதலை
தடுக்க யோசி!

மரத்தை நட்டு
பூவியை குளிரச் செய் !

பூ பூக்கும்
காய் காய்க்கும்
கனி இனிக்கும்
என்பன  .....
உன் மொட்டுக்களுக்கு 
கற்பனையாகும் முன்
விழித்திடு !
விதைத்திடு!
மரம் வளர்ப்போம் !
மனித நேயம் காப்போம்!
பூவி   வெப்பமயமாதல் தடுப்போம்!     

  

     

மரணம்

மரணம்
மனு போட்டாலும் வராது !
மறுத்தாலும் விடாது !

மரணிக்கும் வரை
வாழ்வை வசமாக்கு!
மரணிக்கும் போது
வாழ்வு வரலாறு ஆகும்!

இவ்வாண்டின் மரணம் 
புத்தாண்டின் விடியலுக்கு
விட்டுச்செல்லும் வெளிச்சம் !

தனி மனித மரணம்
தன் சந்ததிக்கு
கற்றுத்தரும் பாடம்
ஒவ்வெரு நாளையும்
மரணமின்றி விடியலாக்கும்!

மரணத்தை கண்டு
மிரளாமல்
மரணத்தின் கைகளில்
முத்தமிட்டு
வாழ்வை வளமாக்குவோம்!  

Monday, December 28, 2009

சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடிப் போவதைப் பற்றி

      இந்த வாரம் ஆனந்த விகடனில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "எம்.ஜி .ஆரைப் பார்க்கணும்!"  கட்டுரையில் சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடிப் போவதைப் பற்றி மிக அருமையாக கூறியுள்ளார். அவரின் கருத்துகள் இதோ :
 
        சிறுவர்கள் ஏன் தன் வயதை மீறி நடந்து கொள்ள ஆசைபடுகிறார்கள் . 
ஆறாம் வகுப்பில் காதல் தோல்வி கண்ட சிறுவர்கள் இன்று இருக்கிறார்கள் . ஒன்பதாம் வகுப்புக்கு போவதற்குள் பாய் பிராண்ட் மற்றும் கேர்ள் பிராண்ட்
எண்ணிக்கை எத்தனை என்று கணக்கிடுகிறார்கள் .


         
         இணையத்தின் வழியே எளிதாகக் கிடைக்கும் ஆபாசப் படங்கள் அவர்கள் பாலியல் ஆசைகளைக் கொந்தளிக்கச் செய்கின்றன. ... குற்றத்தைக்  கொண்டாடும் திரைப் படங்கள் அவர்களுக்கு முன் உதாரணமாகின்றன.


         அவனைப் புரிந்துகொள்வதற்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இரு தரப்பும் தவிக்கிறது.  தமிழகத்தில் முன்பு வறுமையால் வீட்டை விட்டு ஓடியவர்கள் அதிகம் இருந்தார்கள் . இன்று ஓடுகிறவர்களில் பெரும்பான்மையினர் வீடு அனுமதிக்காத உல்லாசங்களைத் தேடியே வெளியேறுகிறார்கள் .                         
       
           ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பார்வையில் என் கருத்துகளை முன் வைக்கிறேன் .
              சீர்கெட்டுக் கிடக்கும் உலகச் சூழ்நிலையை நல்ல கல்வி ஒன்றினால் தான் மாற்ற முடியும் . 
              நம்முடைய உலகின் எதிர் காலம் மாணவ மாணவிகளின் கைகளில் தான் இருக்கிறது. அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வியின் தரத்தை பொறுத்துத்தான்   நம் உலகச் சூழ்நிலை அமையப் போகிறது . 
             தரமான கல்வி கொடுக்க, நம் தமிழக அரசு சமச்சீர் கல்வி முறையை கொண்டுவருவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் ஆகும் .

               ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒளிவு மறைவில்லாத உறவு  ஏற்படும் போதுதான் , கல்விக் ௯டங்களில் கற்றுக் கொள்ளுவதற்கான சூழ்நிலை உருவாகும். ஒற்றுமை , தோழமை போன்றவைகளினால் ஆசிரியர்களும் மாணவர்களும் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்.  
  
                 செயல் வழிக் கற்றல் முறையில் ஆசிரியர், மாணவர் உறவு தோழமையுடன் ஒற்றுமை உடையதாக உள்ளது என்பதை நினைவு படுத்த கடமைப் பட்டுள்ளேன் .

