Sunday, September 19, 2010

சமச்சீர் கல்வி கருத்தரங்கு ஒரு அலசல்

சமச்சீர் கல்விக் கருத்தரங்கு என தினமலர் நாளிதழில் விளம்பரம் பார்த்தவுடன் அரசு கல்வியியல் விரிவுரையாளர் சாந்தி அவர்கள் எனக்கு செல் மூலம் அழைத்து நாம் கலந்துக் கொண்டு நம் கருத்துக்களை தெரிவிக்கலாம் வாருங்கள் என்றார். நானும் , போன் செய்து விவரங்களைத் தெரிந்துக் கொண்டு , போனில் தருமி அய்யாவை அழைத்தேன். முடிந்தால் வருகின்றேன் என்றார். நல்லவேலை அவர் வரவில்லை. (வந்திருந்தால் என்னை கிழி கிழி என கிழித்து ஒரு இடுகைப் போட்டுயிருப்பார்.)

            ஆளுங்கட்சி கூட்டத்திற்கு தெரியாமல் ஒரு எதிர்க்கட்சிக் காரன் சென்றால் என்ன ஒரு உணர்வு இருக்குமோ அப்படி ஒரு உணர்வில் இருந்தேன்.அது ஒரு மெட்ரிக்பள்ளிகளின் சங்கக் கூட்டம் போன்றே இருந்தது. சமச்சீர்கல்வி கருத்தரங்கம் என்ற தலைப்பில் சமச்சீர் கல்வியை எதிர்ப்பதாக இருந்தது. நல்ல திட்டம் தான் அதை அரசு அவசர அவசரமாக கொண்டுவந்துவிட்டார்கள் என்ற உணர்வுடன் எதோ ஒன்று குறையுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.  சம் திங் இஸ் மிஸ்ஸிங் என்று சொன்னார்கள் ஆனால் அது எந்த சம்திங் என்று தெரியவில்லை என்று என் அருகிலிருந்த காளையார் கோவில் இருந்து வந்திருந்த மெட்ரிக் ஆசிரியர் சொன்னக் கமண்டு பிடித்திருந்தது. அது தான் உண்மை.

        மெட்ரிக் பள்ளிகள் ஒரு பயத்தில் உள்ளன என்பது அவர்களின் ஒருங்கிணைப்பிலே தெரிகிறது. இருந்தாலும் அவர்களின் சில ஆதாங்கங்களை ஏற்க முடியாமல் இல்லை. பாடத்திட்டம் அனைவரையும் கருத்தில் கொண்டு இருந்தாலும் , கிராமப்புற மாணவர்களை குறைத்து மதிப்பிட்டு , மெட்ரிக் தரத்தை குறைக்கும் விதத்தில் இருக்கிறது .பாடத்திட்டம் இணையத்தில் வெளியிட்டது மிகவும் வரவேற்க தக்கதாக அமைந்து இருந்தாலும் , பாடப் புத்தகத்தில் ஏமாற்ற்ப் பட்டுள்ளோம் .அதனால் எங்கள் பள்ளி மாணவர்கள் உலக தரமிக்க ஒரு கல்வியை கொடுக்க முடியவில்லை என்றும் காசு கொடுத்து எங்களிடம் வரும் பெற்றோர்களுக்கு கல்வியை நல்லத் தரத்துடன் கொடுக்க இந்த பாடப்புத்தகத்தில் வாய்ப்பு இல்லை என்கிறார்கள். இவர்கள் இப்பாடத்திட்டம் கொண்டு வந்துள்ள புத்தகத்தினால் ஐந்தாண்டில் மிகவும் பின் தங்கி விடுவார்கள் என்கின்றனர்.

