Saturday, October 5, 2013

சொல்ல மறந்த கவிதைகள்...

நானும் அவளும்
-------------------------
நீ உறங்கிய வேளையில்
நான் உறங்காமல்
உன்னுடன்...
நீ பேசிய பொழுதுகளில்
அமைதியாய் இருந்து விட்டு
இப்போது
பேசித்தீர்க்கின்றேன்...
நீ அடித்த ஜோக்குகளை 
உதட்டு புன்னகையில் ரசித்த நான்
உன்னுடனே இப்போது
அறைகள் அதிர்ந்திட சிரிக்கின்றேன்...
ஓசைக்கேட்டு அனைவரும் எழுந்திடவே
உன்னை மறைக்கின்றேன்
போர்வைக்குள்
என்னுடனே...!
 

காதல் மரம்
-----------------
நீயும் நானும்
சுற்றி சுற்றி விளையாடிய
மரம்
நீயற்ற பொழுதுகளில்
இலைகளை உதிர்க்கிறது
நீ வந்த பொழுது
தளிர்க்கிறது
உனக்கு கல்யாணம் என்ற போது
ஈபிக்காரன்
வளர்ந்த கொப்புகளை
முறிக்கின்றான்
என் மனமும் சேர்ந்தே ஒடிந்து விழுகிறது.....
 


காற்றாய்....
-----------------
சிறகு விரித்து பறக்கின்றேன்
இறங்கியப்படியே
தோணியாகி மிதக்கிறேன்
டால்பின் போல துள்ளிக்குதிக்கின்றேன்
ஆகாயத்தில் குதித்தப்படியே
காற்றாய் உருமாறி
கடல் தாண்டி வருகின்றேன்
இரவில் கண் மூடி
உன்னை உறங்க வைக்க
உறங்கிப்போனாய்
இப்போதும்
சிறகு விரித்து பறக்கின்றேன்
உன் கனவில்...!
 



ஆச்சரியம்
----------------
கல்யாணவீட்டில்
செருப்பா என்று கேட்டார்
ஆம் என்று சொன்னேன்
நானும் அணிந்து கொள்ளவில்லை
அவரும் அணிந்து செல்லவில்லை
செருப்பு அப்படியே கிடக்கிறது
ஆச்சரியம் தான்....!
 


கள்ளக்காதலி
-------------------
எவ்வளவு முயன்றும்
என்னால்
உன்னை பிரிந்து இருக்க முடியவில்லை...
ஆகவே
மீண்டும் மீண்டும்
சரணடைகிறேன்...
உன் பெயர்
பேஸ்புக் என்பதை மறக்காமல் 
அனைவரிடமும் சொல்லி விடு
இல்லையென்றால்
அடுத்த சண்டைக்கு
தயாராகி விடுவாள்
பாதகி....!
 


மழை நாளில் ...
-----------------------
நேரம் காலம் தெரியாமல்
பெய்கிறது மழை
திட்டிதீர்க்கும்
நகரவாசியின் மத்தியில்
நான்
நனைகிறேன்
காமம் கொண்டு
ஆசைகள் பெருகிடவே
நனைக்கிறது மழை....
என் உடம்பினை அப்படியே
சமர்பித்து
கூடுகிறேன் கூச்சமற்று
நானும் மழையும்
பிரபஞ்சத்தில்
விரிகிறோம்
என்னைப் போல் மழையும்
மழையைப் போல் நானும்
 ..!


அகராதி
-------------
மொழிகள் அற்ற 
பிரதேசத்திலும்
உன் விழி சொல்லும்
மொழியை 
நான் அறிவேன்..!



இவை அனைத்தும் நான் முகநூலில் வெளியிட்ட கவிதைகள்.. நண்பர்களின் வேண்டுதலின் பேரில் இங்கு பதிவு செய்கிறேன். மறுபதிப்பு;

6 comments:

Anonymous said...

வணக்கம்
மொழிகள் அற்ற
பிரதேசத்திலும்
உன் விழி சொல்லும்
மொழியை
நான் அறிவேன்..!

ஒவ்வொரு தலைப்பில் உள்ள கவிதை மிக மிக அருமை வரிகளும் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சீராளன்.வீ said...

அத்தனை கவிதையிலும் அகராதி ரொம்ப பிடித்தது

அருமை வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

கவிதைகள் அனைத்தும் அருமை நண்பரே....
வாழ்த்துக்கள்....

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

முகநூல் முகவரி...?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கவிதைகள் நன்று சரவணன். மனம் கவர்ந்தது.

மகேந்திரன் said...

அருமையான கவிதைகள்...

Post a Comment