Sunday, December 12, 2010

பிளாஸ்டிக் ஒழிப்பு

  மதுரையில் வருகின்ற புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் முற்றிலும் ஒழிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர் . அதற்க்கான வரவேற்பு அதிகமாக உள்ளது.
    உலகம் முழுவதும் பரவி உள்ள பிளாஸ்டிக் உடனடியாக ஒழிக்க முடியுமா....? பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது பிளாஷ்டிக் அரக்கானை , நரகாஸ்வரனை அழித்தது தீபாவளி கொண்டாடுவது போன்ற எளிமை அல்ல , ஆனால் அது போல ஒரு கொண்டாட்டம் தான் . மக்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு என்பதை முற்றிலும் ஒழித்துக் கட்டுவது அல்லது முற்றிலும்  புறக்கணிப்பது என்று நினைத்து உள்ளார்கள்.

பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது பிளாஸ்டிக்கை முறையாக பயன்படுத்துவதாகும். சமிபத்தில் எக்ஸ்ரோனா அமைப்பு இதில் மதுரை கே.கே.நகர் பகுதில் குப்பைகளை தரம் பிரித்து காசாக்கி உள்ளது . இதனால் மக்களுக்கும் பயன் தான் . ஆகாவே நாம் எப்படி பிளாசிடிக் பயன்படுத்த வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டும். டீ கடைகளில் பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதிலாக நாம் காகித கப்புகளை பயன் படுத்தலாம். டீ கப்புகள் முறையாக பயன்படுத்தாததால் அவைகள் மண்ணுக்குள் சென்று மண் துளைகளை அடைத்து நிலத்தடி நீர் தேங்குவதை குறைகிறது. இதனால் மண் வளம் குறைகிறது.

  அதுபோல் கடைகளுக்கு சென்று பொருள் வாங்கும் போது , துணிப்பைகளை கொண்டு செல்லலாம், உணவகங்களில் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கலாம். வீட்டில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை தனியாக பிரித்து ,மறுசுழலர்ச்சிக்கு அனுப்பலாம். அதனை நமக்கும் பயனுள்ள வழியில் காசாக்கலாம். பள்ளிகளில் குழந்தைகளுக்கு முறைப்படி பிளாஸ்டிக் உபயோகத்தை கற்றுத்தரலாம்.

     பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது பிளாஸ்டிக் முற்றிலும் தவிர்ப்பது ஆகாது , அது பிளாஸ்டிக் முறையாக பயன்படுத்துவது ஆகும்.

Saturday, December 11, 2010

தபால் பெட்டி

கனவுகளுடன்
கவனிப்பார் அற்று
அனாதைகளாக தெருவோரத்தில் ....
நவீன தகவல் உலகில்
கைவிடப்பட்ட பெற்றொர்களாக
யாராவது தம்மை கவனிக்க மாட்டார்களா....
என்ற ஏக்கத்துடன் ....
தபால் காரனும் அதே கவலையுடன்
தபால் பெட்டிகளை
திறந்து திறந்து முடிகிறான் ....!

Friday, December 10, 2010

பெங்களூரில் சரவணன்.....

சென்ற வாரம் எனக்கு முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து ஒரு அழைப்பு ....அழைப்பு என்பதை விட பொன்னான வாய்ப்பு . ஆம் பெங்களூர் சென்று குழந்தைகளுக்கு ஆங்கிலம் எளிய முறையில் கற்று தருவது எப்படி? என்பது குறித்து ஒருமாதம் பயிற்சிக்கு செல்ல ஆணை பிறப்பித்தனர். உடல் நலம் குறைவாக இருப்பதாக ஒரு உணர்வு ஏற்படவே முதலில் மறுத்தேன் . பின்பு ஆசிரிய பயிற்றுனர் தங்களைப்போன்ற உண்மையான குழந்தைகளுக்கு அவர்கள் வழியில் எளிமையாக ஆங்கிலம் போதிக்க வேண்டும் என்ற உணர்வு உள்ளவர்கள் சென்றால் தான் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று ஒரு வித ஆர்வத்தை தூண்டி அனுப்பி வைத்தனர். வாரத்தின் முதல் நாள் திங்கள் ஆறு டிசம்பர் காலை மடி வாலா அருகில் உள்ள என் மைத்துனன் வீட்டில் சென்று குளித்து காலை உணவு அருந்தி விட்டு பெங்களூர் யுனிவர்சிட்டிக்கு சென்றேன்.