     நிகழ்ச்சியை சுப்பலெஷ்மி லெட்சுமிபதி பவுண்டேசனின் தலைவர் டாக்டர்.ஆர்.லெட்சுமிபதி தொடங்கிவைத்து பேசினார்.அன்று ஹிந்தி படிக்காததனால் பல்ர் வேலை வாய்ப்பு இழந்தனர். தன் கல்லூரிக்கு கேட்டரிங் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வந்த கண்ணன் என்பவர் ஹிந்திப் படிக்காததால் இழந்த ஏர் இந்திய வேலை பற்றி தனக்கேயுரிய நகைச்சுவையால் விளக்கினார். ஹிந்தி இரண்டு தலைமுறை படிக்காததால் தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. தான் தொடர்ந்து பயணம் செய்வதால் பல விசயங்களை கற்றுக் கொள்கிறேன் என்றார். கபில் சிபில் இன்று அனைவரும் சீனா மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார். னால் நாம் எங்கு இருக்கிறோம் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்கவும் . பிரெஞ்சு , ஜெர்மன் , சீன போன்ற பல மொழிகளை நாம் கற்பிக்க வேண்டும் . மாணவர்கள் பிற மொழிகளை கற்றுக் கொள்ள சமச்சீர் திட்டத்தில் வழியில்லை. ஐந்தாண்டுகளில் நம் மாணவர்கள் பின் தங்கியிருப்பார்கள். எனவே இந்த கருத்தரங்கு அதற்கான ஆரம்பம் என்று கூறினார்.


