Sunday, March 21, 2010

8டாத அறிவு ..

சினிமா சினிமா  ..."அண்ணே ..!யாரு அண்ணே...அது ?தொட்டில்ல போறவங்க வரவங்கள எல்லாம் கூப்பிட்டு எதோ சொல்லிக்கிட்டு...இருக்கிறாரு .."

"அட ..கடையில இருந்து வேடிக்கை பார்ப்ப போல ...அவரு ஒரு சினிமா எடுத்துருக்காரு...அந்த படத்தை பார்க்க எல்லாரையும் சிபாரிசு பண்றார்..."

"பாவம் ..தோத்துருவோம்ன்னு பயத்தில ஒவ்வொருவரையும் கூப்பிட்டு சொல்றாரு...படம் எடுத்தா நடு த்தெருவில வந்துடுவாங்கன்னு சொல்லுறாங்கலே ..அது இது தானா.."

"அப்படி இல்ல ...ஒரு படம் எடுத்துட்டு ...அடுத்த படம் எடுக்கிறது வெட்டி செலவு அப்படின்னு நினச்சா ...நஷ்டம் தான் வரும் ..நம்ம எடிசன் மாதிரி...."

"யாரு பல்ப கண்டு பிடிச்சார்...அந்த தாமஸ் ஆல்வாய் எடிசனா..!விவரமா சொல்லுங்கண்ணே...."

"எடிசன் இயங்கும் படத்திற்கான காமிராவை கண்டு பிடிச்சதோட நிற்கவில்லை ...பேசவும் செய்தால் மக்களை கவருமேன்னு ..'போனோ கிராப்' கண்டு பிடிச்சாரு...ஒளியையும், படத்தின் அசைவையும் இணைக்க முடியுமான்னு ..ஆராய்ச்சியில்ல  இறங்கினாறு..."

"வெற்றி பெற்றாரா...?"

"இந்த ஆராய்ச்சியில்ல ..ஐம்பது அடி நீள செல்லுலாயிட் பிலிம்ல படமெடுத்தா ஒலி ஒத்திகை வெற்றி பெறவில்லை..."

"அப்ப எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் அண்ணே...? "

"ஆராய்ச்சியில்ல இருபத்துநான்கு  ஆயிரம் டாலர் செலவிட்ட அவர் தமது வழிமுறைகளு பதுவு செய்ய நூற்று ஐம்பது டாலர் வெட்டியா செலவழிக்க வேணுமான்னு விட்டு விட்டார்..."

"தோல்விய வெட்டியா செலவு செஞ்சு பதிய மாட்டங்க தானே ...அண்ணே..."

"சரி தான்... அனா அவரு வழியிலேயே முயற்சி செய்த பலர் ....கடைசியில்ல வெற்றி பெற்று விட்டனர். அவர் பதியாத ...னால... ஆயிரம் கோடி வருமானத்தை இழந்து விட்டார்....முயற்சி திருவினை ஆக்கும்..."

"சினிமா பத்தி நிறைய விஷயம் தெரிந்து வச்சுருகீங்க...எப்படின்னே...சினிமா தோன்றியது  ...?"

"ஒருவன் நரந்துஸ் செல்லும் போது ஒவ்வொரு அடியாக படம் எடுத்து ..அதை  வரிசையாக அடுக்கி , பின் "மாய சக்கரம்" என்னும் விளையாட்டு சாதனத்தில் சுழல விட்டால்  ...அது அந்த வேகத்திற்கு தகுந்த மாதிரி படத்தில் உள்ளவர்  நடந்து செல்வது போல் தோன்றும் "

"அப்படியா..?"

""இத வச்சி தான் லூமியர் சகோதரர்கள் எளிதில் எடுத்துச்   செல்லும் காமிராவையும் ,பட சுருளையும் பெரிய திரையில் காட்டும் இயந்திரத்தையும் கண்டு பிடிச்சாங்க .."

"(இருவரும் பேசி கொண்டிருக்கையில் திரை பட அதிபர் அருகில் வந்தார்.)

"சரியாய் சொன்னீங்க ...பிரான்சின் லூயி லுமியரும், அகஸ்டோ லுமியரும் 1895 டிசம்பர் 28 ல் சினிமா வரலாற்றை தொடக்கி வைத்தனர்."

"அப்புறம்  முதல் சினிமாவின் பெயர் என்னங்க...?"

" அது 'ரயில் கொள்ளை' 1903 ஆம் வருடம் எட்டு நிமிடம் மட்டும் ஓட கூடிய படம் .இதில் பதிமூன்று வெவ்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன...இதை தயாரித்தவர் 'எட்வின் போர்ட்டர் 'எடுத்து கொடுத்தவர் தாமஸ் எடிசன் "

"பேசும் படம் தயாரிக்கும் முன் படம் எப்படி இருந்தது...?"

"லாஸ் எஞ்சலில் பல ஸ்டுடியோ உருவாகின....நடிகர்களும் உருவாகினார்கள் ...இதன் விளைவாக  முன்று மணி நேரம் படம் உருவாககப்பட்டது...1915 ல் 'கீரிமித்' என்பவர் 'ஒரு  நாட்டின் தோற்றம் ' என்ற படத்தை எடுத்தார்..."

"இது பேசும் படமா...?"

"இல்லை படம் ஓடும் போது எழுபத்தைந்து பேர் கொண்ட இசை குழு முன்னாள் அமர்ந்து வாசித்தது ."

"ஆச்சரியமாக இருக்கிறதே...!"

"1927 ல் தான் முதல் பேசும் படம் 'ஜாஸ் சிங்கர் ' வந்தது..மனித கற்பனை ...புதிய கண்டுபிடிப்புக்கள் இன்று 'இந்திரன் 'வரை தொடர்கிறது...."


"அது சரி சார் நீங்க எடுத்த சினிமா தியேட்டருக்கு எப்படி போகணும்...?"

"கையில காசோட தான் போகணும் ..."

"!!!!"(இருந்தும் சமாளித்து கொண்டு...)

"இப்பதான் தெரியுது நீங்க ஏன் தெருவில்ல நின்று கூவுரேங்கன்னு ...."

"!!!"

5 comments:

settaikkaran said...

சினிமா குறித்து ஒரே பதிவில் சுவாரசியமாக எழுதப்பட்ட ஒரு கலக்கல் பதிவு

ஸ்ரீராம். said...

:))

dheva said...

Nice ..post saravanan...really informative.....!

மதுரை சரவணன் said...

ஸ்ரீ ராம், தேவா, சேட்டைக்காரன்,இளந்தென்றல் மற்றும் வருகைபுரிந்துள்ள அனைவருக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் said...

கலக்கல் பதிவு

Post a Comment