Friday, September 3, 2010

வாங்க பழகலாம்...

   நண்பர்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பது நாம் அவர்களை விட்டு பிரியும் தருணங்களில் தான் அறிய வருவோம்.  கல்வி கற்க தொடங்கிய நாட்களில் இருந்து வயதான இன்று வரை நட்பு என்பது விரிந்துக் கொண்டே செல்லுவதை பார்க்கிறோம்.
நட்பில் பல .. பார்த்தவுடன் பழகுவது. பார்த்து பார்த்து பழகுவது . பார்த்தும் பார்க்காமலும் பேசாமல்  ..ஒருநாள்,நான் இந்த தொருவில தான் உங்கள் அடிக்கடி பார்த்திருக்கிறேன் என அறிமுகத்துடன் தயங்கி தயங்கி தொடங்குவது.  வயது வித்தியாம் இன்றி எந்த வயதிலும் எந்து வயதினருடனும் ஒத்துப் பழகுவது . அளந்துப் பழகுவது.  வெட்டிப்பழகுவது.  பேசாமலே வெகு சில புன்னகையுடன் பழகுவது .

இப்படிச் சொல்லும் போது அவ்வப்போது வரும் நாயும் கிளியும் நட்புடன் பழகுகின்றன். புலியுடன் பூனை நட்பு, பூனையுடன் சேவல் நட்பு, பாம்புடன் நாய் நட்பு, நாய் , பூனை, எலி நட்பு என்ற புகைப்படங்கள் அவற்றிற்கான செய்திகள் ஆச்சரியத்தை எற்படுத்தினாலும்
 சிலரை நாம் புரிந்த்துக் கொள்ளவே முடிவதில்லை. யாருடனும் பேசாமல், தான் உண்டு வேலையுண்டு என்று , நேராக வீடு விட்டு வேலைக்குச் செல்வது , வேலை விட்டு வீட்டுக்கு வருவது,அது மட்டுமல்ல அத்துடன் வீட்டிலும் தன் குழந்தைகளுடன் முறைத்துக் கொண்டு உம் என இருப்பது. மனைவியுடன் கூட அளந்து பேசுவது. எப்படித்தான் இவ இந்த ஆளோட குடும்பம் நடத்தினாலோ என அனைவர் பேசும் விதம் இருப்பவர்களும் உண்டு.

      நம் ரவியும் அப்படித்தான். அலுவலகம் விட்டு வீடு வந்தவுடன் அனைவரும் அமைதியாகி விட வேண்டும் . டி.வி . பார்த்தாலும் நிறுத்தி விடவேண்டும். அவர் மட்டும் டி.வி. பார்த்தால், நாம் உடன் பார்க்கலாம், ஆனால் எதுவும் பேசக்கூடாது. அவனுடன் எதையும் சரளமாக தைரியமாக பேசும் அவனின் அம்மா ராமுத்தாயும் சென்ற பங்குனியில் உயிர் விட இப்போது எவரும் அவனுடன் பேசுவது இல்லை. குழந்தைகளும்  ரவி வந்தால் புத்தகத்தை தூக்கி கொண்டு படிக்க கிளம்பி விடுவர். படிக்கிறார்களா, அல்லது ரவியின் பார்வையை மறைக்கிறார்களா..? தெரியாது. ஆனால் , நன்றாக மதிப்பொண் எடுத்து விடுவர். ராங்க் கார்டு காட்டும் மறுநாள் மாலதிக்கு பிடித்த மல்லிகைப் பூ.. குழந்தைகளுக்குப் பிடித்த தின்பண்டம் என தூள் பறக்கும் .
      
