Thursday, December 31, 2009

பூத்தது புத்தாண்டு!

பூத்தது புத்தாண்டு!
புரியபோகுது பல்லாண்டு
பேசும் சாதனை !
இனி நமக்கில்லை
வேதனை !


துடித்து எழு!
அடித்து போக்கு
அழுக்கு நீக்கி
ஆடை போல் உள்ளம் !

அனைத்துக் கொள்
அன்பாய் அனைத்தையும் !
இணைத்துக் கொள்
இனக்கமாய் இதமாய் !

இதயம் ஈரமாகட்டும்
பசித்தவருக்கு புசிக்க
உணவிடுவோம்!

புனிதமாகட்டும் பூமி
பூதமாகும் வெப்பம்
புரியவைக்கட்டும்
பூமியில் மனிதன்
வாழ வழி விடட்டும்!
 

மதுரை

Wednesday, December 30, 2009

௯டா நட்பு !

சிறகு முளைக்கும்
சிந்திக்க தூண்டும்
படிப்பும் சுமையாகும்
சுவையாகும் கூடா நட்பு!

சுருதிக் கூட்டும்
குருதி கொதிக்கும்
பெற்றோர் வார்த்தை
ஒலிக்கும் போது !

வாய் வசைபாடும்
வாத்தியாரைப் பார்த்து !
வானமாய் விரிந்து
வனமாய் மாறியிருக்கும்
வம்பு செய்யும்
௯டா நட்பு !
 

   





Tuesday, December 29, 2009

பூவியை குளிரச் செய் !

இயற்கை இனிக்கும்
இணைந்து பார் !

மரத்தை நடு
நம் சந்ததியரின்
மனதைத் தொடு!

மரத்துப் போன
மனதை பொசிக்கி
பூவி வெப்பமாதலை
தடுக்க யோசி!

மரத்தை நட்டு
பூவியை குளிரச் செய் !

பூ பூக்கும்
காய் காய்க்கும்
கனி இனிக்கும்
என்பன  .....
உன் மொட்டுக்களுக்கு 
கற்பனையாகும் முன்
விழித்திடு !
விதைத்திடு!
மரம் வளர்ப்போம் !
மனித நேயம் காப்போம்!
பூவி   வெப்பமயமாதல் தடுப்போம்!     

  

     

மரணம்

மரணம்
மனு போட்டாலும் வராது !
மறுத்தாலும் விடாது !

மரணிக்கும் வரை
வாழ்வை வசமாக்கு!
மரணிக்கும் போது
வாழ்வு வரலாறு ஆகும்!

இவ்வாண்டின் மரணம் 
புத்தாண்டின் விடியலுக்கு
விட்டுச்செல்லும் வெளிச்சம் !

தனி மனித மரணம்
தன் சந்ததிக்கு
கற்றுத்தரும் பாடம்
ஒவ்வெரு நாளையும்
மரணமின்றி விடியலாக்கும்!

மரணத்தை கண்டு
மிரளாமல்
மரணத்தின் கைகளில்
முத்தமிட்டு
வாழ்வை வளமாக்குவோம்!  

Monday, December 28, 2009

சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடிப் போவதைப் பற்றி

      இந்த வாரம் ஆனந்த விகடனில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "எம்.ஜி .ஆரைப் பார்க்கணும்!"  கட்டுரையில் சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடிப் போவதைப் பற்றி மிக அருமையாக கூறியுள்ளார். அவரின் கருத்துகள் இதோ :
 
        சிறுவர்கள் ஏன் தன் வயதை மீறி நடந்து கொள்ள ஆசைபடுகிறார்கள் . 
ஆறாம் வகுப்பில் காதல் தோல்வி கண்ட சிறுவர்கள் இன்று இருக்கிறார்கள் . ஒன்பதாம் வகுப்புக்கு போவதற்குள் பாய் பிராண்ட் மற்றும் கேர்ள் பிராண்ட்
எண்ணிக்கை எத்தனை என்று கணக்கிடுகிறார்கள் .