   பெங்களூர் யுனிவர்சிட்டியில் யுனிவர்சிட்டி மைதானம் அருகில் உள்ள ரிஜினல் இன்ஸ்டிடுட் ஆப் இங்கிலிஸ் ஃபார் சவுத் இந்தியா அடைந்தேன். அங்கு சென்றவுடன் தான் தெரிந்தது , இது கர்நாடக, பாண்டிச்சேரி,மற்றும் தமிழ்நாட்டிலும் உள்ள துவக்கப்பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி கற்பித்தலுக்கான பயிற்சி. சுமார் எழுபத்து ஐந்து ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் வெவ்வேறு மாவட்டத்தில் இருந்து வந்திருந்தனர். முதல் நாளிலே நான் அனைத்து ஆசிரியர்களுடனும் ஒன்றி விட்டேன். கார்நாடக மக்கள் அருமையாக நம்முடன் பழகுவதை பார்க்கும் போது காவேரி மட்டும் அரசியல் பிரச்சனை என்பது போல தோண்றுகிறது. மொத்தம் இருநூற்றி பத்துக்கும் மேற்பட்ட மூன்று மாநிலத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் பயிற்சி பெறுகின்றனர்.    



  பெங்களூர் என்றவுடன் அம்மக்களின் பொறுமை தான் எனக்கு நினைவில் நிற்கிறது. நான் மாடிவாலா அருகில் உள்ள பிடிஎம் பஸ் ஸாடாண்டு அருகில் ஐநூறு எண் கொண்ட பேருந்தில் யுனிவர்சிட்டி கேட்க்கு டிக்கெட் எடுத்தேன் . நான் செல்லும் வழியெங்கும் டிராபிக் , யாரும் எதற்கும் கோபப்படாமல் , பொறுமையாக அவரவர் புத்தகம் படித்துக் கொண்டும், லேப் டாப்பில் வேலை செய்துக் கொண்டும், காதுகளில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டும் பயனித்தார்கள்.  




இதே நம் ஊர் என்றால் யாரும் சிக்னலில் நிற்பதும் கிடையாது, பொறுமையைக் கடைப்பிடிப்பதும் இல்லாமல்,பேருந்தில் பயணிக்கும் நம்மவர் இவங்களுக்கு வேலையே இல்லை என தம் லேக்கல பாஷையில்
திட்டுவதுடன் ஓட்டுனர் (டிரைவர்)நடத்துனர்( கண்டக்டரை) ஒரு வழி செய்திருப்பார்கள். நம்மவரிடம் சிக்னலில் நிற்கும் பொறுமை, சிக்னலை கடைப்பிடிக்கும் பக்குவம் ,பேருந்து ஓட்டுனரை அமைதியாக போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க செய்து ஓட்டச் செய்யும் பக்குவம் இல்லை.
 

எங்கு சென்று எதைக் கேட்டாலும் உடனே புரியும் படி ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் பதில் கிடைக்கிறது. படித்தவர் , படிக்காதவர் , விவசாயி, கணினி தொழில் நுட்ப வல்லுநர் என பாகு பாடு இன்றி அனைவரும் உடனே உதவுகின்றனர். நமக்கும் புரியும் எந்த மொழியிலும் பதில் அளிக்கின்றனர்.    ஆனால், சென்னையில் தமிழனாகிய எனக்கே சிலர் பதில் தெரியாது என மழுப்பி நழுவிய சம்பவமும் உண்டு. பிற மாநிலத்தவர்கள் பாவம் என்று தான் தோண்றுகிறது . இதற்கு பின்பு நம் மொழி கொள்கையும் காரணமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.