         சொல்ல மறத்துவிட்டேனே... மாலதி அவனின் மனைவி. பாவம் . நிறைய கனவுகளுடன் வாழ்பவள். என் மனைவியுடன் ஸ்கூட்டரில் நான் செல்லும் போது , கண் எடுக்காமல் பார்ப்பாள். தன்னையும் இந்த மனுசன் அழைத்து கொண்டுச் செல்ல மாட்டேன் என்கிறானே... அப்படி என்றாவது கூட்டிக்கொண்டுச் சென்றால் ..பேசாமல் பின்னாடி அமர்ந்து எதோ பேருந்தில் முகம் தெரியாத ஆட்களுடன் முன்னேபின்னே பழகாத ஆட்களுடன் செல்வதுப்போல அமர்ந்து செல்ல வேண்டும். அவர் எப்போது சிரிப்பாரோ அப்போது நாமும் சிரிக்க வேண்டும். சிரிக்கவில்லை என்றால் ஒரு அக்கினி கக்கும் பார்வை வீசும் , ஆனால் அதற்கு முன்னமே அனைவரும் நமட்டு சிரிப்பு சிரித்து விட வேண்டும். மிகவும் கடினம் தான்.

      
     ஏன்டி மாலதி , ரவியை எப்படி கட்டிக்கிட்ட...? கல்யாணத்திற்கு முன் இருந்தே இப்படி தானா...? இல்ல உன்னைக் கட்டிகிட்ட பின்ன இப்படி மாறிட்டானா...? என என் மனைவி அன்னம் எத்தனை முறைக் கேட்டாலும் அதற்கு பதிலாய் பிறப்பில இருந்து இப்படி தானாம். பிறந்தவுடன் பேச்சு , மூச்சுக்கானமே, சிரிக்க காணாமேன்னு நர்ஸ் கிள்ளியதற்குக் கூட அழவில்லையாம். நர்ஸைப் பார்த்து ஒரு முறை முறைத்தார் என என மாமியார் சொல்லக் கேட்டிருக்கிறேன் என்பாள். அதாவது பரவாயில்லை , பள்ளியில் வாத்தியார் கேள்வி கேட்டால் சுருக்கமாகத் தான் பதில் தருவாராம். எப்படியோ அக்கா யார் செஞ்ச பூன்னியமோ இவருக்கு கலெக்டர்  அலுவலத்தில் ஒரு உத்தியோகம் கிடைத்து , இம்மனுசனை இந்த உத்தியோகம் தான் காப்பாத்தி இருக்கு ,இல்லாட்டி யாரும் சீந்த மாட்டங்க என  அலுத்துக் கொள்வாள்.

     நானும் பலமுறை ரவியுடன் பேச முற்பட்டு இருக்கிறேன். ஆனாலும் அவன்   மழுப்பலாக கூடப்பதில் சொல்லாமல் இறுக்கத்துடன் சென்று விடுவான்.  உதாரணத்துக்கு , நீங்க கலெக்டர் ஆபிஸ்ல வேலைக் பார்கிறீர்கலாம் என நாம் கேட்டால் தலை ஆட்டலுடன் வெகு வேகமாக அடுத்து பேச்சை தொடரும் முன் சென்றுவிடுவான். என்ன ரவியை அவன் இவன் இன்று சொல்லுகிறேன் என பார்கிரீர்களா ...? அவன் என்னை விட வயதில் இளையவன் . இருந்தாலும் சிலர் வயதில் இளையவராக இருந்தாலும் நாம் அவர்களை வாங்க , போங்க என சொல்லுவது உண்டு. என எதிர் வீட்டு ரமேஷ் இளங்கலை தான் படிக்கிறான். ஆனால் இசையில் தனி ஆல்பம் வெளியிட்டு , தற்போது ஏதோ ஒரு டி. வி தொடருக்கு இசை போடுவதாக சொன்னவுடன். என்னங்க ரமேஷ் இப்பெல்லாம் கலையில வாக்கிங் பார்க்க முடிவதில்லை என்றுதான் பேச முடிகிறது. அவரும்  பதிலுக்கு சார்,சும்மா ரமேஷ் ன்னு கூப்பிடுங்க ...என்பார் .பார்த்தீர்களா பேச்சுக்கு கூட என்னால் அழைக்க முடியவில்லை. அது அவர்கள் வேலையின் மீது காட்டிய ஆர்வம் , அதானால் அவர்களுக்கு ஏற்பட்ட முழு இடுபாடு , அதன் அற்பணிப்பு அவர்கள் மீது ஒரு மதிப்பை அவர்கள் அறியாமலே ஏற்படுத்துகிறது. அம்மதிப்பை அவர்கள் தானாக தக்க வைக்க அதை விட அதிக கவனமும், மன ஒருமுகத்துடன் , இணக்கமான சமூக உறவுடன் ,நிலைக்க அதிக உழைப்பை செலுத்த வேண்டும்.


