Tuesday, January 5, 2010

செல்

செல் போனால்
சொல் போச்சு!
நவீன இயந்திரம்
செய்யும்  மந்திரம்!

தொலைந்தது என்னவோ
செல் தான்
சொல்லும் அல்லவா
தொலைந்தது!

மூளை சயனமாய்
சிந்திக்க முடியாமல்
சிறகு ஓடிந்துபோனதே!

செல் ஒவ்வொரு
மனிதனின்
உயிர் செல்லிலும்
பொதிந்து
உயிரோட்டம் ஆனதால்
சொல்லும் போயிற்று
செல்லோடு!

செல்லை மறப்போம்
சொல்லை நினைத்து!

செல் தேவை
செய்தி கொடுக்க!
விருந்தாக அல்ல
மருந்தாக அல்லவா!

செல் டு செல்
ஒரே ஜொள்!

கால் டு கால்
இலவசம்!
கைவசம் இருந்த
காசு போய்
கலங்கிய மூளையை
கால் ஊன்ற
என்ன செய்வாய்?        

  

2 comments:

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு.
by
www.annamalaiyaan.blogspot.com

தமிழ் காதலன் said...

very nice.

Post a Comment