Friday, March 19, 2010

கண்திறக்க வருவாயா...?

மதிப்பெண் மட்டுமே
கல்வி என்று ...
கற்பனைகளை
கல்லறை ஆக்கி....
சில்லறைகளை
கல்வியின் கருவறைகளாக்கி....
கல் கல் என ...
சொல்லி சொல்லியே ...
பிள்ளைகளின் மனதை
கல்லாக்கும்  கல்வி முறை
மாற ....மற்றம் உண்டாக்க ...
கல்லாய் இருக்கும்
சரஸ்வதியே ...
உண்மையாய் கல்வி ...
கண்திறக்க வருவாயா...?  

12 comments:

புலவன் புலிகேசி said...

கல்லுக்கிட்ட சொல்லி எந்த பிரயோசனமும் இல்லீங்க...

Unknown said...

சாமியா இல்ல கல்லா

dheva said...

Iam sorry saravanan..... I dont understand what you are trying to tell...! I did not see any solution on your poem!

Jabar said...

அருமை... வாங்க நம் தலைமுறையிலாவது மாற்றத்தை ஏற்படுத்துவோம்...

அண்ணாமலை..!! said...

நல்லாக் கேட்டீங்க போங்க..!!
மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை என்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் உணர வேண்டும்.!

ஸ்ரீராம். said...

இருக்குங்கறீங்களா? இல்லைங்கறீங்களா

sathishsangkavi.blogspot.com said...

சரியாத்தான் சொல்லி இருக்கறீங்க...
ஆனா இதுல சரஸ்வதி கண் திறந்தாலும் பயன் இல்லை...
பணத்துக்காகத்தான் பள்ளி ஆரம்பிக்கராங்க அவங்க தான் கண் திறக்கனும்....

Anonymous said...

ரசித்தேன்..ருசித்தேன்..அருமை ஆசிரியரே

Kandumany Veluppillai Rudra said...

கந்திறந்து கருனை மழை பொழிந்தபடியால்தான் பதிவு எழுதுகிறோம்

Tamilnesan said...

Great lines Man!
Good Keep it up!

பத்மா said...

ஆக்கியது யார் ? நாம் தானே நாமே அழிக்க முற்படுவோம். .முதல் படியாக பார்க்கும் குழந்தைகளிடமெல்லாம் என்ன ரேங்க் அப்படின்னு கேக்கறத விடுவோம்! சரிங்களா?

Unknown said...

nalla eruku but kalla eruku.

Post a Comment