Wednesday, March 21, 2012

விகடன் ரீச் உண்மையிலே ரிச் !


   கடந்த வாரம் ஆனந்த விகடன் என் விகடனில் என் பிளாக் அறிமுகம் செய்யப்பட்டது. 
   பல பணிகளுக்கு இடையில் பிளாக் பக்கம் வர இயலவில்லை. விகடன் வாயிலாக என் பள்ளியில் 1978 படித்த சோம சுந்தரம் என்ற பழைய மாணவர் சிங்கப்பூரில் இருந்து தொடர்பு கொண்டார். அவர் தான் படித்த போது அவரின் ஆசிரியையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அனுப்பி தன் நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

    ஸ்ரீ வில்லிப்புத்தூரில் இருந்து ரத்தின வேல் அய்யா விகடன் பார்த்து முதலாவதாக வாழ்த்து தெரிவித்தார். என்னையும் என் எழுத்தையும் செம்மைப் படுத்தி ஒரு நல்ல நிலமைக்கு வர வேண்டும் என்று துடிக்கும் என் இனிய நண்பன் சகோதரன் கா. பா குறுஞ்செய்தி அனுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

   பல ஆசிரிய நண்பர்கள் விகடன் மூலமாக நான் பிளாக்கில் எழுதி வருவதை அறிந்து மகிழ்ந்தார்கள். என்னுடைய முன்னாள் நிர்வாகி திரு ராஜா அவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அல்லாமல் நான்கு ஆனந்த விகடன் வாங்கி கொடுத்து அதிகாரிகளிடம் தெரிவிக்க சொன்னார்.

   என் குடும்ப நண்பர் மற்றும் தற்போதைய பள்ளி நிர்வாகி திரு சுரேந்திரன் எ பாபு அக மகிழ்ச்சி கொண்டதுடன் ,  2002 ல் வெளியிடப்பட்ட படைப்பான “நீங்களும் முதல்வராகலாம்” என்ற புத்தகத்தை நினைவில் கூர்ந்து வாழ்த்து தெரிவித்ததுடன் , பெங்களூரில் உள்ள தன் மகளிடம் பகிர்ந்து கொண்டு நெட்டில் படித்து வாழ்த்துக்களை தெரிவிக்க சொன்னார்.

    இப்படி பல வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டே செல்லலாம்.  அத்தனை ஆனந்தத்திற்கும் ஒரே காரணம் ஆனந்த விகடன் மட்டுமே…!

   ஓரே வரியில் நன்றி என்று சொல்லி விட மனமில்லை. என் மகிழ்வுக்கும் என்னுடைய எழுத்தின் விரிவுக்கும் அதன் பின் உள்ள மகத்துவத்திற்கும் , என் பணியின் ஆழத்திற்கும் உள்ள உன்னத தொடர்பை எடுத்து கொடுத்த ஆனந்த விகடனுக்கு என் வாழ் நாள் முழுவதும் கடமைப் பட்டவனாவேன்… !

ஐ லவ் விகடன்…!


இந்த வாரம் பாவா சொன்னது போல அதன் ரீச் உண்மையிலே ரிச்.  

Friday, March 9, 2012

நைஜிரியா ராகவனுக்கும் 2ஜி அலைக்கற்றைக்கும் உள்ள தொடர்பு - புதிய தகவல் உடனே படியுங்கள்


 “சொற்கள் மூலமாக இந்த மனித குலம் முழுவதையும் வியாபித்திருப்பேன்”- சார்த்தர்.

     தன் நட்பு மூலமாக உலகம் எங்கும் தன்னை விரிவுபடுத்தியுள்ள  மனிதர்களில் ஒருவர்  நைஜிரியா ராகவன். சென்னை வந்து ஒன்பது மாதங்கள் ஆகிய நிலையில் தன் சொந்த பயணம் காரணமாக இராமேஸ்வரம் சென்று திரும்புகையில் மதுரையில் கா.பாவின் புண்ணியத்தில் மடக்கினோம்.