     சமச்சீர் கல்வி பாடத்திட்டம் -பரிசீலனையும் பரிந்துரையும் என்ற தலைப்பில் திருமதி எஸ். பிரேமலதா, மகாத்மா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் அவர்கள் பேச வந்தார். ஆசிரியர்கள் கையில் தான் அனைத்தும் உள்ளது. நம் சமச்சீர் கல்வி திட்டம் அனைவருக்கும் தரமானக் கல்வி, இடைநிற்றல் இன்றி கல்வி, மனரீதியாக பாதிக்கப்படாதக் கல்வி, சரியான வயதிற்கேற்றக் கல்வி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய புத்தகத்தில் ஆறு அல்லது ஏழு யுனிட்டுகள் தான் உள்ளன. நான் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் விசிட்டிங் ஃபக்குலிட்டி , சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை கல்ப் நாடுகளில் வைத்துள்ளார்கள். அதில் சமச்சீர் கல்வி உள்ளது. அனைத்து முறைகளையும் ஒன்றினைத்து ஒரு பாடத்திட்டம் கொடுத்துள்ளீர்கள். அதில் ஏன், எதற்கு , எப்படி என சிந்திக்கும் ஆற்றல் இல்லை . மாணவர்களுக்கு கற்பனைத்திறனுக்கு இடமளிக்கவில்லை . படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும் ஒருங்கிணைப்பு இல்லை. உலகத்தரத்துடன் போட்டிப்போடும் விதமாக அமையவில்லை. அரசு அவசர அவசரமாக ஒரு திட்டதை கொண்டுவந்துள்ளது அதுவும் கிராமப்புற மாணவர்களைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது. அதனால் மெட்ரிக் பள்ளிகளின் தரம் குறைந்துள்ளது.சமச்சீர் கல்வி பாடப்புத்தகம் மாணவர்களை உள்ளடக்கியதாக இல்லை. ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் .முதல் வகுப்பு பாடபுத்தகம் மெட்ரிக் மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை. அவை ஒரு வாரத்தில் முடித்து விடுவதைப்போல உள்ளது என்றார். எங்கள் பள்ளியில் பிரைமரி வகுப்புகளில் நாங்கள் ஒரு மாடியுல் தாயாரித்துள்ளோம் அதனடிப்படையில் தான் செயல் படுகிறேம். பட்டம் என்றால் சமச்சீர் கல்விமுறையில் ஒரு படம் மட்டும் தான் உள்ளது. எங்கள் பள்ளியில் நாங்கள் பட்டம் என்பதை செய்து காட்டி, மாணவனுக்கு தயாரிக்கச் செய்து , அதை பறக்க விட கற்றுத் தருகிறோம். அது காற்று எந்த திசையில் அடிக்கிறது என்று பார்த்து பறக்க விட வேண்டும் என்ற அறிவியலைக் கற்றுத் தருகிறது என்றார்.கணக்கு பாடம் 100.௦௦ என்பதற்குள் தான் உள்ளது. ஏறுவரிசை , இறங்கு வரிசை என்பது கிடையாது. வாசிப்பு திறன், கேட்டல் திறன் குறைவாக உள்ளது .அரசு பள்ளிகளுக்கு இது குறித்து ஒரு விழிப்புணர்வு இல்லை. அனுபவமுள்ள ஆசிரியர்களை அழைத்து பாடத்திட்டம் , பாடப்புத்தகம் தயாரிக்கவில்லை. நம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
     அடுத்ததாக திண்டுக்கல் எஸ்.எம்.பி மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஜெயப்பிரகாஷ் மதுரையில எது நடந்தாலும் , அது தமிழ்நாட்டில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் . அதற்கு நம் லெட்சுபதி ஒரு விதை போட்டுள்ளார். நானும் மதுரைக்காரன் தான் .எனக்கு கன்னடம் தெரிந்தால், கர்நாடகாவில் வேலை கொடுத்தார்கள். இது சம்ச்சீரில் சாத்தியமா? பல மொழிகளை கற்றுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனக்கு சமச்சீர் கல்வி முறையில் உடன்பாடு இல்லை. 1966 ல் கோதாரி கமிசன் வந்தது. அதன் அடிப்படையில் என்.சி.எப்.2005   உருவாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி குறித்து ஒரு ஆய்வு தந்தது யாஷ்பால் கமிட்டி. அதன் பின் முத்துக்குமரன் கமிட்டி என்ற ஒன்று வந்து சமச்சீர்கல்வி முறையைக் கொடுத்தது . அதை அவசர அவசரமாக அரசு கொண்டுவந்துள்ளது. கமிஷனராக இருந்த விஜயக்குமார் ரிஷி வேலி சென்று எபில் பாட முறையைக் கொண்டு வந்தார். அது ஜெ.கே. கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்களை உள்ளடக்கியது. சி.பி.எஸ்.சி பாட திட்டம் சென்ரல் கவர்மெண்டு குழந்தைகளுக்காக கொண்டுவரப்பட்டது . அது நாடுமுழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தைக் கொண்டுள்ளது. அப்படி இருக்க ஏன் இங்கு மட்டும் இப்படி...?
       புலி வருகிறது புலி வருகிறது என வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். ஆனால், வந்தது புலியல்ல , புளி . அந்த புளியாவது பாத்திரம் தேய்க்கவாவது உதவும் . ஆனால், இந்த புளி சாப்பிட்டால் குமட்டும் , வயிற்றில் அல்சர் உண்டாகும் அப்படி மேசமானது தான் சமச்சீர் கல்வி .

       திண்டுக்கல்லில் நடந்த சமச்சீர் கல்வி கூட்டத்தில் நான் கலந்துக்கொண்டேன் , என்னுடைய ஆலோசனைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. இதுபோலத்தான் பல இடங்களில்நடைப்பெற்று இருக்கும். நான் ஒரு ஆசிரியரிடம் ஆறாம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தை கொடுத்தேன் அவர் அதை பார்த்துவிட்டு இது ஒரு வாரத்தில் முடிக்க வேண்டுமா என்கிறார். மைட்டோக்காண்டிரியாப் பற்றி செய்தி இல்லை.  செல் வேறுபாடு இல்லை. முதல் வகுப்பில் எதுவும் சரியில்லை. ஒரு சாதாரண
விளக்குமாறு அதன் படம் கூட இடம் பெறவில்லை. (என்னக் கவலை பாருங்கள்) . கவர்மெண்டு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கே செல்வதில்லை. ஒரு அதிகாரி ஒருவரை மெமோக் கொடுக்கிறது .உடனே ஆசிரியர்கள் அவருக்கு சாதகமாக கோரோ செய்து அதை ரத்துச் செய்கின்றனர். ஆனால், மெட்ரிக் பள்ளிகளில் அது முடியுமா..? ஒரு ஐந்து நிமிடம் லேட்டாகச் சென்றால் அவ்வளவு தான். பள்ளிக் கல்வி எதில் கவனம் காட்ட வேண்டுமோ அதை விட்டு எதோ புதிய கல்வி முறையை அவசரஅவசரமாக புகுத்துகிறது.

