Saturday, February 13, 2010

காதலர் தின பரிசாகும் !

உன்னை பார்க்காத
ஒவ்வொரு  நொடி பொழுதும்
மரணிக்கிறேன்..!

உன் நினைவுகள் அற்ற
ஒவ்வொரு நொடி பொழுதும்
உயிரின்றி துடிக்கிறேன்....!

உன் சொல் கேளாத
செல்லும்
உயிரற்று உறங்கி கிடக்கிறது ...!

என் இதய துடிப்பு
நின்றுவிடுமோ என்று எண்ணி...
அலை பேசியும் ...
அலைந்து நெட் வொர்க் தேடி ..
ஒய்ந்து விட்டது ...

நீ வேறொரு இணைப்பில்
இருப்பதாக கூறினாலும்
பரவாயில்லை ....
தொடர்பு எல்லைக்கு அப்பால்
இருப்பதாக கூறுவதால் ....
என் மனம் பட படக்கிறது....!
துடி துடிக்கிறது ....
இது தான் காதல் வலியோ ...!
நாளையாவது தொடர்பில் வா
அதுவே எனக்கு
காதலர் தின பரிசாகும் !

3 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

தொடர்பில் வந்துட்டாங்களா... இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

திவ்யாஹரி said...

//நாளையாவது தொடர்பில் வா?//
அப்போ நாளைக்கு வரைக்கும் அவங்க not reachable தானா? பேசுனாங்களா இல்லையா? காதலர் தின வாழ்த்துக்கள்..

துபாய் ராஜா said...

பரிசு கிடைத்ததா.... :))

Post a Comment