Friday, February 12, 2010

"நல்ல பண்புகளை நம் குழந்தைகளிடம் எப்படி வளர்ப்பது?"

     "நல்ல பண்புகளை நம் குழந்தைகளிடம் எப்படி வளர்ப்பது?" என்பது  குறித்து ஆசிரியர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் நான் தரும் ஆலோசனைகள் , தயவு செய்து பின்பற்றி பாருங்கள் , நிச்சயம் நம் சந்ததியினர் நல்ல பண்பு உள்ளவர்களாக வளர்ந்து , உயர் பண்பு மிக்க சமுகம் அமைத்திடுவார்கள்.

      ஆசிரியர்களே , நம் வகுப்பு பாடவேளையிலோ , அல்லது தினம் காலை முதல் பாடவேளையிலோ , நம் மாணவர்களிடம் , நேற்று அவர்கள் செய்த நல்ல பண்புகளை கூறும்படி கேட்கவும் . சாதாரண உதவியாக இருக்கட்டும் , தன் நண்பனுக்கு பேனா , பென்சில் , தான் கொண்டுவந்த உணவு கொடுத்தாதாக இருக்கட்டும், வயதானவர்களுக்கு  சாலை கடக்க உதவி செய்ததாக இருக்கட்டும் , வகுப்பு குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போட்டதாக இருக்கட்டும் ...கூச்சப்பட்டாமல் கூறச் சொல்லவும்.
    
        அவ்வாறு கூறுவது மட்டும் போதாது , மாணவர்களிடம் தம் வகுப்பில் செய்த உதவிகளில் எந்த உதவி சிறந்தது என்று கேட்டு , அதில்  அதிகமாக எது சிறந்தது என்று மாணவனை முடிவெடுகக்கச் செய்து  , அதற்கான காரணங்களை மாணவனிடமே  கேட்டு , அந்த உதவி செய்த மாணவனை வகுப்பில் பாராட்டுங்கள். நித்தம் உதவி பெருகும் , நல்ல பண்பு தானாக வளரும் . நாம் தனியாக நல் ஒழுக்க வகுப்பு எடுக்க தேவை இல்லை.

          பள்ளி முழுவதும் இப்பண்பு வளர , தினம் காலை பிரார்த்தனை வேளையில் , அன்று   முந்தய தினம் , எது சிறந்த பண்பு என அனைத்து ஆசிரியர்களால் முடிவு செய்து , அப்பண்பை மட்டும் கூறி , மாணவன் , வகுப்பு , பிரிவு கூறாமல் பாராட்டவேண்டும். இவ்வாறாக பாராட்டுவதன் மூலம் , மாணவர்கள் தாமும் இது மாதிரி ஏதாவது உதவி அல்லது நல்ல பண்புநலம் வளர்த்து , தம் வகுப்பும் தானும் பாராட்டு பெறவேண்டும் என முயல்வார்கள். ஆசிரியர்களும் தம் வகுப்பும் நல்ல பெயரை  தலைமை ஆசிரியரிடம் பெற வேண்டும் என முனைப்புடன் நல்ல பண்புகள் கற்று தருவார்கள். கல்வியும் தானாக வளரும். சமூகமும் தானாக நற்பண்பு உள்ளதாக மாறிவிடும்.

