Tuesday, October 5, 2010

மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை -3

   இன்று கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்தக்  கல்வி கட்டணம் தொடர்பான உயர்நீதி மன்றத் தீர்ப்பில் ஏழை மாணவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. மிகவும் மகிழ்ச்சி. அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டமே வசூலிக்க வேண்டும் . மேலும் மேல் முறையீடு செய்தவர்களுக்கு கமிட்டி பரிந்துரைக்கும் கட்டணம் தான் செல்லும் . அதனால் விரைவில் கமிட்டி மேல் முறையீட்டு பள்ளிகளை மறு ஆய்வு செய்து அனைத்து மாணவர்களுக்கும் வழி பிறக்கச்  செய்யும் என்று நம்புவோம்.



       என்ன சமண மலை பற்றித் தகவல்களை சொல்லாமல் நேரத்தை வீணடிக்கிறீர்கள் ?என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். கல்வி தான் நம் சொத்து. அதை பற்றி செய்தியை கொடுக்காமல் சென்றால் என் மனம் வருத்தப்படும். பாருங்கள் வருத்தம் என்றவுடன் எனக்கு கீழக் குயில் குடி மலை  பராமரிப்பை நினைத்து வருத்தப்படுகிறேன்.

       காற்று என்னை முன்னோக்கி தள்ள தள்ள அனைத்தும் பின்னோக்கி செல்லத் தொடங்கின. ஆம் ... மரம் , செடி , கொடி , எதிரே தென் படும் வானம் என எல்லாம் பின்னோக்கி நகர ,என் முன்னேயுள்ள பாறைகள் தன்  காலச் சக்கரத்தை  பின் நோக்கி நகர்த்தி வரலாற்றை சொல்லத் தொடங்கின...

        மலையின் உச்சியில் கோவில் இருந்ததற்கான திட்டுக்கள் இருந்தன. கோவில் தூண்கள்  அதற்கு அருகில் உள்ள பாறையிலிருந்து உடைக்கப்பட்டு எடுக்கப்பட்டிருந்தது .பாறையிலிருந்து கோவிலுக்கான தூண்கள் வெட்டி எடுத்ததற்கான அடையாளம் உள்ளது. இதை தான் ரவி என்னிடம் சுட்டிக்காட்டினார். கோவில் இருந்ததற்கான அடையாளம் உள்ள இடம் பேச்சியம்மன் திட்டு என்று அழைக்கப்படுகிறது.

          பார்த்தீர்களா ............என் வருத்தத்தை மலைக்  காற்றின் ஆனந்தத்தில் சொல்ல மறந்து விட்டேன்.    பேச்சியம்மன் திட்டுக்கு கீழே உள்ள பறையில் சிறிய சுனை உள்ளது. இப்போது அதில் கலர் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. அய்யனார் கோவில் குளத்திலிருந்து தனியாக பைப் போடப்பட்டுள்ளது. நான் சென்றது மழைக் காலமானதால் தண்ணீர் நிரம்பி அந்த குளத்திலிருந்து வழிந்துக் கொண்டிருந்தது. ஆடு மேய்க்கும் காசி ,"சார், மலை தொடர்ந்து பெய்வதால , குளம் முழுவதும் தண்ணீர் நிரம்பி நிறைய இருக்கு , அதுவும் இந்த சுவர் வரை இருக்கு மலை அற்றக்  காலங்களில் ...,அந்த பறை திட்டு வரை தான் இருக்கும் "என்றான்.சுனையில் தண்ணீர் வற்றிவிட்டால் மோட்டார் போட்டு நிரப்பபடுகிறது.