  தமிழ் நாட்டில் நாம் இரு மொழிக் கொள்கையை கையாளுகின்றோம். ஆங்கிலம் மற்றொன்று தமிழ். ஆனால் , கர்நாடகாவில் மும்மொழிக் கொள்கையை பின்பற்றுகின்றனர். ஆகவே, அவர்களுக்கு நாம் கேட்கும் எதையும் புரிந்துக் கொண்டு உடனே பதில் அளிக்கின்றனர். நாம் தமிழ் மீது உள்ள பற்றினால், ஆங்கிலத்தை முறையாக கற்று ,நடைமுறைப்படுத்தாதனால், ஆங்கிலம் தெரிந்தும் நம்மால் நமக்குத் தெரிந்த விடையை வினா எழுப்பியவரிடம் அதனை பகிர்ந்துக் கொள்ள இயலவில்லை.
நாம் தமிழில் கூறினாலும் அவர்களுக்கு புரிய போவதில்லை என்பதால் நாம் சொல்ல தயங்குகிறோம் என்பது என் கருத்து.
 
       தற்சமயம் உடல் நலம் சார்ந்த உபாதைகளுக்காக மருத்துவம் பார்க்க மதுரை வந்துள்ளேன். வரும் திங்கள் முதல் அடுத்த வருடம் ஜனவரி நான்காம் தேதி வரை பெங்களூர் யுனிவர்சிட்டியில் தங்கி யிருப்பதால், பெங்களூரில் உள்ள பதிவர்களை நான் சந்திக்க விரும்புவதால் தயவு செய்து ஒரு சந்திப்பை  ஏற்படுத்தலாமே....!  காத்திருக்கின்றேன்.

Sunday, December 5, 2010

காதலிக்கும் வயசு எது...?

  சென்ற வாரம் இரண்டாம் வகுப்பு ஆசிரியர்கள் படைப்பாற்றல் கல்வி சார்ந்த பயிற்சிக்கு சென்றனர். இரண்டாம் வகுப்பு கவனிக்க ஆசிரியர் பயிற்சி பயிலும் ஒரு சிஸ்டர் ஒருவரை அந்த வகுப்பை கவனிக்க அனுப்பினேன். அந்த சிஸ்டர் மதியம் ஒரு மூத்த ஆசிரியரை அழைத்து வந்தார்.

    “சார் , சிஸ்டர் உ ங்களிடம் எதோ கூற வேண்டுமாம் ...”என சிரித்துக்கொண்டே ஒரு தாளையும் என்னிடம் தந்தார்.

சாதாரணமாக யாரையும் அழைத்துக் கொண்டு வர மாட்டார். எனவே, எதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டு தாளை பிரித்துப் படித்தேன்.

தாளில் என்னவென்று பிரித்துப்படிக்கும் முன்பே மற்றொரு ஆசிரியப்பயிற்சி மாணவி மூன்று மாணவர்களை அழைத்து வந்தார்.

“சார், இவங்க மூன்று பேரையும் விசாரிங்க ...இந்த வயசிலேயே லவ் லெட்டர் கொடுக்குறாங்க சார்...”

”அதுவும் சிஸ்டர் பாடம் நடத்தும் போது கொடுக்கிறாங்கலாம்... “என மூத்த  ஆசிரியர் நக்கல் அடிக்க ...எனக்கு சிரிப்பு வந்தது.

”சார் , நான் கிளாஸ் எடுக்கும் போது இந்த சாருக் எதோ பேப்பரை வைத்துக்கொண்டு விளையாடினான்..நான் என்ன என்று கேட்ட போது ரெம்ப கேசுவலாக லவ் லெட்டர் என்று சொல்லுறான்...”என்றார் சிஸ்டர்.

மூவரில் ஒருவன் அழுகத்தொடங்கினான்...
”என்னடா....ஏன் அழுகிறாய்.... உன்னை என்ன திட்டவா... செய்தேன்...”

“நான் அப்பவே சொன்னேன் சார்...சார் ஒண்ணும் திட்டமாட்டாங்கண்ணு..” என்றான் சாருக்.

 ”பாத்தீங்களா சார்... ஒரு பயமும் இல்லை... ஒரு சாத்து சாத்துங்க...”என்றார் ஆசிரியர்.

“உங்க கிளாஸ் டீச்சருக்கு தெரியுமா...?”

“சார் ... வினோத் செல்வராணியை லவ் பண்ணும் போதே போட்டு கொடுத்துட்டான் சார்... “

“சரி...டீச்சர் என்ன சொன்னாங்க...”

“லவ்...பண்ணுரது தப்புன்னு சொன்னாங்க...” சாருக் அருகில் இருந்த மணி சொன்னான்.