     கார் டிரைவர் இல்லாத சூழலில் தானே கார் ஓட்டி வந்ததாலும், ஓய்வு எடுக்கும் சூழலில் மதுரை மீனாட்சியின் அருளில் மதுரையில் அவசியம் தங்க  வேண்டியாகி விட்டதாலும் நைஜிரியா ராகவனை பார்க்கும் வாய்ப்பு சீனா, சுந்தர்(சித்திரை வீதிக்காரன்), கா.பா, தருமி மற்றும் எனக்கு கிட்டியது.
 .
     அரவிந்த் சென்ற முறை வந்த போது இருந்ததை விட மிகவும் துடிப்புடன் என்னுடன் உரையாற்றினான். ஆழமான விசயங்களை பற்றி மிகவும் அழுத்தமாக எடுத்து உரைத்தான்.

     தருமி அய்யா விலங்கியல் துறை சார்ந்த பேராசிரியர் என்று அறிந்த வுடன் , நைஜிரியாவில் காமர்ஸ் குரூப் படிப்பில் பையாலஜி சேர்த்துள்ளார்கள் ஏன் ? என கேள்வியை முன் வைத்தான். காமர்ஸ்க்கும் பையாலஜிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டான்.

     நம் கல்வி முறையில் மதிப்பெண் அடிப்படையிலே மட்டுமே +1 குரூப்பில் சையின்ஸ் மற்றும் பிற குரூப்கள் ஒதுக்கப்படுகிறது. மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு பள்ளியில் இடம் கிடையாது. இப்படி மதிப்பெண் அடிப்படையிலேயே பள்ளியின் தரத்தை உயர்த்துகிறார்கள் என குற்றம் சாட்டினான். (நல்ல சிந்தனை … தாய்யை போல பிள்ளை … மன்னிக்கவும் தந்தையை போல தான் அறிவு அமைந்திருக்கும்.)இந்தியாவின் கல்வி முறையை சாடினான்.

     அய்யா தருமிக்கு அதற்கான விடை தெரியவில்லை. சித்திரை வீதி சுந்தர் உடனே ஈ காமர்ஸ் பேப்பர் இருக்குல்ல… அதுனால ஈ யை பற்றி படிக்க பையோ சயின்ஸ் வைத்திருப்பார்கள் என கடித்தார். ( தருமி ரசித்தார்)

     மாணவர்கள் தங்களின் சுற்றுப்புறம் மற்றும் தங்கள் நாட்டில் உள்ள உயிரினங்கள் பற்றி அறிய அதனை ஒரு பாடமாக சேர்த்து இருப்பார்கள் என்றேன்.

     நம் மண்ணில் விளையும் பயிர்கள் பற்றி இன்றைய மாணவர்களுக்கு தெரியவில்லை. நாம் நம் மண்ணை மறந்து திரிகிறோம். நம் மண் வளத்தை அறிய முற்படுவதில்லை. சாதரணமாக  ஜன்னலில் வந்தமர்ந்து குரல் எழுப்பி நம் தனிமையை இனிமையாக்க தன் குரலில் இசைக்கூட்டி அறிய வைக்கும் எந்த பறவையின் பெயரும் நமக்கு தெரிவதில்லை.
தருமி அய்யா தன் பேத்திக்கு, அமெரிக்காவில் சவுத் , நார்த் அமெரிக்காவினை பற்றி கற்று தருவதை சுட்டிக் காட்டினார்.  அது கூட அந்நாட்டின் வளத்தையும் சுற்று சூழலையும் அறிந்து கொள்ள கற்று தருகிறார்களோ என்று ஐயத்துடன் பதிலளித்தார்.

     சாருவின் எக்ஸைல் பற்றி நான் நல்ல முறையில் விமர்சித்தேன். ராகவன் எனக்கு சாருவை மிகவும் நன்றாக தெரியும். நேரடி தொடர்பு உண்டு , நீங்கள் வாசகர் வட்டத்தில் இருந்தாலும் , அவரை நான் ரசித்து படித்துள்ளேன். எக்ஸைல் பற்றி தவறான கருத்து நிலவுவதை தனக்கே உண்டான நகைச்சுவை உணர்வுடன் சுட்டிக் காட்டினார். . அதற்கு நான் விளக்கம் அளிக்கும் போது கா. பா வந்து விட்டார். நான் இலக்கியம் பேசுவதை நிறுத்தி விட்டேன். (நண்பர்களுக்குள் சண்டை எதற்கு?)

     கா.பா வந்தவுடன் பின் நவீனத்துவம், போஸ்ட் மார்டனிசம் , மாஜிக்கல் ரியாலிசம் என பல்வேறு இசங்களை பற்றி விளக்கமளித்து சுந்தருடன் கலந்துரையாடினார்.

