Friday, May 20, 2011

இயல்பு



எந்த வொரு மாற்றமும் இல்லை
தெருக்கள் எப்போதும் போலிருந்தது
தெருமுனையின் டீக்கடையில்
கூட்டம் குறைந்த பாடில்லை
பூக்கடைக்காரன்
பேரம் பேசி விற்றுக் கொண்டிருந்தான்
ஆட்டோக்காரன் சவாரி
படியாமல் முனங்கி கொண்டிருந்தான்
புதிதாய் முளைத்த கொட்டுச் சத்தமும்
சங்கு சத்தமும்
எந்த சலனத்தையும்
ஏற்படுத்தவில்லை
கால் நீட்டி படுக்க வைக்கப்பட்ட
பிணம்
நனைகிறது ...
சுற்றி இருப்பவரின்
உப்பு நீரில்...
அவர் அலைந்து திரிந்த தெருக்களில்
அடையாளமாய்
 மயானம் வரை
உதிர்ந்த
ரோசா மலர்கள்
இயந்திரத் தனமான மனிதர்களின்
நடமாட்டங்களுக்கு மத்தியில்

15 comments:

Anonymous said...

மரணம் "மலிந்துவிட்டதா "

shanmugavel said...

இருக்கும்போதே மதிக்க ஆளில்லை.இறந்த பிறகு என்ன கிடக்கிறது? யதார்த்தமான கவிதை.

MANO நாஞ்சில் மனோ said...

மனசு கனக்கத்தான் செய்யுது....

சின்னப்பயல் said...

இயல்பாகவே இருக்கிறது..

Rathnavel Natarajan said...

இது தான் நிஜம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

’ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்ற பாடல் போல மிகவும் இயல்பாகவே எழுதியுள்ளீர்கள். நிஜம் தான்.

//கால் நீட்டி படுக்க வைக்கப்பட்ட பிணம்
நனைகிறது ... சுற்றி இருப்பவரின் உப்பு நீரில்...//

அனைவரும் குளிக்க நீர் வேண்டுமே !, குளித்ததும் புசிக்க உணவு வேண்டுமே ! என்ற கவலையால் இருக்குமோ?

மோகன்ஜி said...

நல்லதோர் கவிதை நண்பரே!

ஹேமா said...

இவ்வளவும்தான் வாழ்க்கை !

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல பகிர்வு தலைவரே....

தனிமரம் said...

அழகாய் சொல்லியிருக்கிறீங்க மரனத்தின் பயணத்தை!

Chitra said...

அவர் அலைந்து திரிந்த தெருக்களில்
அடையாளமாய்
மயானம் வரை
உதிர்ந்த
ரோசா மலர்கள்
இயந்திரத் தனமான மனிதர்களின்
நடமாட்டங்களுக்கு மத்தியில்


.... சிந்திக்க வைக்கும் வரிகள். "இன்று நீ....நாளை நான்...." என்று உணராமல், இயந்தரத்தனமாக நடமாடும் மனிதர்கள்.....

Yaathoramani.blogspot.com said...

இயந்திரத்தனமான மனிதர்கள் மத்தியில்...
இறந்து கொண்டிருக்கிற மனிதனையே
கவனிக்க நேரம் அற்ற மனைதர்கள் மத்தியில்
இறந்தவனையா கவனிக்க முடியும்
மனிதர்களின் இயல்பை
இயல்பாகச் சொல்லிப்போகும் உங்கள் படைப்பு
மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...

இறந்தவன் இது பற்றி என்ன நினைக்க முடியும். ?!
இயல்பு என்று நீங்களே சொல்லி விட்டீர்கள்.

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

என் மனம் கவர்ந்த பதிவு
அழகாய் சொல்லியிருக்கிறீங்க

நாவலந்தீவு said...

இயல்பு...

இதயம் கணக்கிறது...

தங்கள் பதிவு மனதில் எதையோ பதிவு செய்கிறது.

Post a Comment