“அது சரி ..சாருக்.. இப்ப இது என்ன திரும்பவும்... ’எனக் கூறிக் கொண்டே காகிதத்தைப் பார்த்தேன்.

அதில் இரு உருவங்கள் வரையப்பட்டு அதற்கு மேல் ஆர்டின் வரைந்து செல்வ ராணி , சாருக் காதல் என எழுதி இருந்தது. அருகில் இன்னும் ஒரு படம் வரைந்து வினோத் , கவிதா என எழுதி இருந்தது.


வினோத் அழத்தொடங்கினான்.

“யேய்...அழுகையை நிறுத்து... இல்ல அடிச்சுப்புடுவேன் ....” எனக் கூறிக் கொண்டே என் மேசையில் வைத்திருந்த சாக்லெட்டை எடுத்து சாருக்கிடம் கொடுத்து...”வெரி குட் ... உண்மையை சொன்னதற்கு....இது தப்பா..? தப்பு இல்லையா ...?”என்றேன்.

பதில் எதுவும் சொல்லாமல் முழித்தான்.

“இவ்வளவு நேரம் நல்லாத்தானே பேசினே... இப்ப என்ன யோசிக்கிற... “

“இல்ல சார்.. இத நான் எழுதல... வினோத் தான் வரைந்தான்..”

“இல்ல சார்.. என் அக்கா( நா ன்காம் வகுப்பு) தான் சொன்னா...”

“ஓ..இது குடும்பம் வரைத் தெரியுமோ....?”

“சார் ..அவ அக்கா தான் கொடுக்க சொன்னாலாம்...”என்றார் பயிற்சி பெற வந்த ஆசிரியர்.


”சாரி ...சார் ” என்றான் ,மணி.

”பார்த்திய மணி ..தப்புன்னு தெரிஞ்சதும் ...சாரி கேட்கிறான்” என்று சொல்லிக் கொண்டே அவனுக்கும் சாக்லெட் வழங்கினேன்.

“சார்... செல்வராணி முதல்ல என்னைத் தான் சார் பார்த்துச்சு ...இவன் (வினோத்)தப்பு தப்பா எதோ சொல்ல இப்ப இவனை பாக்குது சார்...”என்று அப்பாவியாக சொன்னான் மணி.

”என்னடா கிளாசு நடக்குதா...வேறு எதுவுமா.. டீச்சர் எதுவும் ஸ்பெசல் கிளாஸ் எடுக்கலைல்லா...” என்றார் மூத்த ஆசிரியர்.

“டீச்சர்... எல்லா பயலுக்கும் ஒரு பிள்ளை இருக்கு.... யாருமே லவ் பண்ணாம இல்ல... “


“அடப்பாவிகளா ... “ என சிஸ்டர் அதிர்ச்சி யுற்றார்.

“பாவம் பசங்க... எண்டா.. சாருக் ...  இது தப்பு இல்லைன்னு தெரியும்லா... அது நாலாத்தானே .. எல்லாரும் லவ் பண்ணுறீங்க.... வினோத் உன் அக்கா நல்லா படிக்கணும்ன்னு பேனா அன்பா வாங்கி கொடுப்பையில்லா... “

“நான் இரண்டாவது ராங் எடுத்தேன்னு எனக்கு ஒரு பைவ் ஸ்டார் சாக்லெட் வாங்கி கொடுத்துச்சு.... அப்புறம் எங்க அப்பா பேக் வாங்கி தந்தாங்க சார்..”

“இது எல்லாம் உன்னை உங்க அப்பாவும், உங்க அக்காவும் லவ் பண்றதாலத்தான் ... உனக்கு பிரியமா செய்யுறாங்க.. அதுனால லவ் பண்ணுறது தப்பு இல்ல..ஆனா பேப்பரில எழுதி பேரை எழுதி வரைந்து விளையாடுறது தான் தப்பு.... புரியுதா...என்ன சாருக் இப்ப சொல்லு ... எல்லாரும் லவ் பண்ணலாம்லா..”


“ சார்.... லவ் பண்ணக் கூடாது சார்.... “ என்றான் மணி .


“அப்ப தப்புன்னு சொல்லு..” என்றேன்.

“சாரி சார்...இனிமே இப்படி எழுதி விளையாட மாட்டேன். “ சாருக் .