     ரம்யா அக்கா வீட்டு கிரக பிரவேசம் பற்றி பேச்சு வந்தது. சாரி போன் வந்தது . கா. பா இந்த வார ஆனந்த விகடனில் மகளிர் தினத்தை முன்னிட்டு ரம்யா அக்காவின் தன்னம்பிக்கை பற்றி அழகாக எழுதியிருப்பதை நினைவூட்டினேன். ராகவன் அண்ணன் கா.பா வின் மகளீர் தின  பக்கங்களை பி.டி.எப் பார்மெட்டில் சேகரித்து ரம்யா அக்காவிற்கு மெயில் அனுப்பினார்.

     அட இப்படி தானுங்க … மின்சாரம் அற்ற வெப்பம் உமிழும் இரவுகளில் யாரையோ பற்றி எழுத வந்து..எதையோ எழுதும் போது மௌனியின் சுந்தரி  கதை ஆரம்பம் நினைவுக்கு வருகிறது.

“கோடை மிகக் கடுமையாகக் கண்டு விட்டது. எழுதுவதற்கு ஆரம்பிக்கும் எவ்வித முயற்சியும் எள்ளளவும் பயனாகாததைப் பற்றி  யோசித்தேன். அதற்கு இருவகைக் காரணம் வெகு யுக்தியாகக் கண்டு விட்டேன். மூளை, மூளையாக இல்லாது, வயல்களைப் போல் கட்டிதட்டிப் போயிருக்கலாம். அல்லது பேனாவின் மசி உறைந்து, எழுத ஓடாதிருக்கலாம். என் எழுது கோலை எடுத்து இரண்டு தரம் வேகமாக உதறியதில் , பேனாவைப் பற்றிய தகராறை ஒருவகையில் தீர்த்து விட்டேன். ஆனால் என் தலையை உதறிக் கொண்டால், பரிதாபம்! பல சிரமங் கொண்டு பன்றிக்கு வாரிவிட்டது போல் படிய வைத்த எனது அழகான கிராப் தலைமயிர் சிலிர்த்து நிற்குமே என்று ஒரு பயம் அடைந்தேன். எனினும், அப்படி இப்படி எழுத ஆரம்பித்து விட்டேன். இப்போது தான் எழுதுவதன் முட்டாள் தனத்தையும் கஷ்டத்தையும் உணர ஆரம்பிக்கிறேன்” – சுந்தரி கதை ( மணிக்கொடி 1936)  

     நீங்க மிரட்டின காலம் போய், பசங்க மிரட்டுர காலம் வந்து விட்டது என ராகவன் சுட்டிக் காட்டினார். ராகவன் எப்போதுமே மனதில் பட்டதை  பட்டாசாக வெடித்து தள்ளுபவர். பழக்கத்திற்கு மிகவும் அருமையான நண்பர். சமூக அவலங்களை எள்ளி நகையாடுவதில் அவருக்கு நிகர் அவரே!

     மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். அதில் நானும் கொடுத்து வைத்தவன். பாருங்க, இரவு ஒரு மணிக்கு மேல் முழித்து படித்தாலும் , டைப் செய்தாலும் தொந்தரவு செய்ய மாட்டாள்..! ( தண்ணி தெளிச்சு விட்டுடாங்கப்பா…என தருமி கமண்டு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை)
  
     ராகவனின் துணைவியார் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் அண்ணாவைப் போல பழகுகிறார். அது மட்டுமல்ல அண்ணாவுக்கு எல்லா விசயங்களுக்கும் ஒத்து போகிறார். புத்தக வாசிப்பு பழக்கம் பற்றி பேச வரும் போது , மிகவும் இனிமையாக , “நான்கு பெட்டி நிறைய புத்தகங்கள் அடுக்கி சேந்தியில் வைத்திருப்பதையும், இரண்டு பெட்டி புத்தகங்கள்  அவரின் நண்பர் வீட்டில் கொடுத்துள்ளார்” என சுட்டிக் காட்டினார். இந்த முறை புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்க வில்லை என்ற ஆச்சரியத் தகவலையும் கொடுத்தார்.
  
