Friday, June 19, 2015

குழந்தைகளை வகுப்பறையில் பேச அனுமதியுங்கள்!

நாயை நன்றி உள்ள விலங்குன்னு ஏன் அழைக்கின்றோம் தெரியுமா?
*
Man Versus Nature என்ற முதல் பாடத்தினை வாசிக்க பயிற்சி அளித்து கொண்டிருந்தேன். bowed என்ற சொல்லை உச்சரிக்க தெரியாமல் முருகேஸ்வரி என்ற மாணவி திணறிக்கொண்டிருந்தாள். bow ,பொவ் என கூற சொன்னேன். அருகில் இருந்த ராகவன், “ யே முருகேஸ்வரி , நாய் மாதிரி குரைக்க தெரியாதா.. இந்த இப்படி தான் என பொவ் பொவ் “ என செய்து காட்ட அனைவரும் சிரித்தனர். அருகில் இருந்த தனசீலன் bow என்றால் வணங்குதல் தானே என்றான். ஆமாம்டா என்றான் அருகில் இருந்த பா. மணிகண்டன். “ bow.. bow.. பொவ், பொவ் என குரைப்பதால், ஓனரை பார்த்து வணங்குறேன்னு வணங்குறேன்னு தானே நாய் சொல்லுது ..அதனால தான் நாம் .. நாய்யை நன்றி உள்ள விலங்குன்னு சொல்றோம்.. சரிதானே சார்” என்றான் தனசீலன்.
குழந்தைகளை பேச அனுமதித்தால் போதும் அவர்கள் சிந்தனைகளை சிறகடித்து பறக்க செய்து நம்மை வியக்க செய்துவிடுகிறார்கள். சுதந்திரமான கற்றல் தான் சுயமான சிந்தனையை வளர விடும். தினமும் ஒரு சுவையான நிகழ்வுடன் இனி உங்களை சந்திக்கின்றேன்.
மதுரை சரவணன்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்...

Yarlpavanan said...

"குழந்தைகளைப் பேச அனுமதித்தால் போதும் அவர்கள் சிந்தனைகளைச் சிறகடித்துப் பறக்கச் செய்து நம்மை வியக்கச் செய்துவிடுகிறார்கள்." என்ற கருத்தை வரவேற்கிறேன்.

Post a Comment