“வினோத் ,,, இது வயசு இல்ல .. இனிமேல் இப்படி படம் வரையாதே... உனக்கு படம் வரைய ஆசை யிருந்ததுன்னா...இங்க வா... உனக்கு படம் வரையத் தருகிறேன்..” என்றேன்.


“சாரி சார்... இனிமே செய்ய மாட்டேன்...”வினோத்.


“ இனிமே உங்களுக்கு லவ் பண்ணணும்னு தோணுச்சுன்னா... ஹெச் சம் சார
லவ் பண்ணுங்கடா..” என்றார் மூத்த ஆசிரியர்.

அனைவரும் சிரித்துக் கொண்டே.... “சாரி சொல்லி கிளம்பினர்.


சிஸ்டரும், பயிற்சி ஆசிரியரும் ஆச்சரியத்துடன் என்னை பார்த்து....”சார் .. நீங்க அடிச்ச்சிருந்தா.. கிளாசே லவ் பண்ணுறது தெரிந்து இருக்காது... அதுவும் அவர்களுக்கு அதட்டாமல், அடிக்காமல் உணர்த்தி யுள்ளீர்கள் “ என என்னை புகழ்ந்தாலும் என் மனம் ஒரு கேள்வியுடன் இதை எழுதச் செய்தது.


 முதல் வகுப்பு தாண்டிய நிலையில் பிஞ்சு மனதில் ஆண் , பெண் பேதம் பிரித்து, தவறான பால் உணர்வைத் தூண்டி , காதல் என்ற பெயரில் அநாகரீகச் செயலை எது தூண்டி விடுகிறது ? இது நம் கல்வி முறையில் ஓட்டையா...? இல்லை இத் தவறைக் முறைப்படி ஆரம்பத்திலேயே கண்டிக்க தவறிய ஆசிரியரை குறைக் கூறுவதா.. தொடர்ந்து கண் காணிப்பு தேவை என்பதை மறந்துவிட்ட ஆசிரியப் பணியை சாடுவதா....? நம் தொலைத் தொடர்பு சாதனங்கள் ஆசிரியரை விட விரைவாக குழந்தைகளை மூளைச் சலவை செய்வதை கண்டிப்பதா..? பெற்றோர்கள் தம் குழந்தைகள் முன் பாலியல் சார்ந்த பேச்சுக்கள் , செயல்கள் செய்வதால் ஏற்படுகிறதா...?


     இது பொதுவாக நான்காம் , ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை ஆனால் , அது இரண்டாம் வகுப்பிலே தொடங்கி அந்த வகுப்பு முழுவதும் ஆட்கொண்டுள்ளது என்றால் எதைக் குறைச்சொல்லுவது...? புரியாத இந்த புதிருக்கு எனக்கு உதவி செய்யவும்.

Thursday, December 2, 2010

செல்போன் உரையாடல் ...!

  நீண்ட நாட்கள் பின்பு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. என் மச்சினன் கல்யாணமாதலால் என்னால்  இடுகை இட முடியவில்லை. தற்சமயம்  காலமாதலால் என் பள்ளியின் பேருந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டு என்னை காலை ஆறு மணிக்கு மாணவர்கள் செல்லிடை தொலை பேசியில் அழைத்து , "சார்,இன்று பஸ் வருமா..? சாரி... டிவியில போடுறாங்க லீவுன்னு .." என்பது போன்ற கேள்விகளை தொடர்ந்து கேட்டு என்னை நிம்மதி இழக்கச் செய்தாலும் , நான் பேருந்து அனுப்பியும் மழையினால் பள்ளி வராத மாணவர்கள் அதிகம் .

நிம்மதி இழப்பு என்று ஏன் சொல்லுகிறேன் என்றால் , பள்ளி பேருந்து சென்றாலும்  , பெற்றோர்கள் மீண்டும் என்னை அழைத்து தொல்லைபடுத்திய விதம் தான் தனி ....  

        காலை முதலே என்னை அழைத்ததால் ... அந்த செல்போன்  எண்ணில் என் எண் பதிவு செய்யப்பட்டு இருக்கும் . பள்ளி துவங்கிய சிறுது நேரத்தில் கீழே சொல்லுவது போல சம்பவங்கள் என்னை அவதிப் பட வைத்துள்ளது.     

