Thursday, March 18, 2010

என்னுள் நீ...!

லைட் ஹவுசாய் இருந்து ...
உன்னை அறிமுகம் செய்த
உன் தோழிகள் ....
போட் ஹவுசுக்கு அழைத்து
பேச செய்த போது ...
என் வார்த்தைகள்
மோர்ஸ் கோடுகளாய்
தந்தியடிக்க...
யாருக்கு புரிந்ததோ ...
இல்லையோ ...
உனக்கும் எனக்கும் மட்டும் புரிந்தது...!
நம் பார்வையின் ஈர்ப்பு...
பெருவெடிப்பு ஏற்படுத்தி  ...
நமக்குள் தனி பிரபஞ்சத்தையே...
அல்லவா உருவாகியுள்ளது...!

நம் அன்பு
பிளவிப்பெருகி  ...
மொருலா போன்று ...
அன்பு நீண்டு ...
நியுருலா நிலையில் 
நம்முள் முழுமையாய்...
முழு உருவம் அடைந்து ...
நீருக்குள் நெருப்பாய்
என்னுள் நீ..
உன்னுள் நான்...!

நீராய்  பூத்து...
என் வாழ்வில் சுவையூட்டி ....
எனக்கு முழு உருவம் கொடுத்து...
என்னை கடலாக்கி ...
சமுகத்திற்கு காட்டிய
நீயே...
என் அனைத்து ஜென்மத்திற்கும்
உயிராவாய் ...!

6 comments:

நசரேயன் said...

//நம் பார்வையின் ஈர்ப்பு...
பெருவெடிப்பு ஏற்படுத்தி ...
நமக்குள் தனி பிரபஞ்சத்தையே...
அல்லவா உருவாகியுள்ளது...!//

குளோபல் வார்மிங்க்கும் எதாவது வழி பண்ணுங்க

புலவன் புலிகேசி said...

//நீயே...
என் அனைத்து ஜென்மத்திற்கும்
உயிராவாய் ...!//

ம்ம்ம்ம்ம் :)

Balamurugan said...

வார்த்தைப் பிரயோகம் நல்லா இருக்கு சரவணன்

சசிகுமார் said...

என் வார்த்தைகள்
மோர்ஸ் கோடுகளாய்
தந்தியடிக்க...

முதல் சந்திப்பு எனக்கும் அப்படிதான் இருந்தது, யதார்த்தமான கவிதை நண்பா உங்கள் புகழ், மென்மேலும் வளர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்

பனித்துளி சங்கர் said...

Really Super

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள்

Post a Comment