         
         இணையத்தின் வழியே எளிதாகக் கிடைக்கும் ஆபாசப் படங்கள் அவர்கள் பாலியல் ஆசைகளைக் கொந்தளிக்கச் செய்கின்றன. ... குற்றத்தைக்  கொண்டாடும் திரைப் படங்கள் அவர்களுக்கு முன் உதாரணமாகின்றன.


         அவனைப் புரிந்துகொள்வதற்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இரு தரப்பும் தவிக்கிறது.  தமிழகத்தில் முன்பு வறுமையால் வீட்டை விட்டு ஓடியவர்கள் அதிகம் இருந்தார்கள் . இன்று ஓடுகிறவர்களில் பெரும்பான்மையினர் வீடு அனுமதிக்காத உல்லாசங்களைத் தேடியே வெளியேறுகிறார்கள் .                         
       
           ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பார்வையில் என் கருத்துகளை முன் வைக்கிறேன் .
              சீர்கெட்டுக் கிடக்கும் உலகச் சூழ்நிலையை நல்ல கல்வி ஒன்றினால் தான் மாற்ற முடியும் . 
              நம்முடைய உலகின் எதிர் காலம் மாணவ மாணவிகளின் கைகளில் தான் இருக்கிறது. அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வியின் தரத்தை பொறுத்துத்தான்   நம் உலகச் சூழ்நிலை அமையப் போகிறது . 
             தரமான கல்வி கொடுக்க, நம் தமிழக அரசு சமச்சீர் கல்வி முறையை கொண்டுவருவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் ஆகும் .

               ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒளிவு மறைவில்லாத உறவு  ஏற்படும் போதுதான் , கல்விக் ௯டங்களில் கற்றுக் கொள்ளுவதற்கான சூழ்நிலை உருவாகும். ஒற்றுமை , தோழமை போன்றவைகளினால் ஆசிரியர்களும் மாணவர்களும் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்.  
  
                 செயல் வழிக் கற்றல் முறையில் ஆசிரியர், மாணவர் உறவு தோழமையுடன் ஒற்றுமை உடையதாக உள்ளது என்பதை நினைவு படுத்த கடமைப் பட்டுள்ளேன் .

                 அன்புக்காட்டுதல் , பகிர்ந்து கொள்ளுதல் , ஒளிவு மறைவின்றி கருத்துக்கள் பரிமாற்றம் செய்து  கொள்ளல் போன்றவைகள் புதிய விசயங்களை சுலபமாகவும் , ஆர்வத்துடனும் கற்றுக் கொள்ளுவதற்கு உதவும்.

                 ஒரு உண்மையான நல்ல ஆசிரியர் தன்னுடைய மாணவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கொண்டிருக்க மாட்டார். அவர் தன் மாணவர்களை சுயமாகச் சிந்தித்து சுதந்திரத்துடன் செயல்படுவதற்கு அனுமதித்து வருவார்.

                   புத்தகங்களைப் படிப்பதால் மட்டும் கல்வி முழுமை பெறுவதில்லை.
தன்னைச் சுற்றிலும் நடப்பவைகளிலிருந்து ஒருவன் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.  ஆசிரியரின் முக்கிய பணி மானவிர்களிடம் உண்மையை கண்டுக் கொள்ளும் திறமையை வளர்பதுதான்.        
                
                பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய நிறைவேறாத ஆசைகளை, தங்கள் குழந்தைகளின் மூலமாக அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டு , அவைகளை அதங்கள் குழந்தைகள் மீது திணித்துவருகிரர்கள்.
                 பெற்றோர்களும் ,ஆசிரியர்களும் செய்ய வேண்டிய முக்கியமான பணி இதுதான்.  முதலில் குழந்தைகள் என்ன செய்ய விரும்பு கிறார்கள் என்ற அவர்களுடைய விருப்பங்களைக் கண்டறிந்து கொள்ள வேண்டும் . அந்த விருப்பங்களை ஊக்குவித்து அந்த விருப்பங்களை நிறைவேறுவதற்கு தங்களால் ஆனா உதவிகள் அனைத்தையும் , அவர்கள் செய்ய வேண்டும். அப்போது தான் குழந்தைகளிடமிருந்து ஆக்கப்பூர்வமான , முழுமையான பரிபூரணம் நிறைந்த நல்ல செய்கைகள் மலர்ந்து, கெட்டுவிட்டிருக்கும் உலகச் சூழ்நிலையை தூய்மை படுத்தும். 
                  இதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் புரிந்து செயல் பட்டால் , மாணவர்கள் வீட்டை விட்டு ஓடிப்போவது முற்றிலும் நின்றுவிடும் .              
                

