Tuesday, November 24, 2009

தனிமை


தனிமை
மனிதனை மாமனிதனாக்குவது, மனிதன் தன் இனத்துடன் மணிகணக்கில் செலவிடும் நேரம் அதிகமாகும் தருணங்கள் ஆகும். சற்று எண்ணிப்பாருங்கள் , சக்கரத்தில் ஆரம்பித்த மனித முன்னேற்றம், இன்று வரை தொடருகிறது என்றால், அது அவன் மனித சந்ததிகளுடன் கொண்டுள்ள தொடர்பும், அவர்கள் மீது வைத்துள்ள பற்றுதலும் ஆகும்.
மனிதன் தன் படைப்புகளை தனிமைப்படுத்தி, தனக்குத் தானே ரசித்து பிறருடன் தொடர்பு கொள்ளாமல் இருந்திருந்தால் உலகம் என்னவாயிருக்கும்? எண்ணிப் பாருங்கள். சக்கரத்துடன் முடிந்திருக்கும். ஒருவருக்குள் ஒருவர் தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதால் தான் சக்கரத்திலிருந்து சட்டிலைட் வரை சாத்தியமாயிற்று.
மனிதன் தன் இயல்பாகவே அனைவருடனும் ஒத்துவாழவே விரும்புகிறான். சிந்துசமவெளிக் காலத்தில் இருந்து அவன் கூட்டமாகவே வாழக் கற்றுக் கொண்டுள்ளான். அக்கூட்டத்துக்கு தேவையான அனைத்தும் அவன் ஒன்றாக இணைந்து பேசி முடிவெடுத்துள்ளான். சந்தோசம், துக்கம், கோபம் ஆகிய அனைத்தும் அவனால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. தனித்து என்றும் விடப்பட்டவனாக இல்லை, என்றும் கூட்டத்துடனே இருந்தான்.
மாறிவரும் உலகில் இன்று கூட்டுக் குடும்பங்களைக் காண முடிவதில்லை. குடும்பம் என்றால் தாய், தந்தை, ஒரு மகனோ அல்லது மகளோ என்ற நிலையில் , குழந்தைகள் தனிமை நோய்க்கு ஆளாக நேரிடுகிறது.
தனிமை என்றும் இனிமையாவது இல்லை. இனிமை என்றும் தனிமையானதில்லை. தனிமைக் கனவுகள் எப்போதும் நல்லவைகளாக இருந்ததில்லை. நல்லவைகள் என்றும் கனவுகளாக இருந்ததில்லை. நல்லக்கனவுகள் விஞ்ஞான படைப்புகளுக்கு உதவியாக இருந்துள்ளன. உ.ம். பென்சின் கண்டுபிடிப்பு .நியூட்டனின் தனிமை சிந்தனையை தூண்டி , ஆப்பிள் கீழே விழுந்தவுடன், அதற்கு காரணம் புவியிர்ப்பு விசை எனக் கூறச் செய்தது. ஆக, சில நேரங்களில் மட்டும் தனிமை சரியான சிந்தனையைத் தூண்டி , சிறந்த பயன்களை ஏற்படுத்தியுள்ளது.
மனிதன் தனிமைப்படுவது பல நேரங்களில் அவனின் தனிப்பட்ட கவலைகளுக்காக மட்டுமே. ஆனால், எல்லாரும் ஒவ்வருவரின் கவலையில் பங்கு கொள்ளவே விரும்புகின்றனர். கவலையில் தனிமை விரும்பும் எவரும் தன் கவலையை அடுத்தவருடன் பங்கு போடுவது கிடையாது, குறைந்த பட்சம் கூற விரும்புவதும் கிடையாது. இப்படிபட்டத் தனிமை, நாளடைவில் அவனை தற்கொலைக்கு தூண்டுவதாக அமைந்துவிடும்.
புத்தரின் தனிமைப் பயணம் உலகக் கவலை நீக்கிப் புறப்பட்டதாகும். தனிமை தனக்காக இல்லாமல் , பொதுநலம் நாடுவதாக இருப்பின் , நாம் தனிமை பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. தனியாக சிந்தித்தல் பல நேரங்களில் பண்பு நலன்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.
படைப்பாளியின் தனிமை கற்பனையைத் தூண்டி சிறந்த படைப்புகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. படைப்புகள் அவனின் சிறந்த கற்பனைத் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்தால் , படைப்பாளி அதேப் போன்ற தனிமையை நாடுகிறான்.
