Sunday, April 11, 2010

அற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும் 3

"அப்பா ! நான் போயிட்டு வரேன்..." என்ற மதுவின் கைகளில் புது லஞ்ச் பாக்ஸ் .
"சமத்தா ...யாரையும் அடிக்காம ....டீச்சர் சொல்லித்தராத படிக்கணும்..."
"அப்பா ...எப்ப பார்த்தாலும் நானே அடிக்கிறேன்னு ...நீயும் டீச்சர் மாதிரி பேசுற...தப்பு செய்கிறவன டீச்சர் தண்டிகாதனால ...எனக்கு கோபம் வந்து நானே அடிச்சுபிடுறேன்.."
"பார்த்தாயா செல்லம் மீண்டும் கோபம் வருகிறது...லஞ்ச் பாக்ஸ் வாங்கி கொடுத்து அப்பா என்ன சொன்னேன்...?சமத்தா கோபப் படாம ...டீச்சர் அடிக்களைனாலும் உன் நியாத்தை எடுத்து சொல்லு ....கோபம் வந்தா புது வாட்டர் கேன் தண்ணீரை மடக் மடக் குன்னு குடிச்சுடு ....கோபம் தன்னால போயிடும்...."
"இப்படி குடிச்சா...தண்ணீர் தான் தீர்ந்து போகும்...."
"தண்ணீர் தீர்ந்து போனா ....ஒன்ணு ,இரண்டுன்னு ...எண்ணு...கோபம் தன்னால குறைந்து போகும்"
"சரி ...டாட் ....போயிட்டு வாங்க..."என புதிய பென்ஸ் காரில் அமர்ந்து இருந்த தந்தைக்கு டாட்ட காட்டினால்.

"என்ன மது....புது லஞ்ச் பாக்ஸ் கொண்டு வந்திருக்க..சாப்பாடு பத்தலையா.."என்ற ராமசாமி .
"டேய் , எனக்கு கோபம் வந்துச்சு ....அடிச்சு புடுவேன்..தினம் என் லஞ்ச்ச சாப்பிட்டு ...நக்கலா பண்ணுறே...."
"என்னமோ...வித விதமா சமைச்சு வந்து ..நீயா கொடுக்கிற மாதிரியில்ல போசிகிற....டீச்சருக்கு தெரியாம திருடி தின்னுறது...எவ்வளவு ரிஸ்க் தெரியுமா...?" என்று மாரிமுத்துவும் சேர்ந்து கொண்டு மதுவை கோபமுட்டினர்  .
"ஒன்ணு ,இரண்டு..." என எண்ணிக் கொண்டே...வகுப்பறையில் லஞ்ச் பாக்ஸ் வைத்து விட்டு இருக்கையில் அமர்ந்தாள்.

ஆசிரியர் தருணா ...வகுப்பிற்குள் நுழைந்தார். அமைதியானவர். தவறுகளை கேட்பதே...கிடையாது.வகுப்பில் சேட்டை யார் செய்தாலும் அவர்களை கம்பை எடுத்து பிளந்து கட்டிவிடுவார். எந்த விசாரணையும் கிடையாது. மது நிறையா தடவை ....அடிவாங்கி இருக்கிறாள் . ராமசாமி அவளின் லஞ்ச் பாக்ஸ் திருடி ...டிபனை ...திறந்து வைத்து விடுவர்....போர்டில் எழுதிபோட்டு திரும்பும் தருணா...மது உன் லஞ்ச் திறந்து கிடக்கு ...பாடம் நடத்தும் போது திண்ணாக் கூடாது தெரியுமில்ல ..கையை நீட்டு ...." என பின்னி எடுத்து விடுவார். மதிய லஞ்ச் பிரேக்கில் ....மது அவர்களை தன் இடக் கையால் அறைந்து ....மீண்டும் அடி பெற்று தலைமை ஆசிரியர் அறை வரை செல்வாள்.