வாழ்க்கை வசந்தமாகும்

 வாழ்க்கை வாழ்வதற்க்கே ! 
 வாழ்ந்து பார் ,
 வாழக் கற்றுக் கொள்வாய் !


 வாழ்க்கை வசந்தமாகும் 
 வசை பாடுவதை நிறுத்தி , 
 வாய்ப்புகளை தேடிச்செல் !
 
 வாழ்க்கை வளமாகும் 
 எண்ணங்களை வண்ணமாக்கு! 
 எண்ண வாசலை திறந்து வை 
 வாழ்வு சொர்க்க வாசலாக மாறும்! 

  கனவு காண் ! 
  கனவே வாழ்வாகி விடாமல் 
  நினைவுகளாக்கும் 
  முயற்சி மேற்கொள்!

  உறவுகளை நேசி 
  உரிமை கொடுக்கும்
  உனக்கு உயர்வு!

  வாழ் ! வாழ்வாய் !
  வானம் வசப்படும் 
  பூமியும் சொர்க்கமாகும் 
  நிலவும் சோறுட்டும்
  வீட்டு முற்றத்தில் 
  நட்சத்திரங்கள் நடனமாடும் 
  நம்பிக்கை ஒளியூட்டும் 
  வாழ்வை நேசி ! 

Sunday, December 27, 2009

கற்றல் திறன்



         "காயம்படுகிறவர்கள் வாழ்கிறார்கள். பின்னடைகிறவர்கள் மரணிக்கிறார்கள்."  என்கிறார். ஜே. கிருஷ்ணமூர்த்தி.  பட்டால் தான் புத்திவரும் என்பது பழமொழி .
                                                                                                                                                                              
      
       இன்று  குழந்தைகள் பட்டறிவு இன்றி தானாக கற்கிறார்கள் என்ற வாதம் இருக்கிறது !
செயல்வழி கற்றல் நம் மாணவர்களுக்கு கிடைத்த வரபிரசாதம்.

       இன்று  தினமலர் பேப்பரில் வந்துள்ள கட்டுரையில்  '  மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது'.
  
           செயல் வழி கற்றல் வந்ததில் இருந்து மாணவன்  தன் அறிவு
திறனுக்கு ஏற்றவகையில் யாருடைய வற்புறுத்தலும் பயமும் இன்றி ,தன் சக  மாணவன் துணையுடன்  கற்கிறான் மற்றும் ஆசிரியர் கற்றல் சுழலை
 ஏற்படுத்தும் நபராக செயல்பட்டு மாணவனை தன் போக்கில் காயம் பட ( தவறுகள் திருத்த)  செய்வதன் மூலம் , மாணவனை நல்ல அறிவுள்ளவனாகா  வாழச்செயகிறார்.


முந்தய    பாடமுறையில்  மாணவர்களுக்கு  மொத்தமாக
கற்றுத் தரும்போது சில  மாணவர்கள் பின்னடைய நேரலாம் .
இப்பின்னடைய்வு மாணவர்களை படிப்பை விட்டு மரணிக்கச்செயயலாம் .

ஆகவேதான்  முந்தய காலங்களில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக இருந்தார்கள் ,
இன்று மிகவும் குறைவு .
              மாணவர்கள் கட்டாயப்படுத்துதல் அவனின் கற்றல் திறனை குறைக்கச் செய்யும் என்பது உண்மை . ஆனால் தற்போதைய செயல் வழி கற்றல் முறை மாணவனை கட்டாய படுத்தி அறிவை திணிக்கவில்லை . எது மாணவன் படிப்பை இனிக்கச் செய்து கற்றல் குறைப்பாட்டை நீக்குகிறது. கற்றலை இனிமை ஆக்குகிறது .