           "டேய் ,சரவணா .... எங்கட இருக்கே...உன்னை கலவை போட வர சொன்னேனே... என்னத்த புடுங்குற.... "
"ஹலோ யாருங்க .... "
"விளக்கெண்ணை... என்ன தெரியல...."
"ஹலோ .... உங்களுக்கு எந்த நம்பர் வேணும் ..."
" டேய் ... போதும்டா... சீக்கிரம் வா...வாயில கேட்ட வரத்தை வரப்போகுது...."
" ஹலோ ... உங்களுக்கு என்ன வேணும் ... நான் .... பள்ளி தலைமை ஆசிரியர் பேசுகிறேன்..."
"சாரி சார்.... நான் வேறு சரவணன்... ன்னு நினச்சு ...." போன் கட்டாகி விடும்.

" ஹலோ ...வணக்கம் .சொல்லுங்க "
"என்னத்த சொல்ல ... "
"ஹலோ ...யாருங்க வேணும்... "
"நீங்க தான் ..."(பெண்ணின் குரல்)
"ஹலோ ... இது நயன் த்ரீ போர் ...."
"ஆமாம் ...ஆமாம் ...அதே தான்..."
"உங்களுக்கு யாரு வேணும் ...."
"என் வீட்டுக் காரர் தான் .... "
"ஹலோ யாருங்க நீங்க... இது ராங் நம்பர் ...உங்க வீட்டுக்காரர் யாருங்க ?"
"நீங்க தான் வீட்டுக்காரர்..."
"ஹலோ நான் தலைமை ஆசிரியர்...."
"சாரி ...சார்..."(போன் உடனே கட் ஆகிறது)


"ஹலோ ...வணக்கம் ..."
"சனியம் புடுச்சவனே ... உன்னை எங்க போக சொன்னேன் எங்கட நிக்கிற..."(ஆண் குரல்)
"ஹலோ ... யாருங்க உங்களுக்கு என்ன வேணும் ..."
" திரும்புட யாருன்னு தெரியும் ... உன்னை நம்பி ஒரு வேலையும் செய்ய முடியாது...(தகாத வரத்தை) "
"ஹலோ ... நான் ஸ்கூல்ல  இருக்கேன்... "
"மயிறு .... இனி என்னடா உனக்கு படிப்பு கிழிக்குது.... (தகாத வார்த்தை )"
"ஹலோ ... நான் ....பள்ளி தலைமை ஆசிரியர்...பேசுறேன்..."
போன் துண்டிக்கப்படுகிறது ...


"டேய் சரவணா... வரும் போது இட்டிலி வங்கி வாடா..."
(என் மாமனார் குரல் போல் கேட்கிறது....)
"என்ன மாமா வேறு போன்னில இருந்து கூப்பிடுறீங்க .."
"எந்த நம்பரா இருந்தா என்ன ... கேள்வி கேட்காம வாங்கிட்டு வாடா "
( மரியாதை குறைவு சந்தேகப்பட்டு )
"ஹலோ ...உங்களுக்கு எந்த நம்பர் வேணும் ...நான் .... தலைமை ஆசிரியர் பேசுகிறேன்..."
"சாரி ...சார் ... என் தம்பி சரவணனுக்கு பதில .... "


இது போன்ற போன் கால்கள் ...என்ன  நிம்மதி இழப்பு என்று நான் சொன்னது சரி தானே... !என் மாணவ செல்வங்களுக்காக இது போன்ற வசவுகள் வாங்குவதில் எந்த நிம்மதி இழப்பும் எனக்கு இல்லை. இதை அசைபோடும் போது மகிழ்ச்சியும் , செல்போன் பண்பாட்டின் அறியாமையும் கண்டு கவலைப்படச்செய்கிறது.
அவசர உலகத்தில் sara என்ற எழுத்தை பார்த்தவுடன் அப்படியே டயல் செய்து விடுவதை நினைக்கையில் வருத்தம் ஏற்படுகிறது . இத் தவறினால் வடிவேலு போன்று செல் போனையே உடைத்தவர்கள் அறிந்து இருக்கிறேன். ஆளைத் தேடி பிடித்து அடித்து சண்டை இழுத்தவர்களும் உண்டு . இதனால் கொலை நடந்த சம்பவங்களும் உண்டு.

          என்ன கொடுமை சரவணன் சார்... என்ற வசனம் தான் என் நினைவுக்கு வருகிறது.