        இன்று குடும்பங்களில் ஒரு குழந்தை என்பது சகஜமாகி விட்டது. அதிலும் அவர்கள் பலருடன் பழகுவதால் கெட்டுப்  போக வாய்ப்புண்டு என்பதால் தனிமை படுத்தி வளர்க்கவே பல பெற்றோர்கள் ஆசை படுகின்றனர்.   அதுவும் பெண் குழந்தைகள் என்றால் வெளியில் விளையாட கூட விடுவதில்லை. ஆனால் அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு ஒரு மனிதனை உருவகப்படுத்திக் கொண்டு ,விளையாடும் அழகை பார்க்கும் போது ரசிக்காமல் இருக்க முடியாது. என் வீட்டுக்கருகில் உள்ள அகல்யா ,  ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். ஆவலுடன் விளையாட ஒத்தக் குழந்தைகள் எங்கள் ஏரியாவில் யாரும் இல்லை . ஆகவே ,அவளாக போன் செய்து விளையாடுவாள். என்ன  அப்பத்தா,சௌக்கியமா ? நான் தான் அகல்யா வந்திருக்கிறேன்.கதவை திற , உனக்கு என்ன கண் தெரியாதா..? அடியே என்ன பார்த்தா நக்கலா தெரியுதா ..லெப்ட்ல விட்டேனா ரைட்டல  விழும் என பதில் பேசும் அழகு என்னை பிரமிக்க வைக்கும்.

        குழந்தைகள் எவ்வளவு அழகாக மொழியை உள் வாக்கிகொண்டு பிரதிபலிகின்றன ! பள்ளியில் ஆசிரியர் பேசிய ஒரு விஷயத்தை தன் வாழ்வுடன் பொருத்தி பார்க்கிறார்கள் பாருங்கள். தன் மொழி செழுமையில் அவர்கள் தங்களுக்குள் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி தன் படைப்பாற்றலை எதார்த்தமாக வெளிப்படுத்துகிறார்கள். அக்குழந்தையின் உரையாடலை நான் கேட்கும் போது ரவியும் இந்த பருவத்தை தாண்டி தானே வந்து இருப்பான். ஆனாலும் ஏன் இன்னும் இறுக்கத்துடன் இருக்கிறான்? அவனை எந்த பருவத்திலும் யாரும் மாற்ற முயற்சிக்க வில்லையா? இதுவும் விதிமீறிய படைப்பா...? இல்லை அவன் தன்னை இறுக்கமாகவே அடியாளம் காட்டி கொள்ள முயலுகிறானா  ..?

           அடையாளம் காணுவதற்க்காகவே  சிலர் சில அடையாளங்களை தம் மீது பூசிக்கொள்வர்.  மத அடையாளங்கள்  , மொழி அடையாளங்கள்  , மத எதிர்ப்பு அடியாளங்கள், அரசியல் அடையாளங்கள் , வட்டார அடையாளங்கள்  , வேலைக்கான அடையாளங்கள்  என பல அடையாளங்கள் நம் சமூகம் சுமக்கிறது. ரவி இதிலும் எந்த அடையாளத்தையும்  கொண்டிருக்க வில்லை. ஆனாலும் பழகுவதை வைத்து அவன் உம்மணா மூஞ்சி என்ற அடையாளத்தை பெற்றிருந்தான். நானும் பல முறை கஜினியை போல படையெடுத்து தோற்றுபோனேன்.