Saturday, December 26, 2009

சாலை விதி மீறல்

மதுரையில் ட்ராபிக் ஜாம் அதிகமாகி விட்டது ! அதற்கான காரணம் மதுரை வாசிகளின் சாலை விதி மீறல் தான் என்பது மிகவும் தெளிவாகிறது .
         உதாரணத்திற்கு நான் பீ பீ குளம் அருகில் வந்து கொண்டு இருந்தபோது , பிரதான சாலையில் மிகவும் கவனமாக என் முன்னாள் ஒரு கார் சென்றுகொண்டு இருந்தது.  பீ பீ குளம் அருகில் இரு புறத்திலும் கடைகள் உள்ளன , அக் கடைகளுக்கு முன்னால் அனைத்து தரப்பு வாகனகளும் பார்கிங் செய்யப்  படுகின்றன. 
         பெட்டிக்கடையில் ஒரு ஐம்பது வயது டைய பெரியவர் , கடையில் வார இதழ் , சில பொருள்கள் வாங்கி கொண்டு , பிரதான சாலையின் வாகனத்தை பார்க்காமல் தன்னுடைய வண்டியை அப்படியே பின்னால் நகர்த்தினார்.. கவனமாக வந்த கார் , ஹோர்ன் ஒலித்தும் , கவனக்குறைவால் மீண்டும் வண்டியை பின்புறம் நகர்த்த , லேசாக இடித்தது .
          அதைவிட முக்கியம் என்னவென்றால் , தடுமாறி கீழே விழ , கடைகாரர்கள் மற்றும் கடைகருகில் நின்றவர்கள் எல்லாம் கார் ஓட்டுனரை , திட்டுயதுடன் அடிக்கவும்  
சென்றனர் , பயந்த டிரைவர் காரை வேகமாக ஓட்டிச் சென்றான்.  உடனே கடைக்கு அருகில் இருந்த தடித்த நபர் வண்டியை எடுடா , அவனை பிடிக்க , என கூறிக் கொண்டு பைக் எடுத்து விரட்டினான் .
           அதுவரை விழுந்த அந்த நபரை யாரும் தூக்க வரவில்லை , பின்னால் வந்த நான் , வண்டியை நிறுத்தி தூக்கிய பின் வந்தது , கூட்டத்தில் இருந்த அதி புத்திசாலி ,"சார் , வண்டி நம்பர் இந்தாங்க " .  கடைசி வரை யாரும் அவர் வந்தது தவறு என எடுத்து கூறவில்லை . ஏன் என்றால் யாருக்கும் சாலை விதிகள் தெரியவில்லை, பிரதான சாலையை பார்த்து , வண்டியை அவர் எடுத்து இருந்தால் , அவ்விபத்து நிகழ்ந்து இருக்காது.
            மதுரை மத்திய மந்திரி திரு மு.க. அழகிரி அவர்களின் முயற்சியால் சாலைகள் அகலப் படுத்தப் படுகின்றன . தினமலர் முயற்சியால் போஸ்டர் இல்லா தூய்மையான நகரமாகவும் , சாலைகள் விரிவுபடுத்தியும் , சாலையின் குண்டும் , குழியும் சரி செய்யப்பட்டு வருகின்றது . மதுரை தூய்மை படுத்தப்படுகிறது. 
             இருப்பினும் , தினம் அங்காங்கே விபத்துகள் நடந்துக் கொண்டு தான் இருக் கின்றன, ஏன் எனில் , யாரும் சாலை விதிகளை மதிப்பதில்லை, கவனம் காட்டுவதில்லை . மதுரையில் காவல் துறை ஹெல்மெட் அணிய சொல்லி ஓய்ந்து போனார்கள் .  காவல் துறை தன் கடமைகள் செய்தலும் ,பொது மக்கள் திருந்தி சாலை விதிகளை மதித்தால் மட்டும் விபத்துகளை தடுக்கமுடியும் .
             தமிழக கல்வித்துறைக்கு அன்பான வேண்டுகோள் , வரும் சமச்சீர் கல்வி திட்டத்திலாவது சாலைவிதிகள் , விபத்து முதலுதவி போன்ற பாடம் , மூன்று அல்லது நான்காம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் .                  
               சாலை விதிகள் மதிப்போம் , சாவை தடுப்போம் . 

