Sunday, September 5, 2010

பொதுப்பாடத்திட்டத்தின் புதுமைப்போக்குகள்

”கல்வியின் முக்கியமான நோக்கம் , உலகில் அன்பும் , அமைதியும் நிலை நிறுத்தும்ப்டி செய்து , போர்களே இல்லாத உலகச் சூழ்நிலையை உருவாக்குவது தான்”

     தமிழகம் என்றும் அமைதி பூங்காவாகத் திகழ்வதற்கு நம் கல்வி முறையும் ,அதனை கற்பிக்கும் ஆசிரியர்களும் தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்கிறது.

     ஆசிரியர் தினப் பரிசாக நம் பாடத்திட்டத்தின் புதுமைப்போக்குகளையும் , நம் கற்பித்தலில் உள்ள புதுமைகளையும் உங்களுக்கு கட்டுரையாக தருவதில் பெருமைப்படுகிறேன்.

       அரசு முத்துக்குமரன் கமிட்டியுன் பரிந்துரைப்படி சமச்சீர் கல்வி முறையை ஏற்படுத்தி , நான்கு போர்டுகளையும் ஒருங்கிணைந்து, ஒரு பொது பாடத்திட்டத்தினை அமைத்து , அதனை நடைமுறைப்ப்டுத்தி , வெற்றிக் கண்டுள்ளது . அதனை முழுமைப்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பிலும் உள்ள எதிர்பார்ப்பு விரைவில் நடைந்தேறும்.

     அன்றாட வாழ்வின் எதார்த்தங்களில் இருந்தே கல்வியின் நோக்கம் உருப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் பொதுப்பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது புத்தகம் உருவாக்கத்தின் செயல் கமுக்கமாக நடைப்பெறாமல், ஒரு திறந்த மேடையாக அமைந்து, அதில் ஆசிரியர் மட்டுமல்லாது , எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள்,பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் என அனைவரையும் பங்குப் பெறச் செய்ததிலிருந்து அறிய வரலாம்.
  

    ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகங்கள் ஆசிரியர் மையப்படுத்தாமல், மாணவனை நோக்கியதாக எளிமை வாய்ந்ததாக அமைந்துள்ளது
குறிப்பிடத்தக்கது.

     மாணவனைக் கவர்ந்து இழுப்பதாக வண்ணமையமாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிந்த விலையில் தரமாக அச்சிடப்பட்டுள்ளது .பாடப்பொருள் மாணவனின் வாழ்வுடன் நேரடியாக தொடர்புடையதாகவுள்ளது.

     ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் ஒவ்வொரு பாடமுடிவிலும் , அ)இலக்கணமும் மொழித்திறனும் ஆ)வகுப்பறை திறன்கள் இ) வாழ்க்கைத்திறன்கள் என்ற அடிப்படையில் மதிப்பீட்டு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

     வாழ்க்கைத் திறன்கள் பகுதியில் நம்பிக்கை , முயற்சி, உயிர்களிடத்து அன்பு காட்டுதல், பிறருக்கு உதவுதல், உடற்பயிற்சி செய்தல், மறுத்தல் திறன், தன்னம்பிக்கை , இனிமையாக பேசுதல,முன் முயற்சி, பகுத்தாயும் திறன் போன்றவைகள் இடம் பெற்று ,மாணவனை முழுமைப்படுத்தி , வாழ்வில் பரிபுரண இன்பத்தை தருவாதாக கல்வி முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

       மாணவன் தன் நண்பர்களுடன், ஆசிரியருடன் எளிதாக தொடர்புக் கொள்ளும் விதமாக ,முதல் வகுப்பு தமிழ் பாடத்தில் அவன் வாழ்வில் அறியப்படும் சொற்களை வைத்து பாடப்புத்தகம் வடிக்கப்படுள்ளது. வடமொழிச் சொற்கள் நீக்கப்படுள்ளன.

      ஆறாம் வகுப்பு அறிவியல் மற்றும் சமுகவியல் பாடப்புத்தகங்கள் வண்ணமிக்கதாக அமைவதுடன், மாணவன் அறிவுச் சார்ந்த கருத்துக்களை மட்டும் உட்கொள்ளாமல், அதனை செரிக்கும் விதமாக பாடத்தின் நடுவே வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சிந்தனையைத் தூண்டும் வினாக்கள் கொடுக்கப்படுள்ளன.
உ.ம். குப்பைளை நமக்கு தீங்கு விளைவிக்காத பொருளாக மாற்ற முடியுமா?

