Thursday, March 11, 2010

8டாத அறிவு ..

சக்கரை

(கிணற்றிலிருந்து  குளித்து விட்டு வந்த ஒருவரை பள்ளி ஆசிரியர் சந்தித்தார்)

"என்ன மாடசாமி ...குளித்து துவட்டின பின்னாடி கையில சோப்பு போடுற...?"

"அத ஏன் கேட்கிறிங்க ..உடம்பு அரிக்குது வாத்தியாரே...தண்ணி சரியில்லேன்னு நினைக்கிறேன்..."

"அட தண்ணீரை குறை சொல்லாதிங்க ...சர்க்கரை வியாதி இருக்கு.. ன்னு சொல்லுங்க "

"என்ன சக்கரை வியாதியா ....?என்ன சொல்லுறீங்க...?"

"உடம்பு அரிப்பு அதுவும் அடிவயித்தில அதிகமான நமச்சல் ....இது நிச்சயம் சர்க்கரை வியாதிதான்...."

"அப்ப இது ஒரு அறிகுறி..."

"ஆமாம்ப்பா ஆமாம்....கண் பார்வை குறைதல் ,எப்பவும் துக்கம் வருதல், இரவில அடிக்கடி சிறுநீர் கழித்தல் ...நெடுநாளா  ... கால் புண் ஆறாமல் இருத்தல் ,சோர்ந்து போதல், எவ்வளவு தண்ணீர் தாகம் எடுத்தாலும் தண்ணீர் குடித்து கொண்டே...இருத்தல்,திடீர் என்று எடை குறைதல்..."

"இதெல்லாம் சர்க்கரை வியாதியின் ஆரம்ப அறிகுறி ...அப்படி தானே...ஒரே ..கவலையா இருக்கு ..."

"ஏன் ?"

"பொங்கல் வருதுல்ல..கரும்பு சாப்பிட முடியாதே...!"

"என்ன கரும்பில மட்டுமா...சக்கரை இருக்கு..."

"அப்புறம்..."

"பீட்ரூட்டில இருந்தும் சர்க்கரை எடுக்கலாம்..."

"வாத்தியாரே...நானே விவசாயி ....கொஞ்சம் பீட்ரூட்ட பத்தி தெளிவா சொல்லுங்க ..."

"1750 ஜெர்மனி காரங்க ...பீட்ரூட்டில இருந்து சர்க்கரை தயாரிக்கலாம்ன்னு ...ஆராய்ச்சி செஞ்சாங்க ...நெப்போலியன் 1811ல்ல ...ஐரோப்பா நாடுகள் பிரான்ஸ் உடன் தொடர்பை துடித்தப்ப ...அவரு பீட்ரூட் பயிரிடுவதை ஊக்கப்படுத்தினார்..."

" அப்ப பீட்ரூட்டுல்ல இருந்து இப்ப சர்க்கரை எடுக்கிறாங்க ..."

"பீட்ரூட்டில இருந்து சர்க்கரை தயாரிக்கலாம்ன்னு ...முதல்ல  கண்டு பிடித்தவர் ...(1747 ) மெர்லின் நாட்டை சேர்ந்தவர் .."  

"அப்படியா...?"

"செனப்போடியேசி ....என்னும் குடும்பத்தை சார்ந்தது...இடத்தின் தன்மைக்கு ஏற்ப வெள்ளை, சிவப்பு நிறமா இருக்கும்..."

"பீட்ரூட்டுல...சக்கரை சத்து மட்டும் தான் உள்ளதா  ... ?"

"பீட்ரூட்ல ...௦10.5    சதவீதம் சர்க்கரை பொருள் ....81 .5 சதவீதம் நீர் சத்து இருக்கு ..."

"அப்ப வேறு சத்து கிடையாதா...?"

"அவசர படாதீங்க ...ஒரு அவுன்சு 'பீட்ரூட்ல ...'குளுட்டன்'என்ற புரத சத்து .5கிராம் கொழுப்பு சத்து .1கிராம் ,கார்போஹைட்ரேட்...3.1கிராம்,37 மில்லி கிராம் சுண்ணாம்பு சத்து ...17 மிலி கிராம் பாஸ்பரஸ் ,.3மி.கிராம் இரும்பு சத்து ...இருக்கு , அது மட்டும் இல்ல விட்டமின் பி1,  பி2 , சி யும் உள்ளன..."

"அப்ப மருத்துவ குணம் கொண்டவை ...அப்படி தானே...?"

"ஆமா ,ஆமா...கல்லீரல் குறைபாட்டை நீக்கும் ...சரும எரிச்சலை போக்கும் ...கண் அலர்ச்சியை குணப்படுத்தும்...உள் மூலம், வெளி மூலத்தை குணபடுத்தும்..."

"இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சுருக்கீ ங்க...நீங்க பேசாம டாக்டர் ஆகி இருக்கலாம்..."

"அதல்லாம் ஒண்ணும் இல்லீங்க ...எனக்கும் சர்க்கரை வியாதி ...டாக்டரை பார்த்து பேசுறதால ..இவ்வளவும் தெரிஞ்சு இருக்கேன்.."

2 comments:

இளந்தென்றல் said...

all ur posts are informative.. thanks alot. thodarpadhivu eppo ezhudha poreenga.

பத்மா said...

ithu!

Post a Comment