Monday, November 30, 2009

ஆஸ்துமா


ரோட்டில் கூட்டம் கூடியிருந்தது. என்னவென்று பார்க்க நானும் பைக்கை நிறுத்தி இறங்கி பார்த்தேன். பள்ளி வயதுடைய பையனின் நெஞ்சு, முன்னும் பின்னும் இழுத்து மூச்சுவிட சிரமப்பட்டு கொண்டிருந்தான்.

கூட்டத்திலிருந்த பெரியவர் “அட வழியை விடுங்கப்பா .. காத்த மறைக்காதிங்கப்பா....ஆஸ்த்துமா போல இருககு... சூடா ஒரு டீக் குடுங்கப்பா... ” என்றார்.
“தம்பி ,மாத்திரை எதுவும் வைச்சிருக்கியா ?”
அவன் சட்டைப் பையைக்காண்பித்தான். சூடான டீயுடன் அவன் வைத்துள்ள மாத்திரையைக் கொடுத்தார். சிறிது நேரத்தில் எல்லாம் மறைங்சு போச்சு !
அவன் இரண்டாவது படிக்கிறான் என்பதை அவனின் கிழிந்த பைக்குள் இருந்து புத்தகம் காட்டியது. எனக்கு ஆச்சரியம்! இவ்வளவு சிறிய வயதில் ஆஸ்த்துமா வா ! எப்படி? என வியப்பில் ஆஸ்துமா பற்றிய விவரங்களை பிறரிடமும் , புத்தகங்கள் வாயிலாகத் தெரிந்து கொண்டேன்.
‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் மோட்டார் ரூமில் புகையால் மூச்சுத்திணறலில் இறந்த சக்தி கதாப்பாத்திரம் என் நினைவிற்க்கு வந்தது.
ஆஸ்துமா என்பது மூச்சிரைப்பு நோய் ஆகும். இதற்கு வயது வித்தியாசம் கிடையாது. சாதி, மத , நிறப் பேதம் கிடையாது . ஏழை, பணக்காரர் வித்தியாசம் கிடையாது. இது ஒருவர்க்கு தொடர்ந்தும் வாழ்க்கை முழுவதும் வரலாம். இளம் வயதில் வந்து நாளடைவில் மறையலாம் அல்லது அவ்வப்போது வந்து தொல்லைக் கொடுக்கலாம்.
உலகில் 25 பேரில் ஒருவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகிறார். சுவாசிப்பை சிரமப்படுத்தி நுரையீரல் இயக்கத்தைப் பாதிக்கிறது . நுரையீரலில் இருந்துசுவாசக் குழாய் வழியாக நாம்சுவாசிக்கும் காற்று உள், வெளி சுவாசத்தை ஏற்படுத்துகிறது. சுவாசக் குழாய் அகலாமாகஇருந்தால் தான் காற்று நுரையீரலுக்கு சென்று சுவாசம் தடைப்படாமல் நடைப்பெறும்.
சுவாசக்குழாயில் வேண்டாத துகள்கள் , தூசிகள் அதாவது அன்னியப் பொருள்கள் நுரையீரலுக்குச் செல்வதை தடுக்க , இயற்க்கையாக சுவாசக் குழாயில் சளி, கபம் சுரக்கிறது. அன்னியப் பொருள்கள் இக்கபத்தில் , சளியில் ஒட்டிக் கொண்டு ,தூசு அற்ற காற்று நுரையீரலுக்கு செல்லும்.
ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கு சுவாசக்குழாய் சுவர் சுருங்கி , சுவாசித்தலை இந்த அன்னியப்பொருட்கள் தடுக்கும். மேலும் சளி ,கபம் வருவதும் அதிகமாகும். சுவாசககுழாய் சுருங்குவதால் இருமல் ஏற்படும். தொடர் இருமலால் சுவாசப் பாதையில் வீக்கம் , புண் ஏற்படும்.
தற்போது மழை அதிகமாகப் பொழிகின்றதே? அதனால் ஆஸ்துமா அதிகமாக இருக்குமா? அப்படியும் கூறிவிட முடியாது.சிலருக்கு குளிர்ந்த காற்றுபடுவதால் சுவாசக் குழாய் சுருங்கி ஆஸ்துமா ஏற்படலாம்.
