Friday, July 16, 2010

ஆடி நம்பிக்கை ...!

         ஆடி  பிறந்தாச்சு இனி புதுமண தம்பதிகள் விருந்து என்ற பெயரில் பிரிப்பு நடக்கும் ...இது ஒன்றும் காலாச்சாரம் அல்லது நடைமுறை சம்பிராயம் அல்ல . இதுவும் ஒரு மூட நம்பிக்கை தான்.

         குழந்தை பிறப்பு  நம்பிக்கைகளில் இதுவும் ஒரு மூட நம்பிக்கை. குழந்தை கொடி சுற்றி பிறந்தால் வீட்டிற்கு ஆகாது. கழுத்தில் மாலை சுற்றி பிறந்தால் மாமனுக்கு ஆகாது. கர்ப்ப காலத்தில்  இரட்டை வாழைப்பழம் தின்றால் , இரட்டை குழந்தை பேற்றை தரும்.

      கரு உற்ற  தாய் கேட்பதை வாங்கி தராவிட்டால் , பிறக்கும் குழந்தைக்கு காதில் சீல் வடியும் . மாதவிலக்கு உள்ள பெண் குழந்தையை தொட்டால் குழந்தைக்கு பால் செரிக்காமல்  வந்தி எடுக்கும் . இரவில் முழங்காலையும் , கையையும் ஊன்றி படுக்கும் குழந்தை வீட்டில் ஆடு , மாடு நோய் பட்டு தங்காது.குழந்தை தலையில் இரட்டை சுழி இருந்தால் வீட்டுக்கு ஆகாது. ஆறு விரலுடன் பிறந்தால் அதிர்ஷ்டம் .


      நட்சத்திர பலன் தான் ஆடி தம்பதிகளை பிரிக்கிறது. மூல ,ஆயில்யம்  நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் பெண்ணாக இருந்தால் மாமியாருக்கு ஆகாது. (மாமியார் அம்மாவா மாறிட்ட எப்படி ஆகாது ). "உத்திரத்து தாலி உறியிலே " உத்திர நட்சத்திரத்தில் பிறக்கும் பெண் குழந்தை கணவனுக்கு ஆகாது. சித்திரை நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது குடும்பத்திற்கு ஆகாது .
.
   சித்திரை அப்பனுக்கு ஆகாது . ஆகவே ஆடியில் கலவி சித்திரையில் குழந்தை பிறப்பை தருமாதலால் ஆடி அழைப்பு நடைமுறை படுத்தப் பட்டு , விருந்தளிப்பு என்ற பெயரில் பிரிப்பு நடைபெறுகிறது . சித்திரையில் குழந்தை பேற்றை தடுக்கவே தாய் வீட்டு அழைப்பு ஆடியில்

 .
      கடையில்
ஆடித்  தள்ளுப்படி
ஆகுமே வீட்டிற்கு...!
  ஆகாதே வீட்டிற்கு ஆடி
 தள்ளிப் படு டி... !

     ஆடி பாடி சொல்லிட்டேன் ....நம்பிக்கை  வீணடிக்க விரும்பலை ...ஆகவே இன்னும் மாமியார் வீட்டு அழைப்பு இன்றே கிளம்பி விட்டேன். புது துணியாவது கிடைக்குமில்லை. கொஞ்சம் நிம்மதியும் கிடைக்குமில்லை.

2 comments:

http://rkguru.blogspot.com/ said...

ஆடி நம்பிக்கை தேடி......

Anonymous said...

கலக்கல் ஆசிரியரே

Post a Comment