        சிவாஜி படத்தில் ரஜினியை  வாங்க பழகாலாம் என  சாலமன் பாப்பையா அழைப்பதை போல பல முயற்ச்சிகளை மேற்கொண்டு பார்த்து  ஏமாற்றம் அடைந்துள்ளேன்.  அவன் மகள் ரம்யா பூப்பெய்திய போது நடந்த சடங்கில் கூட அவன் தன் உறவினர்களுடன் ஒரு இணக்கமாகவோ, அல்லது சிர்ப்புடனோ இருந்ததாக பார்க்க வில்லை. மாலதி இவனுக்கு எதிர் மறை எப்பொழுதும் சிரித்த முகத்துடன் பேசுவதும் . அனைவருடனும்  நட்புடன் பேசுவதும், அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வதும் என கல கலப்பாக இருப்பவள். ஆனால் ரவி வீட்டுக்குள் நுழைந்தான் என்றால் அத்தனையையும் மூட்டைக் கட்டி வைத்து  விடுவாள் . எனக்கும்  என் மனைவிக்கும் இது ஆச்சரியமாகத் தான் இருக்கும். நம்மால் ஒரு நிமிடம் கூட பேசாமல் இருக்க முடியவில்லை ரவிக்கு மட்டும் எப்படி சாத்தியம் . அளந்து பேசுவது என்பது முடியும். இது அதை விட கஞ்சம் .
  
        மொழியின் வளர்ச்சி அதன் பரிமாற்றம் ,  அதன் எழுத்து வடிவத்திலும் , அதன் வெளிப்பாட்டிலும் இருக்கிறது .அத்துடன்  பிற மொழிகளை தன்னுள் வாங்கிக்  கொள்ளும் தன்மையிலும் தன் தனித்துவம் கெட்டுவிடாமல் பாதுகாப்பதிலும் தான் மொழி வளர்ச்சி இருக்கிறது. மொழியே பேசாத அவன் இன்னும் ஆதி மனிதனாகவே வாழ்கிறான் என்று தான் பொருள் கொள்ள முடிகிறது. எனக்கு தெரிந்து ரவி நவீனயுகத்தில் ஆதிமனிதன் போலவே குறைந்த ஒலிகளுடன் வாழ்கிறான்.
    
      பறவைகள் ஒலிக்கும் விதத்தை வைத்து அதன் இணை இணைவதற்கு முற்படும் என படித்திருக்கிறேன்.நாய்கள் குரைப்பதை  வைத்து பிற நாய்கள் அன்னியர் வந்திருக்கிறார் என அறிந்து அடுத்த தெருவில் எச்சரிக்கை அறிவித்து குரைக்கும் . தொடர்ந்து  நாய்களின் குரைத்தல் தொடரும். பின்பு அருகில் உள்ள நாய் ஓடி வந்து சேர்ந்து அதனுடன் குரைக்கும் , இவ்வாறாக அனைத்தும் தொடர்பு கொண்டு ஒருங்கிணைந்து  , பின் தொடர்ந்து ஓடி புதிய நபரை துரத்தும். 