Thursday, December 24, 2009

நட்பு

நட்பு
நம்பிக்கையின் நங்கூரம்
கரை தொடும்
அலை போல்
உன் இதயம்
தொடும் !

நட்பு
தீமை நீக்கி
நன்மை தேக்கி
பண்பை பெருக்கி
பகைமை அகற்றும்!

நட்பு
ஆயில் உள்ளவரை
அசை போடச்
செய்து இதயத்துக்கு    
இனிமை ஊட்டும்!

கல்வி

கல்வி  உன்
 நிழல் போல்
 தொடரும்  கடவுள் !

கல்வி உன்
நல்லது  கெட்டது  
சொல்லும் நண்பன் !

கல்வி உன்
புகழ் பரப்பும்
செயற்கைக்கோள் இணைப்பு !

 கல்வி உன்
 கனவை நினைவாக்கும்
அற்புத சக்தி !


கல்வி உன்
ஆனந்தத்தை பெருக்கும்
அறிவு ஊற்று !

கல்வி உன்
உள் அழகை 
செதுக்கும் உளி !

இனி மேலாவது
தயவு செய்து
படித்து களி !

Friday, December 18, 2009

ஒருவேளை உணவு

கல்வி கனவாகியது
கல்வி ௯டங்கள்
காசாகின !

பசி படுத்தியது
கற்பு கரைந்தது
கால்வயிறு நிறைந்தது!

கால்வயிற்று கஞ்சிக்கு
பிளட்பர மங்கை
பணக்கார மெத்தையில் !

வசதி தேடி
வழி மாறி
சிறை கைதியான  தந்தை
சிறகு  ஓடிந்தன் மகன்!
சிதறியது கனவு
சிந்தனையெல்லாம்
ஒருவேளை உணவாகியது!
















   

கடல்

தொட்டது அலை
விட்டது கவலை!
இது இயற்கை .

மனம் பட்டென்று
பட்டது ,சுட்டது
இத்தனை நாளும்
இனிமை உணரவில்லை ?

கடல் உப்பு
கரைந்தது என்
கண்ணீர் !
கலைந்தது என்
கலக்கம் !

கடல் அழகை
நடந்து பார்
ரசித்து  பார்ப்பாய் !
கால் நனைத்து
பார் மறப்பாய்
கவலை  !

மீண்டு மீண்டெழும்
அலை கற்றுத்தரும்
கலை  முயற்சி
திரு வினையாக்கும் !

முத்தமிட்டு செல்லுமலை
சொல்லிவிட்டு  செல்லும்
 வாழ்க்கை பாடம்
வசந்தத்தை தேடித்தரும்!


கவிதை
 கடல்

Tuesday, December 1, 2009

எய்ட்ஸ் தினம்



இன்று உலக எய்ட்ஸ் தினம், டிசம்பர் 1. எய்ட்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டாலே எதோ கெட்டவார்த்தைப் போல் உணர்கிறார்கள்! நானும் என் நண்பர்கள் , முதியவர்கள் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் என அனைவரிடமும் இதைப் பற்றி பேசியுள்ளேன், அனைவரும் வயது வித்தியாசம் இன்றி வெட்கப்படுகிறார்கள் அல்லது “சார் வேறு எதையாவது பேசுவோமா ? இதெல்லாம் நமக்கு எதுக்கு சார்?”  என மழுப்பலானப் பதிலைத் தருகிறார்கள்.
  
     ஏன் இந்த வெட்கம் ? ஏன் இந்த பதற்றம் ?தமிழகம் இன்று எய்ட்ஸில் முதலாவது இடத்தைப் பிடித்தாலும் ஆச்சர்யம் இல்லை.!