                 அன்புக்காட்டுதல் , பகிர்ந்து கொள்ளுதல் , ஒளிவு மறைவின்றி கருத்துக்கள் பரிமாற்றம் செய்து  கொள்ளல் போன்றவைகள் புதிய விசயங்களை சுலபமாகவும் , ஆர்வத்துடனும் கற்றுக் கொள்ளுவதற்கு உதவும்.

                 ஒரு உண்மையான நல்ல ஆசிரியர் தன்னுடைய மாணவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கொண்டிருக்க மாட்டார். அவர் தன் மாணவர்களை சுயமாகச் சிந்தித்து சுதந்திரத்துடன் செயல்படுவதற்கு அனுமதித்து வருவார்.

                   புத்தகங்களைப் படிப்பதால் மட்டும் கல்வி முழுமை பெறுவதில்லை.
தன்னைச் சுற்றிலும் நடப்பவைகளிலிருந்து ஒருவன் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.  ஆசிரியரின் முக்கிய பணி மானவிர்களிடம் உண்மையை கண்டுக் கொள்ளும் திறமையை வளர்பதுதான்.        
                
                பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய நிறைவேறாத ஆசைகளை, தங்கள் குழந்தைகளின் மூலமாக அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டு , அவைகளை அதங்கள் குழந்தைகள் மீது திணித்துவருகிரர்கள்.
                 பெற்றோர்களும் ,ஆசிரியர்களும் செய்ய வேண்டிய முக்கியமான பணி இதுதான்.  முதலில் குழந்தைகள் என்ன செய்ய விரும்பு கிறார்கள் என்ற அவர்களுடைய விருப்பங்களைக் கண்டறிந்து கொள்ள வேண்டும் . அந்த விருப்பங்களை ஊக்குவித்து அந்த விருப்பங்களை நிறைவேறுவதற்கு தங்களால் ஆனா உதவிகள் அனைத்தையும் , அவர்கள் செய்ய வேண்டும். அப்போது தான் குழந்தைகளிடமிருந்து ஆக்கப்பூர்வமான , முழுமையான பரிபூரணம் நிறைந்த நல்ல செய்கைகள் மலர்ந்து, கெட்டுவிட்டிருக்கும் உலகச் சூழ்நிலையை தூய்மை படுத்தும். 
                  இதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் புரிந்து செயல் பட்டால் , மாணவர்கள் வீட்டை விட்டு ஓடிப்போவது முற்றிலும் நின்றுவிடும் .              
                

வாழ்க்கை வசந்தமாகும்

 வாழ்க்கை வாழ்வதற்க்கே ! 
 வாழ்ந்து பார் ,
 வாழக் கற்றுக் கொள்வாய் !


 வாழ்க்கை வசந்தமாகும் 
 வசை பாடுவதை நிறுத்தி , 
 வாய்ப்புகளை தேடிச்செல் !
 
 வாழ்க்கை வளமாகும் 
 எண்ணங்களை வண்ணமாக்கு! 
 எண்ண வாசலை திறந்து வை 
 வாழ்வு சொர்க்க வாசலாக மாறும்! 

  கனவு காண் ! 
  கனவே வாழ்வாகி விடாமல் 
  நினைவுகளாக்கும் 
  முயற்சி மேற்கொள்!

  உறவுகளை நேசி 
  உரிமை கொடுக்கும்
  உனக்கு உயர்வு!

  வாழ் ! வாழ்வாய் !
  வானம் வசப்படும் 
  பூமியும் சொர்க்கமாகும் 
  நிலவும் சோறுட்டும்
  வீட்டு முற்றத்தில் 
  நட்சத்திரங்கள் நடனமாடும் 
  நம்பிக்கை ஒளியூட்டும் 
  வாழ்வை நேசி ! 

Sunday, December 27, 2009

கற்றல் திறன்



         "காயம்படுகிறவர்கள் வாழ்கிறார்கள். பின்னடைகிறவர்கள் மரணிக்கிறார்கள்."  என்கிறார். ஜே. கிருஷ்ணமூர்த்தி.  பட்டால் தான் புத்திவரும் என்பது பழமொழி .
                                                                                                                                                                              
      
       இன்று  குழந்தைகள் பட்டறிவு இன்றி தானாக கற்கிறார்கள் என்ற வாதம் இருக்கிறது !
செயல்வழி கற்றல் நம் மாணவர்களுக்கு கிடைத்த வரபிரசாதம்.

       இன்று  தினமலர் பேப்பரில் வந்துள்ள கட்டுரையில்  '  மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது'.
  