    திண்டுக்கல் என்றால் பிரியாணி பேமஸ் .அங்கு பல பிரியாணிக் கடைகள் உள்ளன. ஆனால் காசு கூடக் கொடுத்தாலும் பரவாயில்லை என வேலு பிரியாணிக் கடைக்கு கூட்டம் செல்வது எதனால்..?அது போல எங்களை தேடி மக்கள் வருகிறார்கள் , தரமான கலவிக் கொடுக்கிறோம் . அதை அரசு நசுக்கப் பார்க்கிறது. கட்டாயப்படுத்தி திணிக்கிறது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அறுபத்து நான்கு மட்டுமே , ஆனால் நாங்கள் தொண்ணுற்று நான்கு அதற்கு மேல் தேர்ச்சி சதவீதத்தைத் தருகிறோம் .

  கத்தர் நாட்டில் அரசு பாடத்திட்டம் வரைவு கொடுக்கும் . அதனடிப்படையில் பள்ளிகளே பாடதிட்டங்களை வரைந்து , தம் மாணவனுக்கு தகுந்த பாடப்புத்தகம் தயாரித்து செயல் படுகிறது. அது போன்று சமச்சீர் கல்வி முறையில் பாடக்குறிக்கோள்களை கொடுத்து விடுங்கள் , நாங்கள் அதற்கு தகுந்த சிலபஸ் வகுத்து, அதனடிப்படையில் பாடப்புத்தகம் தயாரித்து கற்றுக் கொடுக்கிறோம். அதனை நல்ல முறையில் கண்காணித்து ,அரசு நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

    அமெரிக்காவில் நிறம் அடிப்படையில் பாகுப்பாடு கூடாது என அனைவருக்கும் ஒரே க் கல்வி . பிற மேலைநாடுகளில் சாதி, மதம் அடிப்படையில் வேறுபாடுக் கூடாது என ஒரே சமச்சீரானக் கல்வி . நாம் அதைத் தானே செய்து கொண்டிருக்கிறோம். பின் என் இந்த சம்ச்சீர் ...

முத்துக்குமரன் கமிட்டி கிண்டர் கார்டன்களை பலப்படுத்த வேண்டும் என்கிறது . அதைபலப்படுத்தி விட்டு , அரசு இந்த சமச்சீர் கல்வியை கொண்டு வந்திருக்கலாம்.அரசு மட்ரிக் பள்ளிகளுக்கு கல்லூரியைப்போல சுயாட்சி அதாவது தன்னாட்சி அந்தஸ்தை வழங்கலாம்.  

   நீராடும் கடலுடுத்தப்பாடலை மிக வேகமாக வரும் மெட்டில் பாடி கைதட்டு வாங்கி , இப்படி பாடும் காலம் விரைவில் வந்துவிடும் அதைத்தான் இந்த சமச்சீர் கல்வி முறை தர நினைக்கிறது என முடித்தார்.


