Tuesday, October 1, 2013

காதலிப்பவனின் மரண வாக்கு மூலம்...


நீங்கள் பிணங்கள் எரிவதைப் பார்த்ததுண்டா
பார்திருக்க வாய்ப்புகள் குறைவு தான்
உயிருக்குயிராய் காதலித்தவள்
கைவிட்ட பின் அழுததுண்டா
இருப்பின்...
எரி மூட்டியவுடன்
உடல் எழும்பும் போது
நெஞ்சு பிளக்கும் சத்தமும்
அதனை அமுக்க விழும் அடிகளையும்
உணர்ந்திருப்பீர்கள்....
கொள்ளி வைத்தபின் திரும்பி
பார்க்காமல் வீடு திரும்பும்
நீங்கள் இதை அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான்....
இரத்தம் சூடேறி கொதிப்பு அடைந்து
நாடி நரம்புகள் வழியாக
வெளியேற முடியாமல் கொப்பளித்து
அங்கேயே எரிந்து சாம்பலாவதை ....
கோப்பைக்குள் காதலியை புதைத்து
தினமும் இரத்தம் சூடேறி
கல்லீரல் கணையம்
என எல்லாவற்றையும்
செயல் இழக்கசெய்யும் வாதையை
உணர்ந்திருப்பீர்களானால்
பிணங்கள் எரிவதை ரசித்து பார்த்திருப்பீர்கள்
காதலித்தவர்களும்
காதலில் தோற்றவர்களும்
மரணத்தை கொண்டாடுகிறார்கள்
காதலித்துக்கொண்டோ
அல்லது
காதலில் தோற்றுக்கொண்டோ...!

4 comments:

வெற்றிவேல் said...

உண்மையான தான். அந்த வலி அப்படித்தான் இருக்கும்...

திண்டுக்கல் தனபாலன் said...

அவரவர் உண்மை நிலைக்கேற்ப மாறும்...

MANO நாஞ்சில் மனோ said...

காதலித்தவர்களும்
காதலில் தோற்றவர்களும்
மரணத்தை கொண்டாடுகிறார்கள்//

வலி நிறைந்த வரிகள்....!

'பரிவை' சே.குமார் said...

வலி நிறைந்த கவிதை....

Post a Comment