Tuesday, September 27, 2011

பாடம்



வீட்டில்
தந்தை ஊதி தந்த
பலூனில் காற்று
வெளியேறிய போது
அழுதேன்…

பள்ளியில்
அதே காற்று
வெளியேறிய போது
சிரித்தேன்
இது ஆசிரியரின் மிதிவண்டியிலிருந்து….
சிரிப்பும் அழுகையும்
கலந்து தந்தது
பள்ளியை விட்டு சென்ற
எனக்கு
வெளி காற்று….!

6 comments:

Philosophy Prabhakaran said...

நல்ல கவிதை...

Unknown said...

மாப்ள வாழ்வின் யதார்த்தம் கவிதையாய்....!

SURYAJEEVA said...

அது என்னவோ கல்லூரியில் நுழையும் முதல் நாள் ஏனோ இறகு முளைத்த குஞ்சுகளின் பதற்றம் தொற்றிக் கொள்கிறது..

arasan said...

யதார்த்த வரிகளில் இயல்பான கவிதை ..

ShankarG said...

உங்களது கவிதை எளிமையாகவும், கருத்து மிக்கதாகவும் உள்ளது திரு. சரவணன் அவர்களே. வாழ்த்துக்கள்.

நாவலந்தீவு said...

அட. அருமை.

Post a Comment