நேற்று மதுரை தினமலரில் ஒரு செய்தி படித்தேன், அதில் மூன்று பெண்கள் விபச்சாரத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடச் செய்ததாக செய்தி வந்திருந்தது. இதில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் புரோக்கர் பங்கு கொடுக்கவில்லை என்பதால் போலீஸ் ஸ்டேசன் வந்துள்ளனர்.


தங்களால் எய்ட்ஸ் பரவுகிறது என்றதொரு   பதற்றம்  வரவில்லை! பங்கு அதிகமாக சம்பாதிக்கிறான் தன்னை வைத்து பணக்காரனாக இருக்கிறான் என்பாதால் வந்தப் பிரச்சனை ! இவர்களால் இனி யாருக்கும் எய்ட்ஸ் பரவக்கூடாது என உதவிய தொண்டு நிறுவனத்தை இங்கு பாராட்டியே ஆக வேண்டும். சபாஷ்!


 Where to fix the sex in schools?   என்பது தமிழகத்தில் மிகப் பெரியப் பிரச்சனை !
 என்னைப் பெருத்தவரை எந்த நல்லப் பண்பாக இருந்தாலும் அது தொடக்கக் கல்வியிலே தான் கொடுக்கப் பட வேண்டும். அப்போது தான் அது பசுமரத்தாணி போல் நன்றாகப் பதியும். திருடக்கூடாது, பொய் பேசக் கூடாது, பிறர் பொருள் மீது ஆசை வைக்கக்கூடாது, கண்ட இடங்களில் குப்பை போடக்கூடாது, சக மாணவனிடம் சண்டைப் போடக்கூடாது, புத்தகங்களை கிழிக்கக்கூடாது, உடை நன்றாக துவைத்து அணிய வேண்டும், எடுத்தப் பொருளை எடுத்த இடத்திலே வைக்க வேண்டும் (இப் பண்பு செயல் வழிக் கற்றலில் அட்டையை டீரே யில் எடுத்து , குரூப்பில் அமர்ந்து , அந்த குரூப்பிற்க்கு தகுந்த மாதிரி ஆசிரியர் உதவியோ அல்லது சக மாணவன் உதவியோ பெற்று, நன்றாக படித்து , பின் எடுத்த டீரே யில் அந்தக் கார்டை மீண்டும் வைப்பதால்தன்னை அறியாமலே அப்பண்பைப்  பெறுகிறான்) போன்ற பண்புகளை கற்றுத்தருகிறோம்.
தொடக்கக்கல்வியில் ஏன் பாலியல் கல்வியை  கற்றுத்தரக்கூடாது?


கலாச்சாரம், பண்பாடு என்று கூறி நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வீணாக்குகிறோம்! ஒன்றாம் வகுப்புப் படிக்கும் பையன் எத்தனை பள்ளிகளில் சக மாணவியை தன்னையறியாமலே கட்டிபிடிக்கிறான் ? மனச்சாட்சியை அடகுவைக்காமல் கூறுங்கள். எத்தனை முறை நாம் டி.வி பார்க்கும் போது காதலிக்கும் காட்சி வரும் போது “அம்மா ச்சீ அசிங்கம் எனக் கூறி ரிமோட்டை வைத்து வேறு சேனல் மாற்றுவது உண்டு. என் கேள்வியெல்லாம் பாலியல் பற்றி அறிவு அல்லாமலா இது போல் நடக்கிறது?


மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் இந்த பாலுணர்வு இயற்க்கையிலே மனதில் பொதிந்துக் கிடைக்கிறது. இதை நாம் அமுக்கப் பார்க்கிறோம், இந்த அமுக்கம் தான் பிற்காலத்தில் காமமாக வெளிப்படுகிறது . அந்தக் காமத்தையும் முறையான வழியில் செலவிடத் தெரியாமல் , கற்பழிப்பு , கொலை, கொள்ளை என வழிமாறி செல்ல துண்டும் . முடிவில் எயிட்ஸ் நோயாளியாக மாறி வாழ்க்கையை  தொலைத்து அவதிப்பட நேரிடுக்கிறது. 
இன்று தகவல் தொடர்பு சதனங்கள்,சிறுவயதிலேயே அனைத்து  விசயங்களையும் எளிய முறையில் கற்றுத்தருகிறது. பல மாணவர்களுக்கு அவர்கள் வாழிடங்களே வழிய வந்து வசதியாக பாலியல் சம்பந்தமான விசயங்களைக் மோசமான முறையில் கற்றுத்தருகிறது. இது யாவரும் மறுக்க முடியாத உண்மை . அப்படி இருக்க நாம் இன்னும் என் நம் குழ்ந்தைகளுக்கு பாலியல் கல்வியை தொடக்கக் கல்வியில் தரக் குடது? 
கல்வியாளர்கள் சிந்திக்கவும்! கட்டிப்பிடித்தல், மாணவிகளுடன் விளையாடுதல், மாணவிகளுடன் பழகுதல் , காதல் பற்றி பேசுதல் , காதலித்தல் , ஆண், பெண் பேதம் பேசுதல் , பெண்ணுடன் கைகுலுக்குதல் போன்றவற்றை நம் சமுகம்  தவறுதலாகவே சித்தரிக்கின்றது. 
ஆகவே, தான் பல பள்ளிக் ௯டங்களில் கழிப்பறை  சுவற்றில் மாணவர்கள்  ஆசிரியரைப் பற்றியும் , மாணவிகளைப் பற்றியும் தவறான முறையில் எழுதிவைக்கின்றனர்.  சிறுவயதிலேயே இது பால் வேறுபாடுதான் வேறு ஒன்றும்மில்லை, பால் உறுப்புகளை சிறுநீர் கழித்தப்பின் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், கட்டிபிடித்தல் என்பது தவறானதன்று, ஆனால் தவறான உணர்வுகளுடன் பிடித்தல் குடாது . அனைவரும் நம் சகோதர, சகோதிரிகள்  தவறானக் கண்ணோட்டம்  நம் வாழ்வை சீரழித்து விடும் என பொறுமையாகக் ௯ற வேண்டும். சற்றுக் கடினம் தான் என்ன செய்வது நம் குழந்தைகளை நாம் தானே காப்பாற்ற வேண்டும்.
என்னுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் தம் வகுப்பில் வயதுக்கு வந்து , அதாவது பூப்பெய்தும் குழந்தைகளை என்னிடம் அழைத்து வந்து, அந்த விஷயத்தை சொல்ல (அச்சம் என்பதா? கூச்சம் என்பதா?) தயங்குகின்றனர் . அதுவும் தற்காலத்தில் நான்கு,  ஐந்தாம் வகுப்பில் பூப்பெய்துவது என்பது சகஜம் ஆகிவிட்டது .  காமுகர்களிடம் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்ற , பாலியல் கல்வி மிகவும் அவசியம் . தொடக்கக்கல்வியிலே அதனைத்  தருவது சாலச்சிறந்தது. 
சிறுவயதில் சிறுவர்கள் பால் உறுப்பை அடிக்கடி தொட்டுக்கொண்டு இருப்பதை தவறு என உணர்த்த வேண்டும் . சக மாணவியின் அங்க அவையங்களை பார்ப்பதை தவறு என்று உணர்த்துவதுடன் , உனக்குப் போன்றே அவளுக்கும் உறுப்புக்கள் உள்ளன என உணர்த்தவேண்டும் .    
                                                    
எய்ட்ஸ்  பற்றிய விழிப்புணர்வுகளை தொடக்கக்கல்வியிலே தருவதுதான் மிகவும் சிறந்தது. எச்.ஐ.வி. பற்றி டாக்டர் லுக்   மாண்டேக்ணன் என்ற விஞ்ஞானி பிரான்சில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஐந்தில் கண்டுபிடித்தார் என போதிப்பதுடன் எய்ட்ஸ் நோயாளிக்கு போதுமான நோய் எதிர்ப்புதன்மையை ஏற்படுத்துவதுடன் , சமுகம் அவர்களை ஒதுக்காமல் பாதுகாத்து , பராமரிக்க நம் குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டும். எய்ட்ஸ் ஒழிப்போம்! முறையான பாலியல் கல்வியினை தொடக்கக் கல்வியிலே தந்துவிடுவோம்!