Wednesday, April 14, 2010

8டாத அறிவு ..

"என்னடா ரமேஷ்...பாட்டி வீட்டுக்கு அடிகடி போகிற...?"

"அத ஏன்டா கேக்கிற....எம்டன் மகன் மாதிரி ஆச்சுடா ...என் பொழப்பு ...?"

"அது என்னடா...எம்டன் மகன் ....?"

"நீயே விவரமான ஆளு உனக்காத் தெரியாது...?அதாண்ட என் தாத்தா சாக பொழைக்க கிடக்கிறார் ...பொழுதுக்கும் என்னை கூப்பிட்டு பால் ஊத்த சொல்லுறாங்க  ..."

"அட அது ஏன் தெர்யுமா...? "

"ஏதோ அவரு ஆத்மா சாந்தி அடையானுமா....?"

"அட மடையா....அது இல்ல ...நம்மளை போன்ற பெரியவர்கள்  செய்ய முடியாத ஒன்றை குழந்தைகள் செய்யும் அது தெரிந்தா...நீ இத செய்யமாட்ட....?"

"அது என்னடா...செய்ய முடியாத ஒன்ணு ...."

"மூச்சு  விட்டுக் கொண்டே விழுங்குவது தான் ...என்ன புரிஞ்சுதா ...நீ எதுக்கு பால் ஊத்திரன்னு ..."

"அண்ணே ..புரியலா ....?"

"அங்க பாரு நீ ஊத்தின பாலில உசிரு போய் ...சங்கு ஊதுகிற சத்தம் காதை  பிளக்குது..."
"என்னடா...சொல்லுற .. டாக்டர் ...மூச்சு ...போக இரண்டு நாள் ஆகும்னு சொன்னாரே..."

"அதைதான் ...இன்று ஒரே நாளில நாலஞ்சு தடவை பால் ஊத்துறேன்னு ...சொல்லி ..மூச்சு விட்டுட்டாரே  ... பால் விழுங்கும் போது மூச்சும் சேர்ந்து விட முடியாதானால ...போய் சேர்ந்து விட்டார்....எல்லாரும் சேர்ந்து  கொண்ணுடீங்க..."

"நிஜமாவா....எங்க தாதாவுக்கு வயசு எழுபது....வயசு ஆயிடுச்சுள்ள ....அதன் போய் சேர்ந்திட்டாரு..."

"அப்ப அவரு பூமியை இரண்டரை முறை சுற்றி வந்துள்ளார்...."

"டேய் புரியும் படி சொல்லுடா..."

"அதாவது ...எழுபது வயதான மனிதன் தன் வாழ் நாளில் எழுபதாயிரம் மைல்கள் நடந்திருப்பான். இது பூமியை இரண்டரை முறை சுற்றி வந்ததற்கு சமம்"

(ஐய்யோ .. என்ன பெத்த மாகராசா...போயிட்டீங்களே...)

"பாரு ,உன் அம்மா ...அழுதுட்டே..போறாங்க ...என்னை நம்பு ...உன் பால் தான் மூச்சு போக வச்சுது ...போய் செய்ய வேண்டிய மீதி காரியத்தை செய் ...."

"!!!!!"  

3 comments:

எல் கே said...

puthiya vilakkam

ஸ்ரீராம். said...

அப்படியா..?
School Library Books உபயோகப் படுதோ...!

Ahamed irshad said...

Nice & Different post.

Post a Comment