Saturday, April 17, 2010

எட்டாத அறிவு

”என்னப்பா...இது கையில.....”

“என் இதயம் சார்....”

“ஓ!காதல் கடிதமா...?”

“ஆமாம் சார்...என் இதயத்தை எக்ஸ்ரே எடுத்து ....இதுல வச்சிக்கிறேன்...”

“தம்பி ...நீ நினைத்தாலும் இதயத்தை எக்ஸ்ரே...எடுக்க முடியாது...”

“அப்படியா...!அதாவது என் இதயம் எவ்வளவு பெரிசு என்பதை அவளுக்கு புரிய வைக்க்க...எழுதி இருக்கேன்..”

“ஆமாம் ...உன் இதயம் பெரிசு தான் ...”

“எப்படி சார்...என் கடிதத்தைப் படிக்காமலே...நீங்க...!”

“அது இல்லத்தம்பி...ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் பதினைந்து சதவீதம் சிறியது....அதத்தான் சொன்னேன்..”

“சார்...என் காதல் உங்களுக்கு சிரிப்பா இருக்கு ...என் இதயத் துடிப்பே ...அவள் தான்..பாருங்க அவள பத்தி நினைத்தா இதயம் எவ்வளவு வேகமா துடிக்குது”

“தம்பி..சுண்டெலியின் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு இருநூறு முறை துடிக்குது...அதுக்காக அதுக்கு காதல் அதிகம் அப்படின்னு சொல்ல முடியுமா..?யானை ஒரு நிமிடத்திற்கு ஐந்து முறை துடிக்குது...இதயம் வேகமா துடிக்காததனால அதற்க்கு காதல் வாராதா...?”

“சார்...இப்ப என்னத்தான் சொல்ல வரீங்க...என்ன சொன்னாலும் என் காதல் உண்மையானது...”

“அது சரி யானை காது போல உன் காதல் இருக்கட்டும்..”

“அது என்ன சார் ...என் காதலுக்கும் யானையின் காதுக்கும் முடிச்சுப் போடுறீங்க..”

“அதாவது யானை தொடர்ந்து முப்பது நிமிடங்களுக்கு காதை அசைப்பதை நிறுத்தி விட்டால் , அது இறந்து விடும் அது போல உன் காதல் தொடர்ந்து முப்பது நாட்கள் தொடர்பு இல்லாமல் போனால் இறந்து விடும்....இப்போது உள்ளது போல் ...என்றும் அவள் நினைவாய் இரு ...நிச்சயம் வெற்றி பெறும்....”

“!!!”

3 comments:

Ananya Mahadevan said...

Smart! :)

ஸ்ரீராம். said...

ada...!

தருமி said...

//காதலுக்கும் யானையின் காதுக்கும் முடிச்சு...//


நல்லா இருக்கே .....

Post a Comment