Thursday, October 10, 2013

எப்போதும் விழித்து இருத்தல்

தாலாட்டு
-------------
குழந்தை கதை சொல்ல ஆரம்பித்தது
தூங்கிப்போனேன்
எழுந்து பார்த்தப்போது
குழந்தை தூங்கியிருந்தது
கதை சொல்லியப்படியே 
அம்மா சரியா.... 
என தூக்கத்தில் கேட்க
குழந்தை சொல்லாத
கதைக்கு தலையாட்டியப்படியே
மீண்டும்
தூங்கிப் போனேன்....!


---------------------------------------
உன்னோடு பேசும்
நேரங்களை விட
உன்னோடு பேசா
நேரங்களே
வேகமாக நகருகின்றன
உன்னோடு பேசுவதற்காக...!


----------------------------
ஆசை
-----------
எனக்காக
வாழ ஆசைப்பட்டதை விட
உனக்காக வாழவே
அதிகம் ஆசைப்பட்டேன்....!



----------------------------------------------
அற்புதம்
-------------
இதழ்கள் பொருத்தி
நீ
அழுத்திக் கொடுக்கும்
முத்தத்தில்
அத்தனை மன அழுத்தங்களும்
அமுங்கிப் போகின்றன



____________________________



உன் அருகாமை
எனக்கு பாதுகாப்பு

---------------------------------


எல்லா போதுகளிலும்
_______________________
ஓடும் போது
உண்ணும் போது
நண்பர்களுடன் பேசும் போது
அம்மாவுடன் உரையாடும் போது
தந்தையுடன் ஊர் சுற்றும் போது
பள்ளியில் இருக்கும் போது
பாடம் கவனிக்கும் போது
என எல்லா போதுகளிலும்
கனவுகளுடனே
குழந்தைகள் வாழ்கின்றன....!
 


3 comments:

மகேந்திரன் said...

அருமையான கவிதைகள் நண்பரே...

'பரிவை' சே.குமார் said...

ரசிக்க வைத்த கவிதைகள் சரவணன் சார்...
அருமை. வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... said...


எல்லாமே அருமை!

//உன்னோடு பேசும்
நேரங்களை விட
உன்னோடு பேசா
நேரங்களே
வேகமாக நகருகின்றன
உன்னோடு பேசுவதற்காக...!//


மிகவும் ரசித்தது.

Post a Comment