Monday, February 21, 2011

மழை

    காசி தன் பைக்கை உதைத்தான். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தன் சித்தி பையனின் உடல் நலம் விசாரிக்க ஒரு மணி நேரம் பெர்மிஷன் போட்டுக் கிளம்பினான். இதுவரை இரவில் குளிரும் , பகலில் வெயிலும் வாட்டிய மதுரை இன்று ஒரு வித மப்புடன் மேகங்கள் சூழ மழைவருவதற்கான அறிகுறியைக் காட்டியது.

    நாம வெளியக் கிளம்பினாத்தான் இந்த மழை எழவு வரும்.. என முணங்கிக் கொண்டே பைக்கை உறுமிக் கிளம்பினான். காசி சிம்மக்கல் அருகில் உள்ள தனியார் செல்போன் விற்பனைக்கடையில் வேலைப்பார்த்து வந்தான். அவன் அங்கு வேலைக்கு வந்து ஒரு வருடமாகும். அதற்குள் அவனுடன் வேலைப்பார்த்த நான்கு நபர்கள் பணி மாறுதல் ஆகி , அதே நிறுவனத்தின் வெவ்வேறுக் கிளைகளுக்கு சென்று விட்டனர். தற்சமயம் இவனுடன் சேர்த்து நான்கு ஆண்களும் , ஆறு பெண்களும் பணிப்புரிகின்றனர். அவர்களுக்கு இப்போது மேனேஜராக ரதி வந்துள்ளாள். வெகுளி , எதற்கெடுத்தாலும் காசியையே அழைத்து வேலை வாங்குவாள்.  அங்கு இருக்கும் பாலா, வடிவேலு, குமார் என இவர்களை எந்த வேலையும் ஏவுவது இல்லை. வெளியில் சென்று கஷ்டமரை பார்க்க , பால்ட் பார்க்க காசியைத் தான் அனுப்புவாள். அவனும் எதற்கெடுத்தாலும் தலையை ஆட்டிக் கொண்டு பார்ப்பான். காசி அவர்களில் இளையவன் என்பதாலும் தற்போது தான் பணியில் சேர்ந்தவன் என்பாத்லும் அவனை வேலை வாங்குவது அவளுக்கு மிகவும் எளிது. மற்றவர்கள் அனைவரும் மூன்று வருடம் அனுபவம் வாய்ந்தவர்கள்.

      மழை பிடிக்க ஆரம்பித்தது. இரண்டு மாதங்களாக மழைப் பார்த்திராத பூமி ஆன்ந்தமாக அதன் துளிகளை உள் வாங்கிக் கொண்டது. சனியன் பிடிச்ச மழை வேலையைக் கெடுக்க வந்திருச்சு ... என திட்டிக் கொண்டே ,தன் செல்போன் நனையாதப்படி , தன் பைக்கில் வைத்திருந்த கேரி பேக் எடுத்து சுற்றி வைத்துக் கொண்டு , கோரிப்பாளையம் போஸ்டாப் அருகில் உள்ள வசந்தம் ஹோட்டல் முன் போடப்பட்டுள்ள பந்தலில் நின்றான். எதிரில் உள்ள சிக்னலை வேடிக்கைப்பார்க்க ஆரம்பித்தான். மழை வலுத்தது. மழைத்துளிகள் பெரிது பெரிதாக பெய்யத் துவங்கின.  சிக்னல் நான்கு பக்கமும் சிவப்பு விளக்கு எரிய , டிராபிக் போலீஸ் போஸ்ட் ஆபிஸ்க்குள் மழைக்கு ஒதுங்கினார்.

     பைக்குகள் பறந்தன. இருபுறமும் பஸ்கள்,கார்கள் , ஆட்டோ ரிக் ஷாக்கள் தண்ணீரை வாறி இறைத்துப் பறந்தன. வேகமாக வந்த பல்சர் சர் என்று பிரேக் அடித்து , வட்டமிட்டு ஹோட்டல் முன் நின்றது. இறங்கியவன் தொப் தொப் என  நனைந்திருந்தான். முகத்தை துடைத்தப்போது தான் தெரிந்தது. “டேய், அசோக் எப்படிடா இருக்கே?” எனக் காசி நலம் விசாரிக்கத் தொடங்கினான்.” சிம்மக்கல் வரை மழையில்லடா.... பாலம் தாண்டி வந்த பின்னாடித் தான் மழை சோ வெனக் கொட்டுது.. ”என புலம்பினான் அசோக்.” சரி வா உள்ளேப் போய் ஒரு காபி சாப்பிடுவேம் ”என காசி அழைக்க இருவரும் உள்ளே சென்றனர்.

   ” டேய் ...நம்ம குமார் எப்படிடா இருக்கான்..எப்படிடா ஆபிஸ் இருக்கு ... “
“அத எண்டா கேட்கிற .. குமார் எப்பவும் போல ராஜியோட பேசிகிட்டேத் தான் இருப்பான்... ஆபிஸ் முடிஞ்சது இரண்டு பேரும் ...யூகோ பார்க் போய் லூட்டி அடிச்சுட்டு தான் வீட்டுக்கு ...”