        சுனை உள்ள பறையின் மீது தீர்த்தங்கர்கள் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் தீபம் ஏற்றுவதற்கு திண்டுகள் பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தீர்த்தங்க்கர் உருவம் சிதைக்கப்பட்டுள்ளது. அதை கூர்ந்து பார்த்தவுடன் , மிகவும் வருத்தப்பட்டது. அரிச்சந்திரன் , "இது தற்காலத்தில் சில விசமிகளால் அழிக்கப்பட்டது. எந்நேரமும் மாலையின் மீது கவனம் இருந்தாலும் சில சமயங்களில் எங்களையும் மீறி தண்ணி (அதாங்க சாராயம் ) போட்டு இதன் மகிமை தெரியாமல் அட்டுழியங்கள் செய்கிறார்கள்.  அடிச்சு விரட்டியும் விட்டுருக்கேன்...."என ஆதங்கப்படுகிறார்.       
  
       மலை முழுவதும் பீர் பாட்டில்கள் உடைக்கப்பட்டு உள்ளன. சாராய பாட்டில்கள் உடைக்கப்பட்டுள்ளன. அப்போது தான் நாங்கள் செல்லும் முன் இரண்டு பெண்களும் , ஒரு இளைஞனும்  கைகோர்த்து எதையோ சாதித்தவர்கள் போல் சென்றனர். ( என்ன இயலாமையில் வந்த வார்த்தைகள் என்று நினைக்க வேண்டாம். இயன்றாலும் இதன் புனிதத்தை கெடுப்பதில் உடன் பாடில்லை. )  

       காசியிடம் ,என்ன மலைமீது அமர்ந்து பீர், சாராயம் குடிப்பதில் இவ்வளவு ஆனந்தம் இவர்களுக்கு என்று கேட்டேன். அதற்கு அவன் சார், குடிக்கட்டும் , குத்தடிக்கட்டும் அது பரவாயில்லை .. குடித்த பாட்டில்களை மழைக்கு கீழே போட்டாலும் பரவாயில்லை அல்லது அப்படியே ஓரத்தில் வைத்தால் என்னை போன்று மாடு மேய்க்கும் யாரவது அதை அடுத்து அப்புறப்படுத்துவோம். இது போல பறையில் சிதறு தேங்காய் போல் சிதறவிடுவது மிகவும் ஆபத்து என்றான்.


        காசி எங்களை பேச்சியம்மன் திட்டிற்கு செங்குத்தான பாறையில் தவழ்ந்தவாறே  அழைத்து சென்றான். ஆனால் அவன் தன் குதிங்காலை உண்றி அருமையாக நடந்தான். என் வூட் லேன்ட் செருப்பை கீழே உள்ள சுனைக்கு அருகில் உள்ள பறையின் ஓரத்தில்  வைத்து நடக்க ஆரம்பித்தேன். சார் சும்மா வைங்க யாரும் இங்க வர மாட்டாங்க ...அப்படியே தூக்கி சென்றாலும் மலை இறங்கும் முன் நான் உங்களுக்கு வாங்கி தருகிறேன் என்று தைரியம் சொல்லி என்னை மேலே அழைத்தான் . நல்ல வேலை என் கவனம் முழுவதும் செருப்பில் சென்று (இரண்டாயிரத்து ஐநூறு ) என் பயணம் சுவையில்லாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தை போக்கிவிட்டான்.
    
          பாறையில் ஏறும் போதே  தண்ணீர் வழிந்தோடிய தடங்கள் இருந்தன. அவை பறையில் தெளிவாக தெரிந்தன. நான் அந்த வழித்தடங்களில் நடந்த போது ," சார் அதில் நடக்காதீர்கள் , அது பிடிப்பு இருக்காது, உங்களை கீழே வழுக்கி விழச் செய்யும் , அப்படி கீழே தள்ளுவது போல தோன்றினால் உடம்பை நன்றாக கீழே விழாத படி பிடித்து அந்த இடத்திலேயே அப்படியே நின்று விடுங்கள். இப்படி தான் என் தம்பி சின்ன பிள்ளையில் தவறி வ்ழுந்து விட்டான் , நான் வேகமாக சென்று அவன் கால்களை பிடித்து காப்பாற்றி விட்டேன். .."என் திகில் அடையவைத்து என் சந்தோசமான நடையில் தயக்கத்தை உண்டாக்கினான்.    ரவி எந்தவித பயமும் இன்றி வேகமாக ஏறினார். 
    
