Tuesday, December 29, 2009

மரணம்

மரணம்
மனு போட்டாலும் வராது !
மறுத்தாலும் விடாது !

மரணிக்கும் வரை
வாழ்வை வசமாக்கு!
மரணிக்கும் போது
வாழ்வு வரலாறு ஆகும்!

இவ்வாண்டின் மரணம் 
புத்தாண்டின் விடியலுக்கு
விட்டுச்செல்லும் வெளிச்சம் !

தனி மனித மரணம்
தன் சந்ததிக்கு
கற்றுத்தரும் பாடம்
ஒவ்வெரு நாளையும்
மரணமின்றி விடியலாக்கும்!

மரணத்தை கண்டு
மிரளாமல்
மரணத்தின் கைகளில்
முத்தமிட்டு
வாழ்வை வளமாக்குவோம்!  

1 comment:

மாதவன் said...

அப்ப மரண பயம் வேண்டாம்னு சொல்றீங்க.

Post a Comment