Saturday, January 8, 2011

கவர்னர் உரையில் கல்வி

  தமிழக சட்டப்பேரவையின் கவர்னர் உரையில் இருபத்து நான்காவது குறிப்பில் நம் கல்வி முறையின் சாதனைகளை பற்றி தெரிவித்து இருப்பது தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பணிக்குக் கிடைத்த பாராட்டாகும். அப்துல் கலாம் சொல்வது போல நம் தொடக்கப்பள்ளி ஆச்சிரியர்கள் தான் வளமான பாரதத்திற்கு ஆதாரம். ஒவ்வொரு மனிதனின் வெற்றி அவன் சந்திக்கும் ஆசிரியரின் துண்டுதலின் பேரில் நடந்து இருக்கும்.  என் வாழ்வு மதுரை தூய மரியன்னை பள்ளியில் முடிவு செய்யப்பட்டது.   கல்லூரி நாட்களில் அமெரிக்கன் கல்லூரியின் விலங்கியல் துறையின் சைலஸ் மற்றும் நம் தருமி என்னை மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.  தமிழின் மீது பற்றும் , தமிழில் கதை எழுத தூண்டியவர்கள் தமிழ் துறையின் பிரபாகர் மற்றும் சுந்தர் ஆவார்கள். சுந்தர் அவர்களின் நாடகப்பட்டறையில் இருந்து வந்தவன் என்பதால் இன்றும் என்னால் இயல்பாக நடிக்க முடியும் . எந்த கருப்பொருளையும் நாடக வடிவிற்கு  கொண்டு வர முடியும்.

    கல்லூரி வாழ்விலும் , பள்ளி வாழ்விலும் என் ஆசிரியர்கள் என்னுடன் ஒரு நண்பனைப் போல ஒரு உணர்வை ஏற்படுத்தியதால் இன்று இளம் வயதில் ஒரு நல்ல நிலையை கொண்டுள்ள  தலைமைப் பண்பை பெற்று உள்ளேன் . எனக்கு சகிப்புத் தன்மை ஏற்படுத்திய என் பள்ளி நாட்களை மறக்க முடியாது.

       பிளாக்கர் உலகில் சீனா அய்யா போன்ற  அன்பு உள்ளங்களை அடைந்துள்ளேன்.,அவரின் உயர்ந்த பதவியை மறந்த எளிமை, அடக்கம் , அனைவருடனும் ஒரு சகோதரனை போன்று உணர்வுடன் பழகும் தன்மை, வேலைப்பளுவிலும் இயல்பு தன்மை மாறாமல் சிரித்து பேசும் இயல்பு , என்னை ஒரு புதிய உலகிற்கு அழைத்து , என் ஆசிரியர்களுடன்   ஏற்படும் அணுகுமுறையினை மாற்றி , ஒரு நல்ல பள்ளிக்கான சுழலை மேலும் மேம்படுத்த கற்றுத் தந்தது.

   கவர்னர் உரையில் உள்ளது ....
2008 -2009 ல் தேசிய கல்வி திட்டமிடுதல் மற்றும் நிவாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பள்ளிக் கல்வியில் தரத்தைக் குறிப்பிடும் தரக் குறியீட்டில் தமிழகம் இந்தியா அளவில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. 


     இது துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைத்த ஒரு பாராட்டு ஆகும். தமிழகத்தின் வருங்காலம் நல்லப் பாதையில் செல்கிறது என்பதற்கு இது ஒரு தொடக்கம்
 

         தொடக்கக் கல்வியில் இடைநிற்றல் 2004 -  2005 ல் 3.81 சதவிதமாக இருந்தது ,கடந்த ஆண்டில் ஒரு சதவீதமாக குறைந்துள்ளது. அதேப்போல    2004 -  2005 ல் இடைநிலைக் கல்வியில் இடை நிற்றல் 7.59 சதவீதமாக இருந்தது இந்த ஆண்டில் 1.79 ஆக குறைந்துள்ளது .

    இது பள்ளிகளில் போதனை முறை மாணவர்களை மையம் கொண்டதாக மாறியதன் விளைவாகும் . செயல் வழிக் கற்றல் மாணவர்களை பள்ளியை விட்டு ஓடுவதை தவிர்த்து , பள்ளியினை தேடி வரச் செய்துள்ளது என்பதற்கான சான்றாகும். ஆசிரியைகளும் தம் போதனை முறையை மாற்றி சாதனை முறையை நோக்கி தமிழக கல்வி துறையை அழைத்துச் செல்வதற்கான மைல் கல்லாகும். 


    தேசிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2008 ஆய்வின் படி ,கணிதம்,
மொழித்திறன் படங்களில் மாணவர்களின் திறன் தமிழ் நாட்டில் தான் முதல் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
  
    இது நம் முதன்மை கல்வி அதிகாரிகள் , மாவட்டக் கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், மாவட்டத் திட்ட இயக்குனர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுனர், பள்ளி ஆசிரியர்களின் கடின கூட்டு உழைப்பிற்கு கிடைத்த பரிசாகும்.   


       இத்தனை சாதனைகளையும் தம் கவர்னை உரையில் வெளிப்படுத்தியுள்ள  அரசு ஆசிரியர்களின் சம்பள விஷயமான மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தினை கொடுக்க மறுப்பதேன் ?  அதுவும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகவும் குறைந்த நிலையில் அதிக வித்தியாசத்தில் ஊதியம் நிர்ணயித்துள்ளது மாற்றப்படுமா..? நீங்கள் கொடுத்துள்ள குறைந்த ஊதிய உயர்வை மகிழ்ச்சியாக ஏற்று நன்றி தெரிவித்து இருந்தாலும் , அது அரசை இன்னும் ஆசிரியர்கள் மனப் பக்குவத்தை உணர்ந்து , மத்திய அரசுக்கு இணையான ஊதியம் ஏற்படுத்த ஒரு துண்டுகோள் என்பதை உணர்ந்து விரைவில் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் என்று நம்புவோம்.

   செயல் வழிக் கல்வி மாணவர்களிடம் தன்னம்பிக்கையையும் , கற்கும் திறனையும் அதிகரித்துள்ளது என்பதை அரசு தன் கவர்னர் உரையில் வெளிப்படுத்தி , தமிழக ஆசிரியர்களின் செயலுக்கு ஒரு அங்கீகாரத்தினைத்   தந்துள்ளது.

3 comments:

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி !

Tamil Home Recipes said...

வெகு அருமை

cheena (சீனா) said...

ஆகா என்னைப்பற்றியும் இதில் எழுதி உள்ளீர்களா .... ம்ம்ம்ம் - சரி சரி - நல்வாழ்த்துகள் சரவணன் - நட்புடன் சீனா

Post a Comment