     இரவின் தனிமை என்னை வாட்டுகிறது.. இருப்பினும் ராகவனின் நினைவுகள்  நிலவு ஒளிப்போல என்னை வழிநடத்துகின்றன. அவரின் அன்பில் கரைந்து பெருகி , வெள்ளம் போல மதுரை வீதிகளில் உறக்கம் மறந்து இன்னும் வலம் வருகின்றேன் .   கா.பாவின் மூச்சுக்காற்றில் கரைந்து வெளிவரும்  இலக்கிய சிந்தனைகள் , என்னிடம் மறு சுவாசம் அடைந்து சார்த்தர் படிக்க தூண்டியுள்ளது எனக்கு வியப்பை தருகிறது.  
ஓய்வின்றி உழைக்கும் சீனா அய்யாவின் உழைப்பு , நட்பு பாராட்டும் பண்பு, என்னை நேர்த்தி மிக்கவனாக மாற்றி வருகின்றது. சீனா அய்யா, தருமி அய்யாவின் ஆழ்ந்த நட்பு  கூட ராகவன் அண்ணாவை மதுரையில் தங்க வைத்திருக்கலாம். அரவிந்த் என்னை வியப்பில் ஆழ்த்தும் ஒரு அற்புத சக்தி. அவனின் நகைச்சுவை உணர்வு என்னை ஆழ்ந்த சிந்தனைக்கு அழைத்துச் செல்கிறது.

     கடைசியாக சார்த்தரின் வரிகளுடனே ராகவன் அவர்களை காண்கிறேன்.

“என் சக நண்பர்கள் , நான் புதைக்கப் பட்ட மறுநாளே என்னை மறந்தாலும் , அதை நான் பொருட்படுத்தப் போவதில்லை. அவர்கள்  உயிரோடு இருக்கும் வரை நான் அவர்களைத் தொடர்வேன், பெயர் இன்றி யாரும் அறியாவண்ணம், எனக்கு தெரியாத மில்லியன் கணக்காய் இறந்தவர்கள், என்னில் அழியா வண்ணம் நான் பாதுகாத்து வருவது போல் நான் ஒவ்வொருவரிடத்திலும் இருப்பேன்”

     ஆம் ராகவனுடன் உரையாடுங்கள்… அவர் நம் நட்பை வருடங்கள் கடந்தாலும் சார்த்தர் சொல்வது போல் பாதுகாத்து வருவது அறிய வரும். அக நக நட்புக்கு ஒரு வாழும் உதாரணம் நம் நைஜிரியா ராகவன் மற்றும் குடும்பத்தார். 

     நட்பு வட்டத்தில் 2ஜி அலைக் கற்றை போல நைஜிரியா ராகவன் மிகவும்  பிரபலமானவர் என்று சொன்னால் மிகையாகாது. 

Thursday, March 8, 2012

முன்னோடி




இருள் பகலை வெல்ல
தொடங்கிய மாலை பொழுது…
பயந்து உடல் சிவந்து
கடலுக்குள் மறைய தொடங்கினான்
சூரியன்…
வீட்டினுள் நட்சத்திரங்கள்
மின்னத் தொடங்கின
மின்சாரம் அறுந்த
இருள் கவ்விய நேரங்களில்
சலித்த மனிதர்களிடம்
நட்சத்திர சிரிப்பில் வானம்
பல் இளித்து சொன்னது
பவர் கட்டில் உங்களுக்கு முன்னோடி
நிலவு என்று..! 

Monday, March 5, 2012

கனவின் கனவு



   இறுக்கமான சூழல் நிலவியது. என் இதயத்தை யாரோ அமுக்குவது போன்ற உணர்வு. என்னால் படுக்கையை விட்டு எழுந்திருக்க இயலவில்லை. காற்றாடி சுழலும் சத்தம் காதுகளில் கேட்டாலும் உடல் வியர்த்து கொட்டியது. என் அருகில் படுத்திருக்கும் என் மனைவி எந்தவித சலனமுமில்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். என்னால் அதற்குமேல் அந்த அழுத்தத்தை தாங்க முடியவில்லை. எழுந்திருக்க முயன்றேன்.அச்சமயம்  பூனையின் கத்தல் என் காதுகளில் கேட்கத் தொடங்கியது. நீங்கள் பூனையின் சத்தங்களை கவனித்து இருப்பீர்களானால் , இந்த சத்தம் பூனை தன் இரையை தாக்கி பிடிப்பதற்கான சத்தம் என கேட்ட மாத்திரத்தில் சொல்லி விடுவீர்கள். மெல்லிய உறுமலுடன் , மெதுவாக காலடி எடுத்து வைத்து , தாக்க தயாராக இருக்கும் சூழல் என்பது மட்டும்  புலப்பட்டதுஎன் காதுகளில் அருகில் கேட்ட அந்த உறுமல் ,என்னை எச்சரிக்கைப் படுத்தவே, என்னை தாக்க வருவதாக உணர்ந்த நான் சட்டென படுக்கையிலிருந்து  எழுந்து ஓட முற்படுகையில் தான் , நான் ஒரு கரப்பான் பூச்சியாக மாறியிருப்பதை உணர்ந்தேன். அதுவும் இறக்கை பறக்கும் அளவுக்கு முளைத்த முதிர்ந்த கரப்பான் பூச்சி. என் உயிரை கையில் பிடித்து பறந்தேன். பாருங்கள் , நான் ஒரு மனிதன் என்ற உணர்வு இன்னும் நீங்காமல் பேசிக் கொண்டிருக்கிறேன்.

