Wednesday, June 16, 2010

வார்த்தைகளின் அருமை ...

வார்த்தைகளின் வலிமை
பிரிவில் புரியும் ...
வார்த்தைகளின் அருமை
நட்பில் புரியும் ...
வார்த்தைகளின் கடுமை
வெறுப்பில் தான்  புரியும்
வார்த்தைகளின் மகிழ்ச்சி
பகிர்வில்   புரியும் ...
வார்த்தைகளின் சோகம்
வறுமையில் புரியும் ...
வார்த்தைகளின்    ஆறுதல்
வாடும் போது புரியும் ...
வார்த்தைகளின்    வெறுப்பு
மறுப்பில் புரியும் ...
வார்த்தைகளின்  நட்பு
கூடும் போது புரியும்...
வார்த்தைகளின் பிரிவு
மௌனத்தில் புரியும் ...
வார்த்தைகளின் மௌனம்
காதலில் புரியும்
வார்த்தைகளின் காதல்
தனிமையில் புரியும்
வார்த்தைகளின் தனிமை
பைத்தியமாய் இருப்பவரிடம் புரியும்
வார்த்தைகளின் இனிமை
வாழ்வை ரசிப்பதில் புரியும்
வார்த்தைகளின் ரசிப்பு
கவிதையில் புரியும்

வார்த்தைகளின் கவிதை
உங்கள் வாக்கில் புரியும் ....!    
வார்த்தைகளின் உண்மை
செயலில் புரியும்...
வார்த்தைகளின் பக்குவம்
அனுபவத்தில்  புரியும் ...
வார்த்தைகளின் பொய்மை
ஏமாற்றத்தில் புரியும் ...
வார்த்தைகளின் அவசியம்
மொழியின் வளர்ச்சில் புரியும் ...!

11 comments:

எப்பூடி.. said...

எழுத்தில் தெரிகிறது
உங்களின் கவிநயம், நன்றாக இருக்கிறது

ஹேமா said...

வார்த்தைகளின் அருமை உங்கள் கைகளின் தொகுப்பில்.அருமை சரவணன்.

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

அருமை அருமை - எண்ணம் மற்றும் கவிதை அருமை. சொல்லுக்கு இத்தனை முகங்களா - அததனையும் புரிய ஆயிரம் செயல்கள். தமிழ்ச் சொல்லின் வலிமை எளிதில் புரியாது. ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு சொல்லின் அருமை புரியும்.

நல்வாழ்த்துகள் சரவணன்
நட்புடன் சீனா

sathishsangkavi.blogspot.com said...

அழகான, அற்புதமான வரிகள்..

புலவன் புலிகேசி said...

நல்ல கவிதை வரிகள்.

elamthenral said...

வார்த்தைகளின் மதிப்பு உங்களுக்குதான் தெரிந்திருக்கிறது... அருமையான கவிதை.வாழ்த்துக்கள்....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வார்த்தைகளின் தொகுப்பு அருமை..

அன்புடன் நான் said...

வார்த்தைகளில் தெரிகிறது வாழ்க்கை..... பாராட்டுக்கள்.

Anonymous said...

அற்புதம் ,அருமை அதுதான் உங்க கவிதை ...இது போன்ற கவிதை படிக்க தந்த உங்கள்க்கு எனது மனமார்ந்த நன்றி

AkashSankar said...

அருமை அருமை அருமை....

சிநேகிதன் அக்பர் said...

அருமையான கருத்துக்களுடன் கூடிய கவிதை.

Post a Comment