           ஆசிரியர்களும் முனைப்புடன் செயல் பட , தலைமை ஆசிரியர்கள் அல்லது நிர்வாகம் , ஆசிரியர்களுக்கும் இம்மாதிரி வாழ்த்துக்கள், பாராட்டுகள் , பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தலாம்.  ஆசிரியர்களிடம் காணப்படும் சிறந்த பண்பை , மாத கூட்டம் அல்லது  நிர்வாக கூட்டம் நடை பெறும் போது , பெயர் கூறாமல் , அப் பண்பை மட்டும் தெரிவித்து , பாராட்ட வேண்டும் . ஆசிரியர் அனைவரும் வியப்பாக இருக்கும். இப்படியும் உதவி செய்யலாமோ என தோன்றும். நிர்வாகத்துக்கும் தாம் கவனிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்தது செயல் படுவார்கள். உதாரனத்திற்க்கு, ஆசிரியர் மதிய உணவை , மாணவன் தன் டிபன் பாக்ஸ் என நினைத்து( ஒரே மாதிரியாக இருக்கும் பட்ச்சத்தில் ) எடுத்து உணவருந்தி விடுகிறான், ஆசிரியர் அவன் உணவை திறந்து பார்கிறார் , வெறும் காய்ந்த இட்டலி , இருபினும் அதை உட்கொண்டு , அவனை அழைத்து , அடிக்காமல், திட்டாமல், சிரித்து கொண்டே , உன் சாப்பாட்ட நான் தெரியாம சாப்பிட்டேன், நல்ல இருந்துச்சு , நீ சாபிடாயா , டீச்சர் செய்த உணவு எப்படிடா இருக்கு ..என பரிவோடு அவன் கவனமின்மையை எடுத்து சொன்னால் , அது சிறந்த பண்பு. வீடு செல்லாத மாணவனின் பெற்றோர்களுக்கு முறையான தகவல் கொடுத்து , பள்ளி வேலை முடிந்தும் , உதவுகிறார் என்று வைத்து கொள்ளுங்கள் , அது சிறந்த பண்பு. வெளியில் விற்பனை செய்யும் ஈ மொய்த்த பண்டத்தை , விற்க கூடாது என கண்டிப்பதுடன், மாணவர்களையும் வாங்க தடுத்தால் அது நற்பண்பு. எப்படி ஆசிரியர்கள் செய்யும் நல்ல பண்புகளை தலைமை ஆசிரியர் , பெயர் குறிபிடாமல் வகை படுத்தி , ஆண்டு இறுதியில் ஆசிரியர்களிடம் கொடுத்து சிறந்த பண்பு எது என்பதை தேர்வு செய்து . ஆண்டு விழாவில் அந்த ஆசிரியருக்கு பரிசு கொடுத்து கவுரவிக்கலாம்.
 
        பெற்றோரும் தங்கள் வீட்டில் வளரும் குழந்தைகளிடம், தினம் அவர்கள், செய்த நல்ல பண்பை அல்லது உதவியை கேட்டு, பரிசு கொடுத்து அல்லது வார்த்தை மாலைகளால் பாராட்டலாம்.

        முயன்று பாருங்கள் , பண்பு நலம் பெருக ! இது போன்று தங்களிடம் ஆலோசனைகள் இருந்தால் குறுந்தாள் கூறுங்கள் .

6 comments:

மேவி... said...

சார் .....நல்ல எழுதி இருக்கீங்க ... இன்னும் FOCUSED அஹ எழுதுங்க

மேவி... said...

tamilmanam, tamilish la serunga .....

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பா.. எக்கச்சக்கமான நல்ல இடுகைகள் எழுதி இருக்கீங்க.. ஆனா இன்னும் நெறைய பேரை போய் சேரணும்.. மொதல்ல ப்ளாக்ல பாலோவர் விட்ஜட்ட சேருங்க..

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல சிந்தனைப் பகிர்வு நண்பரே..

mohamedali jinnah said...

"நல்ல பண்புகளை நம் குழந்தைகளிடம் எப்படி வளர்ப்பது?...
It is a good article and there are more like that.

Respected sir I have to thank you for your good comment that you have made in http://nidurseasons.blogspot.com-Madurai Saravanan said...

thakavalukku nanri
February 20, 2010 10:23 A.

I want some of your articles to republish in my site with your site name and source. If you give me permission I can do that and I am waiting for your kind reply.
With regards,
please visit:-தொடுப்பகம் பாருங்கள்

* NIDUR SEASONS
* nidurseasons.com
* seasons nidur (wordpress)
* SEASONS--NIDURs
* SEASONS-NIDUR
* seasonsali
* seasonsnidur
* seasonsnidursite

mohamedali jinnah said...

ப்ளாக்ல பாலோவர் விட்ஜட்ட சேருங்க..

Yes I too wants to follow you but I can not find the Follow விட்ஜட்

Post a Comment