Thursday, November 5, 2009

குருவே சரணம்

அன்பான மொழியாலே பண்பை வளர்ப்பவரே !

ஆற்றலை முறைபடுத்தி ஒழுக்க நெறி வளர்ப்பவரே !

இனிமையாய் கற்றலை இனிதாய் வளர்ப்பவரே !

ஈதலின் பண்பை வளர்த்து மனித நேயம் வளர்ப்பவரே !

உண்மையாய் பேசி சத்தியம் வளர்ப்பவரே !

ஊறு விளைவிக்கும் எண்ணம் அழித்து உதவி செய்யும் பண்பை வளர்ப்பவரே!

௦௦எண்ணங்களிலே நல்லதையே விதைப்பவரே !

ஏணிப்படியாய் இருந்து எங்களை உயர்த்திப் பார்ப்பவரே !

ஐயம் நீக்கி அறிவை வளர்ப்பவரே !

ஒளியாய் இருந்து வழி காட்டுபவரே!

ஓங்கும் வளர்ச்சிக்கு உரமாய் விளங்குபவரே!

ஒளவை மொழியில் தமிழை தவமாய் வளர்ப்பவரே!

எஃகு மனம் கெண்டு தேசியம் வளர்ப்பவரே!

எனதருமை ஆசிரியர் .

2 comments:

மதுரை சரவணன் said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

ஆசிரியப் பணியே அறப்பணி !
அதற்கே உனை அர்ப்பணி !

என்ற நோக்கத்துடன் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் உள்ள நாடு நம் நாடு

நல்ல குரு வணக்கத்துடன் துவங்கப்பட்ட பதிவு
நல்வாழ்த்துகள் சரவணன்
நட்புடன் சீனா

Post a Comment