Friday, March 5, 2010

செல்போன்

"சார்  ...'கரப்பான் பூச்சி'ஒரு கேள்வி கேட்கணுமா சார்..."
"என்ன ...நம்ம கரப்பான் பூச்சியா ...?"என ஆச்சரியத்துடன் அவன் இடம் நோக்கி பயணித்தேன்.
உலகிலேயே பரிமாண வளர்ச்சி இன்றி ...அன்றிலிருந்து இன்று வரை உள்ள உயிரினம் கரப்பான் பூச்சி. படிப்பில் முன்னேற்றம் இல்லாத மாணவனை அப்படி தமாசாக கொப்பிடுவது உண்டு . சிலர் எழுத வாசிக்க தெரியாதவனாக இருப்பதும் உண்டு. அவனை 'கண்ணிருந்தும் குருடன் ' என அழைப்போம். காசி சினிமா படம் வந்ததிலிருந்து மாணவர்கள் சார் ..'காசி' என என்னிடம் கூறியதிலிருந்து எழுத்து படிக்க தெரியாத மாணவர்கள் 'காசி' ஆகி போனார்கள். 
"என்னடா...சந்தேகம் ..?"
"சார் ..உங்க செல் போன்ல ....படம் எடுக்கலாமா..?"
அப்போது தான் நான் சி.டி.எம்.எ.கமிரா செல்போன் வங்கி இருந்தேன்.உடனே அவனை படம் பிடித்து அவனிடம் ஏன் செல்போனை காட்டினேன். 
"இதுல படம் (வீ டியோ) பிடிக்காலாமா சார் ...?"
"இதுல பிடிக்க முடியாது ...ஆனா ..இப்ப வருகிற இது போன்ற பிற எல்லா செல்போன்லையும் .... வீடியோ எடுக்கலாம் ...தொலைவில் உள்ளவர்களுக்கு ...இ.மெயில். கொடுக்கலாம் ..." என  எனக்கு  தெரிந்த விசயங்களை கூறினேன்.
செல்போனினால் நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு.லாபகரமான வியாபாரிக்கு ஒரு தொழிலாளி. நஷ்டத்தில் இருக்கும் தொழிலாளிக்கு இது தொல்லை ஏற்படுத்தும் கடனாளி. அதிகாரிகளை பொறுத்தவரை தனக்கு கீழ் உள்ள பலரை தொலைவிலிருந்து வேலை வாங்கும் எஜமானி. 
        நான் செல்போன் வாங்கிய  சமயத்தில் ...என் நண்பர்களின் செல்போனுக்கு  எஸ் .எம்.எஸ் அனுப்புவேன் .அப்போது அதை அனுப்புவதில் எனக்கு பெருமையாய் இருக்கும். சிலர் அதை கவனிப்பார். பலர் பாராட்டுவர். சமீபத்தில் அனைத்து கம்பெனிகளும் எஸ்.எம்.எஸ். ப்ரீ என அறிக்கை விடவும். நானும் முப்பது ரூபாய்க்கு ரீச்சார்ச் வகுச்சர் வாங்கி எஸ். எம். எஸ் அனுப்பினேன்.நல்ல விசயங்கள் தான் ...பெரியவர்கள் பொன்மொழிகளை தான் அனுப்புவேன்.
    என் போன் புக்கில் உள்ள அனைத்து எங்களுக்கும் தவறாமல் காலை , மதியம் , இரவு என அனைத்து சமயங்களிலும் கருத்துக்களை அனுப்புவேன். இச் செயல் பல மாதங்களுக்கு தொடர்ந்தன...
என்னுடைய சகோதரன் (பெரியம்மா மகன் )பெய்யரில் ஒரு நாள் எஸ். எம் .எஸ் வந்தது. 
