Tuesday, March 16, 2010

8டாத அறிவு ..

கொல்கத்தா போறேன் ...
"அண்ணே ...நான் கொல்கத்தா போறேன்..."

"என்னடா...விஷயம்...?"

"அங்க பெரிய கம்பெனியில்ல வேலை கிடைச்சுருக்கு..."

"புது இடம்..கட்டாயம் போட்டி..., பொறாமை..அதிகமா தான் இருக்கும் ..சூழ்நிலைக்கு தக்க மாறிக்கணும்...அப்ப தான் மேலும் மேலும் வெற்றி பெற முடியும்..."

"என்ன அண்ணே சொல்லுறீங்க ...?"

"இப்ப அம்மை ஒருமுறை வந்தா ..மறுமுறை வதாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க...ஏன்னா ..அது நம்ம உலுக்கு போதுமான நோய் எதிர்ப்பு சக்திய கொடுத்து ..நிரந்தரமாக்கிடும்...அதுபோல நீ எந்த எதிர்ப்பு வந்தாலும் ..உன்னை காப்பாத்திக்க கத்துக்கணும் ..இல்ல எதிரி மாதிரியாவது நடிக்க கத்துக்கணும்..."

"விவரமா சொல்லுங்கண்ணே..."

"பெரியம்மை , டிப்திரிய்யா ,போலியோ,ராபீஸ் ,டெட்டனாஸ் ...கக்குவான் இருமல் ..(இருமி கொண்டே ..)போன்ற நோய்களுக்கு வேக்சிநேசன் செய்கிற மாதிரி ..."

"அது என்ன வாக்சிநேசன் ..."

"அப்ப சொன்ன வியாதிகளை உண்டாக்கிற ...வீரியமற்ற கிருமிகளை ..ஊசி மூலமாக நம்ம உடம்பில செலுத்தினா ...அந்த  நோயிக்கு எதிரான ...ஆண்டிபாடிஸ் உருவாக்கி ..நோய் வராம பாதுகாக்கலாம் ...புரிஞ்சதா ..."

"அதுக்கும் நான் ஊருக்கு போறதுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா..?"

"இருக்கு ..1680 ஆம் ஆண்டு ..இத்தாலியில..காஸ்திக் கிளியோனே ..என்ற சிறிய  ஊரில் பிறந்த கான்ஸ்டன்டைன் ஜோசப்பு பெஸ்க்கி என்பவர் 1709 ஆம் ஆண்டு குரு பட்டம் பெற்று ..1711   ஆம் ஆண்டு மேற்கு கடற்கரை யிலுள்ள  ..கோவா  வந்து இறங்கி ...கடைசியா.. மதுரை மிஷன் என்ற தலைமை நிலையம் உருவாக்கி நம்ம மதுரையில கத்தோலிக்க மதத்தை பரப்ப வந்தாரு ..."

"நம்ம வெள்ளைகாரங்க அப்ப நம்மளை ஆண்டாங்களா ...பறங்கிகள் மதம்ன்னு எசினாங்களே ..."


"கரக்டா ...சொன்னே ...ஆனா இவரு மட்டும் மதத்தை பரப்பினதுல வெற்றி பெற்றார் .."

"எப்படி அண்ணே ...?அது சரி இவரு யாரு..?"

"வரிசையா கேளு ..அவசரப்படாதே..."

"ம்ம்ம்"
"கி.பி. 1542 ல்ல போர்த்திகீசிய ..'புனித சவரியார் ' ஞான ஒளி ஊட்ட தமிழகம் வந்த வரலாறு 1606 ல்ல இத்தாலிய தத்துவ போதகரின்  திருமறை  தொண்டு போன்ற வரலாற்றை உன்னிப்பா கவனிச்சா  .."

"அண்ணே..இத்தாலிக்கும் ..தமிழகத்துக்கும் என்ன அண்ணே சம்பந்தம்..."

"புரியாத தன் பெயரை தமிழ் படுத்தினார்...'தைரிய நாதர் ' என்று பெயர வச்சாரு ...தமிழ் பயின்றாறு..ஈசியா நம்ம ஜானங்கள் மதம் மாற உதவினார் ..சாரி ...தன் மதத்தை பரப்பினார்..."

"யாருண்ணே இவரு...?"

"நம்ம பழனி 'சுப்புர தீபக் கவிராயரை ' ஆசிரியராக பெற்று ..'கூளப்பன் நாயக்கர் காதல் 'என்ற நூலை படைத்தவர் ...புரியுதா...?"

"புரியலை அண்ணே..."
"அட போப்பா ....கிருத்துவத்திற்க்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய வீரமா முனிவர் தான் ..அவரு தமிழ் மொழி கத்துகிட்ட மாதிரி நீயும் கொல்கத்தா மக்கள் பேசும் பெங்காலி மொழி கத்துகிட்டைன்னா...சீக்கிரமா முன்னுக்கு வரலாம்..."

"'புதியவனாக ஒரு நாட்டுக்கு போகும் போது ..அந்த நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள் கேட்டு தெரிந்து கொள் 'அப்படின்னு கான்பூசியஸ் சொன்ன மாதிரி ...மொழி கத்துக்க அறிவுரை சொன்னதற்கு நன்றி அண்ணே..."

"அது சரி ..நீ எந்த கம்பனிக்கு வேலைக்கு போற..சொல்லவே ..இல்லை ...?"

"நீங்க தான் சொல்லவிடாம பேசிகிட்டே ...இருக்கீங்க ..நிரோத் கம்பனிக்கு ..சேல்ஸ் மேனேஜர் .."

"இதுக்கு மொழி தேவையே இல்லை ...ம்ம்ம் உன் பெயரு மறந்து போச்சு ...?"

"தர்ம ராஜா ...அண்ணே.."

"நீ பெயர மாத்திக்கப்பா ..'புள்ளி ராஜா 'ன்னு..."

"!!!!"      
"

3 comments:

Paleo God said...

எங்கியோ ஆரம்பிச்சி எங்கியோ போய், புள்ளி ராஜாலவந்து ,,, ஹும்ம் என்னா வில்லத்தனம்..

:))))

புலவன் புலிகேசி said...

கடைசில புள்ளி ராஜாவாக்கிட்டீங்களே...

அன்புடன் மலிக்கா said...

என்னாமாதரி கலாய்கிறாங்கப்பா ம்ம்ம்ம் நடக்கட்டும்..

Post a Comment