Sunday, April 18, 2010

8டாத அறிவு ..

”என்னப்பா மிகவும் சந்தோசமாக இருக்க....எதுவும் விசேசமா....?”

“ஆமாம் சார்....இன்னைக்கு முதன் முதலா இந்த கம்பெனியில சேலரி வாங்கி இருக்கேன்”

“ரெம்ப சந்தோசம் ...இந்த சேலரி என்கிற வார்த்தை உப்பிலிருந்து உருவானது...தெரியுமா?”

“உப்புக்கும் சேலரிக்கும் என்ன சார் சம்பந்தம்....?”

“ரோமானியர் காலத்தில் பணியாளர்களுக்கும் ,இராணுவ வீரர்களுக்கும் உப்புக்காக salarium என்று அழைக்கப்பட்ட ஊதியப்படி வழங்கப்பட்டது. அதிலிருந்து ...சேலரி என்ற வார்த்தை உருவாக்கப் பட்டது. “

“உப்பு பத்தி சொல்லுகிறதனால உங்களுக்கு கடல் சார்ந்த ஊராகத்தான் இருக்கும்...”

“சரி...தான் ...இராமேஸ்வரம் ...என் ஊர்..”

“என்ன சார்...சும்மா இராமேஸ்வரம் அப்படின்னு சொன்னா...”

“அது ஒரு தீவு ...பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ...இராமநாதசுவாமிகள் கோவில் தான் தீவின் கிழக்கு பகுதியில் உள்ளது...இக்கோவிலில் ஆயிரத்து இருநூறு தூண்கள் உள்ளன ....”

“அப்புறம் சார்...இலங்கை செல்ல இராமனால் கட்டப்பட்ட ஆதம் பாலம் பத்தி சொல்லல...”

“சொல்லுகிறேன்....உலகிலேயே...நீண்ட பிரகாரம் உடைய கோவில் கட்டிடம் இது தான்..இக் கோவிலில் 22 புனித நீர்க்கிணறுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வெறு சுவைகளை உடையவை...”

“நானும் அங்கு ....குளித்திருக்கிறேன்...சார்...”

“நீ கேட்டீயே...ஆதம் பாலம்..அது பாக் நீரிணையில் ...முப்பது கிமீ நீளமுள்ள ..மணல் திட்டாகும் ...இது ராமன் சீதையை மீட்க கட்டியது எனவும் நம்பப்படுகிறது...தனுஷ்கோடி ...”

“சார்..இராமனின் வில்லின் பெயர் சரிதானே...”

“ஆமாம்...1964 வங்கக்கடலில் உருவான புயலில் ...இராமேஷ்வரத்தின் ....கிழக்கு முனையில் உள்ள தனுஷ்கோடியின் ...கோதண்ட சுவாமிக் கோயிலைத் தவிர அனைத்து பகுதியும் புயலில் அழிந்தன...”

”சார்..நிறைய விவரங்கள்...சொல்லுறீங்க...திருப்புல்லாணி...பத்தி...”

“அங்கு தான்...இராமன் ...இராவணனை எதிர்க்க வில்லும் அம்பும் இறைவனிடம் பெற்றத் தலம் ...அங்கு தர்ப்பை புற்கள் நிறைந்த இடம் என்பதால் திருபுல்லாணி என்றும் கூறப்பட்டது..”

“சார்...தகவலுக்கு ரெம்ப நன்றி ....இராமேஸ்வரம் சுற்றிப்பார்த்த ஒரு அனுபவம் உங்கள் பேச்சில்

No comments:

Post a Comment