           செயல் வழி கற்றல் வந்ததில் இருந்து மாணவன்  தன் அறிவு
திறனுக்கு ஏற்றவகையில் யாருடைய வற்புறுத்தலும் பயமும் இன்றி ,தன் சக  மாணவன் துணையுடன்  கற்கிறான் மற்றும் ஆசிரியர் கற்றல் சுழலை
 ஏற்படுத்தும் நபராக செயல்பட்டு மாணவனை தன் போக்கில் காயம் பட ( தவறுகள் திருத்த)  செய்வதன் மூலம் , மாணவனை நல்ல அறிவுள்ளவனாகா  வாழச்செயகிறார்.


முந்தய    பாடமுறையில்  மாணவர்களுக்கு  மொத்தமாக
கற்றுத் தரும்போது சில  மாணவர்கள் பின்னடைய நேரலாம் .
இப்பின்னடைய்வு மாணவர்களை படிப்பை விட்டு மரணிக்கச்செயயலாம் .

ஆகவேதான்  முந்தய காலங்களில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக இருந்தார்கள் ,
இன்று மிகவும் குறைவு .
              மாணவர்கள் கட்டாயப்படுத்துதல் அவனின் கற்றல் திறனை குறைக்கச் செய்யும் என்பது உண்மை . ஆனால் தற்போதைய செயல் வழி கற்றல் முறை மாணவனை கட்டாய படுத்தி அறிவை திணிக்கவில்லை . எது மாணவன் படிப்பை இனிக்கச் செய்து கற்றல் குறைப்பாட்டை நீக்குகிறது. கற்றலை இனிமை ஆக்குகிறது .

Saturday, December 26, 2009

சாலை விதி மீறல்

மதுரையில் ட்ராபிக் ஜாம் அதிகமாகி விட்டது ! அதற்கான காரணம் மதுரை வாசிகளின் சாலை விதி மீறல் தான் என்பது மிகவும் தெளிவாகிறது .
         உதாரணத்திற்கு நான் பீ பீ குளம் அருகில் வந்து கொண்டு இருந்தபோது , பிரதான சாலையில் மிகவும் கவனமாக என் முன்னாள் ஒரு கார் சென்றுகொண்டு இருந்தது.  பீ பீ குளம் அருகில் இரு புறத்திலும் கடைகள் உள்ளன , அக் கடைகளுக்கு முன்னால் அனைத்து தரப்பு வாகனகளும் பார்கிங் செய்யப்  படுகின்றன. 
         பெட்டிக்கடையில் ஒரு ஐம்பது வயது டைய பெரியவர் , கடையில் வார இதழ் , சில பொருள்கள் வாங்கி கொண்டு , பிரதான சாலையின் வாகனத்தை பார்க்காமல் தன்னுடைய வண்டியை அப்படியே பின்னால் நகர்த்தினார்.. கவனமாக வந்த கார் , ஹோர்ன் ஒலித்தும் , கவனக்குறைவால் மீண்டும் வண்டியை பின்புறம் நகர்த்த , லேசாக இடித்தது .
          அதைவிட முக்கியம் என்னவென்றால் , தடுமாறி கீழே விழ , கடைகாரர்கள் மற்றும் கடைகருகில் நின்றவர்கள் எல்லாம் கார் ஓட்டுனரை , திட்டுயதுடன் அடிக்கவும்  
சென்றனர் , பயந்த டிரைவர் காரை வேகமாக ஓட்டிச் சென்றான்.  உடனே கடைக்கு அருகில் இருந்த தடித்த நபர் வண்டியை எடுடா , அவனை பிடிக்க , என கூறிக் கொண்டு பைக் எடுத்து விரட்டினான் .
           அதுவரை விழுந்த அந்த நபரை யாரும் தூக்க வரவில்லை , பின்னால் வந்த நான் , வண்டியை நிறுத்தி தூக்கிய பின் வந்தது , கூட்டத்தில் இருந்த அதி புத்திசாலி ,"சார் , வண்டி நம்பர் இந்தாங்க " .  கடைசி வரை யாரும் அவர் வந்தது தவறு என எடுத்து கூறவில்லை . ஏன் என்றால் யாருக்கும் சாலை விதிகள் தெரியவில்லை, பிரதான சாலையை பார்த்து , வண்டியை அவர் எடுத்து இருந்தால் , அவ்விபத்து நிகழ்ந்து இருக்காது.
            மதுரை மத்திய மந்திரி திரு மு.க. அழகிரி அவர்களின் முயற்சியால் சாலைகள் அகலப் படுத்தப் படுகின்றன . தினமலர் முயற்சியால் போஸ்டர் இல்லா தூய்மையான நகரமாகவும் , சாலைகள் விரிவுபடுத்தியும் , சாலையின் குண்டும் , குழியும் சரி செய்யப்பட்டு வருகின்றது . மதுரை தூய்மை படுத்தப்படுகிறது. 
             இருப்பினும் , தினம் அங்காங்கே விபத்துகள் நடந்துக் கொண்டு தான் இருக் கின்றன, ஏன் எனில் , யாரும் சாலை விதிகளை மதிப்பதில்லை, கவனம் காட்டுவதில்லை . மதுரையில் காவல் துறை ஹெல்மெட் அணிய சொல்லி ஓய்ந்து போனார்கள் .  காவல் துறை தன் கடமைகள் செய்தலும் ,பொது மக்கள் திருந்தி சாலை விதிகளை மதித்தால் மட்டும் விபத்துகளை தடுக்கமுடியும் .
             தமிழக கல்வித்துறைக்கு அன்பான வேண்டுகோள் , வரும் சமச்சீர் கல்வி திட்டத்திலாவது சாலைவிதிகள் , விபத்து முதலுதவி போன்ற பாடம் , மூன்று அல்லது நான்காம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் .                  
               சாலை விதிகள் மதிப்போம் , சாவை தடுப்போம் . 