“டேய் ... ஏண்டா தப்பாவே நினைக்கிற... அவளுக்கு திருமணமாகிட்டது..அவள போய் தப்பா ..”

“ நிறுத்து.. அவ புருசன் தான் சிவகாசியில வேலைப்பார்க்கிறான் ...வாரம் ஒரு முறைத்தான் வருவானாம்.. இவன் பைக்கில ஏத்திப்போறதும்,அவள வீட்டில விடுறதும்., காலையில சேர்ந்து வரதும்..”

“இங்க இருந்து நீ தப்பிச்சுப்போயிட்ட .. நீ இருக்கும் போது நம்மல சாப்பிட அனுப்பிட்டு கல்லால ஒக்காந்து கடலைப்போடலை... அப்புறமா... இரண்டு பேரும் .. தோளில தட்டி விளையாடலை... “

” வேலை பார்க்கிற இடத்தில. .. இதெல்லாம் சகஜம்டா.. காசி நீ அவங்க மாதிரி பேச பிடிக்கலைன்னா .. விட்டிடு...அத விட்டு இப்படி சொல்லாதடா..”

“போன வாரம் .... குமார் அந்த ஒல்லி பாச்சா சுஜாவை பைக்கில உட்கார வச்சு .. அவ வீட்டுக்கு கூட்டிப் போயிருக்கான்.. அன்னைக்கு நைட் புல்லா அவ வீட்டிலையே படுத்திருக்கான்.. விசயம் ராஜிக்கு தெரிய.. இருவரும் பேசுவது கிடையாது... அப்பாடா இவங்க சண்டை ஓய்ந்தது.....இனி நல்ல வேலைப் பார்ப்பாங்க சேல்ஸ் அதிகமாகும் என நினைச்சேன் ”

“நம்ப முடியலைடா.. அவளுக்கு தான் புருசன் டைவர்ஸ் ஆயிடுச்சுல்ல...”

“ ஆமா... இதக் கேளு .. மதியம் பார்த்தா.. ராஜி மடியில .படுத்து .. இந்த சுஜா ஒப்பாரி வச்சு அழுதுகிட்டு .. அக்கா இனி குமாரக் கூட்டிட்டுப்போகல... அப்படித் தேவைன்னா என் கிட்ட பெர்மிசன் வாங்கி கூட்டிகிட்டு போன்னு டீல் பண்ணிக் கிட்டாங்க... இப்ப இந்த சுஜா.. வடிவேலுகிட்ட லுக் விட்டு , அவனோட தினம் பைக்கில சுத்துது..”

“......ம்ம்ம்ம்”

“ அத விடக் கொடுமை.. ஒரு நாள் மதியம் ...மழை இதே மாதிரி திடீர்ன்னு பெய்ய... இருவரும் குடையை பிடித்து சாப்பாட்டுக்கு வடை வாங்கச் சென்றனர். இரண்டு நிமிடத்தில் மழை நிற்க.. இவர்கள் இருவர் மட்டும் குடையைப் பிடித்து நடந்து சென்றதை அதுவும் அதுவும் உரச நடந்து சென்றதை நம்ம புது மேனேஜர் அம்மா பார்த்து என்னிடம் சொல்லி சிரிக்குது தெரியுமா..”

இன்னும் சிக்னல் .. சிவப்பு விளக்கிலே இருக்க.மழை முன்பை விட வேகமாகப் பெய்யத் தொடங்கியது. இப்போது மழைக்கு வாகனங்கள் மிகவும் நிதானமாக சென்றன. இருப்பினும் சாலையில் ஓடும் மழைநீரை ,வாகனங்கள் மழைக்கு ஒதுங்கியுள்ள அனைவர் மீதும்தெறிக்கத் தான் செய்தது. 

8 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

மொத ஆளா வந்துட்டோம்ல! எப்புடி?

தமிழ்வாசி பிரகாஷ் said...

வெயில் காலத்தில் ஒரு மழை கதை...அருமை

ம.தி.சுதா said...

ஃஃஃஃசனியன் பிடிச்ச மழை வேலையைக் கெடுக்க வந்திருச்சு ...ஃஃஃஃ

ஆமாங்க உண்மையாவே இப்ப மழை வந்ததால தான் உங்க புளொக்கில நிக்கிறன்.. நல்லாயிருக்குங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தழிழனால் முடிந்தது (இலகு தட்டச்சு உதவி)

shanmugavel said...

நல்ல நடையும்,கதையும் மதுரை சரவணன்,வாந்த்துக்கள்

Kandumany Veluppillai Rudra said...

குட்டிக்கதை,அருமை

ஆர்வா said...

நல்ல கதை...உணர்வு மழை பொழிகிறது

MANO நாஞ்சில் மனோ said...

சிறு கதை நல்லா இருக்கு சரவணன்...

மோகன்ஜி said...

இன்னும் மனதில் சாரல் அடிக்கிறது. அருமை

Post a Comment