அடுத்ததாக கலந்துரையாடல் , ஆசிரியர்கள் குழுவாகப் பிரிந்து, பாடப்புத்தகங்களில் நன்மை தீமைகளை விவாதம் செய்தனர். ( அச்சமயம் நான் , மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் பலரும் கம்பஸ் சுற்றிப் பார்க்கச் சென்றோம் . ஒரு கப்பலையே ஐந்து கோடிச் செலவில் கொண்டுவந்துள்ளார். ஓடாது, கப்பலைப் போன்று அனைத்து மிஷின் , அதற்கான பாதுகாப்பு ,  கடலில் செல்லும் உணர்வை ஏற்படுத்தும் சிமுலேசன் சூப்பர்.ஒரு அற்புதமான உணர்வு .மாணவர்களையும் அழைத்து வந்து காட்ட அனுமதி உண்டாம்.போனதற்கு பயனுள்ளத் தகவல்)


     தயவு செய்து சிரிக்காமல் சீரியசாக படிக்க வேண்டும் . அப்புறம் நான் முழுவதையும் சொல்ல மாட்டேன். அந்த கூட்டத்தில் ரசித்து சிரித்து கொண்டு இருந்தவன் நானாகத்தான் இருக்க முடியும்.

ஆறாம் வகுப்பு பாடம் ஆங்கிலம் மற்றும் தமிழ் குறித்து விவாதத்தின் சாரம் ஒரு ஆசிரியர் வந்தார் . சொன்னார். தங்கிலீசில்

மெரிட் என்றளவில் பள்ளி மாணவனுமாணவர்களுக்கு குழுவிவாதத்திற்கு இடமளிக்கிறது. புதிய விசயங்களை பகுத்தாராய இடம் வகுக்கிறது. யுனிட்கள் பாடல். உரைநடை, நாண்டிடெயில் என பிரிக்கப்பட்டுள்ளன. அரசுக்கு கிராமர் மிகவும் கடினமாக இருக்கும் . ஆசிரியர்கள் பாவம்.
  குறை என்றால் பயிற்சிகள் மிகவும் குறைவாக உள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற வகையில் உள்ளதால், நம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்புடையதல்ல. குறைந்த கேள்விகளை உடையதால்,மதிப்பீடுவது இயலாது. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

  அடுத்து ஆறாம் வகுப்பு அறிவியல்....

   நம் மாணவர்களின் ஐ.கு விற்கு தகுந்தமாதிரி யில்லை. ஏற்கனவே இதிலுள்ள விசயங்களை படித்துள்ளார்கள். தாவரங்களின் அறிவியல் பெயர்கள் கொடுக்கப்படவில்லை. வரையறைக் கொடுக்கப்படவில்லை. தாவரவியல் என்பதற்கு வரையறையில்லை. பாட வினாக்கள் . புரிதல்,அறிவு பெறுதல்,திறன் படுத்துதல், ஒப்பிடல் போன்றவற்றிற்கு வாய்ப்பு இல்லை. கே.ஜி. அடிப்படையில் அறிவு புகட்டி பின் புத்தகம் தாயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.அப்ஜெக்டிவ் ஓரியெண்டாக இல்லை.


ஆறாம் வகுப்பு கணிதம் பாடப்புத்தகம் குறித்து....

சிலபஸ் பொருத்தமட்டில் ஒ.கே.  பாடப்புத்தகத்தில் அளவுகள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. குறைந்தளவு மாதிரி கணக்குகளே கொடுக்கப்பட்டுள்ளது .

ஒன்றாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகம் குறித்து ....

   வார்த்தைகள் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளன. நிறைய எழுதுகிற விதமாகவே புத்தகம் அமைக்கப்பட்டுள்ளது. பலூன் , மிட்டாய் படங்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. பொருள்களை அடையாளம் காணும் விதமாக படங்கள் கொடுக்கப் படவில்லை. உதாரன தக்காளிப் படம்.


ஒன்றாம் வகுப்பு கணிதம்

மாணவர்கள் கோடு போட்டு செய்யும் விதமாக இருப்பதால், அவர்கள் நிறைய கோடு போடுவார்கள் அது தவறான செயலை கற்றுத்தரும். உருவங்கள் செவ்வகம் , சதுரம் கொடுக்கப்பட்டுள்ளது . அவர்களுக்கு கன உருவங்களை கண்டுபிடிக்க முடியாது. டிரேச் எடுக்கும்போது குழப்பம் அடைவார்கள். பிலேஸ் வேலிவ் கொடுக்கப்படவில்லை. நோறு வரை தான் கற்றுத் தரமுடியும். கூட்டல் , கழித்தல் கணக்குகள் போதுமானதாக இல்லை.