       வேகமாகப் பறந்த நான், ஜன்னல் கதவின் திரைச்சீலையில் அமர்ந்தேன். பூனை என்னை விடுவதாயில்லை. அதுவும் தவ்வியது. அதன் கூரிய நகங்கள் என்னைப் பயமுறுத்தின. நகங்கள்தவ்வி என்னை பிடிக்க முற்படுகையில் நீளமாக நீண்டு அதன் கால் விரல்களில் இருந்து வெளிப்படுவதைப் பார்க்கும் போது என் அலறல் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. ஆனால் ஒரு கரப்பான் பூச்சியின் கத்தல் யார் காதுகளிலும் விழுந்திருக்க வாய்ப்பில்லை. சாதாரணமாகவே என் கத்தலை அவள் பொருட்படுத்துவதில்லை. அதுவும் கரப்பான் பூச்சியாக இருக்கும் போதா கேட்க போகிறதுஅவள் அசையாமல் ஆடாமல் ஒரு சடலத்தை ப் போன்றே படுத்திருந்தாள். என் மரண வேதனையை அவள் புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு வினாடியும் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருந்ததுஇப்போதைக்கு இந்த பூனையிடமிருந்து தப்பிப்பது மட்டுமே என்னுள் ஓடியது. ஜன்னல் திரைச்சீலையில் ஒளிந்து , அதன் கண்களுக்கு தெரியாமல் , வரவேற்பு அறையை நோக்கிப் பறந்தேன். என் நிழல் அதன் கண்ணில் பட , ஒரே தாவாகத் தாவி என் கணுக்காலில் அதன் நகங்கள் முட்ட , பிடிக்கத் தவறியது. என் பின்னங்காலில் ஒரு கணுப் பகுதி அறுந்து விழுந்திருந்தது. அதன் வேதனை என்னை வாட்டி எடுத்தது. தாங்க முடியாத வேதனையில் , மிதியடியின் அடியில் ஓடி ஒளிந்தேன். என் கால்களில் எந்த இரத்தப் போக்கும் ஏற்பட வில்லை. ஆனால், என்னால் வலியைத்  தாங்க முடியவில்லை. அலறலாம் என்றால் , பூனை தற்போது அந்த மிதியடியின் மேல் அமர்ந்து என்னைத் தேடிக் கொண்டிருந்தது.
  