      இங்கு தொடர்ந்து நாங்கள் தொடர்பு கொண்டு பேசினாலும் அவன் எங்களை நாயை விட கேவலமாக துரத்துகிறான்.ஒருநாள் இப்படித் தான் மாலதிக்காக நானும் என் மனைவியும் கலெக்டர் அலுவலகம் சென்று அவனிடம் பட்டாப் பெறுவது எப்படி என கேட்ட்க சென்றோம். என்னை தெரியாதவன் போலக் கட்டிகொண்டான். மேலும் என் மனைவி நீங்க மாலதி  கணவன் தானே நாங்கள் எதிர் வீட்டு என அறிமுகம் படுத்தி பேச்சை தொடரும் முன் , அவன் பார்வையில் பயந்து போய் , அலுவலக பையன் ஓடிவந்து என்ன சார் வேணும் ,வாங்க நான் உதவுறேன் சார் வீட்டு பக்கமா இருக்கீங்க ..மாலதி அண்ணி எப்படி இருக்காங்க ..?இவரு கிடக்கிறாரு சார் யாரு கூடவும் பேச மாட்டான்.ஆனா யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டான். தான்  உண்டு தன் வேலை  உண்டு என இருப்பன். மணி ஆறு ஆனா சீட்டை விட்டு எழுந்து போய்விடுவார். பில் எதுவும் பெண்டிங்கு இருக்காது . எனக்கு பட்டா மாற்ற விபரம் தெரியும் ஆனாலும் அவனுடன் எப்படியாவது பேசி , நட்பு கொண்டு அவனின் இறுக்கத்தை மாற்றி விட நினைத்தேன் . நல்லவன் தான் இருந்தாலும் ஒரு பிடிவாதமாக யாருடனும் பேசாமல் வாழ்கிறான்.

        அன்று மலை சோவென பெய்து கொண்டிருந்தது. இடி இரண்டு முறை அருகில் விழுந்த மாதிரி இருந்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எப்படா கரண்ட நிறுத்துவோம்  என்பது போல நிறுத்திவிட்டான். நான் தெரிவில் நின்று மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். பக்கத்த்  வீட்டு புனித் மழைத்  தண்ணீர் வெளியில் செல்லாமல் வீட்டினுள் வந்து விடுவது போல் உள்ளது தெரிந்து தெருவில் உள்ள சாக்கடை முடியை திறந்து விட்டான். எங்கள் வீதி பள்ளமாக இருப்பதால் அனைத்து தெரு தண்ணீரும் இங்கு தான் வந்து தேங்கும். எனவே , மழை நீர் நிரம்பி ரோடு தெரியாமல் போய்விடும் . சாதாரண மழைக்கே எங்கள் பகுதி வெள்ள பெருக்கு எடுத்து , ஆறாய் ஓடும்.

     இப்படி வேடிக்கை பார்க்கும் போது , ரவி வேகமாக தன் பைக்கில் வந்தான் . அவன் வாய்க்கால் மூடி திறந்து இருப்பது தெரியாமல் நடுவில் ஓட்டி வந்தான். என் மனம் பக்கு பக்கு என்றது. ரவி பள்ளம் பள்ளம் என கத்திக் கொண்டே மழையையும் பொருட்படுத்தாமல்  ஓடினேன்.  அதற்குள் அவன் தூக்கி எறியப்பட்டான் . பார்பதற்கு பரிதாபமாக இருந்தது. அவன் என்னை தவிர்க்க வேண்டும் என்பதர்க்கவே வேகமாக திரும்பி அடிபாட்டான். கை தாங்களாக அவனை தூக்கி , ஒரு ஆட்டோ பிடித்து , அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து ,உதவிய என் முகம் பார்க்க கஷ்டபட்டான். மெதுவாக நான்கைந்து நாட்கள் கழித்து என்னிடம் பேசினான். அன்று நீங்க மட்டும் கதாட்ட நிஜமாவே பள்ளத்தில் விழுந்து இன்னும் நிலைமை மோசமாக போயிருக்கும், பாவம் மாலதி ...ரெம்ப கஷ்ட படுறா .அட நம்ம ரவியா பேசுறது...ஆச்சரியமாக தான் இருந்தது.


