Tuesday, March 22, 2011

எங்கள் வீட்டுக் கிழவி


நீண்டு வளர்ந்து
தொங்கும் காது
அனுபவங்களை
சுருக்கமாக
கொண்ட முகம்
நிற்க மறுக்கும் தலை
நடுங்கிய படி
வெத்திலை
இடிக்கும் கரங்கள்
சிவந்து
தடித்த நாக்கு
பற்களற்ற வாயுடனே
எங்கள் வீட்டுக் கிழவி
இடித்து இடித்து
எங்கள் நகரத்தின்
கதைகளை
வாயில் குதப்பி
துப்புகிறாள்..!

11 comments:

vasu balaji said...

:) nice

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல கவிதை....

எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

tamilbirdszz said...

சிறப்பு சிறப்பு

ஹேமா said...

இப்பல்லாம் கவிதைகள் அழகாக வருகிறது உங்களுக்கு !

shanmugavel said...

எல்லா வீட்டு பாட்டியும்தான்.நன்று.

Unknown said...

நல்ல கவிதை...

G.M Balasubramaniam said...

இருந்த இடத்தில் இருந்தே நகரத்தின் கதைகள் கிழவிக்குத் தெரிகிறதென்றால், பலே கிழவிதான்.

Anonymous said...

நிற்க மறுக்கும் தலைநடுங்கிய படிவெத்திலை இடிக்கும் கரங்கள்
முதுமையின் கரங்களின் தழுவல். இதை நோக்கித் தானே நாம் போகிறோம்.நடுங்கிய படி...நிலையில்ல வாழ்வு.......நாம் மனதில் கொள்ள வேண்டியது....

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - நம் கிராமப்புரங்களில் இன்றும் இருக்கும் நமது பாட்டிகள் ( கிழவிகள் என அன்புடன் அழைக்கப்படும் ) - அனுபவங்களைக் கதையாகச் சொல்லும் விதமே தனி தான். நல்லதொரு கவிதை - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க..

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

நல்ல கவிதைசரவணன்....

Post a Comment