Saturday, November 21, 2009

மதுரைக்காரன்



நான் என் உயிர்தோழியுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் தன் கணவரிடம் என் பிளாக் பற்றி கூறிய போது, அவர் இனி நான் தொடர்ந்து எழுத கிடைத்த நல்ல வாய்ப்பு எனக் கூறி, மதுரை பற்றி தெரிந்தவற்றைக் கூறவும் அறிவுரைக் கூறியுள்ளார்.


நான் சும்மா இருக்காமல் மதுரை பற்றி நிறையத் தெரியும் எதை பற்றி எழுத வேண்டும் ? என நீங்களே கூறுங்கள் என்றேன். அதற்கு அவர் நாளை சொல்லுகிறேன் என்று புறப்பட்டார்.
மறுநாள் சந்தித்த போது என் கணவர் உங்களிடம் சில கேள்விகளைக் கொடுத்துள்ளார் என கீழ்கண்ட வினாக்களை காண்பித்துள்ளார். அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


1. கீழை நாடுகளின் ஏதென்ஸ் எனப்படும் இடம் எது?
2. மதுரையின் சரித்திர காலப் பெயர் என்ன?
3. தமிழகத்தின் இரண்டாவது மாநகராட்சி எது?
4. காமராசர் பல்கலைக்கழகம் எங்குள்ளது?
5. மதுரை அரசு அருங்காட்சியகம் (காந்தி மீயுசியம்) எப்போது எற்படுத்தப்பட்டது?
6. மதுரை மாவட்டத்தில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவிதம் எவ்வளவு?
7. நான்காவது தமிழ் சங்கம் எங்கு, எப்போது உருவாக்கப்பட்டது?
8. வண்டியூர் தெப்பக்குளத்தின் நீளம்,அகலம் எவ்வளவு?
9. சென்னைக்கு அடுத்த பெரிய நகரம் எது?


எங்கே முடிந்தவரை விடைக் கூறுங்கள் ? என எனக்கு விடப்பட்ட சவால்களை உங்களுக்கு முன்வைக்கிறேன்.


பொது அறிவு சோதனை போல் அமைந்தாலும் தயவுசெய்து இதுபோன்ற கேள்விகளுக்கு பின் உள்ள இடங்களைப் பற்றி எழுதச் சொன்னதாகக் கணவர் கூறினார் என்றார்.
யதார்த்தமாக அவர் கூறிய ஆலேசனையாக இருந்தாலும், நம்மில் எத்தனை பேர் நம் இருப்பிடம் பற்றி தெளிவான அறிவு படைத்தவாரக இருக்கிறோம்?சிந்தித்துப் பாருங்கள் ! மதுரையிலே பிறந்து வளர்ந்து , பல முறை தெப்பக்குளத்திலே கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அனால் இது நாள் வரை நான் அதன் நீள, அகலம் தெரிந்து கொள்ள எண்ணாதது ஏன்?திருமலை நாயக்கர் காலத்து வரலாறு என அப்போது என் நண்பர்கள் கூறியக் காலத்தும் ஆசை வாரதது ஏன்?


புத்தகத்திருவிழாவில் விளக்குத்தூண் பற்றி கூறிப்பிடும் போது அது பிளாக் பெர்ன் என்ற கலெக்டர் நினைவாகக் கட்டப்பட்டதாக அறிந்தேன். காந்தி மதுரையில் என். எம்.. சுப்புராம் வீட்டில் தங்கியதாகவும் , அது இப்போது மேலமாசி வீதியில் காதி பவன் ஆக உள்ளதாகவும் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.


மதுரை என்றவுடன் காந்தி ஆடைத்துறந்த வரலாறு நினைவுக்கு வரவேண்டும்.
தேசம் பற்றிய நேசிப்பு வளர வேண்டும் என்றால் நம் பிறந்த மண் பற்றிய வரலாறு நிச்சயம் தெரிந்து இருத்தல் அவசியம் . தன் மண்ணை நேசிப்பவனே , உறுதியாக தேசத்தை காப்பான். எவன் ஒருவன் தன் தேசத்தை மதிக்கிறானே , அவனே ஒவ்வொரு மனிதனையும் மதித்து மானிடச் சமுதாயம் உலகம் எங்கும் ஒரு தாய் பிள்ளையாக தழைத்திடச் செய்யுவான். இனி ஒவ்வெருவரும் தம் பிறந்த மண்ணின் மகிமை உணர்ந்து மானிடம் வளர நம் பிள்ளைகளிடம் வரலாறு கூறுவோம்.


மேலே கொடுக்கப் பட்டுள்ள வினாக்களுக்கு விடை: 1. மதுரை 2. கரம்பவனம் 3. மதுரை மாநகராட்சி 4. மதுரை 5. 1976 ௦6. 78.65% 7. 1901 8. நீளம் 1000 அடி அகலம் 950 அடி 9. மதுரை


வரலாறு தொடரும் ....

4 comments:

Unknown said...

It is an useful article. Try to know your own birth place.

Uma Madhavan said...

Post more articles about Madurai. As from Madurai I want to know more about it.

மாதவன் said...

நன்றாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.

Unknown said...

i think the second biggest city is coimbatore

Post a Comment