Thursday, June 17, 2010

அவள் ஒன்றும் அத்தனை அழகில்லை ...

  
அவள் தேவதை
வார்த்தைகள் தருவது அழகில்லை ...
அவள் உலக அழகி
பார்வையில் காண்பது அழகில்லை...
அவள் ரதி
ரசிப்பில் அழகில்லை .....
அவள் ஒன்றும் அத்தனை அழகில்லை
இருந்தாலும் மனசுக்கு  பிடிக்கிறது....
உள்ளத் தூய்மையில் இருக்கிறது அழகு .
இது ஆணுக்கும் பெண்ணுக்கும்
ஒன்றாக பொருந்தும் ...!
அழகு யாரிடம் இருந்தாலும்
தன்னம்பிக்கை தானாக பிரசுவிக்கும்
தன்முனைப்பு தானாக மறையும்
தடுமாற்றம் தலைதெறிக்க ஓடும்...
தரம் தன்னகத்தே கூடும்...
அழகு அழகு சேர்க்கும்
அன்பு ஊற்றெடுத்து பாயும்   
அறிவை பெருக்கும்
அழிவை தடுக்கும்

அழகுக்கு அழிவில்லை
அறிவுக்கு அளவில்லை
அழகும் அறிவும்
சேர்ந்து இருத்தல் தெயவிகமே ...!

8 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல அருமையான கவிதை.. நல்லாருக்கு சரவணன்.

பனித்துளி சங்கர் said...

அன்பு அதிகரித்து விட்டால் பார்ப்பது அனைத்தும் அழகாய்தான் தெரியும் . மிகவும் அழகானக் கவிதை . பகிர்வுக்கு நன்றி

Chitra said...

அழகுக்கு அழிவில்லை
அறிவுக்கு அளவில்லை
அழகும் அறிவும்
சேர்ந்து இருத்தல் தெயவிகமே ...!


....very nice!

AkashSankar said...

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...நனைந்தேன்...
அவள் ஒன்றும் அத்தனை அழகில்லை...மீண்டும் நனைந்தேன்...கவிதை மழையில்...

Riyas said...

ஆஹா அருமை சார்..

M. Azard (ADrockz) said...

//அழகுக்கு அழிவில்லை
அறிவுக்கு அளவில்லை
அழகும் அறிவும்
சேர்ந்து இருத்தல் தெயவிகமே ...//
பிரமாதம் :)

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு சரவணன்..

VELU.G said...

அருமையாக இருக்குங்க சரவணன்

வாழ்த்துக்கள்

Post a Comment