Sunday, October 17, 2010

மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை -6

இப்படி எட்டாம் நூற்றாண்டின் வரலாற்றை தன்னகத்தே புதைத்து , கல் குவாரி முதலாளிகளின் கையில் அகப்பட்டு , தன் உடம்பில் கீறலை ஏற்படுத்தி, தன்னை நேசிக்கும் மக்களால் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப் பட்டு , தொல்லியல் துறையின் கைகளில் தற்போது தவழ்ந்தாலும் , படுகையின் பாதைகளில் சாராய மற்றும் பீர் பாட்டில்களின் சிதறல்கள் சமூக விரோத செயல்களுக்கு துணை போவதாகவே உள்ளது .

     சுற்றுலா தளம் என்ற போர்டும் அதற்க்கான செலவும் பட்டியலிடப்பட்டுள்ளது . ஆனால் , இது எந்த நூற்றாண்டை சார்ந்தது ?, இதன் தொன்மை என்ன ?, இதன் வரலாறு என்ன? என்பதற்கான எந்த குறிப்புகளும் இல்லை . ஏன் இதற்க்கான முயற்ச்சிகளை யாரும் எடுக்க வில்லை ? என்பதும் எனக்கு புலப்பட வில்லை. தொல்லியல் துறையில் இது சம்பந்தமாக புத்தகம் எதுவும் உள்ளதா என கேட்டபோது ,"இது சம்பந்தமாக குறிப்புகள் இருப்பதாக தகவல் இல்லை என்றும் சொல்லவில்லை, இது சம்பந்தமாக குறிப்புகள் இதோ என்றும் சொல்ல வில்லை. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி  உள்ளேன் . இம்மலை பற்றி எந்த குறிப்புகளும் இல்லை.தென் குன்றம் என்ற வேதாச்சலம் எழுதிய புத்தகமும் இல்லை.அத் துறையில் வேலை பார்த்த அவரின் தற்போதைய முகவரியும் இல்லை. அதனால் தான் என்னவோ இதை கல் குவாரிக்கு அரசு கொடுத்துள்ளதோ என்று ஐயாப்படும் நிலவுகிறது "

         தயவு செய்து இது சம்பந்தாமாக ஒரு போர்டை தொல்லியல் துறை வைத்தால் நலமாக இருக்கும் . மேலும் அதன் சுற்றுபுறத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு இதன் வரலாற்று முக்கியத்துவம் எடுத்துச் சொல்லலாம். இப்பகுதியை சுற்றி தான் கல்லூரிகள், பல்கலைக்கழகம் உள்ளன. ஏன் இம்மாணவர்கள் இத் தொன்மையை பற்றி உணர வில்லை ? வரலாற்றை தெரியப்படுத்த வேண்டியது அரசின் கடமை , தொல்லியல் துறையின் வேலை தயவு செய்து , விரைவில் ஒரு போர்டை வைத்து அதன் தொன்மையை அறிய செய்யவும். இது ஒரு மக்கள் போராட்டமாக உருபெற்றால் தான்  சாத்தியமா? மலை தான் இதற்க்கு சாட்சி . கிராம மக்கள் விழிப்புணர்வு பெற்று அதை மேற்கொள்ள வேண்டும் . பொறுத்திருந்து பார்ப்போம்.

            இப்படி பட்ட சிந்தனைகள் அம்மலை அடிவார அரச மர காற்றில் அமர்ந்திருந்த என் எண்ணத்தில்  தோன்றியது . ரோட்டின் ஓரம் ஒரு கல்  மண்டபம் இருந்தது . அது எனக்குள் ஏதோ ஒன்றை சொல்லுவது போல் உணர்ந்தவனாக , அருகில் இருந்த தங்கச் சாமியிடம் எதற்கு அங்கு மண்டபம் என கேட்டேன். அவர் இதுவரை மகிழ்ச்சியாக பதில் சொல்லியவர் . இவன் ஏன் இதனை கேட்கிறான் என்பது போல என்னை ஏறிட்டு பார்த்தார். "என்னங்க ஐயா ...எதுவும் பேசாமல் இருக்கீங்க என்றேன். "" இல்லைப்ப இது தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் குல தெய்வம் ..அவர்கள் கும்பிடுகிற சாமி ." என மெல்லிய  தேய்ந்த குரலில் கூறினார்.

          கிராமத்து ஏற்றத்  தாழ்வுகள் அங்கும் குடி கொண்டுள்ளதை அறிய முடிந்தது. சமணர்களால் இவர்கள் வாழ்கையில் சில மாற்றங்களை கொண்டு வந்தாலும் அவர்களின் மனதில் புரையோடி உள்ள இந்த சாதிய தாழ்வுகள் இன்னும் மறையாமல்  , அப்படியே அடி மனதில் புதைந்துள்ளது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இங்குள்ள ஊரணிகள் வற்றாமல் இருப்பது , இவர்களின் அறியாமையை நினைத்து நித்தம் கண்ணீர் வடிப்பதால் தானோ ? என்ற எண்ணம் ஏற்படச் செய்தது. மலை மீது இருந்து வழியும் தண்ணீர் கூட  இவர்களின் அறியாமையை, மூடதனத்தை பார்த்து மலை விடும் கண்ணீராகவே தென்பட்டது.

