Friday, March 4, 2011

நம்பிக்கை

அறிவிலியானேன்
புனைவுகளின் வாழ்வில் 
கண் திறந்த கனவுகளில் 
மார்கழி கோலமாய்
வண்ணமிட்டு வந்தாய் 
இதயத்தில் நீ(ர்) தெளித்து 
குப்பைக் கூடைகள் நிரம்பின 
வார்த்தைகள் வந்து விழாமல் 
வார்த்தைகள் கை கூடும் போது 
பாதை மறந்த வழிப்போக்கனாய் 
அம்மாவசை இரவுகள் 
உன்னை காணாத நாட்கள் 
நீ நின்று சென்ற இடங்களில் 
வசிக்கிறேன் நம்பிக்கையுடன் 
உயிர்பெறுகிறது ஒரு துளி 
பெரு மழைக்காக ...

  


12 comments:

தங்கராசு நாகேந்திரன் said...

//உயிர்பெறுகிறது ஒரு துளி
பெரு மழைக்காக//
நல்ல நம்பிக்கை

சுதர்ஷன் said...

வாழ்த்துக்கள் :-)

ஹேமா said...

நம்பிக்கைதான் வாழ்க்கை !

vimalanperali said...

வணக்கம் சார்.நலம்தானே?நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

Unknown said...

///நீ நின்று சென்ற இடங்களில்
வசிக்கிறேன் நம்பிக்கையுடன்///


நம்பிக்கைதான் வாழ்க்கை ..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்லா இருக்குங்க கவிதை.. :-)

மாதேவி said...

நல்ல கவிதை.

இது இல்லை என்றால் வாழ்க்கை ??

R. Gopi said...

சிறப்பாக இருக்கிறது

Chitra said...

நல்ல கவிதை.

வசந்தா நடேசன் said...

//மார்கழி கோலமாய்
வண்ணமிட்டு வந்தாய்
இதயத்தில் நீ(ர்) தெளித்து
குப்பைக் கூடைகள் நிரம்பின//

நான் ரசித்த வரிகள்.. தொடருங்கள், நன்றி.

RAJA RAJA RAJAN said...

அருமை. அழகு.

MANO நாஞ்சில் மனோ said...

அருமை அருமை...

Post a Comment