Wednesday, April 14, 2010

சித்திரையே வா! வா!

தமிழன் வாழ்வை
சிறப்பிக்க வரும்
சித்திரையே...வா !வா!
சுட்டு வரும் சித்திரையே  
மனிதன் சுயநலத்தை
சுட்டு பொசுக்கி செல் !
மனித மனதில்
சத்தியம்,பொறுமை
கருணை ,தானம்
தைரியம் என
உரமிட்டு செல் !
அக்கினி கரங்களால்
அகங்காரம் , ஆணவம்
போன்றவற்றை  பொசுக்கி செல் !
அன்பெனும் பண்பை
விழாக்களில் உணர்த்திவிட்டு செல் !

3 comments:

Twilight Sense said...

"அன்பெனும் பண்பை
விழாக்களில் உணர்த்திவிட்டு செல் ! "

அருமை சகோதரா..

தோழி said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

நீச்சல்காரன் said...

கவிதை அழகு
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post a Comment