          நானும் அப்பாவியாக , "அங்க தனியா குல தெய்வம் இருக்குன்னா.. இந்த கோவிலில சாமி கும்பிட வர மாட்டங்களா ...?" என்று அதிர்ச்சியுடன் அரிச்சந்திரனிடம் கேட்டேன் . "இல்லை அவர்கள் தாராளமா கும்பிடலாம் ...ஆனா கோவிலுக்கு உள்ள செல்ல அனுமதி கிடையாது.." என்றார். "இன்னும் இந்த  கொடுமை இருக்கா ...காந்தி மீனாச்சி அம்மன் கோவிலுக்கு அரிஜனங்கள் நுழைந்த பின் தான் சென்றார்....அது போல இன்னும் ஒரு காந்தி பிறக்கணும் போல " என்றேன். அதற்குள் அவர் " நாங்கள் யாரயும் தற்போது தடுப்பதில்லை , ஆனாலும் அவர்கள் யாரும் இது வரை இந்த கோவிலுக்குள் சென்று கும்பிடனும்ன்னு அனுமதி கேட்டதும் இல்லை. அந்தமாதிரி யாரும் தப்ப நினைக்கவும் இல்லை .." என்றார்.

     மலையை போல கிரமாமும் தன் பழமையை மறக்காமல் இருக்கிறது . மிகவும் ஆச்சரியம் தான். நீண்ட மௌனத்திற்கு பின் அவர்களிடம் இருந்து விடை பெற்று , எங்கள் காரில் பயணத்தை தொடங்கினோம்.

      சமண மலை விட்டு வெகு தொலைவில் வந்திருப்போம். அப்போது தான் நினைவுக்கு வந்தது , மதியம் உணவு அருந்தவில்லை என்பது . மலையில் வசித்த சமண முனிவர்கள் இப்படித்தான் இயற்க்கை காற்றை சுவாசித்து நீண்ட சக்தியுடன் வாழ்ந்திருப்பார்களா!  என வியக்க வைக்கிறது. மலை மீது இருக்கும் போது , நாங்கள் எந்த அக நினைவுகளும் அற்று , மலையை போன்ற உணர்வுடன் , எங்களுக்குள் சக்திகள் நிரம்பி , அமைதியாகவும் , சாந்தமாகவும் , வந்த வேலையில் கவனாமாக இருந்து இயற்கையை ரசித்து, அதனுடனே லயித்து ,தகவல்களை மட்டும் செகரிப்பவர்களாக இருந்தோம் !
மலை நமக்கு புகட்டும் பாடமும் , வரலாறும் விலை மதிப்புகள் அற்றவை .அவைகள் மீண்டும் எம்மை தன் நினைவுகளுக்குள் அழைப்பதாகவே  உணருகின்றேன் ! அடுத்த முறை புதிய தகவல்கள் நமக்கு தரும் என்று நம்புகிறேன்.

                                                பயணம் தொடரும் ...அடுத்து சாமநத்தம்.
 

6 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லதொரு அனுபவம்.. நம்மள விட்டுட்டுப் போயிட்டீங்க..:-((

சாதி பற்றிய விஷயங்கள் ரொம்ப அதிர்ச்சியா இருக்கு சரவணன்..

Unknown said...

நான் அதற்க்கு அருகாமையினில் தான் வசிக்கிறேன்
என்னை அங்கே சென்று வர தூண்டியது இந்த பதிவு
நன்றி

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

அருமையான பயணக் கட்டுரை. சிந்தனை எல்லாம் மலை மீதிருந்தாலும் - அது வடிக்கும் கண்ணீராக ஒரு நிகழ்வினை நினைத்துப் பார்த்த செயல் பாராட்டுக்குரியது.

நல்வாழ்த்துகள் சரவணன்

நட்புடன் சீனா

சுதர்ஷன் said...

நல்ல கேள்விகள் ....இந்த தொல்லியல் நிபுணர்கள் மேலையே கொஞ்சம் கடுப்பு தான் ... வெளிநாடுகளில் எதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தாலும் இங்குள்ளவர்களுக்கு தெரியும் ..ஆனால் நமது கண்டு பிடிப்புகள் ..

http://ethamil.blogspot.com/2010/10/2017.html

Unknown said...

GOOD POST

PVS said...

a good travelogue sir..keep going.i have read all your six blog posts regarding kuyilkudi samanar malai.....excellent work..a lot of ancient temples and rock cut caves in tamilnadu are in a worst condition!..after reading your blogs, now i like to go to kuyilkudi..if u don't mind, please tell me the correct route..from tirupur..in bike..thanks..

Post a Comment