Sunday, November 15, 2009

குழந்தைகள் தினவிழா நிகழ்ச்சிகள்

குழந்தைகள் தினவிழா நிகழ்ச்சிகள் பலவற்றில் நான் கலந்து கொண்ட போது ஏற்பட்ட அனுபவத்தை உங்களிடம் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நேருவின் பிறந்த நாள் என்பதுடன் முடிவடையாமல், மாணவர்களின் திறமைகளின் வெளிப்பாடக அமைந்ததில் மதுரை பொருமை சேர்த்து இருந்தது.
மாணவர்களை ஆசிரியர்கள் கட்டுரை, கவிதை, பேச்சு, நடனம், பாட்டு என பல விதங்களில் திறமைகளை வெளிப்படுத்தி, அவர்களின் ஆளுமையினை வெளிக்கொணர்ந்தனர். இருப்பினும் இத்தருணம் குழந்தைகளை ஆசிரியர்கள் மகிழ்விக்க வேண்டும்.ஆகவே, இத்தினத்தில் ஆசிரியர்கள் தான் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி , மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதுடன், அறிவுகண் திறந்து, தேசியம் பற்றி சிந்தனையைத் தூண்ட வேண்டும்.
அன்று உலக சக்கரை நோய் தினம் என்பதையும் நினைவுப் படுத்துவதுடன், உணவு முறை, உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்த்த வேண்டும். ஆரோக்கியமான மனிதனாலே மட்டும் தான் ஆரோக்கியமான உலகத்தை படைக்க முடியும்.
நேருவின் வாழ்க்கை நிகழ்வுகளை நாடகமாகவும், நடனம் மூலமாகவும்,நல்ல சுவையான பேச்சின் வாயிலாக விளக்குவதுடன்,அவரின் பண்பினால் அவர் பெற்ற பயனையும் விளக்கி , அப்பண்புகளைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும்.
நேருவின் வாழ்வில் நடைப்பெற்ற இரு நிகழ்வுகளை இங்கு பகிர்ந்து அப்பண்புகளை நம் இளைய சமுதாயம் பொற்று நாடு நலம் பெற முயற்சிப்போம்!
நேரு அவர்கள் தன் அலுவலகத்தில் இருந்து திடீரென்று காணாமல் போய்விட்டதாக செய்தி பரவ , அனைவரும் டெல்லி முழுவதும் தேடுகின்றனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர் சரியாக நாற்பது நிமிடம் கழித்து கிடைக்கிறார்!
அவர் அலுவலகத்தின் லிப்ட் ஆப்பிரேட்டர், லிப்ட்டை சரி செய்து, லிப்ட் இயங்குகிறதா? என சரிப்பார்க்க வரும் போது,லிப்ட்டில் பாரத பிரதமர் மாட்டி இருப்பது தெரிய வந்தது. அனைவரும் லிப்ட் ஆப்பிரேட்டரை நேரு தண்டிக்கப் போகிறார் என நினைத்தப் போது , நேரு அவரைப் பாராட்டி , அவரின் செயலை ஊக்கப் படுத்தினார்.என்ன வியப்பாக இருக்கிறதா? அப்படி என்ன நடந்தது?
அந்தநாற்பது நிமிடமும் அந்த லிப்டில்லிப்ட் ஆப்பிரேட்டர் வைத்த புத்தகத்தை வாசித்துள்ளார். நாற்பது நிமிடத்தையும் பயனுள்ளதாக கழித்துள்ளார். அந்நிகழ்விற்கு பின் லிப்டில் பயனுள்ள புத்தகங்கள் வைக்கவும் கட்டளை யிட்டுள்ளார். இதன் மூலம் புத்தகத்தின் அருமையினை உணர்த்துவதுடன் , அதனால் பக்குவப்பட்ட நேருவின் மனது லிப்ட்ஆப்பிரேட்டரை தண்டிக்காமல் அவரை ஊக்கப்படுத்தியுள்ளது.
இரண்டாவது சம்பவம், பக்ரநங்கல் அணையை திறக்கும் நிகழ்வின் போது , அந்த அணையை கட்டியவர்களில் ஒருவர் தான் அந்த அணையை திறக்க வேண்டும் எனக் கூறி, அங்கு இருந்த கொத்தனாரைத் திறக்கச் செய்தார். உழைப்பாளிகளை மதித்ததால் தான் அவர் இறக்கும் வரையில் பாரதப்பிரதமாரக இருந்தார்.
இனி வரும் காலங்களில் குழந்தைகள்தினத்தன்று ஆசிரியர்கள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு குழந்தைகளை மகிழ்விப்போம்!

1 comment:

மாதவன் said...

நேரு பற்றிய மேற்கோள் அருமை.

Post a Comment