சிலருக்கு வெயில் காலத்திலும் ஏற்படலாம் ! ஏனெனில் காற்றில் மகரந்த தூளின் அளவு அதிகமாக இருப்பதால் அவை சுவாசப்பாதையில் அலர்ஜி , ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது .
அலர்ஜியால் ஏற்படும் ஆஸ்துமா தான் அதிகம். ஒவ்வாமைப் பொருட்களினால் சுவாசிப்பு மறுப்பு ஏற்படுகிறது.
ஒருசிலருக்கு படுக்கை அறைக்குள் மட்டும் சென்றால் அலர்ஜி ஏற்படும். இருமல் வரும். மூச்சுதிணரல் வரும். அதற்கானக் காரணம், படுக்கையில் உள்ள நுண்கிருமிகள் ஆகும்.
தூசி,அழுக்கு , ஒட்டடை ஆகியவற்றின் மூலம் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். ஒருசிலருக்கு மோட்டார் புகை, சிகிரெட்புகை , பொயிண்ட் வாடை , வாசனைத்திரவிய வாடை போன்றவற்றால் அலர்ஜி ஏற்பட்டு ஆஸ்துமா உண்டாகலாம்.
ஆஸ்துமாவினைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது. உடற்பயிற்சி செய்யும் போது நெஞ்சில் ஒர் அழுத்தம் ஏற்படுவதைப் போன்று உணர்வுடன் கூடிய மூச்சிரைப்பு ஏற்பட்டால் ஆஸ்துமா பாதிப்புள்ளது அறியலாம்.
ஒருசில பொருட்களை நுகர்ந்தால் இருமல் வரும், தொடர்ந்து மூச்சுவிட சிரமப்பட்டால் அது ஒவ்வாமைக்கான ஆஸ்துமாவிற்கான அறிகுறி.
அறிவியல் ரீதியாக நம் உடம்பின் ஊன் நீருடன் ஒவ்வாமை என மருத்துவரால் அறியப்பட்ட பொருட்களைக் கொண்டு ஆராயும் போது ஏற்படும் மாற்றங்களை கொண்டு அறியலாம்.
ஆகவே, ஒவ்வாமைப் பொருட்கள் உள்ள இடங்களில் இருந்து ஒதுங்கி யிருப்பதன் மூலம் ஆஸ்துமாவைத் தவிர்கலாம்.
மருத்துவர் ஆலோசனைப்ப்டி, பிராங்கோ டை லேட்டர் (காற்று குழாய் விரிவடைய ) , கார்டிகோ ஸ்டீராய்ட்ஸ் (தீவிர ஆஸ்துமாவுக்கு) , ஆண்டி ஹீஸ்டமீன்(பிற உறுப்புகளுக்கு புண்பரவிடாமல் தடுக்க) , சோடியம் குரோமோ கிளைகேட் (ஆஸ்துமா தாக்குதல் தொடராமல் பாதுகாக்கிறது) மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
சரியானப்படி , சுவாசப் பயிற்சி செய்வதான் மூலம் நாம் ஆஸ்துமாவை நிறுத்தலாம்.
ஆஸ்துமா ஒவ்வாமையால் தான் ஏற்படுகிற்து என்பதைப் புரிந்து செயல் படுவோம். மனம் ஒரு பொருளை விரும்பாமல் அதை நாம் கட்டாயப் படுத்தி ஏற்றுக் கொள்ளச் செய்தோமானால், இரத்தக் குழாய் அடைத்து உடனடி இறப்பு எற்படும். இதன் மருத்துவ பெயர் ‘அனாபைலாக்ஸிஸ்’ என்ப்படும்.
ஆம், மனசு மிகப் பொரியது, மகத்தானது , அற்புதசக்திப் படைத்தது . ஆகவே, மனசை கோணாமல் வைத்துக் கொள்ள வேண்டும். மனசு ஒடிச்சுப் போச்சுன்னா வாழ்க்கை முடிந்துப் போச்சு ன்னு அர்த்தம். தயவு செய்து நம் குழந்தைகள் மனசு கோணாமல் , அதை புரிந்து எதையும் திணிக்காமல் பக்குவமாக நடந்தால், அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். என்றும் அவர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் .

2 comments:

மாதவன் said...

நல்ல பதிவு. அனைத்தையும் bold செய்திருப்பதால் படிப்பதற்கு கஷ்டமாக உள்ளது.

Several tips said...

மிக அருமை

Post a Comment