Wednesday, March 17, 2010

8டாத அறிவு ..

கோக்கோ 
"என்ன பெரியவரே ...நான்கு நாளா..ஆளை காணாம்..?"

"அட ...அடிக்கிற ஊத காத்து...உடம்புக்கு சேர மாட்டீங்குது ..."

"அட நீங்க கோக்கோ மரம் மாதிரின்னு சொல்லுங்க  ..."

"அது என்ன கோக்கோ மாதிரி ..?"

"கோக்கோ மரம்   அதிகம் காத்து அடித்தா பட்டு போகும் ...இதற்கு பசுமையான மண் ,நீர் தேங்காத பூமியும் தேவை , அதனால தான் ....இலங்கையில ...கற்று வீச்சை தருக்கும் இயற்க்கை பாதுகாப்பான ...'டம்paரா' பள்ளதாக்கில பயிரிடுராங்க ...  "

"அட.. வாதுமை கொட்டை மாதிரி இருக்கும் ..ஓடு பழுப்பு நிறமாகவும் ...பருப்பு வெள்ளையாகவும் இருக்குமே...முந்திரி மாதிரி இதை வறுத்து ..ஓட்டை உடைத்து பருப்ப எடுப்பாங்களே ..அது தானே ..."

"ஆமா ..பெரிசு சரியா சொன்ன ...இது 'ஸ்ட்டோக்கூலியேஸி ' என்னும் இரட்டை விதை தாவரத்தை சேர்ந்த ...'தியோப்ரோமா 'வகையை சார்ந்தது..."

"அது என்னப்பா ...'தியோப்ரோமா '..."

"சரியா ..கேட்ட ..வகைப்பாட்டியலின் தந்தை ...'லின்னேயஸ்' தான் இந்த பெயரை வச்சாரு ...அதுக்கு ..'தெய்வ உணவு 'என்று அர்த்தம் ..."

"அப்ப ...கோக்கோ பானம், சாக்லேட், ஐஸ்கீரிம் ...எல்லாம் சாப்பிடலாம் .."

"நல்லா சாப்பிடலாம் ...இதுல பல விட்டமீன்கள் இருக்கு ...புரோட்டீன் 18 சதவீதம் ,கார்போஹைட்டிரேட் 40 சதவீதம் ,கொழுப்பு 27 சதவீதம்,தாதுப் பொருட்கள் 6 சதவீதம் இருக்கு ..."

"அதனால தான் இது புத்துணர்வு தருதா..!அது சரி இத கண்டுபிடிச்சவன் யாருப்பா...?"

"முதன் முதல்ல இந்த பொணத்தை மெக்சிகோ ...நாட்டினரே..தயாரிச்சு பருகினாங்க ...அதுக்கப்புறம்...அவங்கட்ட இருந்து ...ஸ்பெயின் நாட்டு காரன் ...கோக்கோ தயாரிக்க கற்று கொண்டு ..நூறு ஆண்டுகளாக ரகசியம்மாக வச்சிருந்தாங்க..அவுங்க தான் சாக்லேட் கண்டுபிடிச்சாங்க ...அப்புறம் இத்தாலி , பிரான்சு , ஜெர்மனி ன்னு எல்லாரும் தயாரிக்க கத்துகிட்டாங்க ..."

"ரெம்ப சந்தோசம் ...அப்ப நான் வரவா.."

"எனக்கே ...'சாம்புராணி 'புகை போடுற பார்த்தியா...?

""'சாம்புராணி'பத்தி கூட உனக்கு தெரியுமா...?"

"அத பத்தி எல்லாம் தெரியாது ..எப்பவும் போல ..."(என முடிப்பதற்குள் )

"தம்பி ...சாம்புராணி பல நோய்க்கு மருந்தா பயன்படுது ..."

"ஓ ...அப்படியா..!"

"சுமித்ரா.. ஜாவா வில் உயர்ந்து வளரும் ...'ஸ்டைராக்ஸ் பென்சோமான் 'என்ற மரத்தின் பட்டியில துளையிட்டு ..வெண்மையான பாலை எடுத்து ...உலர்த்தி ..சாம்பு ராணி பிசின் எடுக்கிறாங்க..."

"ஓ..!அப்படியா...?எதுக்கு வீட்ல தூபம் போடுறாங்க ...?"

"அதுவா..வீட்டில இருக்கிற விச பூச்சிகளை  அது கொள்ளக் கூடிய தன்மை வாய்ந்தது...அதனால தான் ..."(என முடிப்பதற்குள் )

"ஓ! அதுதான் உன்னை குளுப்பாட்டி தூபம் போடுறாங்களா....தொல்லை தாங்க முடியல போல."        

4 comments:

இளந்தென்றல் said...
This comment has been removed by the author.
தமிழ் மதுரம் said...

நல்ல எளிமையான உரையாடல் மூலம் அறிவியல் பூர்வமான தகவலைப் புரியவைக்கிறீர்கள்.
உங்களிடம் ஒரு கேள்வி.
புகைக்கிற பிராணி என்ன?

சசிகுமார் said...

//முதன் முதல்ல இந்த பொணத்தை மெக்சிகோ ...நாட்டினரே..தயாரிச்சு பருகினாங்க .//

நல்ல பதிவு நன்ப்பா, நண்பரே அது என்ன பொணமா இல்லை பாணமா

பத்மா said...

எப்போதும் போல அறிவூட்டல் .நன்று

Post a Comment