Thursday, January 19, 2012

மருந்திடப்பட்ட மரக்குச்சிகள்


பள்ளி தோட்டத்தின் பலகையில்
பூக்களை பறிக்காதீர்கள்
கையில் குச்சியுடன் ஆசிரியர்
வகுப்பறையில்…!
 -----------------------------
தெருவோர குப்பைதொட்டி
சிரிக்கிறது…
வகுப்பறையில் மாணவர்கள்…!
 -----------------------------------
வகுப்பறையில்
மரப்பாட்சி பொம்மைகள்
ஆசிரியரின் தோதுக்கு ஏற்ப
ஆட்டுவிக்கப்படுகின்றன…
மரக்குச்சிகளின் தலையில்
மருந்திடப்பட்டாலும் …
அது உராய்சும் இடத்தின்
பதத்தை பொருத்தே
பற்றி எரிகிறது….!


9 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

மரக்குச்சிகளின் தலையில்
மருந்திடப்பட்டாலும் …
அது உராய்சும் இடத்தின்
பதத்தை பொருத்தே
பற்றி எரிகிறது….!///

அப்போ ஆசிரியர் கையில் மாணவர்கள் எதிர்காலம் இல்லையா? தலைவரே........

தமிழ்வாசி பிரகாஷ் said...

தலைவரே தேடிபிடிச்சு வந்துட்டோம்ல.... ஹி..ஹி...

மதுரை சரவணன் said...

உரசி பார்க்கிற முதல் இடமே ஆசிரியர் தானே….
அங்கே வாய்ப்பு இல்லை எனில் அவன் எங்கும் வாய் திறக்க வாய்ப்பு இல்லை தலை…! கவிதை சரிதானே..!

Philosophy Prabhakaran said...

// தெருவோர குப்பைதொட்டி
சிரிக்கிறது…
வகுப்பறையில் மாணவர்கள்…! //

புரியலையே...

MaduraiGovindaraj said...

ஆசிரியர் அவர்களே வணக்கம்

விமர்சிக்கலாம?

கோகுல் said...

ஒவ்வொரு மருந்திடப்பட்ட குச்சியையும் பதம் பார்த்து உரச உங்களைப்போல ஆசிரியர்கள் வேணும்.

கடம்பவன குயில் said...

//மரக்குச்சிகளின் தலையில்
மருந்திடப்பட்டாலும் …
அது உராய்சும் இடத்தின்
பதத்தை பொருத்தே
பற்றி எரிகிறது….!//

உண்மைதான். உங்களை மாதிரி பதமான இடமானால் பளிச்சென மாணவன் பிரகாசிப்பான். எத்தனைபேர் உங்களைப்போல் டெடிகேசனோடு செயல்படுகிறார்கள்?!

K.s.s.Rajh said...

////பள்ளி தோட்டத்தின் பலகையில்
பூக்களை பறிக்காதீர்கள்
கையில் குச்சியுடன் ஆசிரியர்
வகுப்பறையில்…!
////
சிறப்பான கவிதை வரிகள் பாஸ்

சசிகலா said...

பள்ளி தோட்டத்தின் பலகையில்
பூக்களை பறிக்காதீர்கள்
கையில் குச்சியுடன் ஆசிரியர்
வகுப்பறையில்…!
அருமை

Post a Comment