Saturday, May 14, 2011

அழகர் சாமியின் குதிரை-திரை விமர்சனம்

 கோவில் மரக் குதிரை திருட்டு போக , அதனை தொடர்ந்து கிராம மக்கள் போலீஸ்க்கு போய் புகார் கொடுக்க, இடைப்பட்ட தருவாயில் நிஜமானக் குதிரை கிடைக்க , ஊர் மக்களுக்கு அதனால் நன்மை கிடைப்பதாய் உணர்ந்து , நிஜக் குதிரையை வைத்தே ஊர் திருவிழா நடத்த முடிவெடுத்து திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய , குதிரைக்கு சொந்தக் காரன் வந்து குதிரையை கண்டு பிடிக்கிறான்.ஊர் மக்கள் அவனுக்கு குதிரையை தந்தனாரா ?    குதிரை கிடைத்ததா? திருவிழா நடந்ததா? என்பது தான் அழகர் சாமியின் குதிரை.

   கிராமத்து மணம் படம் முழுவதும் வீசுகிறது.   கிராமத்து நக்கல், அதுவும் மதுரையை ஓட்டிய பகுதி என்பதால் கேட்கவா வேண்டும். பாஸ்கர் சக்தியின் எழுத்து(கதையே அவருடையது தான் என்பதாலும்) கதைக்கு வலு சேர்க்கிறது.வசனத்தில் நாத்திக தன்மை அதிகம் வீசினாலும் அவை எதார்த்தமாக கிராமத்து நக்கலாக வந்திருப்பதால் சபாஷ் பெறுகிறது. தேனியின் மலை அழகு கேமராவில் அப்படியே வந்துள்ளது படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் ஆகும்.  ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் நம்மை மலை கிராமத்திற்கே அழைத்துச் செல்கிறார். பாராட்ட வேண்டியவர்.

சுசீந்திரன் மூலக் கதையிலிருந்து நழுவாமல் கதையை அப்படியே கொடுத்துள்ளது சாபாஷ். கிராமத்து காதலுடன் , அழகர் சாமியின் காதலை இணைத்து சுவரசியமாக தந்துள்ளது அருமை. கிராமத்து நாட்டாண்மையும், வாத்தியாரும் இயல்பாக நடித்து படத்தில் கிராமத்து இயல்பை அப்படியே பிரதிபலிக்கின்றனர். “நான் மாகான் அல்ல “ தொடர்ந்து சுசீந்திரன் கொடுக்கும் அருமையான படம் இதுவாகும். முற்றிலும் புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து படத்தை இயக்கி இருப்பதும், டைட்டில் கார்டில் புதிய மாற்றம் செய்திருப்பதாலும் சுசீந்திரன் பாராட்டுப் பெறுகிறார்.

    இளையராஜாவின் இசை பார்வையாளர்களை கிராமத்துக்குள் கொண்டு செல்வதுடன் , கதையோடு ஒன்றிணைந்து மெருகூட்டுகிறது. ஆங்காங்கே மேற்கத்திய இசை வாடை யடித்தாலும் அது பொதுவாக வெளியில் தெரியாமல் , கதைக்கு மேலும் வலு சேர்ப்பதாகவே உள்ளது. குதிக்கிர குதிக்கிர குதிரை... பாடல் அருமை.

  அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய மிகச் சிறந்த திரைப்படம் -அழகர் சாமியின் குதிரை.
     
    

5 comments:

கே. பி. ஜனா... said...

உடனே படம் பார்க்க ஆவலைத் தூண்டுகிறது...

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல படமா இருக்குமோ, ம்ம்ம் ஊர் போனதும் தியேட்டரில் பார்த்துற வேண்டியதுதான்...

இராஜராஜேஸ்வரி said...

nice picture.

சண்முககுமார் said...

தமிழ் திரட்டிகளில் முதன்மை திரட்டியான-- தமிழ் திரட்டியில் -- தங்கள் பதிவை இணைத்து
அதிக வாசகர்களை பெற உங்களை அழைத்து மகிழ்கிறோம் தங்கள் பதிவை இணைக்க முகவரி

http://tamilthirati.corank.com/

தங்கள் வருகை இனிதாகுக

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரைட்டு படம் பாத்துருவோம்.

Post a Comment