இன்று குழந்தைகள் தனிமையை நாடினால் நாம் பயப்பட வேண்டியுள்ளது. ஏனெனில் , தனிமையில் வளர்க்கப்பட்ட நம் குழந்தைகள் எப்படி நம்மை நாடாமல் இருக்க முடியும் ? ஆக, அவனுக்கோ அல்லது அவளுக்கோ ஏதோ பிரச்சனை இருக்கப் போய் அவர்கள் நம்மை விட்டு பிரிந்து தனிமையை நாடுகின்றனர். உடனே அவர்களை அழைத்து பேசி , அதற்க்கானத் தீர்வை நாம் எடுக்க வேண்டும்.
செய்திதாள்களில் வரும் பாலியல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் இத் தனிமைத் தான். தனிமை மிகவும் கொடியது. தனிமை நம்மில் பலரை தவறான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும்.
பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பல சமயங்களில் சேர்ந்து படிக்கச் செய்வதன் நோக்கம் இது தான். கூட்டாகப் படிக்கும் போது நம் சந்தேகங்களை தீர்வு காண முடியும். சக நண்பரிடம் உதவி பெற முடியும்.
இன்று கல்வியாளர்கள் பலரும் குழுக் கற்றல் முறையை கடைபிடிக்கச் சொல்வதன் நோக்கமும் இது௦தான் . செயல் வழிக்கற்றலின் அடிப்படை தன்மையும் அதுவே. மாணவர்கள் ஆறு குழுக்களாக பிரிந்து கற்பதன் மூலம் தன் நண்பரிடம் அவனின் சந்தேகங்களை கேட்கிறான். அவன் நாளடைவில் கூச்சம் நீங்கி , ஆசிரியரிடம் தன் ஐயத்தை நீக்க தைரியமாக கேள்விகளை கேட்கும் பண்பு வளர்கிறது.
பள்ளியின் நடைமுறைப் பண்புகள் மாறிவரும் போது, பொற்றேர்கள் ஆகிய நாமும் நம் பிள்ளைகள் தனிமையை நாடுவதைக் கவனிக்க வேண்டும். தனிமை தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். தனிமை மௌனம் தவறானது. தற்கொலைக்கு கூடத் தூண்டிவிடும் .ஆரம்பத்திலேயே அதை வளரவிடக்கூடாது. தனிமையில் போன் பேசுவது ,தனியாக சிரிப்பது , தனியாக நடப்பது, யாருடனும் பேசாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளை கண்டுப்பிடித்து நாம் உடனே தீர்வு காண வேண்டும்.
வீட்டில் குழந்தைகளுடன் உங்கள் பொழுதுகளைச் செலவிடுங்கள். குழந்தைகளை வாரம் ஒரு முறை உறவினர் வீட்டிற்கு கூட்டிச் செல்லுங்கள். கோவிலுக்கு கூட்டிச் செல்லுங்கள். பார்க் கூட்டிச் சென்று ,அவர்களுடன் அனைத்து விசயங்களையும் பேசுங்கள். ஆலோசனைக் கூறுங்கள். குழந்தகளுடன் குழந்தைகளாக விளையாடுங்கள்.
தனிமை பாசத்துக்கு ஏங்குவதாக இருப்பின் நம் நெருக்கம் பாசத்தைக் கொடுக்கும் . தனிமை பாலுணர்வு சம்பந்தப்பட்டதாக இருப்பின் அது நம்முடன் பழகுவதால் அச்சத்தைப் போக்கி சந்தேகங்களை நீக்குவதாக அமையும். காதல் விசயமாக இருப்பின் நம் நேசம் அவர்களை பேசவும் , நம்முடன் விவாதிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.
உங்கள் குழந்தையுடன் பழகுங்கள். பாசத்தைப் பொழியுங்கள் ! தனிமைப் பேயை விரட்டுங்கள்! தவறாது ஆலோசனைக் கூறுங்கள் !

2 comments:

மாதவன் said...

// ஜன்ஸ்டினின் தனிமை சிந்தனையை தூண்டி , ஆப்பிள் கீழே விழுந்தவுடன், அதற்கு காரணம் புவியிர்ப்பு விசை எனக் கூறச் செய்தது //

புவியிர்ப்பு விசையை கண்டுபிடித்து நீயுட்டன் என்று நினைக்கிறேன்.

பதிவு நன்றாக இருக்கிறது.

முனைவர் இரா.குணசீலன் said...

ஒரு மனிதன் தனிமையில் என்ன சிந்திக்கிறானோ..
அந்த சிந்தனையே அந்த மனிதனின் அடிப்படை அடையாளம் என்பது அனுபவமொழி..
நல்ல கட்டுரை நண்பரே..

Post a Comment