    மிதியடியிலிருந்து பூனைக்குத் தெரியாமல் எங்காவது ஓடிவிடலாம் என்று தலையை வெளியில் தெரியாதது போல நீட்டிப் பார்த்தேன். ஹாலில் சோபாவில் என் மூன்றாம் வகுப்பு ஆசிரியர் பால் ராஜ் , அதே இளைமையுடன் அமர்ந்து இருந்தார். அவர் அருகில் என் கல்லூரி சைக்காலஜி புரபசர் சாம் ஜார்ஜ் ,அவரின் வலது பக்கத்தில் என் எதிர்வீட்டு ராமநாதன் , அவனுக்கு வலது பக்கத்தில் தனியாக மடக்கு நாற்காலியில் என்னுடன் பணிபுரியும் சேதுராமன்அவருக்கு அருகில் வெள்ளை அங்கி உடுத்திய முகம் அடையாளம் தெரியாத ஒருவர் அமர்ந்து இருந்தார். என்னைக் காப்பாற்றுங்கள் என்று கத்தத் தோன்றியது. அவர்கள் எப்படி என் வீட்டில் அதுவும் இந்த நடுராத்திரியில் ? எப்படி உள்ளே வந்தார்கள் ? என்று    யோசித்துக் கொண்டிருக்கும் போதே பூனையில் வால் மிதியடியின் அடியில் நுழைந்து என்னை தடவியது. பயந்து அலறிஎன்னை காப்பாற்றுங்கள் பால்ராஜ் சார்..” என அவரின் காலடியின் அருகில் சோபாவின் இடுக்கில் ஒளிந்தேன். வேகமாக ஓடிவந்த பூனையை சாம் ஜார்ஜ்  , “ச்சீ, போ..பேசி கிட்டு இருக்கோமில்லஎன  விரட்டினார். அது அவருக்கு பயந்து வாசல் அருகில் ஓடியது. அப்பாடா என பெருமூச்சு விட்டு கால் வேதனையில் துடித்தேன். அப்போது தான் பார்த்தேன் . பூனையில் வாயில் என் இறக்கையின் ஒரு பகுதி இருந்தது. ஒடிந்த ஒரு இறக்கையுடன் பறக்க முற்பட்டேன். முடியவில்லை. நான் பறக்க மீண்டும் முயற்சிக்கையில் , பால் ராஜ் என்னைப் பார்த்து விட்டார். “இந்த கரப்பான் பூச்சியைப் பிடிக்கத் தான் , உங்க பூனை வேகமா ஓடி வந்திருக்கு... பாவம் சார்”.” அப்பவே, அந்த பூனை பிடிச்சிருக்கும்ன்னு நினைச்சேன்... தப்பிச்சிடுச்சு... இப்ப அந்த கரப்பான் பூச்சியை வெளியே இழுத்துப் போடுங்க.. பூனை எப்படி பிடிக்கும்னு பார்ப்போம்என வெள்ளை அங்கி உடுத்தியவர் பேச எனக்குக் கோபம் வந்து அவரை நோக்கி கடிக்க ஓடினேன். நான் வெளியில் வந்ததது தான் தாமதம் ,அதன் கால்களால் அழுத்திப் பிடித்து , அதன் கூரிய நகங்களால் என்னை அழுத்தி கொல்ல முயன்றது. அதன் நகங்கள் என் தடித்த தோலில் செல்ல முடியவில்லை. எனவே , அது என்னை விடுவித்தது. பின் ஓட ஆரம்பித்தேன். மீண்டும் அது தன் காலால் அழுத்தி பிடித்தது. இம் முறை  அது தன் கூரிய நகங்களால் என் வயிற்றுப் பகுதியில் குத்தியது. லேசாக அது கீறலை ஏற்படுத்தியது. அது எனக்குத் தாங்க முடியாத வேதனையைத் தரவே , உருள ஆரம்பித்தேன். அது மீண்டும் என்னை பிடிக்க முயல... சேதுராமன் பூனையை விரட்டி அறையில் அடைத்தார். என்னை தன் கரங்களால் என் மீசையைப் பற்றி தூக்கி வெளியில் எறிந்தார்.என் மீசையின் ஒன்று பிய்ந்து வெளியில் விழுந்தேன்.

