Sunday, June 13, 2010

இரவினில் கனவில் ....

காலை பனித்துளிப் போல்
என் மனதில் புதிதாய்
பூத்தவளே .....
பெற்றோரின் சூரிய பார்வையில்
அன்றே மறைந்தவளே..

இரவினில் கனவின்
கருவாய்  பூக்கிறாய்
பகலினில் உதிர்கிறாய்
உதிரமாய் இருந்து
உயிரை உருட்டுகிறாய்....

காதலை சொல்லிவிடு
கனவினை வென்றுவிடு ...
மெல்ல என்னை கொன்று விடு
உன் வார்த்தையில் வதட்டி எடு ...

உன் சிரிப்பில்
சொர்க்கம் கண்டேன் ...
சொக்கி கொண்டேன் ...

உன் உதட்டினில் சாயம்
என் உதட்டினில் வரும் மாயம்
எப்போது என்றே...

இரவினில் கனவில் ....

என் இதயம்
ஜில் ஜில் என துடிக்கிறது
உன்  காலடி தடம்
என் இதயத்தில் பதித்ததனால்  
உன் கொலுசு ஒலியில்  துடிக்கிறது

உன் சிரிப்பினில் மகிழ்ந்தேன்
உன் பார்வையில் கவிழ்ந்தேன்
காதலை சொல்லிவிடு
என்னை அள்ளிஎடு ....

இரவினில் கனவில் ....


(திடீர்னு  சினிமாவில் பாட்டு எழுத கூப்பிட்ட மாதிரி கனவு ...நல்ல வேலை தப்பிச்சீங்க ...நிஜம் இல்லை )

8 comments:

AkashSankar said...

ஆரம்பிக்கும் போதே இது என்னடா கவிதை மாதிரி தெரியலையேனு நெனச்சேன்...கடைசி வரி பார்த்த போது தான் ஒ.. ஒ... சினிமா பாடல்...முயற்சி...வாழ்த்துக்கள்...

புலவன் புலிகேசி said...

அப்பாடா தப்பிச்சோமுடா....

calmmen said...

உங்கள் கவிதை மிக அருமை
என்னை தேடி வந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி

கண்ணாடியெல்லாம் போட்டு கலக்குறீங்க , உங்கள் புகைப்படம் அருமை

http://karurkirukkan.blogspot.com

vasu balaji said...

:)). இப்புடி கூட மி த எஸ்கேப்பு சொல்லலாமோ:))

ManA said...

கவிதை சூப்பர் !!உங்கள் கனவு நனவாக எமது வாழ்த்துக்கள் !

அன்புடன் நான் said...

நல்ல வேளை எழுத கூப்பிட்டது போலதான் கனவு.
இதே நடிக்க கூப்பிட்டிருந்தா???

அண்ணாமலை..!! said...

கடைசியில என்னா எஸ்கேப்பு!!
பயப்படாதீங்க வீட்டுல
அடி விழாது!

நீங்கதான் எழுதுனீங்கன்னு சொல்ல மாட்டேன்!
:)

சின்னப்பயல் said...

"இரவினில் கனவின்
கருவாய் பூக்கிறாய்
பகலினில் உதிர்கிறாய்
உதிரமாய் இருந்து
உயிரை உருட்டுகிறாய்...."

வைரமுத்துவின் தம்பியா..நீங்கள்..?
மிரட்டுகிறீரே,,, :-)

Post a Comment