        சார் நிறைய தடவ நான் நீங்க பேச வரும் போது தவிர்த்து இருக்கேன். வேண்டுமென்று இல்லை ...எனக்கு அடுத்தவருடன் பேசுவது என்பது மிகவும் கூச்சம் ...சின்ன வயதிலிருந்து என் அம்மா ...நான் நர்ஸ் முறைத்து பார்த்து பிறந்ததாக சொல்லி சொல்லி ..எனக்குள் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தினாங்க நானும் அது தான் நிஜம் என்று நம்பி வாழ்ந்தேன். அதில் கிடைக்கும் சந்தோசத்தை அனுபவிக்க தொடங்கி விட்டேன். என்னை எங்கள் வீட்டில் பயந்தே அழைப்பர் . மேலும் அவனுடன் எதுவும் வம்பு வைத்துக் கொள்ளவேண்டாம் என ஒதுங்கி போய் விடுவர். இந்த மாய கவுரவம் , மாய மரியாதை பழகி விட்டது, என் பள்ளி பருவ மாணவர்களும் அவன் அவன் வேலையை பார்பான் அவனை எந்த எனவே தொந்தரவு செய்ய வேண்டாம் என ஒதுங்கி விடுவார்கள். அதுவே தொடர்ந்தது ....பின்பு கல்லூரி முதல் வருட காலடி எடுத்த் வைக்கும் போதும் என் வீட்டுக்கருகில் உள்ள ஒருவன் என்னை பற்றி என் வகுப்பில் சொல்லிவிட என்னை யாரும் தொந்தரவு செய்வது கிடையாது. அப்பா இளமையில் இறந்ததால , அவருடைய வேலையை அரசும் எனக்கு தந்தது .அதையும் என் அம்மா அவன் படிச்சான் வேலை தான வந்தது என பொய் சொல்லி என்னை பெருமை படுத்தியதால நான் பணியிலும் இறுக்கம். என் அலுவலகம் லஞ்சம் வாங்கும் துறையாக இருப்பதால் என்னுடைய இறுக்கம் என்னை முசுடன் என்று ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தியது , ஆனாலும் அது என்னை நல்லவன் காசு வாங்காத மனுஷன் என்று பெயர் எடுத்துக் கொடுத்ததால் அப்படியே அதை தொடர வேண்டியதாகிவிட்டது. இதற்காகவே நான் எல்லாரையும் ஒதுக்கி என்னுள் ஒரு மாய தோற்றத்தை உண்டாக்கியது என ரவி என்னிடம் பேச ஆரம்பித்தவுடன் எனக்கு ஆச்சரியம் தொற்றிக் கொண்டது.

     மனிதன் தன் இறக்கும் தருவாய் அடையும் போது தன்னுள் உள்ள எல்லா அடையாளத்தையும்  இழந்து தன் சுயத்தை அடையாளம்  காட்டி விடுகிறான். என் நட்பு ரவியுடன் மரண பயத்தில் தோன்றியது. இன்று ரவி என் குடும்பத்துடன் சகஜமாக பேசும் சக மனிதன். அது போல மாலதியுடன் சிரித்து பேசும் ஒலி பல இரவுகளில் தொடர்த்து கேட்கும் .அகல்யா தன் அப்பாவின் சிரித்த முகம் பார்த்து ஆண்டி எங்க அப்பாவுக்கு விழுந்த இடத்துல பேய் பிடிச்சு இருக்கும் போல, இப்ப என்னோட, என் அம்மாவுடன் அருமையா பேசுறார். சிரிக்கிறார். ஆனாலும் கை சரியானவுடன் மீண்டும் இறுக்கமாகி  விடுவரோ என்ற பயத்துடன் கேட்டபொழுது ,எவ்வளவு இந்த இறுக்கம் குடுமபத்தை பாதித்திருக்கிறது எனபது தெரிகிறது.