Thursday, December 24, 2009

நட்பு

நட்பு
நம்பிக்கையின் நங்கூரம்
கரை தொடும்
அலை போல்
உன் இதயம்
தொடும் !

நட்பு
தீமை நீக்கி
நன்மை தேக்கி
பண்பை பெருக்கி
பகைமை அகற்றும்!

நட்பு
ஆயில் உள்ளவரை
அசை போடச்
செய்து இதயத்துக்கு    
இனிமை ஊட்டும்!

கல்வி

கல்வி  உன்
 நிழல் போல்
 தொடரும்  கடவுள் !

கல்வி உன்
நல்லது  கெட்டது  
சொல்லும் நண்பன் !

கல்வி உன்
புகழ் பரப்பும்
செயற்கைக்கோள் இணைப்பு !

 கல்வி உன்
 கனவை நினைவாக்கும்
அற்புத சக்தி !


கல்வி உன்
ஆனந்தத்தை பெருக்கும்
அறிவு ஊற்று !

கல்வி உன்
உள் அழகை 
செதுக்கும் உளி !

இனி மேலாவது
தயவு செய்து
படித்து களி !

Friday, December 18, 2009

ஒருவேளை உணவு

கல்வி கனவாகியது
கல்வி ௯டங்கள்
காசாகின !

பசி படுத்தியது
கற்பு கரைந்தது
கால்வயிறு நிறைந்தது!

கால்வயிற்று கஞ்சிக்கு
பிளட்பர மங்கை
பணக்கார மெத்தையில் !

வசதி தேடி
வழி மாறி
சிறை கைதியான  தந்தை
சிறகு  ஓடிந்தன் மகன்!
சிதறியது கனவு
சிந்தனையெல்லாம்
ஒருவேளை உணவாகியது!
















   

கடல்

தொட்டது அலை
விட்டது கவலை!
இது இயற்கை .

மனம் பட்டென்று
பட்டது ,சுட்டது
இத்தனை நாளும்
இனிமை உணரவில்லை ?

கடல் உப்பு
கரைந்தது என்
கண்ணீர் !
கலைந்தது என்
கலக்கம் !

கடல் அழகை
நடந்து பார்
ரசித்து  பார்ப்பாய் !
கால் நனைத்து
பார் மறப்பாய்
கவலை  !

மீண்டு மீண்டெழும்
அலை கற்றுத்தரும்
கலை  முயற்சி
திரு வினையாக்கும் !

முத்தமிட்டு செல்லுமலை
சொல்லிவிட்டு  செல்லும்
 வாழ்க்கை பாடம்
வசந்தத்தை தேடித்தரும்!


கவிதை
 கடல்

Tuesday, December 1, 2009

எய்ட்ஸ் தினம்



இன்று உலக எய்ட்ஸ் தினம், டிசம்பர் 1. எய்ட்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டாலே எதோ கெட்டவார்த்தைப் போல் உணர்கிறார்கள்! நானும் என் நண்பர்கள் , முதியவர்கள் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் என அனைவரிடமும் இதைப் பற்றி பேசியுள்ளேன், அனைவரும் வயது வித்தியாசம் இன்றி வெட்கப்படுகிறார்கள் அல்லது “சார் வேறு எதையாவது பேசுவோமா ? இதெல்லாம் நமக்கு எதுக்கு சார்?”  என மழுப்பலானப் பதிலைத் தருகிறார்கள்.
  
