Saturday, January 16, 2010

மனதை அறி!

"மனம் போன  போக்கெல்லாம் போக வேண்டாம்" -உலக நாதன்.

"உன்னையே நீ அறிவாய்"-சாக்ரடீஸ்.

"மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்"-திருமூலர்.


        மனம் மனதை அறிவதுதான் ஞானத்தின் உச்சம்.
 
        ஒவ்வொரு பொருட்களும் அணுக்களால் ஆனவை. அவை நடுவில் நியூட்ரான் ,புரோட்டான் நேர் மின் சுமைக் கொண்டு தன்னை சுற்றி எலக்ட்ரான் என்ற எதிர் மின் அணுக்களால் பிணைக்கப்பட்டுள்ளன. நேர், எதிர் சுமைத் துகள்கள் சமம் பெற்று நிலைத்தன்மை பெற்றுள்ளன .  
 
      இந்த அறிவியல் உண்மையிலிருந்து மனதை விளக்குவோம். இவ்வாறு மனம் நிலைப்புத் தன்மை  கொண்ட அணு நிலையில் இருந்தால் , கெட்டுப்போகும்.  எந்த  ஒரு பொருளும் அப்படியே இருந்தால் கெட்டுபோகும் , அதேபோலத்தான் மனதும். 
      
       நேர், எதிர் மின் சுமைகள் சமமில்லை எனில் அவை தேவையான துகளைபெற முயன்று இயக்க முயற்சி கொள்கிறது.  இந்த மனநிலை தான் நமக்குத் தேவை . மனம் இயங்க வேண்டும்.  நல்ல விசயங்களை நிலையாய் கொண்டு, எதிர் விஷயமான தீய பழக்கம் நீங்க மனம் இவ்வுலக்கில் நல்லது , கெட்டதுகளில் நீந்தி நல்ல போன்ற விசயங்களை தேடிபிடித்து நிலைப்பு அத்தன்மை பெற வேண்டும்.
                           
          நம் கல்வி முறை மாணவனுக்கு நல்லது , கெட்டது உணர்த்தும் விதமாக , வானின் சுயத்தை  உணர்ந்து செயல் படும் தன்மை உடையதாக அமைந்து, அவனின் மனதை இயங்கச் செய்து , தன்னிலை உணரச் செய்தால் , நம் நாடு வளர்ச்சி  அடைந்து , நம் சமுகம் தீவிரவாதம் தவிர்த்து , அமைதியாக திகழும். ஒவ்வொரு வீடும் சொர்க்கமாக திகழும் . 
 
 
           நம் கல்வி முறை மதிப்பெண்  அடிப்படையில் அமைந்து, இன்று நன்னெறி ,நீதி போதனை, விளையாட்டு போன்ற அடிப்படை விசயங்களை மறந்து போய் உள்ளது. அவை  மீண்டும் நடை முறை பட்டுத்தப்பட்டு, மாணவர்களை நெறிபடுத்த வேண்டும்.   கனவுகளுடன் மாணவர்களை போன்று எழுதும் என் எழுத்து, பெறோர்களை போய் சேர்ந்து நினைவாக்கதா ?   
           
        ஆசிரியர்களே மதிப்பெண் தேவை தான் ஆனாலும் தன்னை அறியா மாணவனால் அறிவு பெருகி பயன் என்ன ?
      
          வள்ளலார் போன்று கனவுகளுடன்....
"தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே- ஒரு
 தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே "  . 

1 comment:

குப்பன்.யாஹூ said...

good post, now in few colleges and schools they teach Meditation, pranayaamam.

Post a Comment