            மனிதனுக்குத் தான் தன் உயிர் மீது எத்தனை பிடிப்பு. வாழ்க்கையில் பிடிப்புக்கள் கூடாது என்று தான் எந்த பிடிமானமும் இல்லாத இந்த செங்குத்தான பறைகளை சமணர்கள் தேர்ந்தெடுத்தார்கள் போலும் . ஒவ்வொரு வழுக்களும் நமக்கு வாழ்வின் சறுக்கலை போதிப்பதாகவே உணர்ந்தேன். சமண போதனைகள் உயிர்களிடத்து அன்பு செய் , உயிர்களை கொல்லாதே என்பதை உணர்த்தவே ,தன் உயிர் மீது உள்ள மதிப்பு அறியவே இந்த செங்குத்தான பாறைகளை தேர்ந்தெடுத்து பள்ளிகள் அமைத்திருப்பார்களோ என்று நான் அசை போடத் துவங்கி இருந்தேன்.


             மலையின் உச்சியை தொட்டவுடன் மலைமீது பேச்சியம்மன் திட்டு அமைந்து இருந்தது. அதற்கு அருகில் புனித மரம் அரசமரம் புதிதாக நடப்பட்டு இருந்தது. அதற்கு மிக அருகில் மற்றொரு மரம் வைத்து இருந்தனர். ஆனால் அது உயிர் பெறவில்லை. வளர்ந்த இந்த மரம் வைத்து ஐந்து ஆறாண்டுகள் இருக்கும் என்று காசி சொன்னான். அதனை தொடர்ந்து சமவெளி பகுதி இருந்தது. பரந்த  பறை திட்டு. ஓடினேன். பாடினேன். காசியின் ஆட்டுக்குட்டியை கையில் எடுத்துக் கொஞ்சினேன். ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடியது. என் உடல் அசைவுகளுக்கு தகுந்த வண்ணம் காற்றும் என்னோடு சேர்ந்து நடனமாடியது. ரவி பெரும் மகிழ்ச்சியில் பேச்சு அற்று இருந்தார். திடீர் என ஞானம் பெற்றவரை போன்று பேசத் தொடங்கினார். "இந்த இடம் மட்டும் பிள்டர்சுக்கு தெரிந்தது ,இதை பட்டா போட்டு விற்று, காட்டேஜ் அமைத்து விடுவார்கள் "என்று என்னை திகிலடைய செய்தார்.