     ஏன் இந்த வெட்கம் ? ஏன் இந்த பதற்றம் ?தமிழகம் இன்று எய்ட்ஸில் முதலாவது இடத்தைப் பிடித்தாலும் ஆச்சர்யம் இல்லை.!


நேற்று மதுரை தினமலரில் ஒரு செய்தி படித்தேன், அதில் மூன்று பெண்கள் விபச்சாரத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடச் செய்ததாக செய்தி வந்திருந்தது. இதில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் புரோக்கர் பங்கு கொடுக்கவில்லை என்பதால் போலீஸ் ஸ்டேசன் வந்துள்ளனர்.


தங்களால் எய்ட்ஸ் பரவுகிறது என்றதொரு   பதற்றம்  வரவில்லை! பங்கு அதிகமாக சம்பாதிக்கிறான் தன்னை வைத்து பணக்காரனாக இருக்கிறான் என்பாதால் வந்தப் பிரச்சனை ! இவர்களால் இனி யாருக்கும் எய்ட்ஸ் பரவக்கூடாது என உதவிய தொண்டு நிறுவனத்தை இங்கு பாராட்டியே ஆக வேண்டும். சபாஷ்!


 Where to fix the sex in schools?   என்பது தமிழகத்தில் மிகப் பெரியப் பிரச்சனை !
 என்னைப் பெருத்தவரை எந்த நல்லப் பண்பாக இருந்தாலும் அது தொடக்கக் கல்வியிலே தான் கொடுக்கப் பட வேண்டும். அப்போது தான் அது பசுமரத்தாணி போல் நன்றாகப் பதியும். திருடக்கூடாது, பொய் பேசக் கூடாது, பிறர் பொருள் மீது ஆசை வைக்கக்கூடாது, கண்ட இடங்களில் குப்பை போடக்கூடாது, சக மாணவனிடம் சண்டைப் போடக்கூடாது, புத்தகங்களை கிழிக்கக்கூடாது, உடை நன்றாக துவைத்து அணிய வேண்டும், எடுத்தப் பொருளை எடுத்த இடத்திலே வைக்க வேண்டும் (இப் பண்பு செயல் வழிக் கற்றலில் அட்டையை டீரே யில் எடுத்து , குரூப்பில் அமர்ந்து , அந்த குரூப்பிற்க்கு தகுந்த மாதிரி ஆசிரியர் உதவியோ அல்லது சக மாணவன் உதவியோ பெற்று, நன்றாக படித்து , பின் எடுத்த டீரே யில் அந்தக் கார்டை மீண்டும் வைப்பதால்தன்னை அறியாமலே அப்பண்பைப்  பெறுகிறான்) போன்ற பண்புகளை கற்றுத்தருகிறோம்.
தொடக்கக்கல்வியில் ஏன் பாலியல் கல்வியை  கற்றுத்தரக்கூடாது?


கலாச்சாரம், பண்பாடு என்று கூறி நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வீணாக்குகிறோம்! ஒன்றாம் வகுப்புப் படிக்கும் பையன் எத்தனை பள்ளிகளில் சக மாணவியை தன்னையறியாமலே கட்டிபிடிக்கிறான் ? மனச்சாட்சியை அடகுவைக்காமல் கூறுங்கள். எத்தனை முறை நாம் டி.வி பார்க்கும் போது காதலிக்கும் காட்சி வரும் போது “அம்மா ச்சீ அசிங்கம் எனக் கூறி ரிமோட்டை வைத்து வேறு சேனல் மாற்றுவது உண்டு. என் கேள்வியெல்லாம் பாலியல் பற்றி அறிவு அல்லாமலா இது போல் நடக்கிறது?


மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் இந்த பாலுணர்வு இயற்க்கையிலே மனதில் பொதிந்துக் கிடைக்கிறது. இதை நாம் அமுக்கப் பார்க்கிறோம், இந்த அமுக்கம் தான் பிற்காலத்தில் காமமாக வெளிப்படுகிறது . அந்தக் காமத்தையும் முறையான வழியில் செலவிடத் தெரியாமல் , கற்பழிப்பு , கொலை, கொள்ளை என வழிமாறி செல்ல துண்டும் . முடிவில் எயிட்ஸ் நோயாளியாக மாறி வாழ்க்கையை  தொலைத்து அவதிப்பட நேரிடுக்கிறது. 
இன்று தகவல் தொடர்பு சதனங்கள்,சிறுவயதிலேயே அனைத்து  விசயங்களையும் எளிய முறையில் கற்றுத்தருகிறது. பல மாணவர்களுக்கு அவர்கள் வாழிடங்களே வழிய வந்து வசதியாக பாலியல் சம்பந்தமான விசயங்களைக் மோசமான முறையில் கற்றுத்தருகிறது. இது யாவரும் மறுக்க முடியாத உண்மை . அப்படி இருக்க நாம் இன்னும் என் நம் குழ்ந்தைகளுக்கு பாலியல் கல்வியை தொடக்கக் கல்வியில் தரக் குடது? 
கல்வியாளர்கள் சிந்திக்கவும்! கட்டிப்பிடித்தல், மாணவிகளுடன் விளையாடுதல், மாணவிகளுடன் பழகுதல் , காதல் பற்றி பேசுதல் , காதலித்தல் , ஆண், பெண் பேதம் பேசுதல் , பெண்ணுடன் கைகுலுக்குதல் போன்றவற்றை நம் சமுகம்  தவறுதலாகவே சித்தரிக்கின்றது. 
ஆகவே, தான் பல பள்ளிக் ௯டங்களில் கழிப்பறை  சுவற்றில் மாணவர்கள்  ஆசிரியரைப் பற்றியும் , மாணவிகளைப் பற்றியும் தவறான முறையில் எழுதிவைக்கின்றனர்.  சிறுவயதிலேயே இது பால் வேறுபாடுதான் வேறு ஒன்றும்மில்லை, பால் உறுப்புகளை சிறுநீர் கழித்தப்பின் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், கட்டிபிடித்தல் என்பது தவறானதன்று, ஆனால் தவறான உணர்வுகளுடன் பிடித்தல் குடாது . அனைவரும் நம் சகோதர, சகோதிரிகள்  தவறானக் கண்ணோட்டம்  நம் வாழ்வை சீரழித்து விடும் என பொறுமையாகக் ௯ற வேண்டும். சற்றுக் கடினம் தான் என்ன செய்வது நம் குழந்தைகளை நாம் தானே காப்பாற்ற வேண்டும்.
என்னுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் தம் வகுப்பில் வயதுக்கு வந்து , அதாவது பூப்பெய்தும் குழந்தைகளை என்னிடம் அழைத்து வந்து, அந்த விஷயத்தை சொல்ல (அச்சம் என்பதா? கூச்சம் என்பதா?) தயங்குகின்றனர் . அதுவும் தற்காலத்தில் நான்கு,  ஐந்தாம் வகுப்பில் பூப்பெய்துவது என்பது சகஜம் ஆகிவிட்டது .  காமுகர்களிடம் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்ற , பாலியல் கல்வி மிகவும் அவசியம் . தொடக்கக்கல்வியிலே அதனைத்  தருவது சாலச்சிறந்தது. 
சிறுவயதில் சிறுவர்கள் பால் உறுப்பை அடிக்கடி தொட்டுக்கொண்டு இருப்பதை தவறு என உணர்த்த வேண்டும் . சக மாணவியின் அங்க அவையங்களை பார்ப்பதை தவறு என்று உணர்த்துவதுடன் , உனக்குப் போன்றே அவளுக்கும் உறுப்புக்கள் உள்ளன என உணர்த்தவேண்டும் .    
                                                    
எய்ட்ஸ்  பற்றிய விழிப்புணர்வுகளை தொடக்கக்கல்வியிலே தருவதுதான் மிகவும் சிறந்தது. எச்.ஐ.வி. பற்றி டாக்டர் லுக்   மாண்டேக்ணன் என்ற விஞ்ஞானி பிரான்சில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஐந்தில் கண்டுபிடித்தார் என போதிப்பதுடன் எய்ட்ஸ் நோயாளிக்கு போதுமான நோய் எதிர்ப்புதன்மையை ஏற்படுத்துவதுடன் , சமுகம் அவர்களை ஒதுக்காமல் பாதுகாத்து , பராமரிக்க நம் குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டும். எய்ட்ஸ் ஒழிப்போம்! முறையான பாலியல் கல்வியினை தொடக்கக் கல்வியிலே தந்துவிடுவோம்!