ஒன்றாம் வகுப்பு ஆங்கிலம்

ஆங்கில டீச்சரா இல்லை அறிவியல் டீச்சரா எனஅடையாளம் தெரியவில்லை . நான் வகுப்பில் பார்ட்ஸ் ஆப் பாடி கொடுத்தேன் அதுஆங்கிலப்பாடம் என்று பெற்றோர்களுக்கு தெரியவில்லை. மாணவர்களுக்கு கதை சொல்லும் வாய்ப்பு அதில் இல்லை.  ஆங்கிலம் அறிவியல் பாடம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. லிசா என்ற பெயர் கூட இல்லை. அப்புறம் எவ்வாறு ஆங்கில அறிவு வளரும். வாக்கியத்தில அமைக்க வாய்ப்பு யில்லை.    

       இனி என் கமண்டு ...


ஆம் நீங்கள் (மெட்ரிக்)அடையாளம் இழக்கும் நேரம் வந்துவிட்டது.   சமச்சீரில் நீங்கள் எதுவும் இல்லை என்றால் நம்புவதற்கு எதுவும் இல்லை. எதுவானாலும் குறைகளை கருத்தில் கொண்டு அதனை உடனே நிவர்த்திச் செய்யும் பொருட்டு அரசு செயல் படுகிறது . அறிவியல் பாடப்புத்தகம் மீண்டும் சரிசெய்ய ஆணைபிறப்பித்து .ஏற்கனவே நடைமுறைபடுத்தியுள்ளது. சமச்சீர் அரசு வெப் சைட்டில் கமண்டு பகுதியில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் , இது வரை எதுவும் தெரிவிக்காமல் எல்லா பள்ளிகளும் ஒன்றாக இணைந்து , நாம் அடையாளத்தை இழந்துவிடுவோம் என பயந்து , ஒரு திட்டத்தை எதிர்ப்பது தவறு. அதிலுள்ள குறைகளை திருத்த அரசுக்கு ஆலோசனைகள் வழங்கலாம். அட்மிசன் குறைந்து வருவாய் இழப்பு வரும் பயம் தெரிகிறது . இதுவே இத் திட்டத்தின் சாதனை.

    அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளையும் இணைத்து ஒரு கருத்தரங்கம் போடுங்கள் உண்மையான கருத்து வெளிப்படும். அரசு புத்தகத் தயாரிப்புக்கு மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களையும் அழைத்து தான் புத்தகம் தயாரித்துள்ளது. ஆனால், நீங்கள் பங்கு கொள்ளாமல் , எங்களை புறக்கணித்து விட்டனர் என மேடை யேரி புலப்புவது உங்களிடம் பணிபுரியும் ஆசிரியர்களை ஏமாற்றுவது போல . விஜயக்குமார் அவர்கள் தயவால் இன்று அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒருசிலர் தவறானவர்களாக இருக்கலாம் அதற்காக அனைவரையும் குறைக்கூறுவது தவறு. செயல் வழிக்கல்வி திட்டம் நீங்கள் சொல்லும் அத்துனை விசயத்தையும் உள்ளடக்கியது. மாணவனை உள்ளடக்கிய பாடம் தான் உள்ளது. ஏபிஎல் அட்டைகளை வைத்து பாடம் நடத்தி விட்டு , சொல்லுங்கள் தெரியும் இப்பாடப்புத்தகங்களின் உண்மை நிலை.  சில குறைபாடுகள் இருக்கலாம் அதை அரசு போக்கும் .அரசு ஆசிரியர்களுக்கு புத்தாக்கப்பயிற்சிகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. அதை உங்களூக்கும் தேவை என்ற அடிப்படையில் கேட்பது தவறில்லை. ஒரு பக்கம் பாடபுத்தகம் எங்கள் தரத்திற்கு இல்லை என்று கூறிவிட்டு , அவை எம் மாணவர்களலால் ஒரே நாளில் முடிக்கப்பட்டு விடும் என சொல்லிவிட்டு, அப்புத்தகத்தினை செயல் படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சித் தேவை என கேட்பது எந்த விதத்தில் நியாயம்?