"ப்ளீஸ் டெல் மீ யுவர் நேம் .? கூ ஆர் யு..?"
"ஐ ஆம் யுவர் பிரதர் ...க்கேஸ் ? என அனுப்பினேன் .
"யு ஆர் தமிழ் , ஒக்கே ."
"நோ ,ஐ ஆம் தமிழன் ..."என அனுப்பினேன் .
"டோன்ட் கிவ் மீ திரில் ...டேல் யுவர் நேம் ..."என வந்தது. 
"ஐ ஆம் அட் மதுரை ..."என அனுப்பினேன். 
பதில் எதுவும் வரவில்லை. நீண்ட இடைவேளைக்கு பின் போன் வந்தது . போனில் பெண்ணின் குரல் ...(டிஷ் பிலேயில் என் சகோதரன் என காட்டியது...ஆனால் பெண் குரலா ...ஒரு வேலை அண்ணியாக இருக்குமா...!என மனம் கணக்கு போட தொடங்கியது)
"ஹலோ ..." சற்று அமைதிக்கு பின் "ஹலோ ...யாரு அண்ணியா ...?" போன் கட் ஆகியது. பின்பு சிறிது நேரம் கழித்து அதே குரல் ..."ஹலோ நீங்க யாரு...?"
"நீங்க தானே ..போன் பண்ணினீங்க ...நீங்க யாரு ..சொல்லுங்க ...?"(என் அண்ணன் ஊர் போன் நம்பர் ஆகவே..அண்ணி தான் என்ன நினைத்து ...)
"ஹலோ தினமும் எனக்கு இந்த எண்ணில் இருந்து எஸ்..எம்.எஸ் வருது ....நீங்க யாருன்னு தெரியல ..."(குரல் வேறு மாதிரி பேசுவதனால் )
"ஹலோ நீங்க ரவி அண்ணே அண்ணி தானே..?"
"ஹலோ , ராங் நம்பர் ..இனிமே எனக்கு எஸ். எம். எஸ் வந்தா ..நல்ல இருக்காது..."என மிரட்டவே...
"நான் ஒன்பது ஒன்பது ... (என நம்பர் சொல்லி )கடந்த ஆறு மாதமாக நான் அண்ணனுடன் பேசவில்லை ....என்பதால் விளையாடாதீங்க ...அண்ணி போதும் ...நான் சரவணன்..."
"ஹலோ நான் இந்த நம்பர் வாங்கி ...இரண்டு மாதம் தான் ஆகிறது ..."
"சார், மேடம் ...மன்னிச்சுக்கங்க,,,இனிமே எஸ், எம் .எஸ் வராது..."என மன்னிப்பு கேட்க 
என் அருகில் இருந்த என் நண்பர் பாபு என்னை முறைத்தார்.அதனுடன்..."எஸ். எம் .எஸ் விளையாட்டு இல்லை ...தேவையில்லாம அனுப்பாத ...அன்னிக்கே சொன்னேன் ...இப்ப பர்தீய்யா ..ஈவ் டீசிங் ன்னு உள்ளே தூக்கி ...போடாம போனாலே.."என கூற ...என் அறியாமையை உணர்ந்தேன். ஆபத்தை புரிந்து கொண்டேன்.
   நண்பர்களே...!  மாதம் ஒரு முறை நம்மிடம் உள்ள செல் போன் நம்பர் ...அந்த நம்பர் அவருக்கு உரியது தான் என்று ...சரிபார்த்து கொள்ளுங்கள். அதுவும் எஸ்.எம்.எஸ் விசயத்தில் சற்று அதிக கவனம் தேவை. விளையாட்டு வினை ஆகிவிடும் ...கடவுள் புண்ணியத்தில் நானாவது பிழைத்து கொண்டேன்.

1 comment:

அன்புடன் அருணா said...

பாவம் சார்.... பசங்களுக்கு இப்பிடில்லாம் பேர் வைக்காதீங்க சார்!SMS அனுபவம் ஒரு பாடம்.

Post a Comment