       "சார் அந்தா இருக்கு  பாருங்க ...அங்க ஒரு தீபம் ஏற்றும் சட்டி தெரிகிறாதா ....?வாங்க அழைத்து செல்லுகிறேன்" என்றான் . அதன் அருகில் போக முடியுமா..? என தயங்கிய என்னை, ரவி இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் வாருங்கள் என்று உற்சாகம் ஊட்டினார். மலை உற்சாகம் ஊட்டியது, ஒரு பெண்ணை போல் வெட்கப்படாமல் தன் அழகை ஒரு பேரழகனை போல நெஞ்சை முறுக்கி , தன் கட்டுடலை காட்டிக்  கவர்ந்தது. இப்போது சமவெளியை கடந்து பாறைகள் கரடு முரடாக இருக்க , ஆடுகள் சர்வ சாதரணமாக ஓட்டப்பந்தயத்தில் தாவிகுதித்து ஓடும் தடகள வீரனைப் போன்று தாண்டிச்  சென்றது. அவைகள் அவனுக்கு வழிகாட்டியது போலவே உணர்ந்தேன். ஏசு மலை மீது தன் கைகளில் ஆட்டுக் குட்டியை சுமந்து இருப்பது நினைவில் வந்தது. ஒருவேளை ஆடுகள் மலைகளில் அவருக்கு சரியான பாதையை வழிக் காட்டி இருக்குமோ என்று நினைக்கத் தோன்றியது. அதற்குள் ரவி , ஏம்பா ஆடும் உன்னுடனே வருகிறதே என்றார்.ஆமாம் சார் பாதை காண்பிக்க அது உதவும். திடீர் என்று மலை வந்தால் , வீட்டிற்கு செல்ல எளிதான அதே சமயம் ஆபத்தில்லாமல் பயணிக்க அது தான் எனக்கு வழிக் காட்டும் என்றான் .  தண்ணீர் தாகம் எடுக்கவே "தம்பி காசி,இங்க குடிக்க தண்ணீர் கிடைக்குமா என்றேன்?" . "சார், கீழே ஒரு சுனை இருக்கு வாங்க" என்றான். திரும்ப கீழே செல்ல வேண்டுமா...என்றேன். இல்லை சார் . இந்த பாறை ஏறி கடந்தால் , பின் ஒரு பாறை கீழ் நோக்கி செல்லும் , அங்கு ஒரு பெரிய பாறை உள்ளது .அதன் கீழ் ஒரு சுனை உள்ளது. அதன் பெயர் கார் சுனை என்றான்.  அது குளம் போல இருக்கும் என்றான். ரவி குளிக்கலாமா என்றார். அவனும் ,"ஆழம் குறைவுதான் இருந்தாலும் நீச்சல் தெரிய வேண்டும் ... உங்களுக்கு தெரியுமா..?"எனக்   கேட்ட மாத்திரத்தில் ,, "டவுனுல எவனுக்கு நீச்சல் தெரியும்" என்றேன். எனக்கு தெரியாது என பளிச் பதில் தந்தேன். அப்போது ஒரு சமணரை போல போதிக்க தொடங்கினான்.


         "சார், தனியா வந்திருக்கீங்க , முன்ன பின்ன தெரியாத யாருகிட்டயும், இப்படி தெரியாதுன்னு சொல்லாதீங்க ,,, அப்புறம் அழைத்து சென்று தள்ளி விடுவார்கள். ... " என எனக்கு தெரியாத ஒன்றை கற்றுத் தந்தான். எதை கேட்டாலும் தெரியும் என நடியுங்கள். "சார், இங்க சில வருடங்களுக்கு முன் எலும்பு கூடுகள் கண்டு எடுத்திருக்கிறார்கள். எல்லாம் கொலையாம் , தெரியாத  யாரும் கூப்பிட்டால் , இப்படி பட்ட மலைகளுக்கு வராதீங்க" என பாடம் புகட்டினான். உயிர்கள் கொல்லாமை போதித்த மலையில் உயிர் பலியா...? இல்லை அது வடக்கிருந்து உயிர் துறந்தவர்கள் எலும்பா ...? என மார்புக்குட்டுக்குள் உள்ள இதயம் வேகமாக அடித்து என்னை முச்சிரைக்கச் செய்தது.

       பயணம் தொடரும் திகிலுடன் காத்திருக்கவும்.

3 comments:

சிவராம்குமார் said...

செம சுவையான அதே சமயம் திகிலான பயணம் போல சரவணன்!

Thenammai Lakshmanan said...

செம திரில்லிங்கா இருக்கு சரவணன்..

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

நேசமித்திரன் கொடுக்கும் ஊக்கத்தில இடுகை அற்புதமாக வளர்கிறது. வர்ணனைகள் அழகாக எழுதப் பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் எழுத்துப் பிழைகளும் அதிகம் ஆகி விட்டன. படிக்கும் போதே ஒரு எரிச்சலுடன் கூடிய வெறுப்பு வருகிறது. எழுதி முடித்த உடன் ஒரு முறை சரி பார்க்கலாமே - தவறாக எண்ண வேண்டாம் நண்பா.

நல்வாழ்த்துகள் சரவணன்
நட்புடன் சீனா

Post a Comment