    எனக்கு ஒன்று தெளிவாக புரிகிறது. பெற்றேர்கள் அனைத்தும் ஒன்று என்று ஆகிவிட்டால், சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்திற்கு தாவி விடுவார்களோ என பயப்படுகின்றனர். போகும் காலத்தில் இண்டர்நேசனல் பள்ளிகளுக்கு தான் வாய்ப்பு அதிகமாகிவிடுமே என்று கேள்விக் குறியும் உள்ளது.

      இதை எல்லாம் முடிவில் கொண்டு அரசு மாணவர்கள் உலகத் தரமான கல்வி கொடுத்து , வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் கல்வியை ,ஒரு போட்டி உலகை சந்திக்கும் வகையில் உருவாக்க அனைத்து தரப்பையும் பயன்படுத்த வேண்டும்.

7 comments:

ஹுஸைனம்மா said...

தங்களின் பதிவிலிருந்து, சமச்சீர் கல்வித் திட்டம் மிக இலகுவானது, வயதுக்கேற்ற பாடத்திட்டமாக இல்லை என்று புரிகிறது. அப்படியானால் தீர்வு என்ன? அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று விளக்கினால் நன்று.

மதுரை சரவணன் said...

அம்மா நான் சொல்லியிருக்கும் கமண்டைப்படியுங்கள்.இது ஒரு வரப்பிரசாதம் அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கி ஒரு பொதுப் பாடத்திட்டம் ஆகும். ஆனால், அதை ஒரு சிலக் குறைப்பாடுகளுக்காக எதிர்ப்பது அநியாயமாகும். அரசு அக் குறைகளை கவனத்தில் கொண்டு , சில சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. தயவு செய்து, ஒரு விசயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும் , இன்னும் பிற வகுப்புகளுக்கு பாடப்புத்தகம் தயாரிக்க வில்லை , ஆகவே தங்கள் கருத்துக்களை அரசுக்கு தெரிவித்து ஒரு நல்ல பாடத்திட்டம் மூலம் நல்ல முறையில் புத்தகம் வர நாம் ஒன்றிணைவோம்.

சுவாமிநாதன் said...

"மெட்ரிக் பள்ளிகள் ஒரு பயத்தில் உள்ளன என்பது அவர்களின் ஒருங்கிணைப்பிலே தெரிகிறது"

நமது சமச்சீர் கல்விக்கு என்றும் கைகொடுப்போம்.......

ம.தி.சுதா said...

கல்வி தான் யாராலும் அழிக்க முடியாத செல்வம்.. முக்கியமாக தமிழனுக்கு..

Jerry Eshananda said...

அருமையான கட்டுரை சரவணன்...ஆவணப்பதிவு..

Anonymous said...

அமெரிக்காவில் நிறம் அடிப்படையில் பாகுப்பாடு கூடாது என அனைவருக்கும் ஒரே க் கல்வி . பிற மேலைநாடுகளில் சாதி, மதம் அடிப்படையில் வேறுபாடுக் கூடாது என ஒரே சமச்சீரானக் கல்வி.

Indiyaavil, kurippaaga thamizhagathil eppo varum?

Jaathi, matham ivatrukkellam votebank paarthu ida othukkeedum koduthaal velangidum, 2020-la illa 2120-la kooda indiya-vallarasu ggathu, appadinnu oru naadu irunthathaa-nnu varalaatril ketkkap padum?

ஊரான் said...

நன்றாகவே அலசி பிழைப்புவாதிகளை அம்பல்படுத்தியுள்ளீர்கள். பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பவனின் கதைதான் மெட்ரிக் பள்ளிகளின் நிலை.

Post a Comment