Showing posts with label மதுரைக்காரன். Show all posts
Showing posts with label மதுரைக்காரன். Show all posts

Wednesday, January 13, 2010

கொடுத்த வாக்குறுதி


" தேர்தல் நேரத்தில் வாக்களர்களுக்கு  கொடுத்த வாக்குறுதியில், மரம் வளர்க்கும் திட்டம் ஒன்று .அதனை தொடர்ந்து  இவ்விழா நடைபெறுகிறது. மதுரை நகரை பசுமை மிகுந்த நகராக மாற்றவேண்டும் என்பது தான் எனது லெட்சியம்.  மதுரை நகரில் 18 இடங்களில்  இலவச நவீன கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது. இது போன்ற மக்கள் சேவைகளையே  செய்ய விரும்புகிறேன். "    இது மதுரை நகரை பசுமையாக்க வந்த நாயகர் உரை. வான் மலைக்கு உதவும் நாயகரின் வாக்கு.
        மதுரை தெப்பக்குளம் பகுதியில் மத்திய இரசாயன உர அமைச்சர் மு.க. அழகிரி அவரகள் மரக் கன்றுகள் நடும்  திட்டத்தை தொடக்கி வைத்த போது ஆற்றிய உரை. மதுரையில் சுமார் 18 இடங்களில் மரக்கன்றுகளை தன் துணைவியுடன் நட்டார். பள்ளிக்குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் தரப்பட்டன.
        "சார் , மரக்கன்று நட்டா மட்டும் போதாது , அதை தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் காதுகளில் படும்படி சொல்லுவது புரிகிறது . "
         "ஹலோ ,...நாங்க மதுரைகாரங்க ...சொன்ன சொல் தவறமாட்டோம். இன்றும் மதுரை சிட்டி கோர்ட்அருகில் உள்ள சிவாஜி சிலைக்கு அண்ணே சொன்னமாதிரி தினமும் மாலை போடுகிறார் ... தெரியும்மில்லை... மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் ... ஊத்துவோம்."
       
"மதுரைய சிங்கப்பூரா மாத்தி காட்றோம்...ன்னு சொல்லிற எம்.பி. அல்ல " அண்ணே வார்த்தை . ஆம் சொல்லுறதை செய்வோம் ... செய்றதையும் சொல்லிகட்டுவோம்"

      மதுரையில் அலங்க்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கப்போவுது வாங்க. உங்க ஊருக்கும் மரக்கன்று வாங்கிட்டு  போங்க .    

Tuesday, January 12, 2010

"பிறந்தவனல்ல .... உதித்தவன் ."

மதுரை பற்றி செய்தி சொல்லி நிறைய நாள் ஆகி விட்டது.
          " சார் மதுரை வாங்க ... பொங்கலுக்கு கூப்பிடல்ல .... வரும் ஜனவரி 30௦ வாங்க .!"                            "என்ன அண்ணே விசேசம் ..." என இழுக்காதிங்க . "எல்லாம் ' அண்ணே விசேசம் தான்' " .
          " ஜனவரி ௦ 30௦  காந்தி இறந்தநாள் , தியாகிகள் தினம் ....  கரெக்டா அண்ணே "
          " விளக்கெண்ணை ..... யோவ் ... புரியல அதன் சொன்னேன்ல்ல .... எங்க அண்ணே விசேசம்..ன்னு "
          "   ஆ..அ புரிந்தது ...".
          " யோவ் அ.. ஆ ... ன்னே சொல்லு " .
          " அவரும் தியாகம் செய்துதானே வந்தாரு "
          " 500 ரூபாய் நோட்ட ... கொடுத்து கொடுத்து ... "
         " யோவ் மரியாத ... அப்புறம் மதுரை வர மாட்ட .."
          " மதுரைக்காரரே .... அவசர படாதிக ... 500 ரூபாய் நோட்ட ... கொடுத்து கொடுத்து சில்லறை மாற்றினால் சி திரி வரிசைக்கு பேருந்துல ... புது நோட்ட .... கேட்கிறாங்க .... அத பத்தி சொல்லுறதுக்குள்ள ... அவசரப்படுறேங்களே ...இப்ப சொல்லுங்க ..."
             " நீயும் தெக்கதிபயலுக ... மாதிரி வெவரமா தான் இருக்க ... "
             " அப்ப திருவிழா தான்னு சொல்லு ... இலவச வேட்டி சேலை ... தையல் மிஷின் .. சைக்கிள் , முன்று சக்கர வண்டி , கலிபர் என ... மதுர கார பயலுக நீங்க பயன் அடைய போறிங்க ..."
              " ஆமா.... ஆமாம் ... இந்த வருடம் அண்ணன் பிறந்த நாளில் இந்த சலுகைகளுடன் ... ஐ.நா . செய்ய முடியாத ஒன்றை செய்ய போறோம் ..."
             " அப்படி என்ன புதுமை .... "
           " அண்ணன் பிறந்தநாளில் புவி சூட்டை குறைக்கும் விதமாக மதுரையில் எழு லெட்சம் மரக்கன்றுகள் கழக கண்மணிகள் நடப்போறோம் ... உங்களுக்கு தேவைன்னா ... வந்து மரக்கன்று வாங்கிகங்க ..." "சரி அண்ணே பிறந்த நாளில் புது வசன விளம்பரம் எது ?...?"
   "பிறந்தவனல்ல .... உதித்தவன் ." 
  "சரி ... அவசியம் வந்துவிடுகிறேன் "
  " மதுரை பற்றி புது தகவலுடன் அடுத்த வாரம் வருகிறேன் ."