    நான் இதற்கு முன் பார்த்திராத ஒரு இடமாக இருந்தது. சுற்றிலும் மரங்கள் நிறைந்து இருந்தன. அடர்ந்த , உயர்ந்த பசுமையான  மரங்களை நான் இதுவரை  பார்த்ததேயில்லை. என்னை சுற்றி வெள்ளையானைகள் நின்று கொண்டு இருந்தன. நான் இப்போது சற்று கனத்து இருப்பதாகப் பட்டது. எழுந்திருக்க முற்பட்டேன். எழுந்திருக்க முடியவில்லை. திடீரென அங்கிருந்த ஒரு யானை பிளிர ஆரம்பிக்கவே அதன் அலறலை என்னால் தாங்க முடியவில்லை. என் காதுகள் மிகவும் நீண்டிருந்தது. கைகள் இல்லாதது போல உணர்வு. எழுத்திருந்த போது நான்கு கால்கள் இருப்பதாய் உணர்ந்தேன். கால்களில் எந்த சேதமும் இல்லை. ஆனால், பூனை கடித்த வேதனையை உணர்ந்தேன்.தத்தித் தத்தி நடக்க ஆரம்பிக்க ,ஒரு சிறிய ஓடையை அடைந்தேன். தாகம் அதிகரிக்கவே  ஓடையில் குனிந்த போதுதான் நான் இந்திய யானையாக மாறியிருப்பதை உணர்ந்தேன்
   சுற்றியிருந்த யானைகள் என்னைத் தடுத்தன. இருப்பினும் ஓடையில் கால் பதிக்க எத்தனித்த போது என் காலை கூரிய பற்கள் கவ்வுவது போல உணர்ந்து வெடுக்கென தூக்க , முதலை தாக்க முயன்றது.அருகில் இருந்த யானை முதலையைத் தாக்கவே நான் வேகமாக ஓடினேன். என்னை பின் தொடர்ந்து அந்த வெள்ளையானைகளும் ஓடிவந்தன. நாங்கள் ஓட ஓட ஒருமுதலை இரு முதலையாக மாறியது. பின் இரண்டு நான்காக, நான்கு எட்டாக,எட்டு பதினாறாக, பதினாறு முப்பத்திரண்டு , அறுபத்தி நான்கு என முதலைகள் பெருகி துரத்தத்  தொடங்கின.என்னுடன் ஓடிவந்த வெள்ளை யானைகள் பறக்கத் தொடங்கின. குறிப்பிட்ட பகுதி வந்த போது முதலைகள் நின்று விட்டன. மூச்சு முட்ட , கண் மண் தெரியாமல் ஓடினேன். முதலைகள் நின்று விட்டது  தெரியாமல் நான் ஓடுவதைப் பார்த்த  யானைக் கூட்டத்தில் இருந்த ஒரு குட்டி  யானைஅங்கிட்டு போகாதிங்க ..” என்றது. அதன் குரல் என் இளைய மகனின் குரல் போன்று ஒலித்தது. திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு பெரிய குழிக்குள் விழுந்தேன். “இனி அவனை யாராலும் காப்பாற்ற முடியாதுஎன   கூட்டத்தில் வயதான யானை கூறியது என் காதுகளில் ஒலித்தது.
    ுழியில் விழுந்த நான் நேராக ஒரு மெத்தையின் மீது விழுந்தேன். விழுந்த மாத்திரத்தில் என் மீது ஒரு போர்வை விழுந்தது. நான் இப்போது மிகவும்  சிறிய உருவமாக மாறி யிருந்தேன். என் எதிரில் உள்ள பெரிய கண்ணாடி நான் ஒரு எலியாக மாறி இருப்பதை உணர்த்தியது. அது என் அறை அல்ல. என் அருகில் என் மனைவி இல்லை. அனால் தெரிந்த பெண்ணின் முகமாக இருந்தது. கூர்ந்து கவனித்தேன். அது நான் இளம் வயதில் காதலித்த லதா .அவள் அருகில் அவளது கணவன். லதாவை இவ்வளவு அருகில் நான் பார்த்ததே யில்லை. அவள் இன்றும் அழகாகத் தான் இருந்தாள். அவள் புன்னகையுடன் என்னைப் பார்த்து சிரிப்பதாக உணர்ந்தேன். தீடீரென மீண்டும் அதே பூனையின் உறுமல் ..... என் இதயம் அடைத்தது. மூச்சு முட்டியது. சாவு பயம் என்னை தொத்தியது. அது என்னைத் தாக்கத் தயாராக இருந்தது

  இதிலிருந்து என்னை காப்பாற்ற பின்வரும் சாத்தியக் கூறுகள்தான் உள்ளன.

1.இந்தக் கதையை படித்துக் கொண்டிருக்கும் உங்களில் யாராவது ஒருவர்  23 காமராசர் சாலை, மதுரை என்ற என் முகவரிக்கு வந்து காலிங் பெல் அழுத்தி , என் மனைவி கதவு திறக்கும் போது விபரத்தைக் கூறி, என்னை கனவிலிருந்து விடுவிக்க, என்  தலையில் ஒரு பக்கெட் நீர் ஊற்றி உசுப்பி விடச் செய்யலாம்.

2. பூனைகளிடம் இருந்து எலிகள் எப்படி தப்பிக்கின்றன என்ற புத்தகத்தை பத்து முறைப் படித்து கரைத்துக் குடித்த ஸ்ரீதருக்கு 8745632167 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு என்னை காப்பாற்றலாம்.

3.இந்த கதையை வாசிக்கும் யாருக்காவது கனவுக்குள் புகும் திறன் இருப்பின் , என் கனவுக்குள் புகுந்து தயவு செய்து  என்னை காப்பாற்றுங்கள்.