       அன்று தொடங்கிய நட்பு ..ஆல் போல் வளர்ந்து அவள் மகள் திருமணத்தில் வந்து நிற்கிறது. ஆம் பல பேசுக்கு எங்கள் நட்பு சினிமாத் தனக்காக இருக்கும் . சில சமயம் நான் நினைப்பது உண்டு .வாழக்கை தான் சினிமாவாக எடுக்கப் படுகிறதோ ...! ஆம் இன்று அகல்யா என் மருமகள். ரவி உதவி கலெக்டர். பலருடன் கல கல வென பேசி ...நட்பு பாராட்டால் அவனை இந்தளவு மாற்றி இருக்கிறது. வாங்க பழகலாம்....என சாலமன் பாப்பையா போல நானும் உங்களை அழைக்கின்றேன். .                                           

16 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

nice...

இராகவன் நைஜிரியா said...

சிறந்த நட்பால் யாரையும் மாற்றிவிட முடியும் என்பதற்கு ஒரு நல்ல இடுகை. வாழ்த்துகள்.

மோகன்ஜி said...

தாய்மையைப் போல நட்பும் ஓர் உயரிய உறவு.அழகான படைப்பு நண்பரே!

Ahamed irshad said...

நட்பின் அழகு..

அன்பரசன் said...

Very Nice...

ஆயிரத்தில் ஒருவன் said...

''//நண்பர்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பது நாம் அவர்களை விட்டு பிரியும் தருணங்களில் தான் அறிய வருவோம்.''// நல்ல பதிவு பழைய நண்பர்களை நினைவு படுத்தியது

a said...

நல்லா எழுதிருக்கீங்க.......

http://rkguru.blogspot.com/ said...

அருமையான பதிவு....வாழ்த்துகள்

geethappriyan said...

நண்பரே
மிக அருமையாக நேரேஷன் பாணியில் எழுதீயிருந்தீர்கள்.கதை என்று லேபிலில் பார்த்து தெரிந்து கொண்டேன்,எல்லா கதையையும் விரைவில் படிக்கிறேன்.

geethappriyan said...

நீங்கள் மதுரையில் எங்கே?
என் பாட்டி,மாமா வீடு மதுரை செண்ட்ரல் சினிமா பக்கத்து தெருவில் உள்ளது.1986ல் சென்னை வந்தேன்,இப்போது அமீரகம் பணிக்காக.

geethappriyan said...

நீங்கள் மதுரையில் எங்கே?
என் பாட்டி,மாமா வீடு மதுரை செண்ட்ரல் சினிமா பக்கத்து தெருவில் உள்ளது.1986ல் சென்னை வந்தேன்,இப்போது அமீரகம் பணிக்காக.

பத்மநாபன் said...

பழக அழைத்த கதை அருமை.
எத்தனையோ முகமூடிகள் போட்டு நமக்குள் இறுக்கத்தை பத்திரமாக வைத்திருக்கிறோம்... ஒவ்வொன்றையும் கழட்டி வீச வீச தனக்கும் குடும்பத்துக்கும் எவ்வளவு சுகம்.

மதுரை சரவணன் said...

கீதப்பிரியன் மதுரையில் தபால்தந்தி நகர் அருகில் வீடு... வருகைக்கு மிக்க நன்றி.

சுவாமிநாதன் said...

நட்(பூ)பு இந்த பூ என்றும் வாடாத பூ..........

அப்பாதுரை said...

தீவிரமா எழுதியிருக்கீங்க.. அடையாளம், மொழி, நட்பு, மரணத்தறுவாய் எல்லாம் மனதைப் பிசையும் வரிகள். நட்பு எனும் நாகரீகத்தை நாம் பழகிக்கொள்ளவேயில்லை. உறுத்துகிற உண்மை.

மார்கண்டேயன் said...

என்னவோ போங்க, நீங்களும், அடுத்த வாரோம், வாரோம் ன்னு சொல்றீக, ஆனா கமலி, வாரதுக்குத் தான் வழிய காணோம்,

Post a Comment