    
       சுருங்கக்கூறின் , மாணவர்கள் வீட்டிலும் , வெளியிலும் பெறக் கூடிய அனுபவங்களை பாடச் சூழலில் இணைத்து , நம் சுற்றுப்புறச்சூழல் சீர்பட சிந்தனையைத் தூண்டும் விதமாக பாடத் திட்டம் அமைக்கப்படுள்ளது .


         கற்பித்தல் முறையில் காலை வந்தவுடன் மாணவனே சுய வருகைப்பதிவேடு செய்வதுடன் , காலநிலை அட்டவணை அவனே அன்றைய வானிலையை குறிப்பது, இளமையிலேயே இயற்கையின் மீது மாணவனுக்கு ஆர்வத்தினை மறைமுகமாக ஏற்படுத்தும் புதுமையான உத்தியாக உள்ளது.

      டி.வி. டி.வி,டி. கொண்டு ஆங்கில பாடம் நடத்தப்படுவது, மாணவனை ஆங்கிலத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும் , தனியார் பள்ளிகளுக்கு ஈடான ஒரு சிறந்த கல்வியை மாநகராட்சி பள்ளிகளும் எந்தவித தரமாற்றமின்றி தருவதாக உள்ளது.


     ஆரோக்கிய சக்கரம் மூலம் ஆசிரியர்கள் மாணவனுக்கு தன் சுத்தம் கற்பித்தலுடன் , மாணவனின் முற்போக்குச் சிந்தனையை கிளர்ச்சி செய்வதாக அமைந்துள்ளது.  மாணவன் வகுப்பறையின் ஏதோ ஒரு மூலையில் கிடக்கும் குப்பையை எடுத்து , வகுப்பில் உள்ள குப்பைத்தொட்டியில் போடுவது என்பது, உலகத்தூயமையினை மையப்படுத்து ஒரு சிறுப்புள்ளியில் இருந்து தொடங்குவதாகவே உள்ளது.


    ஆசிரியர்களுக்கு தரப்படும் யோக, தியானம் போன்றவை , மாணவனுக்குச் சென்
றடையும் போது , அது மாணவனின் கோபம் தணித்து, அவனது ஆற்றலை முறைப்படுத்தி , ஆக்கப்பூர்வமான செயலுக்கு பயன்படுத்துவதாகும்.


   செயல் வழிக்கற்றல் முறை பழையக்கற்றல் முறையில் இருந்து வேறுப்பட்டு  ஆசிரியருக்கு சிற்சில இடர்பாடுகளைத் தந்திருந்தாலும், இது மாணவனை மையப்படுத்தி
அமைந்துள்ளதால், மாணவன் ஆசிரியரின் மீது இருந்த பயம் நீக்கி , இடைநிற்றல் இன்றி , ஆவலுடன் பள்ளி வருவது தமிழகக் கல்வி முறையின் புதுமைப்போக்கிற்கு கிடைத்த வெற்றியாகும். இது நம் விஜயக்குமார் ஐ.பி.எஸ். அவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். அதானால் தான் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக நம் தமிழகக் கல்வி துறை விளங்குகிறது. அதிலும் துவக்கப்பள்ளியில் மாணவர்கள் மிக ஆர்வமுடன் வாசிப்புத் திறன் மிக்கவர்களாக காணப்ப்டுகின்றனர்.

      இந்த வாசிப்பின் வெற்றி தான், நம் கல்வியாளர்களை அடுத்தக் கட்டச் சிந்தனைக்கு கொண்டுச் சென்றுள்ளது. அது தான் ”புத்தப்பூங்கொத்து” . இருநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கொடுத்து , பாடப்புத்தகம் தவிர்த்து நூலகம் சார்ந்த அறிவு பொறுவதற்கு வகுப்பு நேரம் தவிர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.

