Friday, January 8, 2010

ஜனநாயகம்

இந்த வாரம் குமுதத்தில் 'சொல்லு, லொள்ளு, ஜொள்ளு ' பகுதியில் "தேர்தல் கமிசன் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது "
என்கிறார் தலைமை தேர்தல் அதிகாரி நவீன் சாவ்லா.

"75 சதவீதம் அட்டெண்டன்ஸ் இருந்தால்  எங்களை தேர்வு எழத அனுமதிக்கிறார்கள். ஆனால் நாடாளுமன்றத்துக்கு வராமல் எம். பி.க்கள் மட்டம் போடுகின்றனர். இதை  தடுக்க என்ன வழி? " 
 
    இன்று மாணவர்கள் விழித்துக் கொண்டுள்ளனர். இன்றைய கல்வி   முறை  மாணவர்களுக்கு சிந்திக்கும் திறனை வளர்த்துள்ளன. அரசியல் தலைவர்கள் இதை உணர்ந்து செயல்படும் நேரம் வெகு தொலைவில் இல்லை.
இடை தேர்தல் போல் பணம் கொடுத்து பதவி வாங்கும் உறுப்பினர்கள் எப்படி மன்றத்திற்கு  செல்வார்கள்.
           ஜனங்கள் பணம் வாங்கியதால்,  ஜனநாயகம் செத்துவிடவில்லை. நீங்கள் அறுவடை செய்யவில்லை , விதைத்துள்ளீர்கள் ,ஜனநாயகத்தின் உண்மை, மரமாய் முளைக்கும் , வரமாய் இருந்து ,மாய்க்கும் .
            18 வயதில் ஒட்டு போட்டும் உரிமை இருந்தாலும், இன்று நான்காம்
 வகுப்பில் ஊராட்சி மன்றம் ,மாநகராட்சி போன்ற பாடங்கள் இருப்பினும் , மாணவர்கள் முன்று,நான்காம் வகுப்பில் ஓட்டு போடுவது நமது கடமை, கடமையை செய்ய யாருடனும் சேர்ந்து பணம் கொடுக்கவோ ,வாங்கவோ கூடாது என அறிவுறுத்தும் விதமாக பாடம் அமைய வேண்டும். சமச்சீர் கல்வி இதை நினைவில் நிறுத்தினால்
தேர்தல் நேரத்தில் குடும்பத்தில் பணம் கொடுத்தாலும் அது தவறு என இளம் தளிர் நமக்கு பாடம் கற்றுத்தரும். 
                கல்லூரியில்  கேட்கும் இம்மாதிரியான வினாக்கள் , வீட்டில் கேட்கப்பட்டு   ஜனநாயகம் மலர்ந்து , நல்ல ஆட்சி மலரும்.               

No comments:

Post a Comment