கணக்கு பாடம் நடந்தது.....வழக்கம் போல் ராம சாமி ..டிபனை திறந்து....பணியாரத்தை சாப்பிட ஆரம்பித்தான் . மது பார்த்து விட்டாள். டீச்சர் பார்த்தால் தான் அடி வாங்க வேண்டும். கோபப் பட்டாள் தந்தை தன்னை தண்டிப்பார். டீச்சர் பார்க்கும் முன் அவளே சென்று லஞ்ச்சை முடி விட்டாள்.இருப்பினும் ஆசிரியர் தருணா...பார்வையில் பட்டு விட்டார்..."எத்தனை தடவ...டீச்சர் நான் பாடம் நடத்தும் போது ....லஞ்ச்  பாக்ஸ் ...திறக்க மாட்டேன்னு...பொய் சொல்லி இருப்ப...பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் கதையா ..இன்னைக்கு நீ லஞ்ச் பாக்ஸ் திறக்கிறதுக்கு முன்னால மாட்டிகிட்ட....நீட்டு கையை "
" மிஸ் ....இல்லை மிஸ் நான் முடிவைக்க தான் போனேன் நீங்க தப்ப புரிஞ்ச கிட்டீங்க ...விசாரிச்சு கிட்டு ...அடிங்க மிஸ்...ராம சாமி தான் மிஸ் என் பணியாரத்தை ..திருடி சாப்பிட்டான்...இப்ப என்னடானா...நான் அடிவாங்க வேண்டிகிடக்கு ...அவன் வாயை ஊதா சொல்லுங்க மிஸ்....பணியாற வாடை அடிக்கும்...."
" நான் கண்ணாலே பார்த்தப்பவே .... நீ ஒத்துக்க மாட்டேன்கிற ...இதுல அவனை வேற ...நான் ஊதி பார்க்கனுமா...! நீட்டு கையை...."
(அடியை தாங்கி கொள்கிறாள்...அழுது கொண்டு ...பாடத்தை கவனிக்கிறாள். கோபம் வருகிறது...)
மனதில் ஒன்ணு , இரண்டு , மூன்று ...என எண்ணிக் கொண்டே ...ராம சாமியின் பேனாவை பார்க்கிறாள்.
அருகில் இருந்த மாரி முத்து ...."மிஸ் இந்த கணக்கு சரியா..." எனக் கூறிக் கொண்டே ...மிஸ் சை நோக்கி ஓட..கால் தடுமாறி ராம சாமியின் மீது விழுந்து விடுகிறான்.
"மிஸ் ...என் பேனாவை உடைத்து விட்டான் மிஸ்...."
"சரி விடுடா தெரியாம விழுந்துட்டான்....""மிஸ் நான் அவன் கால் தடுக்கி தான் மிஸ் விழுந்தேன் அவன் பேனா மேல வில்லை மிஸ்... ஓட்ட பேனாவை காட்டி உங்கள எமாத்துகிறான் ...மிஸ்...." "மிஸ்....அவன் கலையில தான் புது பேனா...வாங்கினான் மிஸ் நான் பார்த்தேன்...."என்றால் விமலா. " சரி...விடு ...உனக்கு பேனா தானே வேணும்....இந்தா ...எழுத்து..." என தன்னிடம் உள்ள பேனாவை கொடுத்தாள்ஆசிரியை தருணா.
மதியம் உணவு இடை வேளை....அனைவரும் உணவருந்தினர். மதுவுக்கு மட்டும் கோபம் இன்னும் தனிய வில்லை. எந்த தவறும் செய்யாமல் தண்டனை பெற்று தந்தா ராமசாமி மீது இன்னும் கோபமாகவே இருந்தாள். "மது....பாவம் நீ....தேவையில்லாம வாரத்தில இரண்டு மூன்று முறை அடி வாங்க விட்டுறாங்க ...ராம சாமியை நம்ம குரு சார் கிட்ட சொல்லி கொடுப்போம் "...என ஆறுதல் சொன்னாள் அமலா . "முஞ்சியை பாரு ...திருட்டு பைய ...எப்படி சிரிச்சுகிட்டே...சாப்பிடுகிறான்...இதுல ஸ்பூன் வேறு..." என விமலா உசுப்பேற்றி விட்டாள்.
கண்ணில் கோபமுடன் ...மனதில் ஒன்ணு..இரண்டு.. மூன்று என எண்ணிக் கொண்டே ...ஸ்பூன்..மீது பார்வை செலுத்தினாள்.
"டேய்...என்னாடா ...ஸ்பூன் வளையுது ....டேய் ...பயமா இருக்குடா...." என்றான்ராம சாமி.
"டேய்...அப்பவே...சொன்னேன்..நான் பேனாவை ஓடைக்கலன்னு....நீ நம்பள...இப்ப ஸ்பூன் வளைகிறது...." மாரி முத்து.
மது .....ஸ்பூன் மீது பார்வையை அகற்ற ...ஸ்பூன் வளைவது...நின்றது.
                                                                                                 .... அற்புதம் தொடரும்.

4 comments:

பத்மா said...

அய்யோ!

Kandumany Veluppillai Rudra said...

நானும் இப்படி,ஆற்றல் உள்ளவர்களின்,விபரங்களைப் படித்துள்ளேன்,தொடருங்கள்,நன்றாக இருக்கிறது.

Aba said...

ஆமாம்.. நானும் படித்துள்ளேன்... அடுத்த பாகத்தை சீக்கிரம் எழுதுங்கள்....

Balamurugan said...

கதை நன்றாக இருக்கிறது. விரைவாக தொடருங்கள்.

Post a Comment