Wednesday, October 23, 2013

இப்படியும் நடக்க வாய்ப்பு உள்ளது...முயன்று பாருங்கள் !

”இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் ஒரு அசிரியருடனே பிறந்துள்ளான். நீ அவருடைய  அறிவுரைகளை உண்மையான உறுதியுடன் பின்பற்றினால், இந்த வாழ்விலேயே கூட ( இப்பிறவியிலேயே) உன்னிடமுள்ள வரம்பற்ற முழுமையை உன்னால் உணர்ந்து கொள்ள இயலும்” - சுவாமி விவேகானந்தர். 

மாணவர்களை குழுக்களாக பிரித்து , அவர்களை ஆரம்ப சுகாதர நிலையங்களுக்கு களப்பயணம் செய்ய முடிவெடுத்து கல்மேடு மாணவர்களை நேற்று அழைத்து சென்றது போன்று இன்று நான் மேலும் சில மாணவர்களை அருகிலுள்ள சித்தா மருத்துவ நிலையங்களுக்கு அழைத்து செல்ல தயாரானேன்.   



அப்போது மாணவர்களை அழைத்துக் கொண்டு வந்த ஆசிரியை உங்க சாருக்கு வேறு வேலையில்லை, தினமும் இப்படி கூட்டிக்கொண்டு பொழுதை கழிக்கிறார், நீங்களும் ஜாலியா ஊர் சுத்துங்க.. நீங்க பார்க்காத ஆஸ்பத்திரிய புதுசா காட்ட போறார் என்று முணுமுணுப்பு என் காதில் விழுந்தது. நான் கொள்கை மீது நம்பிக்கை கொண்டவன் என்பதால் , சிரித்துக்கொண்டே .. என்னிடம் உள்ள புகைப்பட கருவியை எடுத்து நான் புகைப்படம் எடுக்க கற்றுக்கொடுத்த என் வகுப்பு மாணவன் தங்க மணியிடம் புகைப்படக்கருவியை கொடுத்து, நீ தான் இன்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னேன்.( அவன் எடுத்த புகைப்படம் தான் மேலே உள்ளது)

மாணவன் ஒருவனை மேற்கொண்டு கூறிய ஆசிரியையை அழைத்து வரச் சொன்னேன். இன்று இந்த மாணவர்களை அருகில் (அடுத்த தெரு ஆரம்பத்தில் )உள்ள சித்தா மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சித்தா மருத்துவ நிலையத்தின் செயல்பாடுகள் , நோய்கள் குறித்து அவர்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அறிந்து வர சொன்னேன். என் புகைப்பட கருவியை தங்க மணியிடம் கொடுத்துள்ளேன் . அவன் புகைப்படம் எடுப்பான். சார் போட்டு உடைச்சிடப்போறான்.. என்றார். சக மாணவர்களும் பொறாமையில் ஆமா சார் ... உடைச்சாலும் உடைச்சுடுவான். பரவாயில்லை பத்திரமாக எடுத்துச் செல் என்று சொன்னேன்.

வரிசையாக நிற்க சொல்லி சில அறிவுரைகள் சொன்னேன். அதற்குள் மணிப்பாண்டி சார் அதெல்லாம் கரெக்டா போய்டுவோம் சார் என்றான். ஆசிரியை சிரித்தப்படி சென்றார்.

மருத்துவர் அடைந்த மகிழ்ச்சியும், அவர் மாணவர்களுக்கு மழைக்காலம் என்பதால் கொசுவால் வரும் நோய் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.

பள்ளிக்கு வந்த ஆசிரியரை நோக்கி என்ன நடந்தது என்று கேட்டேன். சார் சூப்பரா கவனிக்கிறாங்க... கேள்வி மேல கேள்வி கேட்கிறானுங்க.. என்றார். இருக்கட்டும் எதை பற்றி சொன்னார்கள் என்று ஆசிரியரிடம் கேட்டேன். அதற்குள் முந்திக்கொண்டு மாணவர்கள் நாங்கள் சொல்கிறோம் என்றார்கள். சார் நல்ல தண்ணியில மலேரியா கொசு வரும். சிரட்டை, கொப்பறை, டயர் , ஆட்டு உரல் போன்றவைகளில் விழுந்துள்ள மழை நீரினால் டெங்கு கொசு பரவும் என்று அடுக்கினார்கள். சிகிச்சை முறைகளையும் சேர்த்தே சொன்னார்கள். ஆசிரியர் அசந்து போய் நின்றார். நல்லா தான் கவனிச்சு இருக்காங்க.. பரவாயில்லை சார் .. கேட்டதை அப்படியே கூறுகிறார்கள் என்றார்.

’கல்லூரி முதல்வர்களோ, பேராசிரியர்களோ புத்தகங்களின் தாள்களில் இருந்து உங்களுக்கு அதைக்கிழித்துத் தர முடியாது. சுபாவம் அமவது அவரவர்களுடைய வாழ்க்கையிலிருந்துதான் உண்டாக வேண்டும். உண்மையைச் சொன்னால் அது உங்களுக்குள் இருந்து உண்டாகி வர வேண்டும்” என்று காந்தி கூறுகிறார்.

அவர் வகுப்பு மாணவர்கள் மதிய இடைவேளையில் ஆசிரியரிடம் தங்களையும் இது போன்ற களப்பயணத்திற்கு அழைத்து செல்ல வற்புறுத்திக்கொண்டு இருந்தார்கள். இது எனக்கும் அந்த வகுப்பு மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றேன்.
  

6 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள் சரவணன்....

கரந்தை ஜெயக்குமார் said...

மாணவர்களுக்கு மட்டுமல்ல, உங்களின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றிதான். வாழ்த்துக்கள். தொடருங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

களப்பணி - இப்போது சித்தா மருத்துவமனை...

நீங்கள் செய்யும் தொண்டு மகத்தானது... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் பல...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பாராட்டவேண்டிய விஷயம்தான்...

வாழ்த்துக்கள்

இராய செல்லப்பா said...

தூற்றுவார் தூற்றட்டும் ..தொடர்ந்து செல்லுங்கள்..

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் சகோ. சரவணன்.

Post a Comment