    நூலகங்களில் உறங்கிக்கிடந்த புத்தகங்களுக்கு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. வாசிப்பின் நோக்கம் முழுமை அடையும் வகையில் புத்தகங்கள் மாணவர்கள் கைகளில் தவழ்வதுடன் ஆக்கப்பூர்வமாக சென்றடைய ஆசிரியர்கள் கொஞ்சம் சிரத்தைமேற்கொள்ள வேண்டும்.

   செயல் வழிக்கற்றல் வகுப்புகள், பழையக் கற்றல் முறைகளிலிருந்து மாறுப்பட்டுள்ளது. “பேசாதே, நிற்காதே, திரும்பாதே “ போன்ற அதட்டல்கள் அழிக்கப்பட்டு , வகுப்பறை சுதந்திரமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், மாணவனுக்கு அச்சம் நீக்கப்படுவதுடன், சகமாணவன் உதவி கிடைப்பதுடன் , அவனுக்கு மறைமுகமாக ஒருங்கிணைத்தல், பிரச்சனையை இடம் காணுதல் , பிரச்சனைக்கான தீர்வுக்காணுதல்,முடிவெடுத்தல், அதனை வெளிப்படுத்துதல் போன்ற குணங்கள் வளர்கின்றன அல்லது வளர்க்கப்படுகின்றன.


    இதனால், செயல் வழிக்கற்றலும், படைப்பாற்றல் கல்வி முறையும் மானப்பாடம் செய்யும் முறையை தடுக்கிறது. மனப்பாடம் செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், புரிந்துக் கற்றலை ஏற்படுத்துகிறது. அதனால், மாணவன் பாடத்தின் மையக்கருத்தினை அறிந்து, உணர்ந்தவானாக உள்ளதால், சிந்தனைச் செய்யும் திறனைப் பெற்று ,அதனை செயல் படுத்தும் திறனை அடைபவனாக உள்ளான். இதனாலே அவன் கற்பனை திறன் வளர்க்கப்படுகிறது.
  
      மாணவனுக்கு வலிந்து புகட்டுவதை விடுத்து , காரண, காரிய அறிவினையும் , அற நெறிகளையும் , அழகியல் விழுமங்களையும் வளர்ப்பதாக நம் செயல் வழிக்கற்றல் முறையில் பாடத்திட்டம் அமைந்திருப்பது பொதுப்படத்திட்டத்தின் தனிச்சிறப்பாகும்.


(ஆசிரியர் தினத்திற்காக எழுதப்பட்ட கட்டுரை , சுவையாக இருப்பினும் , அல்லது மாறுப்பட்டக்கருத்து இருப்பினும் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தலாம்)

5 comments:

சுவாமிநாதன் said...

பிடித்த வரிகள்
1. மாணவன் வகுப்பறையின் ஏதோ ஒரு மூலையில் கிடக்கும் குப்பையை எடுத்து , வகுப்பில் உள்ள குப்பைத்தொட்டியில் போடுவது என்பது, உலகத்தூயமையினை மையப்படுத்து ஒரு சிறுப்புள்ளியில் இருந்து தொடங்குவதாகவே உள்ளது.

2. ”புத்தப்பூங்கொத்து” - நூலகங்களில் உறங்கிக்கிடந்த புத்தகங்களுக்கு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. வாசிப்பின் நோக்கம் முழுமை அடையும் வகையில் புத்தகங்கள் மாணவர்கள் கைகளில் தவழ்வதுடன் ஆக்கப்பூர்வமாக சென்றடைய ஆசிரியர்கள் கொஞ்சம் சிரத்தைமேற்கொள்ள வேண்டும்.

அருமையான பகிர்வு நன்றி தொடரட்டும்

நமச்சிவாய வாழ்க said...

அன்புடையீர்,
தங்களது வருகைக்கு நன்றி.மீண்டும் ஒரு உரையினை பதிவிட்டுள்ளேன்.வருகை தாருங்கள்.
அன்புடன்
சீனிவாசன்

மோகன்ஜி said...

நல்ல கருத்து செறிவுள்ள பதிவு சரவணன். சிந்திக்கப் பட வேண்டிய கருத்துக்கள்.

குட்டிப்பையா|Kutipaiya said...

nalla vishayam!!!

குமரன் (Kumaran) said...

மகிழ்ச்சி சரவணன்.

Post a Comment